செம்மொழி இதழ், சிங்கப்பூர் : ஆவணி-புரட்டாசி 2045

அன்பிற்கினிய செம்மொழி வாசகர்களுக்கு வணக்கம். தமிழவேள் சமூக நற்பணி மன்றத்தின்சமூக இலக்கிய இதழான செம்மொழியை (சூலை-செப். 2014) உங்களுக்கு வாசிக்கத்தருவதில் மகிழ்ச்சியடைகிறோம். செம்மொழி இதழை www.semmozhi.net  இணையத்தள முகவரியிலும் வாசிக்கலாம். அன்புடன் எம்.இலியாசு ஆசிரியர், செம்மொழி செயலர், தமிழவேள் நற்பணி மன்றம் HP: 0065-91894649 sangam_elias@yahoo.com.sg 

கவி ஓவியா இலக்கியமன்றம், திறனாய்வுத் திருவிழா – மன்னை பாசந்திக்குப் பாராட்டு

கவி ஓவியா இலக்கியமன்றம் திறனாய்வுத் திருவிழா “சிறுதுளியில் சிகரம்” நூலாசிரியர் மன்னை பாசந்திக்குச் சாகித்ய அகாதமியைச் சேர்ந்த முனைவர் இராமகுருநாதன்  பாராட்டிதழ்  வழங்கல்  நாள் :  ஐப்பசி 30, 2045 நவம்பர் 16, 2014 சென்னை

சுந்தரேசனார் ஆவணப்படம் முன்னோட்டத் திரையிடல்

    புதுச்சேரியில் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படம் முன்னோட்டத் திரையிடல் நிகழ்ச்சி   தமிழிசை வளர்ச்சிக்கு ஐம்பதாண்டுகளுக்கும் மேலாகப் பாடுபட்டவர் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவார். இவர்தம் நூற்றாண்டு நினைவாக அவரின் வாழ்க்கை வரலாறு ஆவணப்படமாகத் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணப்படத்தின் முன்னோட்டக் காட்சி கார்த்திகை 10, 2045 / 26.11.2014 மாலை 6.30 மணிக்குப் புதுச்சேரி செயராம் உணவகத்தில் திரையிடப்பட்டது. முனைவர் க. தமிழமல்லன் தலைமை தாங்கினார். பேராசிரியர் ப. அருளி,  திரைப்பட இயக்குநர் குணவதிமைந்தன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முனைவர்…

அரசியலில் திரைப்புள்ளிகள் – இரசினி, குட்பு

அரசியலில் திரைப்புள்ளிகள் – இரசினி, குட்பு   அரசியலில் பங்கேற்க யாவருக்கும் உரிமையுண்டு. பிற துறையைச் சேர்ந்தவர்கள் பங்கேற்பதுபோல் திரைத்துறையினருக்கும் அந்த உரிமையுண்டு. என்றாலும் நாட்டு மக்களுக்கு எத்தொண்டும் ஆற்றாமல், அவர்களின் சிக்கல்களைத் தீர்ப்பதற்காகக் குரல் கொடுக்காமல், அவர்களின் போராட்டக்களங்களில் தோள் கொடுக்காமல், நன்கறிநிலை(popularity) உள்ளதால் மட்டுமே அரசியல் தலைமையையும் நாட்டுத்தலைமையையும் எதிர்பார்த்து அரசியலில் காலடி எடுத்து வைப்பது என்பது வீண் கனவே!. அப்படி எந்த ஒரு துரும்பையும் மக்களுக்காக எடுத்துப் போடாதவர்களை அரிசியலில் இறங்கவும் முதல்வர் பதவியை அணி செய்யவும் சிலர் அழைக்கின்றார்கள்…

பூட்டியே கிடக்கும் வறுமை ஒழிப்புச் சங்கங்கள்

பூட்டியே கிடக்கும் வறுமை ஒழிப்புச் சங்கங்கள் தேவதானப்பட்டி பகுதியில் சிற்றூர் வறுமை ஒழிப்புச் சங்கங்கள் செயல்படாமல்பூட்டியபடியே கிடக்கின்றன. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் இச்சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இச்சங்கத்தில் தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோர் உள்ளனர். இச்சங்கம் திறக்கப்படாமல் இருக்கும்பொழுதே சம்பளம் எடுத்துக்கொள்கின்றனர். இவைதவிரப் போலி ஆவணம் தயார் செய்து அரசுப்பணத்தை மோசடி செய்கின்றனர். மேலும் சங்கத்திற்கு வருகின்ற ஐம்பதாயிரத்தைச் செயலாளர் இசைவில்லாமல் கணக்காளர் மற்றும் தலைவர்கள் இணைந்து பணத்தை எடுத்துப் போலி ஆவணம் தயார் செய்து அரசிற்குக் கணக்கு காட்டி…

பிரபாகரன் வருகைப் பத்து- சபரி நாதன்

வருவாய் இதுசமயம்! வானோங்கு தமிழினம் வளர்ந்தோங்கச் செய்தவனே தேனோங்கு செந்தமிழால் நாளுமுன்னைப் பாடுகிறோம் மானோங்கு தமிழர்க்கு மருள்நீக்கும் மன்னவனே வானோங்கு செங்கதிரே வருவாய் இதுசமயம். . கையில் தமிழேந்திக் கருத்தில் உனையேந்தி மெய்யாக வழிநடப்போம் மேலான எம்தலைவா பொய்யான கதைகளும் புனையான வார்த்தைகளும் நைந்ததென நீஎழுந்து வருவாய் இதுசமயம். . வஞ்சகத்தின் வலையதனில் வகையாக மானானோம் குஞ்சரி மணவாளா குணமுள்ள மாதவனே வஞ்சகத்தின் தளையறுத்து வண்டமிழர் குலம்காக்க வஞ்சலென வந்திடுவாய் ஆறுதலைத் தந்திடுவாய். . அஞ்சித்தலை குனிந்தும் அடிமைபோல் வாய்புதைந்தும் அஞ்சலென வந்தவர்க்கு ஆதரவு…

சொல் மந்திரம் – செயல் எந்திரம் : அ.ஈழம் சேகுவேரா

சொல் மந்திரம் செயல் எந்திரம்   நாம் விதைப்பதற்காக நிலத்தைக் கிளறினோம், அவர்கள் புதைப்பதற்காக நிலத்தைக் கிளறினார்கள். நாம் கதிரறுக்கக் கத்தி எடுத்தோம், அவர்கள் கருவறுக்கக் கத்தி எடுத்தார்கள். நாம் சூடு மிதித்தோம், அவர்கள் சூடு வைத்தார்கள். பாடுபட்டு விளைஞ்சதெல்லாம் வீடு கொண்டு வந்து சேர்க்க முயன்றோம் வழி மறித்தார்கள். நம் மடியில் கை வைத்தார்கள். கலங்கப்பட்டோம் கலவரப்பட்டோம் கூனிக்குறுகியது ஆத்மா. விளைபூமி வினைபூமியாயிற்று. இசைந்து போதல் சுகம் என்றார் சிலர். மசிந்து போனாலே இருப்பு என்றார் சிலர். கட்டுடைத்து குலைந்து போனது ஒரு…

நச்சு உண்ணிக்கடியால் பாதிக்கப்படும் மலைவாழ்மக்கள்

மேற்குமலைத்தொடர்ச்சியில் காட்டெருமையின் நச்சு உண்ணிக்கடியால் பாதிக்கப்படும் மலைவாழ்மக்கள் மேற்குமலைத்தொடர்ச்சி அமைந்துள்ள தேனி, திண்டுக்கல் பகுதிகளில் நச்சு உண்ணிக்கடியால் மலைவாழ் மக்களும் சுற்றுலாப் பயணிகளும் கடும் அல்லல்படுகின்றனர். இவற்றைத்தவிர அண்டை மாநிலமான கேரளா, ஆந்திராவிலும் இதே நிலை நீடிக்கிறது. இந்த மூன்று மாநிலங்களிலும் ஏறக்குறைய 2 கோடி மலைவாழ் மக்கள் வசித்துவருகின்றனர். இம்மலைவாழ் மக்கள் அப்பகுதியில் வேளாண் நிலங்களை உருவாக்கி, காழ்ச்செடி(காப்பி), தேயிலை, வாழைக்காய், சீமைஅவரை(பீன்சு), உருளைக்கிழங்கு, செங்கிழங்கு(பீட்ரூட்டு), தோடம்பழம்(ஆரஞ்சு), தேங்கனி (கோகோ), மிளகு, ஏலம், கிராம்பு போன்றவற்றைப் பயிரிட்டு வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு…

தமிழ் வெற்றிக்காகப் பாடுபட்டவர் இலக்குவனார்

    பேராசிரியர் எங்குப் பணியில் சேர்ந்தாலும், அங்குச் சிறப்புத் தமிழில்தேவைக்கேற்ப இளங்கலை, முதுகலை முதலான வகுப்புகளை அறிமுகப்படுத்துவார். இதுபோல் சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலையில் தமிழ் இல்லாமல் இருந்தது. அங்குத் தமிழ் வகுப்பு கொணர்ந்தது குறித்தும் தமிழுணர்வு ஊட்டியது குறித்தும் அங்குப் பணியாற்றிய முனைவர் மெ.சுந்தரம் அவர்கள் பின்வருமாறு தெரிவிக்கிறார் (வீ.முத்துச்சாமி: இலக்குவனாரின் ஆய்வுப் பண்பு): “மாநிலக் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவராக இருந்தபொழுது பேராசிரியர் இலக்குவனார் அவர்கள் முதன்முதலில் இளங்கலை வகுப்பில் (B.A.) தமிழ்ச்சிறப்பு வகுப்பைக் கொணர்ந்தார். இவருக்குமுன் மாநிலக் கல்லூரியில் இவ்வகுப்பு…

தமிழ் உரிமை காக்க இலக்குவனார் வேண்டுகோள்!

  தமிழ் உரிமை காக்கப் பெருநடைப் பயணம் மேற்கொள்வது குறித்த இலக்குவனார் வேண்டுகோள்! கல்வித்துறையிலும் ஆட்சி, நீதி, கலைத் துறைகளிலும் தமிழ்உரிமையை நிலைநாட்டும் நல்லநோக்கத்துடன், அண்மையில் தமிழ் உரிமைப் பெருநடைச் செலவொன்றை மேற்கொள்ள இருக்கின்றோம். கல்லூரிகளில் உடனே தமிழைப் பாட மொழியாக ஆக்கவேண்டியதின் இன்றியமை யாமையை மக்களிடையே விளக்க வேண்டும். பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்க ளிடையே தமிழ்மூலம் படிப்பதனால் ஏற்படும் நன்மைகளையும் பிறமொழிகள்மூலம் படிப்ப தனால் ஏற்படும் தீமைகளையும் எடுத்துச்சொல்ல வேண்டும். தமிழைப் பாடமொழியாகக் கொண்டு படிக்க வருவோர் தொகையை மிகுதிப்படுத்த வேண்டும். உயர்நிலைப்…

1 2 12