முதல்வர் தொடங்கிய நல்லுதவித் திட்டங்கள்

  கொசுக்களை ஒழிக்க 5.5 நூறாயிரம் நொச்சிச் செடி வழங்கும் திட்டம், வீடுகளில் 6.5 நூறாயிரம் பப்பாளி மரக்கன்றுகள் வளர்க்கும் திட்டம், 710 இளைஞர்கள் பயிற்சி பெறச் சென்னை  மாநகராட்சியின் கட்டணமில்லாப் பயிற்சி மையம் ஆகியவற்றை முதல்வர் தொடங்கி வைத்துள்ளார்.

கூடங்குளம் – இவர்களைக் கண்காணிப்பது யார் ?

இவர்களைக் கண்காணிப்பது யார் ? கூடங்குளம் அணுஉலையிலிருந்து தொடர்ந்து வெளியேறும் வெப்பநீர். தொடரும் அலட்சியம்…!   அணுஉலையைச் சுற்றிய  ஊர்களில் கடந்த வாரம் 4000 அயிரைக்கல் (கிலோகிராம்) வரை பிடிப்பட்ட மீன்கள் இந்த வாரம் வெறும் 400 அயிரைக்கல் மட்டுமே பிடிப்பட்டுள்ளன. வெப்பநீரின் சுடும்தன்மையால் மீன்கள் ஆழ்கடல் நோக்கி நகரத் தொடங்கியுள்ளன. விரைவில் இப்பகுதி மீனில்லாக் கடலாக மாறும் சூழ்நிலை உள்ளது. கூடங்குளம் மக்கள்வாழ்நிலமாக மாறுவது எப்போது?

மேனாள் தமிழ் ஒலிபரப்பாளர் கௌசி இரவிசங்கர் காலமானார்.

தமிழ்த் தேசிய ஊடக உலகில்புகழ் பெற்ற ஒலிபரப்பாளராக விளங்கிய திருமதி கௌசிஇரவிசங்கர் அவர்கள் காலமானார்.  பன்னாட்டு ஒலிபரப்பு அவையின் தமிழ் (ஐ.பி.சி) ஒலிரபரப்பாளராகவும், செய்தி வாசிப்பாளராகவும், நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் கௌசி இரவிசங்கர் கடமையாற்றினார். அக்காலப் பகுதியில் தமிழ்த் தொலைக்காட்சி இணையத்தில் (ரி.ரி.என்) கலை நிகழ்ச்சிகள் சிலவற்றையும் கௌசி இரவிசங்கர் தொகுத்து வழங்கினார். 2002ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் முகமாலையில் யாழ் – கண்டி நெடுஞ்சாலை திறக்கப்பட்ட பொழுது அங்கிருந்தவாறு ரி.ரி.என் தொலைக்காட்சிக்கும்,ப.ஒ.அ.(ஐ.பி.சி) வானொலிக்கும் நிகழ்வுகளை அவர் தொகுத்து வழங்கினார். அதன் பின்னர்க் கிளிநொச்சியில் நடைபெற்ற…

எது சொந்தம்? இனஎழுச்சிக் கவிஞர் நெல்லை. இராமச்சந்திரன்

  (முந்தைய இதழ்த் தொடர்ச்சி) 6 காதலித்தாய் நீபெண்ணே அதனால் தானே கண்;விழித்தேன் உன்மனத்தில்  இன்றே! என்னைப் பேதலிக்க வைக்கின்றாய்! என்ஆ  சையில் பெருநெருப்பைக் கொட்டுகிறாய்!  என்உள் ளத்தில் ஆதவனாய் ஒளிவீசும் வெளிச்சக் காடே! அச்சடித்த மறுபதிப்பு அகநா னூறே! ஏதுமிலா ஈழத்தான் என்னை ஏற்றாய்! என்சொந்தம் நீஎன்றேன் தவறா? கேட்டான். 7 ஏதுமிலா ஈழத்தான் எனச்சொல் லாதீர்! இனஉணர்வுவின் பொங்கூற்று அவனின் உள்ளம்! ஏதுமிலா ஈழத்தான் எனச்சொல் லாதீர்! இதயமெலாம் தமிழ்ப்பண்பின் குடியி  ருப்பு ஏதுமிலா ஈழத்தான் எனச்சொல் லாதீர்! எழுச்சிதரும் புறப்பாடல்…

அணு உலை எதிர்ப்பு கவிதைப் போட்டி

தலைப்பு : கூடங்குளம்: ஏன் இந்த உலை வெறி?   1. கவிதை எந்தப் பா வகையிலேயும் (புதுப்பா, மரபுப்பா) இருக்கலாம்.  2. 24 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.  3.    அணுஉலை எதிர்ப்புக் கருத்துகளை உள்ளடக்கிய கவிதைகளை            மட்டுமே அனுப்புக!  4. கடைசி நாள் : 31.12.2013.  5. உங்களின் தெளிவான அஞ்சல் முகவரி,     மின்னஞ்சல் (e-mail),                  அலைபேசி விவரங்களைக் குறிப்பிடுக. பரிசுத் தொகை முதல் பரிசு உருவா 500 இரண்டாம் பரிசு உருவா 300 மூன்றாம் பரிசு உருவா…

மன்மோகன் சிங்கு ஏமாற்றிவிட்டார் : கண்டுபிடித்த கலைஞரின் காட்டம்

இராசபட்சவுக்குத் தலையையும் தமிழர்களுக்கு வாலையும் காட்டித் தலைமையாளர் ஏமாற்றிவிட்டார் : கண்டுபிடித்த கலைஞரின் காட்டம்         திமுக தலைவர்  கலைஞர் கருணாநிதி அவர்கள், இராசபட்சவுக்குத் தலையையும் தமிழர்களுக்கு வாலையும் காட்டித் தலைமையாளர் ஏமாற்றிவிட்டதாக, மன்மோகன்சிங்கிற்கு எதிரான காட்டமான அறிக்கை விட்டுள்ளார். இது தொடர்பிலான அவர் அறிக்கை வருமாறு:- கனடா, பிரிட்டன், மொரீசியசு, திரினிடாட்டு, ஆசுதிரேலியா போன்ற நாடுகளும், உலகத் தமிழர்களும் தெரிவித்த எதிர்ப்புக்குப் பிறகும் இலங்கையில்  பொதுவளஆய மாநாடு நடைபெற்றுள்ளது. அந்த மாநாட்டின் ஒரே சிறப்புஇராசபட்சவுக்கு ஏற்பட்ட நெருக்கடியான நிலையும்,…

இலங்கைப் போர்க்குற்றங்கள் தண்டிக்கப்பட வேண்டும்: சிதம்பரம்

  குற்றவாளியே நடவடிக்கை எடுக்க வேண்டுமாம்! இலங்கையில் மனித உரிமைகளை மீறியவர்களை, அந்நாட்டு அரசு கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வலியுறுத்தினார். மேலும், “விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின்போது ஏற்பட்டதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து முழுமையானஉசாவல் தேவை” என்றும் அவர் தெரிவித்தார். சிங்கப்பூரில்  நடைபெற்ற இரண்டாவது தெற்கு ஆசிய மாநாட்டில் பேசிய மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், “மனித உரிமைகள் மீறப்பட்டது தொடர்பாக முழுமையாக உசாவல் நடத்தி, குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் இலங்கை அரசுக்கு உள்ளது”…

பன்னாட்டு வணிகக் கண்காட்சியில் ‘தமிழ்நாடு நாள்’ விழா

தில்லி பிரகதித் திடலில் நடைபெற்றுவரும் இந்திய-பன்னாட்டு வணிகக் கண்காட்சியில் ‘தமிழ்நாடு நாள்’ விழாவை தமிழ்நாடு அரசின் தில்லி சிறப்புச் சார்பாளர் எசு.டி.கே. சக்கையன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தார். தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சி-செய்தித் துறை செயலாளர் முனைவர்  மு.இராசாராம் தலைமையில் விழா நடைபெற்றது. தமிழ்நாடு இல்லத்தின் முதன்மை உள்ளுறை ஆணையர் சசுபீர் சிங்கு பசாசு, துணை இயக்குநர் கு.தாணப்பா, செய்தி விளம்பரத் துறை உதவி இயக்குநர் முத்தையா  முதலானோர் பங்கேற்றனர். விழா நடைபெற்ற திறந்தவெளி அரங்கில் பரதநாட்டியம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை முதலான கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன….

தொல்காப்பிய விளக்கம் – பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்

  (முந்தைய இதழ்த் தொடர்ச்சி) தொல்காப்பியம்எழுத்து, சொல், பொருள் எனும் முப்பெரும் பிரிவுகளையுடையது. எழுத்தும் சொல்லும் தமிழ்மொழியைப் பற்றியும் பொருள் தமிழ் இலக்கியத்தைப்பற்றியும் அறிவிப்னவாகும். இற்றைநாளில் மேலைநாட்டார், ஒரு மொழியின் பேச்சொலி பற்றி ஆராய்வதை ‘Phonology’ என்றும் சொற்கள்பற்றி ஆராய்வதை’ Morphology’ என்றும் அழைப்பர். இவை இரண்டும் மொழிநூலின் கூறுகளாகும். தொல்காப்பியத்தின் எழுத்தும் சொல்லும் தமிழ் மொழியின் ஆராய்ச்சியேயாகும்(Science of Tamil Language). உள்ளத்தில் எழும் எண்ணங்களைப் பிறர்க்கு அறிவிப்பதற்குப் பயன்படும் கருவிதான் மொழி என்றாலும், உணர்ச்சி வயப்பட்ட உயர்ந்த எண்ணங்களையும் உண்மைகளையும் இனிமை…

இந்தியப் பொறியியல் பணிக்கு (I.E.S.) விண்ணப்பிக்கலாம்.

இந்திய ஆட்சிப்பணி போன்று சிறப்பான பணி இந்தியப்  பொறியியல் பணி. இவ்வாண்டில் இப் பணியில் 763 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பை  மத்தியத் தேர்வாணையம்(யு.பி.எசு.சி.) வெளியிட்டுள்ளது. இந்தத் தேர்வுக்கு நவம்பர் 25ஆம்  நாளுக்குள் ம.ப.தே.ஆ. இணையதளத்தில் (www.upsc.gov.in) விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுமுறை, பாடத்திட்டம்  முதலான அனைத்து விவரங்களையும் இந்த இணையத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.  இப்போது பொறியியல்(பி.இ., பி.டெக்.) இறுதி ஆண்டு படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களும் இதனை எழுதலாம். இப்பணியில் தேர்ந்தெடுக்கப்பட்டால் தொடக்கத்திலேயே  மாதச்சம்பளம் உரூ.60 ஆயிரம்கிட்டும்.  முதன்மைத்தேர்வு மட்டும்தான் உண்டு. . முதல் பகுதியில் பொது…

நெல்லையை உலுக்கிய தமிழர்களப் பேரணி

 தமிழ்நாடு தனி மாநிலமாக உருவான நாளை முன்னிட்டுத் தமிழர்களம், திருநெல்வேலி நகரில் பேரணி, பொதுக்கூட்டம் நடத்தியது.  தமிழர்களத்தின் பொதுச் செயலாளர் அரிமாவளவன் தலைமையில் நடந்த இந்த நிகழ்வுகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.  பொதுவளஆய மாநாட்டில் இந்தியா கலந்து கொள்வதைக் கண்டித்தும், முள்ளிவாய்க்கால் முற்றத்தை தமிழக அரசு இடித்ததைக் கண்டித்தும், கூடங்குளம் அணுஉலையை மூடக் கோரியும், மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்களைக் கைது செய்யக் கோரியும், தமிழகப் பள்ளிகளில் அரசே முன்னின்று நடத்தும் தமிழ் அழிப்பு-ஆங்கிலத் திணிப்பை எதிர்த்தும், தமிழகத்தின் பல்வேறு உரிமைகள் தொடர்பாகவும் பேரணியில்…

மும்பையில் பெரியாரின் 135 ஆவது பிறந்தநாள் விழா

மும்பைத் திராவிடர் கழகத்தின் சார்பாகத் தந்தை பெரியாரின் 135 ஆவது பிறந்தநாள் விழா                 மும்பைத் திராவிடர் கழகத்தின் சார்பாகத் தந்தை பெரியாரின் 135 ஆவது பிறந்தநாள் விழா மிகவும் சிறப்பாக  17.09.2013 செவ்வாய்க் கிழமை  மாலை 7.30 மணியளவில் தாராவில் உள்ள கலைஞர் மாளிகையில் நடைபெற்றது. சு.குமணராசன், பெ.கணேசன், அலிசேக் மீரான், அ. இரவிச்சந்திரன், வே.ம.உத்தமன், கழகப் பொறுப்பாளர்கள் முதலியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர்.