சிற்றிதழ் அறிமுகம் – பரணி

தரணி போற்றும் தாமிரபரணி ஆற்றங்கரையிலிருந்து(நெல்லை) தமிழ்ப்போர்ப்பரணி பாடப் புத்தாண்டில் களம் புகுகிறது படைப்புகள் அனுப்ப வேண்டிய முகவரி : ந. செயபாலன், காவேரிச் சாலை, 3- ஆவது முதன்மைச் சாலை, கோடீசுவரன் நகர் – திருநெல்வேலி -627 006 பதிவு: பெரம்பலூர் கிருசு இராமதாசு, துபாய்

தகவல், தொடர்பாடல் நுட்பப் (ICT) பயிற்சி

விக்கிபீடியர்களுக்கான பயிற்சி கடந்த ஒரு மாதமாகத், தமிழ்நாட்டின் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி – பயிற்சி நிறுவனம் (SCERT) மூலமாகத் தமிழ்நாட்டின் 30 மாவட்டங்களில் ஆசிரியர்களுக்கான தகவல்,  தொடர்பாடல் நுட்பப் (ICT) பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் 50 ஆசிரியர்கள் என்று மொத்தம் 1500 ஆசிரியர்கள் மூன்று நாட்களுக்கு இப்பயிற்சி பெறுகின்றனர். இதன் ஒரு பகுதியாக ஒரு முழு நாள் முழுதும் தமிழ் விக்கிப்பீடியாவில் ஆசிரியர்கள் பங்களிப்பது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.   மா.க.ஆ.ப.நி.(SCERT) நியமித்த பயிற்றுநர்களுடன், சேலத்தில் பள்ளி ஆசிரியையாகப் பணிபுரியும்…

வீரமும் ஈரமும் செறிந்தவனே! பிரபாகரனே! – அரங்க கனகராசன்

ஈழம் எமக்கு நிழலாகும்! இனியவனே ! இன்னுயிரை துச்சமெனக் கொண்டு மண்ணுயிரை – தமிழ் மண்ணுயிரை இனம் காட்டியவனே! தமிழர் என்றோர் இனம் தரணிதனில் அழிந்திடவில்லை என்றே பறை செய்தவனே! வீரத்தின் வேரை பாரின் விளிம்புக்கும் பாய்ச்சியவனே – தமிழர் மாண்பினை போர்முனையிலும் அழகு செய்தவனே! நீ வாழி! நின் எண்ணம் திண்ணமாகும்! ஈழம் எமக்கு நிழலாகும்! அரங்க கனகராசன்  

கி. பாரதிதாசனின் ‘சொல்லோவியம்’ -மு.இளங்கோவன் அணிந்துரை

கவிஞர் கி. பாரதிதாசனின் சொல்லோவியம்   மண்மணம் குழைத்து மரபுப்பாடல் வரைவோர் அருகிவரும் வேளையில் பிரான்சில் வாழும் கவிஞர் கி. பாரதிதாசன் அவர்களின் ‘சொல்லோவியம்‘ என்னும் நூலினைச் சுவைக்கும் வாய்ப்பு அண்மையில் அமைந்தது. பாவேந்தர் பாரதிதாசன் அவர்களிடமும், உவமைக்கவிஞர் சுரதா அவர்களிடமும் அமைந்துகிடக்கும் சொல்வளமை இந்த நூல்முழுவதும் அமைந்துள்ளமை பாராட்டினுக்கு உரிய ஒன்றாகும். நூறு சொல்லோவியங்கள் இந்த நூலை அழகுசெய்கின்றன. பெண்ணொருத்தியின் உள்ளத்திலிருந்து ஊற்றெடுக்கும் அகவுணர்வு பாட்டுவடிவில் பக்குவமாக வெளிப்பட்டு நிற்கின்றது. தம் உள்ளங் கவர்ந்து உறவாடியவனை நினைத்துப், பேதைப் பெண்ணொருத்தி வெளிப்படுத்தும் அன்புமொழிகளைப்…

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 09: ம. இராமச்சந்திரன்

(அகரமுதல 106   கார்த்திகை 06, 2046 / நவ. 22, 2015 தொடர்ச்சி)     இலக்குவனார் ஆசிரியராகப் பணியாற்றிய தொடக்கக் காலத்தில் குறுங்காவியம் ஒன்று பாடியுள்ளார். (குறிப்பு : ஆய்வாளர் கவனக்குறைவால் இவ்வாறு தெரிவித்துள்ளார். இவர் குறிப்பிடும் குறுங்காவியம் இலக்குவனார் புலவர் மாணாக்கராக இருந்த பொழுது எழுதப்பெற்றது.) இக்கதைப் பாடல் முழுவதும் அகவற் பாவால் எழுதப் பெற்று பதிப்பும் செய்து வெளியிட்டிருக்கிறார்கள். ஆயின் அக்கவிதை ஆய்வாளர் கைக்குக் கிட்டவில்லை.  தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை வெளியிட்டுள்ள ‘தமிழ் நூல் விவர அட்டவணையில் மேற்படி…

12ஆவது பன்னாட்டுத் தமிழ்க்கல்வெட்டுகள் பயிற்சிப்பட்டறை

தஞ்சாவூர் திசம்பர் 1 முதல் திசம்பர் 11 முடிய தொடக்க விழா: கார்த்திகை 14, 2046 / திசம்பர் 01, 2015 காலை 11.00 இந்த பயனுள்ள 10 நாட்கள்  தரமான தமிழ் கல்வெட்டுகள் பயிற்சிப் பட்டறையில் பங்குபெற விரும்புவோர்  தொடர்பு க்கு:   (1)  ஒருங்கிணைப்பாளர் சு இராசவேலு சுவடிப்புலத் தலைவர் தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர் rajavelasi@gmail.com   (2) ஒருங்கிணைப்பாளர் அப்பாசாமி  முருகையன் உயராய்வு மையம் அறிவியல் ஆராய்ச்சி மையம் பிரான்சு a.murugaiyan@gmail.com   அன்புடன்   நூ த (உ)லோ சு  மயிலை 

‘முயற்சி’ குறித்த படைப்புகளைத் தமிழ்த்தேர் வரவேற்கிறது!

தமிழ்த்தேரின் அடுத்தத் தலைப்பு:       உங்கள் படைப்புகள் கார்த்திகை 23, 2046  / 09.12.2015க்குள் வரவேற்கப்படுகின்றன. முழுதாய் எண்ணம் வெற்றிபெறவே முதலாய் வேண்டும் முயற்சி! பழுதாய் எண்ணம் மாறிவிடாமல் பாதுகாப்பதும் இங்கே முயற்சி! ஒருமுகச் சிந்தனை உள்ளொளியெல்லாம் திருவினையாக்கும் முயற்சி! அறவழிப் பயணம் ஆக்கத்தை ஈட்டும் அடிப்படை அங்கே முயற்சி! வெற்றியின்படிகள் விலாசங்களெல்லாம் செப்பும் பெயரே முயற்சி! பூமலர் காய்கனி யாவுமே இங்குகாண் வேர்களின் இடைவிடா முயற்சி! தடைகளைத் தகர்த்திடும் நெஞ்சுரம்கொண்டிடின் வெற்றியை ஈட்டிடும் முயற்சி! தகத்தகதகவென வாகைசூடியே தரணியில் வலம்வரும்…

திங்கள் பாவரங்கம் 90

மாணவர்  பொதுநலத்தொண்டியக்கம் கார்த்திகை14, 2046 / நவம்பர் 30, 2015 மாலை 6.30 புதுச்சேரி 9 தமிழ்ப்போராளிகளுக்கு வீர வணக்கம் மரபுப் பாவரங்கம் புதுப்பாவரங்கம் கழக இலக்கியம் அறிமுகம் மொழிபெயர்ப்புப் பாவரங்கம் துளிப்பா அரங்கம் சிறார் பா பாவரங்கம்

தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது?- 5: இலக்குவனார் திருவள்ளுவன்

(அகரமுதல 106   கார்த்திகை 06, 2046 / நவ. 22, 2015 தொடர்ச்சி) 05   இந்நூற்பா மட்டுமல்ல, மற்றொரு நூற்பா மூலம் தமிழர் உலகிலேயே முதன்முறையாகத்திருமணப் பதிவு முறையைப்பின்பற்றி உள்ளனர் என்பதையும் நாம் அறியலாம். இதனைப் பேராசிரியர் சி.இலக்குவனார் நன்கு விளக்கியுள்ளார்.   திருமணப் பதிவை இங்கிலாந்து அரசாங்கம் 1653இல் அறிமுகப்படுத்தியது. பிரான்சு நாட்டில் பிரெஞ்சுப் புரட்சியின் விளைவாக 1791இலும்   உருசியப் புரட்சியினால் உருசியாவில் 1917இலும் திருமணப் பதிவு நடைமுறைப்படுத்தப்பட்டது. இவ்வாறு வெவ்வேறு நாடுகள் வெவ்வேறு காலங்களில் திருமணப் பதிவைக் கட்டாயமாக்கினாலும் பல…

பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடு, சென்னை

கார்த்திகை 15, 2046 /  திசம்பர்  01, 2015 மாலை 6.00 கருத்தரங்கம் பட்டிமன்றம் கலைநிகழ்ச்சிகள் திறந்தவெளி மாநாடு திராவிடர் விடுதலைக் கழகம்

இலக்கிய-இலக்கணத்தொடர் கருத்தரங்கம் 70, திருவாரூர்

  மார்கழி 03, 2046 / திசம்பர் 19, 2015 மாலை 6.00 இலக்கிய வளர்ச்சிக் கழகம், திருவாரூர் சிறப்புரை  முனைவர் இ.சுந்தரமூர்ததி

செத்து மடிந்தது போதுமடா – உலோக நாதன்

செந்தமிழா சேர்ந்தெழடா ! உலகத் தமிழினம் உறைந்தது ஒருகணம் ஊமை விழிகளும் உற்றங்கு பார்த்தது புலரும் பொழுதினில் புத்தனின் தத்துவம் போட்டது குண்டினை, புறா அங்கு வீழ்ந்தது நித்திய புன்னகை நீள்துயில் கொண்டதுசத்திய சோதனையா? செத்து மடிந்தது போதுமடா செந்தமிழா சேர்ந்தெழடா ! கத்திக்கத்தி பேசி, காலம் கடத்தியேகல் நட்டது போதுமடா! சொல் வட்டத்துக்குள் நின்று குட்டக்குட்ட குனிந்தது போதுமடா! கொத்தும் கழுகோடு குள்ளநரிகளும்ஒத்திங்கு ஊதுதடா! வாய் பொத்திக்கிடந்தது போதுமடா வாள் கத்தி கொண்டு நீ எழடா புலரும் பொழுதினில் புத்தனின் தத்துவம் போட்டது…