இராணிமேரிக்கல்லூரி, மொழிபெயர்ப்புக்கருத்தரங்கம்

  செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும்  அரசு இராணி மேரிக்கல்லூரியும் இணைந்து நடத்தும் செவ்வியல் தமிழ் இலக்கிய இலக்கண மொழிபெயர்ப்புகள் தேசியக் கருத்தரங்கம்  சென்னை அறிஞர் போப் அரங்கம் பேராசிரியர் சி.இலக்குவனார்  அரங்கம் பேராசிரியர் ஏ.கே.இராமானுசம் அரங்கம் மாசி 13, 14, & 15, 2046 – பிப்ரவரி 25,26 & 27, 201 (அழைப்பிதழ்களைச் சொடுக்கிப் பார்க்கவும்)

தேவதானப்பட்டிப் பகுதியில் நீரின்றி வாடும் நெற்பயிர்கள்

  தேவதானப்பட்டிப் பகுதியில் அறுவடைநேரத்தில் தண்ணீர் இல்லாததால் நெற்பயிர்கள் காய்ந்து வருகின்றன.   தேவதானப்பட்டி அருகே உள்ள அ.வாடிப்பட்டி, மருகால்பட்டி, இரெங்கநாதபுரம், எருமலைநாயக்கன்பட்டி முதலான பகுதிகளில் அறுவடை நேரத்தில் தண்ணீர் இல்லாததால் நெற்பயிர்கள் கருகிவருகின்றன. தேவதானப்பட்டி அருகே உள்ள அ.வாடிப்பட்டி பகுதிக்குச் செல்கின்ற 13ஆவது மடையிலிருந்து 18 வரை மஞ்சளாறு அணை திறக்கப்பட்டபோது தண்ணீர் செல்லவில்லை. இதற்குக் காரணம் இப்பகுதியில் புறவழிச்சாலை பணிநடந்து கொண்டிருந்தது. அப்போது புறவழிச்சாலைக்கு பணிநடப்பதால் அப்பகுதியில் உள்ள கால்வாய்களில் மண், மணல், கற்கள் அடைத்துத் தண்ணீர் செல்லாமல் நின்றுவிட்டது.  …

இலக்கு நிகழ்வு – அறிவுநிதி விருது – சிறப்புரை

  வணக்கம். நலம், வளம்,  சூழ வேண்டுகிறோம்.. இந்த மாத இலக்கு நிகழ்வு மாசி 7, 2046 – 19.02.2015 அன்று  மாலை 06.30 மணிக்கு, மயிலாப்பூர் பாரதிய வித்யா பவன் சிற்றரங்கில் நிகழ இருக்கிறது.. உறவும் நட்புமாய் வருகை தர வேண்டுகிறோம்..   என்றென்றும் அன்புடன்.. சிபி நாராயண் .. யாழினி..  

பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 11– ஆ.வெ.முல்லை நிலவழகன்

காட்சி – 11 அங்கம்    :     ஆண் சிட்டு, பெண் சிட்டு இடம்      :     மரக்கிளை நிலைமை  : (நாடகம் பார்க்கும் ஆவலிலே நவின்றிடும் பேடை எண்ணாது கூடாக் கோபத்தை துணைக்கொண்டு கொட்டுது சொற்களை ஆண்சிட்டு) பெண் :     அப்பப்பா! இவர்கள் என்னதான் பேசுகிறார்களோ புரியவில்லை! எப்பவும் இவர்கள் இப்படித்தான் பேசிக் கொண்டிருப்பரோத் தெரியலையே! ஆண் :     அவர்கள் ஏதோ! பேசட்டுமே! அதனால் நமக்கு வருவதென்ன? செவனே என்று சில நாழி பேசாதிருவேன் நீ கொஞ்சம்! பெண் :     விசிலும் ஊதித் திரை நீக்கி…

தில்லி வாக்காளர்களுக்குப் பாராட்டுகள்!

தில்லி வாக்காளர்களுக்குப் பாராட்டுகள்!   தலைகால் புரியாமல் இருக்கும் நரேந்திரர், அகமது(பட்டேல்) முதலானவர்கள் தலையில் பாறாங்கல்லைப் போட்ட தில்லி வாக்காளர்களை நாம் பாராட்ட வேண்டும். ஆம் ஆத்மி என்னும் பாசக-காங். கலவைக் கட்சியைத் தேர்ந்தெடுத்ததற்காக நாம் பாராட்டவில்லை. அதனைத் தேர்ந்தெடுப்பது தவிர அம்மக்களுக்கு வேறு வழியில்லை. ஆனால், பாசக வெற்றி பெற்றிருந்தால் இந்தியாவே தாங்கள்தான் என மாரடித்துக் கொண்டு உலகமெல்லாம் மாயத் தோற்றத்தை அதன் தலைவர்கள் உருவாக்கியிருப்பர்.   நரேந்திரர் பின்னால் இந்தியா இருப்பதாகவும் அதன் தலைவர் அகமது வினைத் திறம் வெற்றி கண்டதாகவும் கூறுவதுடன்…

பன்னாட்டு குத்தூசி மருத்துவர்கள் – மாற்றுமுறை மருத்துவர்கள் மாநாடு

அனைத்துத் தமிழ்நாடு குத்தூசி மருத்துவச் சங்கம் நடத்தும் 8 ஆவது பன்னாட்டு குத்தூசி மருத்துவர்கள்  மாற்றுமுறை மருத்துவர்கள் மாநாடு   வேண்டுகோள் மடல் நாள்   மாசி 30, 2046 & பங்குனி 1, 2046 — 14.03.2015 & 15.03.2015 சனி, ஞாயிறு எல்கேஎசு மஃகால், திண்டுக்கல் சாலை, திருச்சிராப்பள்ளி

தமிழர்கள் இம்மண்ணின் மைந்தர்கள்

தமிழர்கள் இம்மண்ணின் மைந்தர்கள் திராவிடர்கள் வெளிநாட்டிலிருந்து வந்து இந்தியாவிற்குள் நுழைந்தவர்கள் என்பது உண்மை அறியா மாந்தரின் கற்பனையுரையேயாகும். திராவிட நாகரிகமும் பண்பாடும் இந்நாட்டு மண்ணிலேயே முளைத்து எழுந்து, தழைத்து, வளர்ந்து பல விழுதுகள் விட்டு முதிர்ந்த பேராலமரமாகும். – இந்தியக் கலை-பண்பாடுகள் – தமிழ்ச்சிமிழ்

கலைச்சொல் தெளிவோம்! 74. மை-Altostratus

 74. மை-Altostratus  மை 6000 பேரடி(மீட்டர்) உயரத்தில் உள்ள இடைஅடுக்கு முகிலே மை என்பது. மை(110) எனில், கருநிறம், வண்டி மை, பசுமை, குற்றம் என்பன போன்று பல பொருள்கள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் முகில் என்பது. மைபடு சென்னி (கலித். 43), “மைபடு மால்வரை”(நற்றிணை : 373:3. ) “மைபடு சிலம்பின்” (குறுந். 371 & பரிபாடல் : 16:2) “மைபடு குடுமிய குலவரை” (பரிபாடல் : 15:9-10) என்னுமிடங்களில், ‘மை’ மலைகளில் தவழும் முகிலைக் குறிக்கின்றது. மழைக் கருக்கொண்டபின் கருமையாய் அமையும்…

கலைச்சொல் தெளிவோம்! 73. கார்-Altrocumulus

 73. கார்-Altrocumulus   கார் கடல் முகந்து வந்தன்று, கார்! (முல்லைப்பாட்டு : வெண்பா 2) காரும் ஆர்கலி தலையின்று. தேரும் (அகநானூறு : 54.3) கார் புறந்தந்த நீருடை வியன் புலத்துப் (குறுந்தொகை : 162.1) தளி தரு தண் கார் தலைஇ (நற்றிணை : 316.9) கார்கலித்து அலைப்ப (ஐங்குறுநூறு : 496.2) என்பன போல் சங்க இலக்கியத்தில் 139 இடங்களில் வந்திருந்தாலும் கார் முகிலையும் கார் பருவத்தையும் இச் சொல் குறிக்கின்றது. 5000 பேரடி(மீட்டர்) உயரத்தில் மழை பெய்யும் நிலையில்…