பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! – தமிழ்மாமணி ஆ.வெ.முல்லை நிலவழகன்

  பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! தமிழ்மாமணி ஆ.வெ.முல்லை நிலவழகன் காட்சி – 1   அங்கம்    :     ஆண் சிட்டு, பெண் சிட்டு இடம்      :     கூரையிலுள்ள குருவிக்கூடு நிலைமை  :     (தன்னுரையாக இரு சிட்டும் முன்னுரை இங்கே பகிர்கின்றது) ஆண் பெண் பருவ இருசிட்டு ஆழ்ந்த காதல் முடிபோட்டு வாழத்துடியாய்த் துடித்தொன்றாய் நாடி நரம்பு தளர்ந்து விட வானில் பறவைகள் பறந்ததுவே! அஞ்சிச் சிறகுகள் வழிதடுத்தும் கெஞ்சிக்கால்கள் குரல்கொடுத்தும் அலையாய், அலையாய் அலைந்துமே நிலையாய் முட்டையிட்டுவிடக் குஞ்சு பொரித்து…

வைகை அணையில் குளிக்கும் பயணிகள்

வைகை அணையில் கண்டமான (ஆபத்தான) இடத்தில் குளிக்கும் சுற்றுலாப் பயணிகள் தேனிமாவட்டத்தில் உள்ள வைகை அணை மிகச்சிறந்த சுற்றுலாத் தளமாகும். இப்போது பெய்து வருகின்ற மழையினால் வைகை அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. மேலும் வைகை அணையில் எங்கு பார்த்தாலும் பச்சைப்பசேல் என்று தாவரங்களும் பூங்காக்களும் உள்ளன. இவற்றைக் காண்பதற்குத் தேனி மாவட்டம் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றனர். இப்பொழுது ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் வைகை அணையைச் சுற்றிப்பார்க்க ஆசைப்பட்டு வருகின்றனர்….

இதழியலாளர் பாரதி – ஆவணப்படம் திரையிடல்

இதழியலாளர் பாரதி  ஆவணப்படம் திரையிடல் 27 நிமிடம் ( இயக்கம் – அம்சன் குமார் )பங்கேற்பாளர்கள் ..                  இதழாளர் மாலன்                                                                                                                இதழாளர் திருப்பூர் கிருட்டிணன்                   …

மனங்கவர் ‘மாங்கனி’ தந்த கண்ணதாசன் 1 – இலக்குவனார் திருவள்ளுவன்

  கண்ணதாசன் என்றால் அனைவருக்கும் நினைவிற்கு வருவது அவரது திரைப்பாடல்கள்தாம். நம் வாழ்வில் பல்வேறு நிகழ்வுகளின் பொழுது நம்மோடு தொடர்புடையனவாக – நமக்கே என்று எழுதப்பட்டனவாக – அமைந்த பாடல்கள் வழி நாம் அவரை என்றும் நினைவில் கொள்கிறோம். ஆனால் அவர் பாடலாசிரியராக மாறும் முன்னரும் பின்னருமே கவிஞர், கதையாசிரியர், நாடக ஆசிரியர். இதழாசிரியர், திரைப்படக் கதைஉரையாடலாசிரியர், புதின எழுத்தாளர், காவிய ஆசிரியர், கட்டுரையாளர், எனப் பன்முகமும் கொண்டவர். பிறப்பும் சிறப்பும்   கண்ணதாசன் ஆனி 10, 1958 / 24.6.1927 இல் சிறுகூடல்பட்டியில்சாத்தப்பன்-விசாலாட்சி…

சங்க இலக்கியத்தில் சுற்றுச் சூழல் (தொடர்ச்சி) – செ.வை. சண்முகம்

(நவம்பர் 23, 2014 இன் தொடர்ச்சி) மையக்கருத்துரை   4. தொல்காப்பியர் நோக்கு    தொல்காப்பியரே சுற்றுச்சூழல் திறனாய்வுக்கு முன்னோடி எனலாம். அது இரண்டு நிலையில் அமைந்துள்ளதாகத் தோன்றுகிறது.1. பலரும் எடுத்துக் காட்டும் முதல்,கரு, உரி என்ற பாகுபாடு, 2. அவருடைய உள்ளுறை, இறைச்சி என்ற கருத்தமைவுகள் மூலம் புலனாகும் சுற்றுச் சூழல் திறனாய்வு கருத்துகள். 4.1.முதல், கரு, உரி          ‘முதல் கரு உரிப்பொருள் என்ற மூன்றே                நுவலுங் காலை முறை சிறந்த னவே                பாடலுள் பயின்றவை நாடுங்…

தனிமை போக்கும் நினைவுகள் – தணிகா சமரசம்

 விண்ணில் மிதக்கும் விண்முகில்போல் விரைவில் மறையும் நீர்க்குமிழ்போல்  கண்ணின் பார்வை தொலைநோக்கக்   காணும்  உலகம் விரிந்தோடத்  தண்ணீர்  மீதின் காட்சிகள்போல்  தளிர்ந்து  மனத்தில்சஞ்சரிக்க  என்னுள்  வாழ்ந்து எழுச்சியுறும்  இறந்த  கால நினைவுகளே ! பள்ளிப்  பருவ நாளங்கே ! பாடித்  திரியும் நண்பரங்கே ! சொல்ல இயலாச் சிரிப்பங்கே ! துயரம்  தாளா மனதங்கே ! செல்லம் கொடுக்கத்  தாயங்கே ! சிந்தை ஊக்கும் தந்தையங்கே !  உள்ளம் என்னும் உலகினிலே உலவித் திரியும் நினைவுகளே ! இன்ப துன்ப நினைவெல்லாம்  இறந்த  காலமனச்சின்னம் !  இன்று நடக்கும் நிகழ்ச்சிகளை  எளிதாய்  முடிக்கவழிக்காட்டி !  என்றும்…

அன்னை மண்ணே! – செந்தமிழினி பிரபாகரன்

நீயே என்  தாயே..!! ஈரைந்து திங்களே.. தாயெம்மைச் சுமந்தாள்… மூவைந்து ஆண்டுகள் என்னைச் சுமந்த அன்னை மண்ணே.. என்னைத் தொலைத்தாயோடி? வெயிலோடும் வரப்போடும் விளையாட மடி தந்த அழகிய தாயவளை நெக்குருகும் நினைவுகளில் நானின்று சுமக்கின்றேன்.. நானென்ன உன் தாயா? பொழுதெல்லாம் பொங்கும் உணர்வு ஊற்றுகளில் உருக்குலைந்து போகாமல்.. போற்றியிங்கு பாடுகின்றேன்.. சுழன்று வீசிய காலச் சுழலில் அகதியென உலக மூலைகளில் திக்கொன்றாய்.. தூக்கி வீசப்பட்ட தூசுகளாக நாம்… காலச் சதியில் சிதறிய முத்துகளாய்.. உறவுகள் நாம் பிரிந்தோம்.. எங்கெங்கோ தொலைந்தோம்.. முகமிழந்து போன…

தூததும் நினைவே அன்றோ ! – திருமதி சிமோன்

தூததும் நினைவே அன்றோ ! – திருமதி சிமோன்     காலமோ மாறி ஓடும்   கற்பனை, சுவையும் மாறும் ! ஞாலமோ சுமையை வாழ்வில்   நாளுமே ஏற்றி வைக்கும் ! பாலமாய் நின்று தாங்கும்   பாசமும் மறைந்து போகும் ! தூலகம் (விடம்) நிறைந்த போதில்   தூததும் நினைவே அன்றோ !  எண்ணும் பொழுதில் விளையாடும்   இளையோர் நினைவும் அதிலன்றோ ! வண்ணம் மின்னும் காதலதும்   வாழ்வில் மாந்தர் நினைவன்றோ ! திண்ணம் முதியோா் கனவெல்லாம்   தேடும் வம்ச வளமன்றோ ! சுண்ணம் (தூசு) போன்று மறைந்தேகி   தொடரும் கடிதோர்…

கண்டீரா ஓர் இறும்பூதை ! : இளையவன் – செயா

மதுரைப் பாவலர் மா.கந்தையா அவர்கள் தமது மாரடைப்பில் நலந்தேறியபின் தமது மக்களுக்க்கு எழுதிய கவிதை மடல் தமிழ் உணர்வும் ஊற்றமும் பெரியாரிய உறைப்பும் மிக்க அப் பாவலர் தமிழ்த்தாய் அருளால் நலமோங்க வாழ வாழ்த்துகிறோம். – முனைவர் மறைமலை இலக்குவனார்     கண்டீரா  ஓர்  இறும்பூதை ! திருப்பாற்   கடலில்   திருஅமுதம்  எடுக்க ஒருபுறம் தேவர்கள் மறுபுறம் அசுரர்கள் மேருமலையை மத்தாக குறும்பாம்பாம் வாசுகியை பெரும்கயிறாகக் கொண்டு  பெருங்கடலைக் கடைந்தனராம் ! கண்டான்வாலி அனைவரையும் கண்ணால் அகலச்செய்து கையால்  கடைந்தான் ;  கடைந்தவரிடம் அமுதம்தந்தானாம்…

தேனி மாவட்டத்தில் அம்மாதிட்டம் – வைகை அனிசு

தேனி மாவட்டத்தில் அம்மாதிட்டம் பயனாளிகளுக்கு உடனடிச் சான்றிதழ்   தேனிமாவட்டத்தில் உள்ள முதலக்கம்பட்டியில் அம்மாதிட்டம் நடைபெற்றது.   இத்திட்டத்திற்கு ஊராட்சிமன்றத் தலைவர் வீ.முத்துப்பாண்டி தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் முதலக்கம்பட்டி, வைகைப்புதூர், சங்கரமூர்த்திபட்டி, இந்திரா குடியிருப்பு முதலான பகுதியைச்சேர்ந்த ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்துகொண்டனர்.   அவர்களுக்கு வேண்டிய சாதிச்சான்றிதழ், வருமானச்சான்றிதழ், இருப்பிடச்சான்றிதழ், முதியோர் உதவித்தொகை, குடும்பஅட்டையில் பெயர்நீக்கல், பெயர் சேர்த்தல், உரிமை(பட்டா)மாறுதல், மரபுரிமையர்சான்றிதழ் போன்றவை வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியல் வட்டாட்சியர் இரமேசு, சமூக நலத்துறை வட்டாட்சியர் சொரூபராணி, மண்டலத் துணை வட்டாட்சியர் ஆர்த்தி, வருவாய் ஆய்வாளர்…

தேவதானப்பட்டிப் பகுதியில் களமாக மாறிவரும் பாலங்கள்

தேவதானப்பட்டிப் பகுதியில் களமாக மாறிவரும் பாலங்கள் தேவதானப்பட்டிப் பகுதியில் பாலங்கள் சாலைகள் ஆகியவை களமாக மாறிவருகின்றன. தேவதானப்பட்டி பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பெய்த மழையால் வானம் பார்த்தபூமிப் பகுதியில் எள், தட்டாம்பயிறு, உளுந்தம்பயறு, சோளம் போன்றவற்றைப் பயிரிட்டனர். தற்பொழுது அவை அறுவடை செய்யப்பட்டு வருகின்றன. இவ்வாறு அறுவடை செய்யப்படும் கூல(தானிய)வகைகளைப் பறித்து அவற்றைக் காயவைத்து அதன்பிறகு அடித்து அல்லது மாடுகளை வைத்து மிதித்துப் பயிர்களை தனித்தனியாகப் பிரிப்பார்கள். அதன்பின்னர் காற்று வரும் திசையை நோக்கி முறம் போன்ற பொருட்களால் எடுத்து வீசும்போது…

தேனி மாவட்டத்தில் பேணுகையின்றிக் காணப்படும் பொதுப்பணித்துறை கட்டடங்கள்

தேனி மாவட்டத்தில் பேணுகையின்றிக் காணப்படும் பொதுப்பணித்துறை கட்டடங்கள் தேனிமாவட்டத்தில்; பொதுப்பணித்துறைக்குச் சொந்தமாக அரசு கட்டடங்கள் மிகுதியாக உள்ளன. வைகை அணைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், சிறப்பு விருந்தினர்கள், அமைச்சர்கள், அரசு உயர்அதிகாரிகள் தங்குவதற்குத் தங்கும் விடுதிகள் ஏராளமாக கட்டப்பட்டுள்ளன. இக்கட்டடங்கள் வைகை அணையில் உள்ள பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான கட்டடங்கள் ஆகும். ஒவ்வொரு கட்டடங்களிலும் விருந்தினர்கள் தங்குவதற்கு அனைத்து வசதிகளும் இயற்கை எழிலுடன் அமைக்கப்பட்டுள்ளன. இவை தவிர இக்கட்டடங்களில் இருந்து மேற்குமலைத்தொடர்ச்சியை கண்டு களிப்பதற்கும் வைகை அணை பார்த்து களிப்பதற்கும் ஏற்ற வகையில் இவை கட்டப்பட்டுள்ளன….