கலைச்சொல் தெளிவோம் 28 : குறுமி – dwarf

 28. குறுமி- dwarf    ஞாயிற்றைவிடப் பெரியவிண்மீன்களை gaint என்றும் மிகவும் சிறிய விண்மீன்களை dwarf என்றும் தமிழிலேயே ஒலிபெயர்ப்பாகக் குறிக்கின்றனர். அல்லது அரக்கன் என்றும் குள்ளன் என்றும் மாந்தர்களைக் குறிப்பதுபோல் நேர்மொழிபெயர்ப்பாகக் குறிப்பிடுகின்றனர். dwarf – குட்டை, குள்ளமான என வேளாணியலிலும் குள்ளர் எனச் சூழறிவியலிலும் குட்டையான, குள்ளன் என மனையறிவியலிலும் குறிக்கப்பட்டுள்ளன. இவற்றின் அடிப்படையில், குள்ளமாக உள்ள மனிதர்களைக் குறிக்கும் சொல்லால் விண்பொருளையும் குள்ளன் என்று குறிப்பது பொருத்தமில்லை. குறு(56), குறுக்கை(2), குறுக(6), குறுகல்(7), குறுகல்வேண்டி(3), குறுகல்மின்(1), குறுகா(2), குறுகாது(3), குறுகார்(1),…

கலைச்சொல் தெளிவோம் 26 : உழலி – wanderer

  26 : உழலி – wanderer கோள்கள், விண்மீன்கள், உலவிகள் தவிர விண்ணில் திரிவனவற்றைத் திரிவன,  வாண்டரர்/wanderer என்றே சொல்கின்றனர். மனையியலில் இதற்கு அலைபவர் எனப் பொருள் தந்துள்ளது, அலைந்து திரியும் மக்களைத்தான் குறிக்கும்; விண்பொருளைக் குறிக்காது. ஆதிமந்திபோல் ‘உழல்வென்கொல்லோ’ எனப் புலவர் வெள்ளிவீதியார் கேட்கிறார்(அகநானூறு 45.15). உழல் அடிப்படையில் பல சங்கச்சொற்கள் உள்ளன. வானில் உழல்வனவற்றை நாம் உழலி எனச் சொல்வதே பொருத்தமாக அமையும். உழலி – wanderer – இலக்குவனார் திருவள்ளுவன்

இலக்குவனாரின் புதிய பார்வை – இலக்குவனார் திருவள்ளுவன்

இலக்குவனாரின் புதிய பார்வை  இலக்குவனார் திருவள்ளுவன்   தமிழிலக்கிய இலக்கண நூல்களைப் புரிந்து கொள்ளப் பெரும் உதவியாகஇருப்பன உரைகளே ஆகும். இலக்கிய, இலக்கணக் கடலின் கலங்கரை விளக்கங்களாக உரையாசிரியர்கள் திகழ்கின்றனர். உரையாசிரியர் களால் பல மூல நூல்களும் நமக்குக்கிட்டும் வாய்ப்பு அமைந்துள்ளன. நமக்கு வழிகாட்டும் உரையாசிரியர்களுள்இக்காலத்தில் போற்றத் தகுந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் பேராசிரியர்முனைவர் சி.இலக்குவனார்.    உரையாசிரியர்கள் இலக்கிய விளக்கம்நமக்குப் பயன்தருகின்றன என்பது ஒரு பக்கம். மறுபுறமோ,  அவர்கள், தம் காலச்சூழலுக்கேற்ற உரை விளக்கம் அளித்தும் தம் விருப்பு வெறுப்புக்கேற்பமூலநூல்களை அணுகியும் பொருந்தா உரைகளும் அளித்துள்ளனர்…

கருவிகள் 1600 : 41 – 80 : இலக்குவனார் திருவள்ளுவன்

கருவிகள் 1600 : 41 – 80 : இலக்குவனார் திருவள்ளுவன் 41. அதிர்வுக்கோல்மானி – vibrating reed meter  [ அதிர்வுக்கோல்மானி: இயற்கையான அதிர்வு நிகழ்வெண்களுடைய கோல்களைப்பயன்படுத்தும் ஒரு வகை நிகழ்வெண்அளவுமானி. ( ம.660)] 42. அதிர்வுமானி – vibrometer / vibration meter   :     அதிர்வு அலைவீச்சுகளை அளவிடும் கருவி. 43.  அதிர்வுவரைவி – vibrograph : அதிர்வுகளைப் பதிவு செய்யும் கருவி. 44.  அமிழ்த்தளவி – dip guage 45.  அமிழ்வு ஒளிவிலகல்மானி – immersion refractometer 46….

தமிழறிஞர்களில் முதல்வர் இலக்குவனார்

தமிழறிஞர்களில் முதல்வர் இலக்குவனார் *முதன்முதலாகத் தொல்காப்பியர் விழா, திருவள்ளுவர் விழா, இளங்கோ விழா, ஔவையார் விழா, தமிழ் மறுமலர்ச்சி விழா என ஐந்து விழாக்களைத் தாம் பணியாற்றிவந்த கல்விநிறுவனங்களில் நடத்தித் தமதுமாணவர்களுக்கு மட்டுமன்றி அவர்தம் பெற்றோர்களுக்கும் தமிழுணர்வெழுச்சியைஊட்டியவர் இலக்குவனார் அவர்களேயாவர். *தமிழ் வகுப்புகளில் மாணவர்கள் ஆங்கிலத்தில் வருகைப்பதிவு வழங்கிக் கொண்டிருந்த நிலையை மாற்றி “உளேன் ஐயா” என்று தமிழில் கூறும் வழக்கத்தைக் கொணர்ந்தவர் இலக்குவனாரே. *மக்கள்மன்றத்தில் திருக்குறளை அறிமுகப்படுத்தும் வண்ணம் தந்தை பெரியார் எழுச்சியுடன் 1948-ஆம் ஆண்டு நடத்திய திருக்குறள் மாநாட்டுக்குப் பின் 1949-ஆம்…

மனங்கவர் ‘மாங்கனி’ தந்த கண்ணதாசன் : பகுதி 5 – இலக்குவனார் திருவள்ளுவன்

  (மார்கழி 13, 2045 / திசம்பர் 28,2014 தொடர்ச்சி)   ஆரியக் கசப்பு உருவ வழிபாட்டிற்கு எதிராகவும் தேவர்கள் என ஆரியர்கள் தம்மைக்கூறி இடைத்தரகராய் இறை வழிபாட்டில் நடந்து கொண்டு தமிழர்களை ஏமாற்றுவதற்கு எதிராகவும் ஓர்இறைக் கொள்கையுடன் தன்மான எண்ணம் கொண்டவர் அக்காலக் கவிஞர் கண்ணதாசன். எனவே, தேரில்லை சிலையில்லை தேங்கா யில்லை தெய்வத்தைச் செவிடாக்கும் தேவரில்லை (மாங்கனி : 1.வஞ்சியில் விழா 7 :1-2)  என அருமையாக ஆரியக் குறுக்கீடற்ற வழிபாட்டை விளக்குகிறார். ‘மாங்கனி’யில் இடம் பெறும் தொடர்கள், பின்னர், கவிஞர்…

நெல் பயிரில் நோய் தாக்குதல் – உழவர்கள் கவலை

நெல் பயிரில் நோய் தாக்குதல் – உழவர்கள் கவலை   தேவதானப்பட்டிப் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள நெல் பயிரில் கடும் குளிர் காரணமாகப் புகையான் நோய் ஏற்பட்டுள்ளது.   தேவதானப்பட்டி, மஞ்சளாறுஅணை, கெங்குவார்பட்டி, சில்வார்பட்டி முதலான பகுதிகளில் ஏறத்தாழ 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காணி(ஏக்கர்) பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. தற்பொழுது பகலில் போதிய வெயில் இல்லாமலும், வானம் மேக மூட்டத்துடனும், இரவில் கடும் குளிருடனும் தட்பவெப்பம் நிலவுகிறது. மேலும் பகலில் சில நேரங்களில் அதிக வெயிலும், இரவு நேரத்தில் கடும் குளிரும் மாறிமாறி அடித்து வருகின்றன….

மருத்துவர்கள் வராததால் நோயாளிகள் அவதி

தேவதானப்பட்டி தொடக்க நல்வாழ்வு நிலையத்திற்கு மருத்துவர்கள் வராததால் நோயாளிகள் அவதி   தேவதானப்பட்டி, மேல்மங்கலம் முதலான தொடக்க நல்வாழ்வு நிலையங்களுக்கு மருத்துவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு வராததால் நோயாளிகள் கடும் அவதிப்படுகின்றனர்.   பொம்மிநாயக்கன்பட்டி, குள்ளப்புரம், செயமங்கலம், சில்வார்பட்டி, புல்லக்காபட்டி முதலான ஊர்களில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். தற்பொழுது பனிக் காலம் என்பதால், மாறிவரும் காலநிலையில் பலவிதமான தொற்று நோய்களுக்கும், சளி, இருமல், காய்ச்சல் போன்ற நோய்களுக்கும் மக்கள் ஆளாகின்றனர்.  இதனை உடனடியாகச் சரி செய்யாவிட்டால் பத்து நாட்கள் வரை நோய் நீடிக்கிறது. உடனடி மருத்துவம்…

தேனி : பேருந்துகள் நேர்ச்சி(விபத்து)கள் ஏற்படும் கண்டம்

தேனிமாவட்டத்தில் இரவு, பகலாக இயங்கும் தனியார் பேருந்துகள் நேர்ச்சி(விபத்து)கள் ஏற்படும் கண்டம்   தேனி மாவட்டத்தில் இரவு, பகலாக தனியார் பேருந்துகள் இயங்குவதால் மோதல் நேர்ச்சி ஏற்படும் கண்டம் உள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள போடி, கம்பம், தேனி, கூடலூர் பகுதிகளில் இருந்து நாள்தோறும் சென்னைக்குத் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவ்வாறு இயக்கப்படும் தனியார் பேருந்துகள் புறப்பட்டு தேவதானப்பட்டியில் உணவருந்த நிறுத்திவிட்டு அதன்பின்னர் புறப்படுகின்றன. புறப்பட்ட பின்னர் வேறு எங்கும் நிற்காமல் சென்னையில் உள்ள கோயம்பேடு பேருந்தில் நிறுத்தப்படுகின்றன.   மேலும் இப்பகுதியில் விளையும்,…

கலைச்சொல் தெளிவோம் 25 : உலவி-moon / satellite

25 : உலவி-moon / satellite வானில்ஒருகோளைச்சுற்றி – உலவி – வரும் விண்பொருளைmoon/satellite என்கின்றனர். வானியல், மனையியல், கணக்கியல் ஆகியவற்றில் மூன் / moon – நிலா,  திங்கள், மதி எனக் குறிப்பிட்டு இருப்பினும் காலத்தைக் கணிக்க உதவும் திங்களை மட்டும்தான் இது குறிப்பதாக அமையும். இவ்வாறு நாம் மூன்/moon என்றால் நிலவைத்தான் நினைப்போம். எனவே, நிலா என்னும் சொல்லைப் பொதுவாகப் பயன்படுத்தினால் பொருட்குழப்பம்தான் வரும். உலவு(1) என்னும் சங்கச் சொல் அடிப்படையில் வானில் உலவி வருவனவற்றை உலவி என்று சொல்வதே பொருத்தமாக…

கலைச்சொல் தெளிவோம் 24 : யாணர் – fresh income

  24. யாணர் – fresh income யாணர்(86), யாணர்த்து(7), யாணரஃது(1), எனப் புலவர்கள் சங்க இலக்கியங்களில் கையாண்டுள்ளனர். பொதுவாகப் புது வருவாய் என்பது செல்வத்தை மட்டுமல்லாமல் புதிய விளைச்சல், புதிய உணவு என்ற வகையில் எல்லா வளத்தையும் குறிக்கின்றது. புதிது படற்பொருட்டே யாணர்க் கிளவி என்னும் தொல்காப்பியத்திற்கேற்ப (உரி.21) புதியனவெல்லாம் யாணர் எனக் குறிக்கப்பட்டுள்ளன. சான்றுக்குச் சில பார்ப்போம். பேரா யாணர்த்தால் வாழ்கநின் வளனே. (பதிற்றுப்பத்து : 24.30) அறாஅ யாணர் அகன் றலைப் பேரூர்ச் (பொருநர் ஆற்றுப்படை: 1) இருங் கதிர்…

திருவள்ளுவமாலையின் சொல்நுட்ப மேலாண்மைத்திறன்கள் – பகுதி 4

 (மார்கழி 13, 2045 / திசம்பர் 28, 2014 தொடர்ச்சி)   10.2. இறையனாரதுநிறைபாடல்— 03 சொல்தொடர்: என்றும்….நின்றுஅலர்ந்து தேன்பிலிற்றும் நீர்மையதாய் மன்புலவன் வள்ளுவன் வாய்ச்சொல். பொருள்உரை      எக்காலத்தும் நின்று நிலைக்கும்படி மலர்ந்து தேன்சொரியும் தன்மையது, நிலைபெற்ற புலவர் திருவள்ளுவர் வாயிலிருந்து பிறந்தசொல் திருக்குறள். நுட்பங்கள் சொல்: தேன் தேனின்மருத்துவக்குணங்கள்      கண்பார்வையைத்தெளிவாக்கும்     ]இருமலைத்தீர்க்கும   குருதிக்கொதிப்புக்குச்சிறந்தமருந்தாகும்      குருதியைத்தூய்மைப்படுத்தும்      கொழுப்பைக்குறைக்கும்      இதயத்தின்ஆற்றலைக்கூட்டும் தேன்உடல்நோய்களைத்தீர்க்கும். திருக்குறள் உடல்நோய்களை வராமல் தடுக்கும்; வரும்முன் காக்கும். கற்க95—ஆவது அதிகாரம் மருந்து. தேன்…