தமிழர் வரலாறு வினா விடை போட்டி- 1400 பள்ளி மாணவர்கள் பங்கேற்பு

தமிழகப் பெண்கள் செயற்களம் நடத்தும் தமிழர் வரலாறு வினா விடை போட்டி  1400 பள்ளி மாணவர்கள் பங்கேற்பு – இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்கள் என்பதை உணர்ந்து நடத்தப்படும் வரலாற்று நிகழ்வு. – ஒவ்வொரு பள்ளிகளிலும் ஆசிரியர்கள் சிறப்பு வகுப்புகள் நடத்தி    மாணவர்களுக்கு தமிழர் வரலாற்றை அறியச் செய்து..    தேர்வில் பங்கேற்க செய்த சிறப்பு. பல்வேறு சிறப்புகளுடன்.. நாளைய வரலாறாக மாறப்போகும் தமிழகப் பெண்கள் செயற்களத்தின் உயரிய செயல்களுடன்.. நடைபெறுகிறது.  ஆவணி 15, 2045 / ஆக.31, 2014  

அகநாழிகை- 4 புத்தகங்கள் வெளியீட்டு விழா

ஆவணி 22,2045 / செப் 07, 2014 கலிகெழு கொற்கை (மீனவர் வாழ்வியலை முன்வைத்து  சோ.டி.குரூசு படைப்புலகம் – கட்டுரைகள்,  மடல்கள், நேர்காணல்கள்) – தொகுப்பாசிரியர் : தி.பரமேசுவரி முப்பத்து நாலாவது கதவு (மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்) – புல்வெளி காமராசன் தனியள் (கவிதைத் தொகுப்பு) – தி.பரமேசுவரி நுனிப்புல் (நாவல்) வெ. இராதாகிருட்டிணன் வரவேற்புரை பொன்.வாசுதேவன் கருத்துரை கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் கவிஞர் நா.முத்துக்குமார் எழுத்தாளர் சமசு ‘மலைச்சொல்’ பால நந்தகுமார் ஏற்புரை சோ.டி.குரூசு புல்வெளி காமராசன் தி.பரமேசுவரி வெ. இராதாகிருட்டிணன்

தமிழக இயற்கை வளங்களும் நமது எதிர்காலமும் – கருத்தரங்கம் – மதுரை

 தமிழக இயற்கை வளங்களும் நமது எதிர்காலமும் – கருத்தரங்கம் – மதுரை – ஆவணி 15, 2045 / ஆக.31, 2014  ஞாயிறு மாலை 4 மணி வணக்கம்.   இளந்தமிழகம்இயக்கம் சார்பாக மதுரையில் வரும் 31 ஆகத்து ஞாயிறு மாலை 4 மணிக்கு .’தமிழகஇயற்கை வளங்களும் நமது எதிர்காலமும்’என்ற தலைப்பில் கருத்தரங்கம்திட்டமிடப்பட்டுள்ளது. இடம்: புத்தகக் காட்சி, தமுக்கம் மைதானம், மதுரை  இந்திகழ்வில் கலந்து கொள்ளுமாறு தங்களையும் அழைக்கின்றோம்  நன்றி இளங்கோவன்.ச செய்தித் தொடர்பாளர், இளந்தமிழகம்

ஆட்சிமொழிக்கருத்தரங்கம் , புதுச்சேரி

  புதுவைத் தமிழ்ச் சங்கம் ஆவணி 14, 2045 / ஆக.30, 2014 இல் ஆட்சிமொழிக்கருத்தரங்கம் ஒன்றைநடத்தியது. அதன்தலைவர் வெ.முத்து தலைமை தாங்கினார். செயலர்மு.பாலசுப்பிரமணியன் வரவேற்புரை நிகழ்த்தினார். தனித்தமிழ் இயக்கத் தலைவர்முனைவர் க.தமிழமல்லன் புதுச்சேரியின் ஆட்சிமொழியே என்பதைச் சட்டப்பொத்தகம்அரசாணைகள் சட்டமன்றத்தில் 1965 முன்வடிவு வைக்கப்பட்டபோது ச.ம.உக்கள் அதன்மேல் நிகழ்த்திய உரைகள் முதலியவற்றைச் சான்றுகளாக்கி நிறுவிக்காட்டினார். தமிழுக்கு இதுவரை நன்மை செய்த முன்னாள் முதல்வர்கள் பாரூக், இராமசாமி ஆகியோரைப் பாராட்டியும் பேசினார். இதில் ந.மு.தமிழ்மணி, கல்லாடன் ஆகியோரும் உரைநிகழ்த்தினர். கடைசியில் விசாலாட்சி நன்றி கூறினார்.  

உலகத்தமிழ்ப் பண்பாட்டு மாநாடு- செருமனி

   உலகத்தமிழ்ப்பண்பாட்டு இயக்கம், ஐரோப்பிய ஒன்றியம் 40 ஆவது ஆண்டு நிறைவு விழா   12 ஆவது உலகத்தமிழ்ப் பண்பாட்டு மாநாடும் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் 40 ஆவது ஆண்டு நிறைவு விழாவும் 2014 அக்டோபர் 4,5 ஆம் நாள்களில் செருமனியில் நடைபெற உள்ளது.   உலகத் தமிழர் பண்பாடு, கலை,பண்பாடடு, வாழ்வியல் மேம்பாடு, தமிழ்க் கல்வி போன்றவற்றைப் பற்றிய பதிவுகளாக   உலகளாவிய தமிழ்க்கல்வி புலம் பெயர் தமிழர்கள் தமிழர் சமயமும் வழிபாடும் தமிழர் நாகரிகமும் தமிழ்க் கலைகளும் தமிழ் மரபுகள்…

தமிழ்வளர்ச்சிக்கெனத் தனித்துறை அமைக்கப் புதுச்சேரி முதல்வருக்கு வேண்டுகோள்!

  புதுச்சேரி முதல்வர் மாண்புமிகு ந.அரங்கசாமி எளிமையானவர் என்ற பெயர் பெற்றுள்ளார். எனினும் தமிழ்நலப்பணிகளில் கருத்து செலுத்துவதில்லை என்றும் தமிழ்நலனுக்குக்கேடு தரும் வகையில் நடந்து கொள்கிறார் என்றும் தமிழன்பர்கள் கூறுகின்றனர். அவர், எக்கட்சியில் இருந்தால் என்ன தமிழ்ப்பகையான பேராயக்கட்சி(காங்.)-இல் ஊறியவர்தானே என்றும் விளக்குகின்றனர். தம்மீதுள்ள அவப்பெயரை நீக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஐப்பசி 11, 2032 (27 அக்டோபர் 2001) – வைகாசி 3, 2037(17 மே 2006) காலத்தில் முதல் முறையும், வைகாசி 4, 2037 (18 மே 2006)– ஆவணி 20…

கங்கைகொண்ட சோழபுரம் மண்ணின்மைந்தர்களுக்கு வேண்டுகோள்

சோழப்பெருவேந்தன் இராசராச சோழனது அருமைப்புதல்வன் முதலாம் இராசேந்திர சோழன், தி.பி. 1043 முதல் தி.பி. 1075 வரை / கி.பி.1012 முதல் 1044 வரை சோழ மண்ணில் ஆட்சி புரிந்த மாமன்னன். வடக்கே கங்கை முதல் தெற்கே கடாரம் வரை வெற்றி கண்ட வேந்தன்.கங்கை வெற்றிக்குப்பின் அவ்வெற்றியின் நினைவாக ஊரையும் கோவிலையும் தேர்ந்துவந்து அருகே சோழகங்கம் என்னும் ஏரி ஒன்றையும் வெட்டுவித்துள்ளான். கங்கைகொண்ட சோழபுரத்தில் அம்மன்னன் எடுப்பித்த கோவில் கங்கைகொண்ட சோழீச்சுரம் என்ற பெயரில் புகழோடு இன்றும் இருந்து வருகிறது. இக்கோவிலைப் பற்றியும் கங்கைகொண்ட…

மாமன்னன் இராசேந்திர சோழன் அரியணை ஏறிய 1000 ஆவது ஆண்டு விழா (கி.பி. 1014-2014)

ஆடித் திருவாதிரையில் இராசேந்திர சோழன் பிறந்த நாள் விழா மாமன்னன் இராசேந்திர சோழன் 1000ஆவது முடிசூட்டு விழா, கங்கை கொண்ட சோழபுரத்தில் மக்கள் வெள்ளத்தோடு சீரோடும்சிறப்போடும் ஆடி 8, ஆடி9, 2045 / 24, 25-சூலை, 2014 நாள்களில் நடைபெற்றது. விழாவில் மாமன்னன் இராசேந்திரன் பற்றிய நூலும் குறுந்தகடும் வெளியிடப்பெற்றன. கருத்தரங்கமும் நடைபெற்றது.     கங்கை கொண்ட சோழபுரம் காட்சிகள்   சூலை ‘கண்ணியம்’ இதழில் மாமன்னன் இராசேந்திர சோழன் அரியணை ஏறிய 1000 ஆவது ஆண்டுவிழாவை, இந்திய அரசும் தமிழக அரசும்…

‘முடிசூடிய மாமன்னன்’ – கவிதைப் போட்டி

மாமன்னன் இராசேந்திர சோழன் அரியணை ஏறிய 1000 ஆவது ஆண்டுவிழாவை முன்னிட்டுக் ‘கண்ணியம்’ அன்பர்களுக்குக் கவிதைப் போட்டி இறுதி நாள் : ஐப்பசி 13, 2045 / 30.10.2014