மசுகட்டுத் தமிழ்ச்சங்கத்தின் பூவையர் பூங்கா நிகழ்ச்சி – சுரேசமீ

 மசுகட்டுத் தமிழ்ச் சங்கம் மகளிர் மட்டுமே கலந்துகொண்ட ‘பூவையர் பூங்கா’ எனும் ஒரு நாள் நிகழ்ச்சியை மசுகட்டு வாடிக்கபீரிலுள்ள, கிறிசுடல் சூட்டு உறைவகத்தில் சித்திரை 22, 2046 / மே 5, 2015 அன்று நடத்தியது.  இந் நிகழ்ச்சியில், வெள்ளித்திரை- சின்னத்திரை நடிகை நளினி, மகளிர் புற்றுநோய் மருத்துவர் மரு. சுமனா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்!   ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் எனக் கூடியிருந்த பெண்கள் மகிழ்ச்சியாகக் கொண்டாடினார்கள் என்றால் மிகையாகாது! அழகிப் போட்டியில் தொடங்கிய நிகழ்ச்சி, சொல் விளையாட்டு,…

இந்தியக் கலை மரபு யாவும் தமிழரது கலைகளே!

இந்தியக் கலையியலை ஆராய்ந்த மேற்குநாட்டு அறிஞரும் யாவரும், தென்னாட்டு தமிழ்நாட்டு கலைமரபைத் “திராவிடக் கலைமரபு’ என்னும் பெயராலேயே போற்றியுள்ளனர். நூறு ஆண்டுகளுக்கு முன்னர், “இந்திய, கிழக்கத்திய சிற்பக்கலை’ எனும் நூலை எழுதி சேம்சு பர்கூசன் என்பவர், திராவிடக் கலைமரபு’ என்னும் பெயராலேயே விரிவாக எழுதியுள்ளார். “”இந்தியாவின் மதிநலமிக்கப் படைப்புகள் அனைத்தும் ஆரியர்களுடைய சாதனை எனச் சொல்லுவது தவறாகும். வேத உபநிடதங்கள் போன்று எழுதப்பட்டவை ஆரியர் அளித்தவை என்பதனை உடன்படலாம். ஆனால், இந்தியாவில் கட்டப்பட்டவை யாவும், கலை நயத்தோடு படைக்கப்பட்டவை யாவும் ஆரியரல்லாத அந்நாட்டுப் பழங்குடி…

64 கலைகள்

இசைக்கலை ஆடற் கலை சிற்பக்கலை சித்திரக்கலை கட்டடக்கலை கவிதைக்கலை நாடகக்கலை இசைக்கருவிகள் இசைக்கும் கலை நீரலை இசைக்கலை (சலதரங்கம்) பன்மொழித்திறமை பல நூல்களைக் கற்றுணர்தல் கவி நயம் விளக்கல் கவிநடையில் பேசுதல் கவிதை வினா விடை கவிதையை முழுமையாக்கல் ஒப்புவித்தல் அழகுறப் பேசுதல் பல்சொற்பொருள் திறன் திறனாய்வுக் கலை குண இயல்புகளை அறிதல் ஒப்பனைக் கலை வண்ணப்பூச்சுக்கலை திலகமிடும் கலை கூந்தல் முடிக்கும் கலை ஆடை அணியும் கலை நகை அணியும் கலை தோட்டம் அமைத்தல் மலரால் அழகுபடுத்தல் கோலமிடுதல் உருவங்களைத் தோற்றுவித்தல் பொம்மைகள்…

கலைகள்

  கலைமரபில் ‘ஆயகலைகள் அறுபத்து நான்கு’ என்னும் மரபு தோற்றம் பெற்றுள்ளது. காதர்பரி, பாகவத புராணம், விட்ணு புராணம், அரிவம்சம், இலலித விசுதாரம், காமசூத்திரம் முதலான நூல்கள் 64 கலைகளைப் பற்றிக் குறிக்கின்றன. ஆனால், ஒவ்வொன்றிற்கும் சிற்சில வேறுபாடுகள் காணப்படுகின்றன. சில நூல்கள் சிலவற்றைக் கூட்டியும் சிலவற்றை நீக்கியும் கொடுத்¬துள்ளன. ஆனால், 64 என்கின்ற எண்ணிக்கையை எல்லா நூல்களும் ஒரே நிலையாகப் பின்பற்றியுள்ளன. (கு.வெ.பாலசுப்பிரமணியன்: சங்க இலக்கியத்தில் கலையும் கலைக்கோட்பாடும்: பக்கம்.13) சிலம்பில் 64 என்கின்ற எண்ணிக்கை குறிப்பிட்டப்பட்டுள்ளது. (சிலப்பதிகாரம்: ஊர்சூழ்வரி: அடி. 116)…

கலைகளைத் தன்னுள் கொண்டிருக்கும் தமிழின் பெருமையை விரித்துரைப்பது எளிதன்று!

  உலகம் நாகரிகம் கண்டறியாத அக்காலத்திலேயே கோட்டை கொத்தளம் கட்டி, தனக்கெனச் சில வரையறைகள் உண்டாக்கி அரசு நடத்தி, உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் அகிலும் தோகையும் முத்தும் பட்டும் அனுப்பிச் செல்வம் கொழித்த நாடு தம் தாய்த் திருநாடாம் தமிழகம். பல்வேறு நாட்டாரின் விருப்புக்கும் தேவைக்கும் உகந்த நாடாக இருந்து, வந்தவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து இறுமாந்து நின்றது தமிழ்நாடு. என்று பிறந்தது, என்று ஆய்ந்து காலத்தை அறுதியிட்டுக் காட்ட முடியாத நம் மொழியும் இனமும் இதற்குச் சான்று பகரும். சங்கம் கண்டு தமிழ்…

நாட்டிய நங்கையர் அறிவதற்கெனச் சிறந்து விளங்கிய கலைகளில் சில

  வேத்தியல், பொதுவியல் என்றிரு திறத்துக் கூத்தும், பாராட்டும், தூக்கும், துணிவும், பண்ணியழ்க் கரணமும், பாடைப் பாடலும், தண்ணுமைக் கருவியும், தாழ்தீங் குழலும், கந்துக் கருத்தும்,மடைநூற் செய்தியும், சுந்தரச் சுண்ணமும், தூநீ ராடலும் பாயற் பள்ளியும், பருவத்து ஒழுக்கமும், காயக் கரணமும், கண்ணியது உணர்தலும் கட்டுரை வகையும், கரந்துறை கணக்கும், வட்டிகைச் செய்தியும், மலராய்ந்து தொடுத்தலும், கோலம் கோடலும், கோவையின் கோப்பும் காலக் கணிதமும், கலைகளின் துணிவும், நாடக மகளிர்க்கு நன்கனம் வகுத்த ஓவியச் செந்நூல் உரைநூற் கிடக்கையும் கற்றுத் துறைபோகிய பொற்றொடி நங்கை…

கருநாடக இசை என்பது தமிழிசையின் பிற்கால வளர்ச்சியே

 நம்நாட்டில் மிகப் பழமையானது, தொன்மைச் சிறப்பு வாயந்தது என்று போற்றப்படுவது தென்னாட்டுக் கருநாடக இசையாகும். ஆனால் இக்கருநாடக இசையின் வரலாற்றினை நடுநிலையான உள்ளத்தோடும், நெறியுடனும் ஆராய்ந்து நோக்கினால், அது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் நாட்டிலே தோன்றி பண்டைய தமிழர்களால் அரும்பாடுபட்டு வளர்ந்த ஓர் இசை முறையின் பிற்காலத்துப் பரிணாம வளர்ச்சி என்று நன்கு விளங்கும். – முனைவர் சு.சீதா: தமிழகக் கலைச் செல்வங்கள்: இசைக்கலை: பக்கம்.86

தமிழர்இசையின் சிறப்பைச் சங்க நூல்கள் இயம்புகின்றன.

  காலத்தால் முந்தியும் கருத்தால் நிறைந்தும் பண்டைத் தமிழ் மக்களின் வாழ்வியலை நன்கு எடுத்துக் காட்டியும் இலக்கியச் செம்மையில் சிறந்தும் விளங்குகின்ற சங்கப் பாடல்கள் இசைச் செய்திகளைப் பலவாறு பற்பல இடங்களில் கூறியுள்ளன. கிறித்துவுக்கு முன்னர் இரண்டும் பின்னர் இரண்டுமான நான்கு நூற்றாண்டுகளில் தமிழர் இசை எவ்வாறு இருந்திருக்க வேண்டும் என்பதைச் சிந்தித்து உணரும் சிறந்த வாயில்களாகச் சங்ககால இலக்கியங்கள் விளங்குகின்றன. பண்ணும் பாடலும் பண்பட்டு வளர்ந்த நிலையை நன்குணருமாறு பல செய்திகளைச் சங்கச் செய்யுள்கள் தாங்கி மலர்ந்துள்ளன. – முனைவர் ஏ.என்.பெருமாள்: தமிழர்…

பண்ணும் பரதமும் வடக்கே தோன்றியது என்றால் அங்கே ஏன் இல்லை?

    சாரங்கத்தேவர்தான் கருநாடக இசையை உண்டாக்கியவர் என்றும், பரத முனிவர்தான் பரத நாட்டியத்தைக் கண்டு பிடித்தவர் என்றும் ஒரு கூட்டத்தார் கூறி வருகின்றனர்.   காசுமீரத்துச் சாரங்கதேவர்தான் கருநாடக இசையைப் படைத்தவர் என்பது உண்மையானால் காசுமீரத்திலும், மத்தியப்பிரதேசத்திலும், உத்தரப்பிரதேசத்திலும் இன்றுள்ள இசைவாணர்கள் மோகனத்தையும் (முல்லைப்பண்), யதுகுல காம்போதியையும் (செவ்வழி), மத்தியமாவதியையும் (செந்துருத்தி) பாடிக் கொண்டிருக்க வேண்டும். வடபுலத்துப் பரத முனிவர்தாம் பரத நாட்டியத்தைக் கண்டுபிடித்தவர் என்பது உண்மையானால், இன்று பஞ்சாபிலும், பீகாரிலும், வங்காளத்திலும் நாட்டியக் கலைஞர்கள் பரதநாட்டியம் ஆடிக்கொண்டிருக்க வேண்டும். கருநாடக இசையும்…

பிரபாகரன் சிலையிடிப்பு : கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் – வைகோ

பிரபாகரன் சிலையை இடித்துத் தகர்த்ததைக் கண்டித்து, 9 ஆம் நாள் நாகையில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்! தமிழகம் முழுமையும் பிரபாகரன் சிலை எழும்; எந்த ஆற்றலாலும் தடுக்க முடியாது! வைகோ அறிக்கை! தமிழ்க்குலத்தின் தவமைந்தன், தரணியில் தமிழ் இனத்திற்கு அடையாளத்தை- முகவரியை நிலைநாட்டிய  வரலாற்று நாயகன், நான் உயிரினும் மேலாக நேசிக்கும் தலைவர் பிரபாகரன் அவர்களின் உருவச் சிலையை, நாகை மாவட்டத்தில் தெற்குப் பொய்கை நல்லூர் மாரியம்மன் கோவில் பகுதியில் வாழும் தமிழ் மக்கள், தாங்கள் வழிபடும் ஐயனார் கோவில் வளாகத்தில் வெள்ளைப் புரவியின்…

தமிழிசைச் சிறப்பு வேறு எந்த நாட்டு இசையிலும் இல்லை

 சிலப்பதிகாரமும் அதற்குரிய அரும்பதவுரை, அடியார்க்கு நல்லார் உரை ஆகியவையும் தமிழிசைபற்றி அறிவித்துள்ள கருத்துகள் அளவில் இன்றைய அறிவுக்கும் மிஞ்சியதாக அமைந்திருப்பதைக் கண்டு தமிழிசையின் வாழ்வையும் வளர்ச்சியையும் கருதிக் காணலாம். இவற்றுள் விளக்கப் பெற்றுள்ள கருத்துகள் உலகில் வேறு எந்த நாட்டிசைக்கும் அமைத்துக் காணப்படாதவை. ஓசையின் அளவு, இசையமைப்பு, பண்ணமைப்பு, பாடலமைப்பு, தாளவகை, தூக்கு, பிண்டி, பிணையல், வரிப்பாட்டு, வண்ணங்கள், யாழிசை, குழலிசை, ஏழிசை, இசை அலகு பெறல், பண்களின் பெயர்கள், இசையின் எண்கள் முதலியவற்றைத் தனித்தனியாக விளக்கிக் காட்டும் அளவுக்குத் தமிழிசை ஈராயிரம் ஆண்டுகளுக்கு…

கீர்த்தனையால் விளைந்த நலன்சிறிது; தீங்கோ பெரிது! – திரு.வி.க.

  தமிழ்நாடு விருந்தோம்புவதில் பெயர் பெற்றது. எல்லாத் துறைகளிலும் அது விருந்தோம்பியுள்ளது. தமிழ்நாடு கீர்த்தனை விருந்தையும் ஓம்பியது. கீர்த்தனையால் நாட்டுக்கு விளைந்த நலன் சிறிது; தீங்கோ பெரிது.   கீர்த்தனை தமிழ்நாட்டில் கால் வைத்ததும் அதற்கு வரவேற்பு நல்கப்பட்டது. தமிழில் கீர்த்தனைகள் யாக்கப்பட்டன. அந்நாளில் பெரும்பெருஞ் சிங்க ஏறுகள் இருந்தன. முத்துத்தாண்டவர், கோபாலகிருட்டிண பாரதியார், அருணாசலக் கவிராயர் முதலியோர் பெருஞ்சிங்க ஏறுகளல்லவோ? அவர்களால் யாக்கப்பட்ட கீர்த்தனைகளில் பொருளும் இசையும் செறியலாயின… இந்நாளில் கலைஞரல்லாதாரும் கீர்த்தனைகளை எளிதில் எழுதுகின்றனர். அவை ஏழிசையால் அணி செய்யப்படுகின்றன. அவ்வணியைத்…