திகட்டாத் தமிழிதழ் – (உ)ருத்ரா இ.பரமசிவன்

அகர முதல வெறும் அகட விகடம் அல்ல. அகலத் தமிழின் அகழ்வாராய்ச்சித் திகழ் ஒளி வீசும் திகட்டாத் தமிழிதழ். பனை ஏடுகளின் மன ஏடுகள் மடல் அவிழ்க்கும் மங்கா விளக்கின் மாணிக்கச்செவ்விதழ். வாழ்த்துக்களும் பாராட்டுகளும் அன்புடன் (உ)ருத்ரா இ.பரமசிவன்

வாழி வாழி நீவிர் – (உ)ருத்ரா இ.பரமசிவன்

அன்புள்ள திரு இலக்குவனார் திருவள்ளுவன் அவர்களே! துரும்பு அசையும் தூசு அசையும் அதையும் விட‌ துல்லியமாய் அசையும் தமிழின் எழுத்தும் சொல்லும் உங்கள் இதயத்தில் தான் முதலில் அசைகிறது. உங்கள் அருந்தமிழ்ப்பணி தொடர‌ வாழி வாழி நீவிர் நீடுழி நீடூழி வாழ்வீர். அன்புடன் (உ)ருத்ரா இ.பரமசிவன்

தமிழைச் சிதைக்கலாமா? இலக்குவனார் திருவள்ளுவன் நேர்முகம் – கவிமணி

   நாள் வைகாசி 16, 2045, மே 30, 2014 பக்கம் 16     “தமிழ் எழுத்தொலிகளுக்கான ஆங்கில ஒலி பெயர்ப்பு வரையறை – கலந்துரையாடல்” என்னும் நிகழ்ச்சி நடந்ததைக் கேள்விப்பட்டோம். தமிழ்க்காப்புக்கழகம், மாநிலக் கல்லூரித் தமிழ்த்துறையுடனும் பிற தமிழ் அமைப்புகளுடனும் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தி யிருந்தது. இது குறித்து மேலும் அறியத் தமிழ்க்காப்புக்கழகத் தலைவர் இலக்குவனார் திருவள்ளுவனைச் சந்தித்தோம். அப்பொழுதுதான் இது சாதாரணமான கூட்டம் அல்ல! அபாயச்சங்கு ஒலிக்கப்பட்டுள்ளது எனப் புரிந்து கொண்டோம். அவரிடம் பேசிய விவரம் வருமாறு: தமிழுக்கான…

இந்தியச் சமூகவியல் ஆய்வுக்கட்டுரைப் போட்டி:

அ பெ கா பண்பாட்டு இயக்கம் – புதுக்கோட்டை, தமிழ்நாடு    பெருமதிப்பிற்குரியீர்  வணக்கம் .  தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டுத்தளத்தில் அம்பேத்கரிய – பெரியாரிய -மார்க்சிய சிந்தனைகளின் அடிப்படையில் உன்னதமான சமத்துவ வாழ்நிலையைக் கண்டடையும் அயராத முயற்சிகளோடு அபெகா பண்பாட்டு இயக்கம் இயங்கி வருகிறது . அபெகா-வின் செயல் திட்டங்களின் ஒரு  பகுதியாக இவ்வாண்டு  எழுத்தாளர்கள்,    ஆய்வாளர்களுக்கான  25 தலைப்புகளிலான இந்தியச் சமூகவியல் ஆய்வுக்கட்டுரைப் போட்டியினை அறிவிப்பதில்  மகிழ்ச்சியடைகிறது . ஒவ்வொரு தலைப்பிலும் ஒரு கட்டுரை வீதம் 25 கட்டுரைகள் தேர்வு  செய்யப்படும் தேர்வு பெறும் …

மத்திய அரசு + தமிழக அரசு : பாசக + அஇஅதிமுக

    சூன் 3 ஆம் நாள்  இந்தியத் தலைமையாளரைத் தமிழக முதல்வர் சந்திக்க இருப்பதாகச் செய்தி உலா வருகின்றது. அன்றோ வேறு என்றோ இருவர் சந்திப்பும் நிகழத்தான் போகிறது. ஆனால், இந்தச்  சந்திப்பு, தமிழ்நாட்டிற்குப் பயன் தரும் வகையில் அமைய வேண்டும்.   மக்களவையில் தனிப் பெரும்பான்மை பெற்றுவிட்ட பாசகவிற்கு மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லை.  எனவே, அஇஅதிமுக ஆதரவு அதற்குத் தேவை. இந்தச் சூழலைப் பயன்படுத்தி இரு கட்சிகளும் நெருங்கி வரலாம். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மத்திய அரசில் அஇஅதிமுக பங்கேற்கும் வாய்ப்பும்…

காலந்தோறும் “தமிழ்” – சொல்லாட்சி 27 – 49

   (சித்திரை 28,2045 / 11 மே 2014   தொடர்ச்சி)   27. அவன் உழை இருந்த தண் தமிழ்ச் சாத்தன் – சிலப்பதிகாரம், பதிகம் 10   28. இமிழ்கடல் வரைப்பில் தமிழகம் அறிய(த்) – சிலப்பதிகாரம், அரங்கேற்று காதை 37- 29. தமிழ்முழு தறிந்த தன்மைய னாகி  – சிலப்பதிகாரம், அரங்கேற்று காதை 38   30. ஆடல் பாடல் இசையே தமிழே  – சிலப்பதிகாரம், அரங்கேற்று காதை, 45 31. நெடியோன் குன்றமுந் தொடியோள் பௌவமும் தமிழ்வரம் பறுத்த தண்புனல்…

1 9 10