மாமூலனார் பாடல்கள் – 16 : சி.இலக்குவனார்

(சித்திரை 07, தி.ஆ.2045 / 06, ஏப்பிரல் 20, 2014 இதழின் தொடர்ச்சி) ககூ. இமயச் செவ்வரை  மானும் கொல்லோ! – சங்க இலக்கியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்    பெறலரும் தலைவியைச் சிறப்புற மணந்த தலைவன் சென்றான் பொருள் தேட. ஏன்? பொருளின்றி இரந்தோர்க்கு ஈயாமல் இருத்தல் இழிவென்று கருதி, பெருஞ்செல்வம் தேடச் சென்றான். தலைவன் பிரிவால் தலைவி வருந்தினாள். தோழியர் கூடினர். ஆறுதல் கூறுகின்றனர்.  தோழி: அவர் தேடச் சென்ற பொருள் நம் தலைவியை விட உறுதி தரக்கூடியதா?  இன்னொரு…

எமது போராட்டம்: வெறும் நிகழ்வா? அல்லது வரலாறா?

எமது போராட்டம்: வெறும் நிகழ்வா அல்லது பெருமைக்குரிய வரலாறா என்பதை நீங்கள்தான்  வரையறுக்க வேண்டும் – கலாநிதி இராம் சிவலிங்கம்   அணையாமல் இருக்க  காற்றோடு  போராடுவதை வாழ்வாகக் கொண்ட  மெழுகுவர்த்தி போல்,  ஈழம்வாழ்  எம் உறவுகளும் அடக்குமுறைக்கும், அரச பயங்கரவாதத்துக்கும் மத்தியிலே, சிங்கள அரசின் இன அழிப்பிலிருந்து  தம்மைத் தாமே காப்பாற்ற, போராட வேண்டிய துயரய நிலைக்குத் தள்ளப்பட்டதற்கு யாரப்பா காரணம்? தரமில்லா புலம் பெயர் அணிகளும், தகுதியில்லா அதன் தலைமைகளுமல்லவா? எமது பூமியையும், அதன் பூர்வீகக்குடிகளான எம் உறவுகளையும் நாளுக்கு நாள்…

திருநங்கை சுவப்னாவின் போராட்ட அழைப்பு

என்னுடைய பள்ளிச்சான்றிதழ்களில் ஆண் பெயர் உள்ளது. இது போன்ற நேர்வுகளால் எங்களுடைய வேலைவாய்ப்பு பெரிதும் பாதிக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, எனக்கு, தனியார் நிறுவனத்தில் வேலைகிடைத்த போது சான்றிதழ் சரிபார்க்கும் நிகழ்வுக்குச் சென்றேன். ஆனால் அங்கிருந்த அலுவலர் எனது சான்றிதழில் ஆண் பெயரைப் பார்த்துவிட்டுப் பொய்யான சான்றிதழை தருகிறாயா என்றார். நான் ஒரு மாற்றுபாலினப் பெண் (திருநங்கை) என்றேன். ஆனால் அவர் என்னை நம்பவில்லை அந்த வேலை எனக்கு கிடைக்கவில்லை. இவ்வாறுதான்  தமிழ்நாடு தேர்வாணையம்(TNPSC) சரிபார்ப்பிலும் சான்றிதழ் குழப்பமிருந்தது. எனவே நானும் எங்களது தோழிகளும் பள்ளிக்கல்வி இயக்குநரிடம்…

தமிழ் ஒருங்குகுறியில் மீண்டும் ஏற்படுத்தப்படும் குழப்பம்! -முனைவர் மா.பூங்குன்றன்

உலகெங்கும் பேசப்படும் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மொழிகளுக்கும் தனித்தனி எழுத்தமைப்புகள் உண்டு. ஒரு மொழியில் அமைந்துள்ள சில சிறப்பு எழுத்துகள் பிறவற்றில் இருக்கா. மொழி, ஒலி வடிவை அடிப்படையாகக் கொண்டது. அம் மொழியில் உள்ள ஓர் அலகைத் தனியாகப் பிரித்து அந்த அலகிற்கு ஓர் எழுத்து என்று வகைப்படுத்தி, அதற்கு வரிவடிவம் கொடுத்தனர். ஒலி வடிவத்திற்கு வரிவடிவம் கொடுத்தது மொழியியல் உலகில் மிகப்பெரிய திருப்புமுனையாகும். தமிழ் மொழியின் எழுத்து வடிவத்திற்கு மிக நீண்டகால வரலாறு உண்டு. தமிழ் எழுத்துகள் கீறப்பட்ட பானையோடுகள் தொல்லியல் அகழ்வாய்வுகளில் கிடைக்கின்றன….

யாருக்கு அளிக்கலாம் வாக்கு? – இ.பு.ஞானப்பிரகாசன்

யாருக்கு அளிக்கலாம் வாக்கு? – வாக்காளப் பெருமக்களுக்கான ஒரு தேர்தல் திட்டம்! இ.பு.ஞானப்பிரகாசன் வந்துவிட்டது நாடாளுமன்றத் தேர்தல்! பத்தாண்டுக்கால அட்டூழியக் காங்கிரசு ஆட்சிக்கு முடிவு கட்ட நமக்குக் கிடைத்திருக்கும் ஓர் அரிய வாய்ப்பு! இதை நாம் எப்படிப் பயன்படுத்திக் கொள்ளப் போகிறோம், பயன்படுத்திக் கொள்ளப் போகிறோமா இல்லையா என்பதே இப்பொழுது நம் முன் உள்ள பெரிய கேள்வி.  தெருவில் கிடக்கிற சொறிநாய் கூடக் குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் குரைத்துக் கொண்டே இருந்தால் என்ன ஏதெனப் பார்ப்பார்கள். ஆனால், ஈழத் தமிழர்களைக் காப்பாற்றச் சொல்லி ஏறத்தாழ…

நாடாளுமன்றத் தேர்தலும் தமிழர் தம் கடமையும்

இப்பொழுது (ஏப்பிரல் 24, 2014) நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலும் தமிழர் தம் கடமையும் எனும் நோக்கில், தேர்தல் களம் அமைந்துள்ள சூழலை, உண்மை நோக்கில் பார்க்க வேண்டிய வரலாற்றுக் கடமை நமக்கு உள்ளது. இந்திய ஒன்றியத்தில் வாழும் மொழிவழி இனங்கள், எவ்வகையிலும் ஆளுமையுரிமை அடைந்துவிடக் கூடாது என்பதில், ஆரியம் (பிராமணியம்) கண்ணும் கருத்துமாய் செயற்பட்டு வருகிறது. தனது கரவான நோக்கம் நிறைவேற, ஆரியம் எந்த வடிவத்தை வேண்டுமானாலும்   சிறப்பாக எடுத்து செயற்பட்டு வெற்றியடைகிறது. இந்திய ஒன்றியத்தின் மறைந்த தலைமை அமைச்சர் மதிப்புமிகு வி.பி.சிங்…

தமிழ்நாட்டில் தேர்தல் பரப்புரைகளில் ஈடுபடும் கட்சிகள்

  (ஐக்கிய) சனதா தளம் அகில இந்திய  பார்வடு பிளாக் அகில இந்திய சமத்துவ  மக்கள் கட்சி அகில இந்திய சனநாயக மக்கள் கட்சி அகில இந்திய திரிணமுல் காங்கிரசு அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி அம்பேத்கர் மக்கள் இயக்கம் அனைத்து இந்திய  மூவேந்தர் முன்னணிக் கழகம் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இந்திய  மக்கள் கட்சி (சமயச் சார்பற்றது) இந்திய ஒன்றிய முசுலிம் அமைப்பு இந்திய தேசிய  அமைப்பு இந்தியச் சனநாயக கட்சி இந்தியத் தேசிய காங்கிரசு இந்தியப்…

நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர்கள் எண்ணிக்கை – தொகுதி வாரியாக

வடசென்னை  40 தென்சென்னை 42 மத்திய சென்னை  20 திருப்பெரும்புதூர்  21 காஞ்சிபுரம்  11 அரக்கோணம்  24 வேலூர்  24 கிருட்டிணகிரி  24 திருவண்ணாமலை  24 ஆரணி 19 சேலம்  25 நாமக்கல்  26 திருப்பூர்  26 நீலகிரி  10 கோவை  25 திண்டுக்கல்  18 கரூர்  25 திருச்சி  29 பெரம்பலூர்  21 கடலூர்  17 சிதம்பரம்  15 நாகை  9 தஞ்சை  12 சிவகங்கை  27 மதுரை  31 தேனி  23 விருதுநகர் 26 இராமநாதபுரம்  31 தூத்துக்குடி  14 தென்காசி…

நரேந்திர மோடி தலைமையாளரானால் தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்களுக்குப் பாதுகாப்பு இருக்காது-தொல்.திருமாவளவன்

  திருவள்ளூர்(தனி) நாடாளுமன்றத் தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் இரவிக்குமாரை ஆதரித்து தொல்.திருமாவளவன் திருவள்ளூர், ஈக்காடு, திருப்பாசூர், திருவாலங்காடு போன்ற பகுதிகளில்  தேர்தல் பரப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:– “நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் ஒரு சிறப்பான சனநாயக முற்போக்குக் கூட்டணி உருவாக்கப்பட்டு உள்ளது. இங்கு வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் இரவிக்குமாரை வெற்றி பெறச் செய்து மக்கள் பணியாற்ற அவருக்கு நீங்கள் வாய்ப்பளிக்க வேண்டும். நரேந்திரமோடி தலைமையாளரானால் -பிரதமரானால்- தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்களுக்குப் பாதுகாப்பு…

கருணாநிதி இடஒதுக்கீட்டின் பாதுகாவலராக விளங்குகிறார்: திருமாவளவன்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சனநாயக முற்போக்குக் கூட்டணியின் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியின் வேட்பாளருமான திருமாவளவன் செயங்கொண்டம், தா.பழூர் ஒன்றியத்தில் மோதிரம் சின்னத்திற்கு வாக்கு  திரட்டினார். “தா.பழூர் ஒன்றியத்தில் சிலால், கோடங்குடி, பொற்பதிந்த நல்லூர், நாயகனைப்பிரியாள், சிங்கராயபுரம், பாண்டி அங்காடி, அழிசுக்குடி, சுத்தமல்லி, நாச்சியார்பேட்டை, ஆதிச்சனூர், நத்தவெளி, விக்கிரமங்கலம், முட்டுவாஞ்சேரி, அருள்மொழி, தா.பழூர்  முதலான ஐம்பதுக்கும் மேற்பட்ட  ஊர்களிலும்  வாக்கு கேட்டார். சிலால் என்னுமிடத்தில்  பரப்புரையைத் தொடங்கி வைத்து திருமாவளவன் பேசியதாவது:– இந்தத் தேர்தல்  சமயவாதத்திற்கும், மக்கள்நாயகத்திற்கும் இடையே நடக்கின்ற போர் தலைவர் கலைஞர்…

காங். ஆட்சியில் இந்தியா ஏழை நாடாகி விட்டது: சரத்குமார்

 நெல்லை  நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் பிரபாகரனை ஆதரித்து, சமக தலைவர் நடிகர் சரத்குமார் களக்காடு, மாவடி, டோனாவூர் பகுதியில் திறந்த ஊர்தியில் பரப்புரையாற்றினார்.  அப்போது அவர் பேசியதாவது:– ‘‘மத்தியில் காங்கிரசு ஆட்சியில் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் நாட்டின் முன்னேற்றம் பாதிப்பு அடைந்துள்ளது. பொதுமக்களின் வாழ்க்கைத் தரமும் வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த 1999 ஆம் ஆண்டு முதல் 14 ஆண்டுகளாக, காங்கிரசுடன் திமுக கூட்டணியில் இருந்து பதவி நலத்தைத் துய்த்துள்ளனர். தமிழகத்தில் விலைவாசி உயர்ந்து விட்டது என்கிறார்  தாலின். இந்தியாவில்  எரிவளி விலை, …

செயலலிதா தலைமையாளராகும் கனவு பலிக்காது: அன்புமணி

அதிமுக ஆட்சியில் 6,500 கொலைகள்:  செயலலிதா  தலைமையாளராகும் கனவு பலிக்காது: அன்புமணி  இராமதாசு பேச்சு தேசிய சனநாயகக் கூட்டணி சார்பில் தருமபுரி  நாடாளுமன்றத் தொகுதியில் பா.ம.க. சார்பில்  மரு. அன்புமணிஇராமதாசு போட்டியிடுகிறார். இதனையொட்டி தருமபுரி வன்னியர் திருமண மண்டபத்தில் தேசிய சனநாயக் கூட்டணிச் செயல்வீரர்கள்  கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அன்புமணி இராமதாசு பேசியதாவது:- வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் ஒரு வெற்றிக்கூட்டணியை உருவாக்கி உள்ளோம். இந்தத் தேசியசனநாயகக் கூட்டணியை உடைக்க வேண்டும் என்று பலர் முயன்றனர். அவர்களின் முயற்சி பலிக்காது. இந்தியாவின் தலைமையாளருக்கான…