ஈழத்தாயே பொறுத்திடு! – துயிலகா

  ஈழத்தாயே பொறுத்திடு, தாயகம் மீட்டெடுப்போம் சற்றே பொறுத்திடு! தமிழரை ஒழிக்கும் சிங்களத்தின் செய்கை, நீண்டகாலம் நீடிக்காது, நிலைத்து நிற்போம் தமிழர் நாம்! முள்ளிவாய்க்கால் முடிந்ததாம், போர் தீர்ந்ததாம், இலங்கை வென்றதாம், தமிழர்க்கு விடுதலையாம், ஆயினும் எம்வாழ்வில் தேற்றமில்லை, சுதந்திரமாய் வாழ இங்கு வழியும் இல்லை! சிங்களத்தின் குடிகள் சொகுசாய் எம் வீட்டினுள், நாங்களோ வாழ வழியின்றி வீதியில்! எம்பெண்களை வற்புறுத்தி இராணுவத்தில் வேலை, தாயாவதைக்கூட தடுக்கும் ஈரமற்ற இன ஒடுக்கம்! ஐக்கிய நாடுகளோ அமெரிக்காவின் நட்பில், அமெரிக்காவின் பார்வையிலோ இலங்கையில் சமாதானம்! கேட்பார்…

இடர்கள் தந்தபோதும்…,எம் இலட்சியத் தாகம் தீராது – ஈழப்பிரியன்

அன்று…., கோயில் மணி ஓசையிலும், குயில்களின் இன்னிசையிலும், மங்கள வாத்திய இசையிலும் , மலர்ந்திடும் எங்கள் காலை…., இன்று…, கூவி வரும் செல்(பீரங்கி) ஓசையிலும், பறை எழுப்பும் அவல வசையிலும் , ஐயோ …என்ற அலறலிலும், விடிகிறது எங்கள் காலை. யுத்தத்தின் வடுக்கள்…. அடுத்தவன் கை ஒன்றை எடுத்து தன் கையோ? என ஏங்கும் ஒருவன் அங்கே…! பிணமாய்க் கிடக்கும் ஒருவனுக்கு ……, அவன் குடலே மாலையாய் கழுத்தில் அங்கே…! தமிழன் அல்லவா…..? இறந்தும் அவன் பறவைகளுக்குத் தீனி தருகின்றான். பிணக்குவியல் அகற்ற அந்த…

முள்ளிவாய்க்கால்

  எங்கள் தேவதூதுவனின் இறக்க முடியாத சிலுவையைப் போல் என் மனக்கிடங்கினுள்ளும் அமிழ்ந்து கிடக்கும் பளுவையும் என்னால் இறக்க முடிவதில்லை! ஓட ஓட விரட்டப்பட்டோம் ஒன்றின் மேலொன்றாய்ப் பிணமாய் வீழ்ந்தோம் வீழ்த்தி விட்டோமென்ற வெற்றிக்களிப்பில் இன்று நீ வீழ்ந்து கிடக்கின்றாய்! பார் விழிகளில் நீர் வழிய வீதிகளில் நாங்கள் வெதும்பிக் கிடக்கின்றோம் கொடி ஏற்றி, கொலு வைத்து குடம் நிறைந்தது போலநிறைந்த நிறைந்த எம் வாழ்வில் குடியேற்றங்களுக்காய்க் காத்துக்கிடக்கின்றோம் அகதிகளாகி! அழகுதமிழ்ச் சோறும் ஆடிக்கூழுமுண்ட எங்கள் வாயினுள் பரிசென்று பால்சோறு திணிக்கின்றாய் நீ புசிக்கின்றோம்…

பொங்கி எழு தமிழா பொங்கி எழு! – கவிச்சிங்கம் கண்மதியன்

  கரைக்காயைப் போன்றிருக்கும் ஈழ நாட்டில் கண்டைக்காய் என நினைத்துத் தமிழர் தம்மை  வெறிநாயாய்க் கடித்திங்கே குதறி மாய்த்தான்! வெந்தணலில் இராசபக்சே குளியல் போட்டான்! அரக்கனந்தக் கொடியவனின் இலங்கை நாடா அமைதிபுத்தன் அறத்தினையும் போற்றும் நாடு? கரைமீதில் எழுந்தகடல் சுனாமி போல கயவனவன் மனிதநேய மாண்ப ழித்தான்! விண்மழையாய்க் குண்டுமழை கொத்துக் கொத்தாய் விழுந்ததடா அப்பாவித் தமிழர் மேலே! புண்மீது நெருப்பானான் இராச பக்சே! புத்தனுக்கே களங்கத்தைச் சேர்த்த ‘கோட்சே’! பெண்டிர்தம் கற்புமங்கே குரங்கின் கையில் பிடிபட்ட மாலையாகிப் பிய்ந்த தாச்சே! கண்விழித்துப் பூமி…

வீழ்ந்ததெல்லாம் விதை – உமா சுப்பிரமணியன்

சுய மண்ணைச் சுடுகாடாய், பிணப்பண்ணை ஆக்குகின்றான் சுண்டினால் சுருண்டு விடும் சுண்டைக்காய் தேசத்தான் சுழல் தெரிந்திருந்தும் சூறையாட விட்டு விட்டோம். கருவியோடு களமிறங்கிய காவல்தெய்வம் ஆயிரம் குருதியோட, கொலையுண்ட குடும்பங்களோ மாயிரம் நூறாயிரம் பொறுமையோடு பார்த்திருக்க பொம்மைகளா அழிந்தது? ஞாலத்து மக்களிலே ஈழத்துத் தமிழனின் இனம் செத்துக் குவிவதை தினம் பார்த்துக் குமைவதை விதியென்று விடலாமா தமிழனே முடிவொன்று முனைவோம் வா போராடத் துணிந்தெழுந்தான் புலிக்கூட்டம் வழிநடத்த அப்பாவித் தமிழர்களின் கொடும்பாவியைக் கொய்திட அர்ப்பணித்தான் வாழ்வெல்லாம் சமர்ப்பித்தான் சக குடும்பம் பிணம் தின்னும் கமுகனை,…

உங்களைப் போன்றவனின் உள்ளக்குமுறல் – ஈழப்பதிவுகள் : 1-5

 – இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் ஈழத்தில், போராளிகள், சிறார், பெண்கள், முதியோர், மாற்றுத்திறனாளர்கள், பிற உயிரினங்கள் என்ற வேறுபாடின்றி, பன்னூறாயிரவர் கொல்லப்பட்டனர்!  பல நாட்டுப் படை உதவியுடன், எரிகுண்டு, கொத்துக்குண்டு, ஏவுகணை, எனப்பல்வகைப்பட்ட படைக்கலன்களைப் பயன்படுத்தி அங்கே வஞ்சகத்தால் மண்ணின் மக்களும் மண்ணும் அழிக்கப்பட்டனர்!  5 ஆண்டுகள் ஆனாலும் நம் உள்ளம் கனன்றுகொண்டுதான் உள்ளது. என்ற போதும் கொலையாளிகள் தண்டனையின்றி அறவாணர்கள்போல் உலா வருகின்றனர். இப்பொழுதுதான் வாக்குச் சீட்டு ஆயுதத்தின்  மூலம் கொலையாளிகளையும் கூட்டாளிகளையும் துரத்தியடித்துள்ளோம்! 1,76,000 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட மக்களை அழித்தபின்பும் இருக்கின்ற…

ஓ நந்திக்கடலே! – மட்டு மதியகன்

பார்வைக்காக விடப்பட்ட போர்க்கருவிகள் பாரிலிருந்து வந்த இராணுவ மேதைகள் மலைத்துப் போயினர் கொள்ளிக்கட்டைகளாக அள்ளி அடுக்கப்பட்ட வித்துடல்களைச் சுமந்த இயந்திர வண்டி கொலைகாரக்கொடியவன் இளம் பெண்ணை இழுத்து வருகிறான் நிருவாணமாக வீரமாது வித்தாகி விழுந்து கிடக்கிறாள் படிந்த குருதியோடு ஈரேழு வயதான எங்கள் பாலகன் பசியால் ஏதோ சுவைக்கும் புகைப்படம் பிஞ்சி மார்பில் பஞ்சு ரவை வேட்டுககள் ஏந்தியபடி வீரமரணம் போர் வீரர்கள் அடுக்கப்பட்டுகிடக்கும் அநியாயமான காட்சி இறந்த மங்கையின் மார்பில் நல் குலம் பெறாத நாசிக்காரன் காலை ஊன்றிய புகைப்படம் உயிருக்காய்ப் போராடும்…

கனவோ நனவோ – கிரிசாசன்

கண் கொண்டு பார்க்கவே கூசும் – அக் காட்சிப்படங்களைப் பார்ப்பவர் நெஞ்சம் புண்பட உள்ளமும் நோகும் – தேகம் புல்லரித்தே கூட அச்சமும்கொள்ளும் விண்கண்ட ஓலங்கள் யாவும் – வான வீதியிலே எங்கும் கேட்பது போலும் எண்ணம்  பிரமித்து நிற்கும் – அங்கே என்ன நடந்தது காணவிழைந்தேன் நட்ட நடுநிசி நேரம் – ஒரு நாளில் துணிவுடன் சென்றுமடைந்தேன் கொட்டும்மழை பெய்தபின்பு – பனி கூதலிடப் புகைபோலும் நிசப்தம் வட்டமதி மேலே நிற்க – அதன் வீசுமொளிதனில் சென்ற இடமோர் வெட்ட வெளிப்பிரதேசம் –…

தமிழர் நாம்! – துயிலகா

விளைந்த வயல்களில் வேர்களும் இல்லை வியர்வை சிந்தி உழைத்தவர் தடயமும் இல்லை மழைத்தூறல் பட்டால் மனம்கூட நிறைத்திடும் மண்வாசம் கொஞ்சமதைத் தோண்டினாலும் சற்றே பிணங்களின் படையெடுப்பு வீதிவழி கெந்தியாடிய சின்னஞ்சிறார் கையில்லை காலில்லை ஊனமானார் பட்டுச்சரிகையில் சொலித்த எம் ஈழத்தாய் விதைவைக்கோலம் தரித்தின்று மௌனித்தாள் காலகாலம் ஆண்டுவந்த எங்கள் பூமி போர்க்களமாய் மாறி நிலைகுலைந்ததின்று தமிழர் என்ற கோர்வைக்குள் நாமின்று தனித்தனியே செல்வதால்தான் பயனுமென்ன? ஒவ்வொரு தமிழனும் ஒவ்வொரு வேங்கை ஒன்றுதிரண்டால் போதும் காரிருளும் கலைந்தோடும்! ஒருவழி தமிழ்வழி நின்றிருந்தால் போதும் ஓடி ஒழிய…

அவன் வருகின்றான்!…. – கசமுகன் பிள்ளயாந்தம்பி

  தமிழர்களை அழிப்பேன் தமிழையும் அழிப்பேன் தணிக்கைகள் பல செய்வேன் தமிழ் இனத்தை தவி தவிக்கச் செய்து தரணியில் இல்லையெனச் செய்வேன்!….என்று தனி மனித உரிமைகளைத் தட்டிக் கழித்தான் தனி நாடு கேட்டோம் தத்துவங்கள் பல பேசி, தந்திரங்கள் என நினைத்து, தரித்திரத்தைத் தேடிக் கொண்டான்!…. தமக்கென இருக்கிறான் ஒருவன் தக்க சமயத்தில் வருவான் தயக்கமென்ன தமிழா! தலை நிமிர்ந்து நில்லு தமிழ் இனத்தின் தனித்துவத்தைச் சொல்லு உலகிற்கு!…. http://www.lankasripoems.com/?conp=poem&catagoryId=200000&pidp=211614

பதுங்கு குழி

பதுங்கு குழியில் அடைக்கலம் நாடுவது பயத்தால் அல்ல.. உன் மீதான வஞ்சத்தை அடைகாக்க.. நாங்கள்-நீ விட்டுச்சென்ற மிச்சம் அல்ல.. எனது தலைவனின் எண்ணத்தின் எச்சம்..! நன்றி : மதுசூதனன் http://tamilmadu.blogspot.in/2011/09/blog-post_4489.html

குறுந்தகவல் பாக்கள்

  முடி சூடிய தமிழினம் முள்வேளி கம்பிக்குள் ! – ஈழபாரதி, புதுக்கோட்டை ** சிங்களப் பெண்கள் உதட்டுச் சாயம் ஈழத் தமிழர் குருதியில்! – கணேசன், காங்கேயம் ** பனிக்குடம் உடைத்து தொப்புள் கொடி அறுத்தார்கள் துடிக்கிறது ஈழம்! – அமீர்சான், திருநின்றவூர் ** அம்மணமாய்-தமிழன் அகிலமே பதைக்கிறது உடன் பிறப்புக்கு, தமிழ் மாநாடு! – ஏழைதாசன், புதுக்கோட்டை – 2 ** புத்தத் தேசத்திற்கு ஆயுதம் கொடுத்தது காந்தி தேசம்! – எசு.விசயகுமார், புதுக்கோட்டை ** அனாதையாக அமைதி தத்தெடுக்கத் துடிக்கும்…