செய்ந் நன்றி கொன்ற இந்தியம் – வேங்கடசாமி சீனிவாசன்

  உதவுநர் இனத்தை அழிக்கத் துணை நிற்கும் இந்தியம்! ஐம்பது ஆண்டுகளுக்கு, இதே மாதத்தில் (20.11.1964 அன்று சென்னையில் ) இந்தியத் தேசியப் பாதுகாப்பு நிதியாக (இந்தியாவைக் காப்பாற்றுவதற்காக ) அன்றைய தலைமை அமைச்சர் இலால் பகதூர் சாத்திரி அவர்களிடம் 1,00,00,000 கிராம் தங்கத்தைத் தமிழ்த் தாயின் பிள்ளைகள் வாரிக் கொடுத்தார்கள் ! ஆனால் … சொந்த உடன் பிறப்புகள் கொத்துக் கொத்தாகக் கொன்று குவிக்கப் பட்டது கண்டு தமிழகம் துடித்த போதும் , தன் பிள்ளைகள் தன் கண்ணெதிரே கொன்று குவிக்கப் படுவதை…

நிலையாய் வாழ்பவர்க்கு ஏதடா அழிவு? – செந்தமிழினி பிரபாகரன்

புதைக்கப் புதைக்கவே எழுகின்றோம்! கல்லறைகளைத் தகர்த்து எறிந்தால்.. மண்ணுக்குள் உயிரோடு புதைத்து மண்ணோடு மண்ணாக உக்கி உருக்குலைத்தால்.. மனங்களை விட்டு மறைந்து போகுமா மாவீரம்???? மூடரே! பொறிக்கப்பட்ட உணர்வுகளைப் பொறி கக்கும் தீத் துளிகளாய் நெஞ்சுக்குள் சூல் கொண்டு நிலையாய் வாழ்பவர்க்கு ஏதடா அழிவு? நெஞ்சுக்குள் எரியும் தீயாக, தமிழர் உள்ளத்தில் கனன்றெழும் வேட்கையாக , கந்தக மேனியர் உயிர் கொண்டு வாழ்வதை காடையர் நீர் அறிய மாட்டீர்! புதைக்கப் புதைக்கவே நாம் விதையாய் எழுகின்றோம்!. அழிக்க அழிக்கவே நாம் செழித்தோங்கி வளர்கின்றோம்! தடைகளே தகர்க்கத்…

உறவாடும் தீயே நீ வாழ்க! – சுடர் விழி

  நெருப்பாகி,நெருப்பாகி, நெருப்பாகி நிமிர்வோம்.. உயிப்போடு,பொறுப்போடு, விருப்போடு நிமிர்வோம்.. நெஞ்சினில் எரியும் தீயே, ஈரம் தருவதும் நீயே.. கண்ணீர் மழையைத் தடுப்போம்.. கல்லறை வேதம் படிப்போம்.. தூங்கும் வீரர் கணவுகளில், தாங்கும் எங்கள் மனசுகளில், தேசத் தாயே நீ வருவாய்! திசைகள் வெடிக்க ஒளி தருவாய்! தலைவன் உரையைக் கேட்ககும் பொழுதே, தலைகள் மெல்ல உயரும் மலழைமுகங்கள் மௌனம் எழுத, மணியும்,ஒலியும் உலவும் தீயின் புதல்வச் சுடராய் மாற, தியாக வேள்வி தொடரும் துயிலும் இல்லப் பாடல் இந்த, தேகம் முழுக்கப் பரவும் பொறுப்புகள்…

தயாமோகன் விளக்கும் கருணாவின் இரண்டகம் – பா.ஏகலைவன்

  விடுதலைப்புலிகளின் கிழக்கு மாகாண அரசியல்துறை பொறுப்பாளர் தயாமோகனின் மனம் திறந்த பேட்டி..   விடுதலைப்புலிகளின் கிழக்கு மாகாணக் கட்டளைத் தளபதியாகவும், விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனைச் சந்திக்கச் செல்லும்போது துப்பாக்கியை உடன் கொண்டுசெல்ல இசைவளிக்கப்பட்ட புலிகள் தளபதிகளில் ஒருவருமான கருணா, விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்து சென்றபோது கிழக்கு மாகாண அரசியல் பொறுப்பாளராகப் பணியாற்றியவர் தயாமோகன்; விடுதலைப்புலிகள் இயக்கத்தில் 20ஆண்டு காலம் பணியாற்றியவர்.   2009 மே மாதம் முள்ளிவாய்க்கால் போர் முடிவுற்றதாக அறிவிக்கப்பட்ட பின்னர் காட்டுக்குள் இருந்து சூன் மாதம் இசுலாமிய நண்பர்…

மாவீரர் புகழ்பாடி வெற்றிகள் குவிப்போம் – உலக நாதன்

ஈழவிடுதலை காண்போம்! விடுதலை என்பது விடுகதை அல்ல வெற்றியும் எளிதல்ல எலியாக நாம் வளை தேடவில்லை புலியாகிப் பகைவெல்ல புறப்பட்டுவிட்டோம் தடையினை உடைப்போம் தலைவனை மதிப்போம் மனதெங்கும் நிறைவான மாவீரர் புகழ்பாடி வெற்றிகள் குவிப்போம் எடுபடையெனவே படுகளம் ஆடும் பகையது கொன்று புதியதோர் சரித்திரம் படைப்போம் வீரர் நாம் வேகம்தான் எம் மூச்சு மண்ணின் மைந்தர் நாம் மானம்தான் பெரிது கரிகாலன் வளர்த்தெடுத்த கரும்புலிகள் நாங்கள் கணப்பொழுதில் விடியல் காண்போம் கடலன்னை தத்தெடுத்த கடற்புலிகள் நாங்கள் கடலதிலும் காண்போம் விடுதலை வான்மகவு ஈன்றெடுத்த வான்புலிகள்…

மண்ணானாலும் தமிழீழத்து மண்ணாவேன்! ~ இ.பு.ஞானப்பிரகாசன்

[‘மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்’ எனும் இறையுணர்வுப் பாடலைத் தமிழுணர்வுப் பாடலாய் மாற்றி இந்த ‘மாவீரர் திருநா’ளில் என் தமிழஞ்சலியாய்ச் சாற்றுகிறேன்!] பல்லவி மண்ணானாலும் தமிழீழத்து மண்ணாவேன் – ஒரு மரமானாலும் பதுங்கும் குழிமேல் பனையாவேன் – நான் மண்ணானாலும் தமிழீழத்து மண்ணாவேன் – ஒரு மரமானாலும் பதுங்கும் குழிமேல் பனையாவேன் கல்லானாலும் துயிலும் இல்லக் கல்லாவேன் – கருங் கல்லானாலும் துயிலும் இல்லக் கல்லாவேன் – பசும் புல்லானாலும் கரிகாலன் கை வில்லாவேன் – நான் மண்ணானாலும் தமிழீழத்து மண்ணாவேன் – ஒரு மரமானாலும்…

எல்லாம் எமதாகும்! – உலோக நாதன்‎

எல்லாத்தமிழனும் ஒன்றே ஆகுவோம்! பல்லாண்டு காலமாய் ஆண்ட தமிழ் அடிமையாய்க் கிடப்பதா? சொல்லாண்டு தமிழினம் அடிபட்டுச் சாவதா? பொல்லாக்குணம் கொண்ட கொடியர்கள் எம் மண் ஆழ்வதா? மெல்லத் தமிழ் இனம் இனிச் சாகுமா? வெல்லாப் போர்களம் எங்கும் தமிழனுக்கு உண்டா? எல்லாத்தமிழனும் ஒன்றே ஆகுவோம் எள்ளாய் நினைத்தவன் எலும்பை நொறுக்குவோம் கொல்லாக் குணம் இன்னும் தேவையோ? எல்லாம் அழிந்த பின் நீ அழுவது நியாயமோ? செல்லாப் போர்களம் தோல்வியை நோக்கி ‘செல்‘லால் அடித்தாதல் உன் ஊர் நாசம்! கல்லாய் நீயும் இருப்பதோ..! கடவுளையும் துணைக்கழைப்பதோ!…

அடடா போர்ப்பண் கேட்கிறதே! – செந்தலை கவுதமன்

வழியைக் காட்டும் விழியானாய் வலியைப் போக்கும் மொழியானாய் இழிவைத் துடைத்த ” பெரியாரும் இனத்தைக் காத்த” நீயும்தான் விழியாய் ஒளிரும் இருசுடர்கள் விளைச்சல் காக்கும் பெருமுகில்கள் அழிக்க நினைப்போர் அழிவார்கள் அடடா போர்ப்பண் கேட்கிறதே! செந்தலை கவுதமன்

தமிழின ஏட்டில் தலைப்பென வாழ்பவர் ! – நா.இராசா இரகுநாதன்

விடுதலைக் கருவை கழுத்தில் சுமந்தனர் !   துயிலும் இல்லம் உரைப்பது ஓன்று ஆணும் பெண்ணும் ஓர் நிறை என்று! ஆயிரம் தாய் சுமந்த உயிர்கள் அன்னை பூமியில் ஆழ(ள)ப் புதைந்தன!. பனிக்குடம் உடைத்து புவிமுகம் கண்டவர் தாயகம் காக்க நீர்க்குடம் விண்டனர் !. தாய்முகம் காண மாரைச் சப்பியோர் தாய்நிலம் பேண மரணத்தைச் சப்பினர்!. விடுதலை வெடியை மண்ணில் புதைத்தவர் வெடியின் திரியாய் தம்முயிர் தந்தனர் ! ஆயிரமாண்டு விலங்கினை உடைத்திட ஆலகால விடத்தினைக் கடித்தனர் ! சிங்கள இனவெறி கொடுமையை விரட்டிட…

நீ வரும் திசையை நோக்கி நெடுந் தவம் செய்வோம் – உலோக நாதன்

  இனியும் இனியும் நீதான்! வல்வையின் வடிவே! தமிழர் வாசலின் நிமிர்வே ஐயா! சொல்லிய திசையில் சுடரும் சூரிய தேவே! தழுவும் மெல்லிய காற்றே! பாசம் மேலிடும் ஊற்றே! உன்னை அள்ளியே அணைக்க ஆசை ஆவலோடு உள்ளோம் வாராய்! அற்றைத்திங்கள் நீதான்! அவ்வெண் நிலவும் நீதான், ஓற்றைக்காற்றும் நீதான், ஓண்டமிழ்க் குரலும் நீதான், கோற்றவைப் பிள்ளை நீதான், கொடியர சாள்வாய் நீதான், இற்றைவரைக்கும் நீதான், இனியும் இனியும் நீதான்! நேற்று நீ இருந்தாய் அழகாய் நிலவிலும் நீயே வடிவாய் ஏற்றுமே துதித்தோம்! உன்னில் எத்தனைக்…

அக்கினிக் குஞ்சினைத் தமிழினம் தாங்கட்டும்! – புகழேந்தி தங்கராசு

விடுதலையின் முகவரி நகர மறுக்கிற நதியென உறங்குகிற கடற்கரை – வல்வெட்டித்துறை. பேசும் அலைகளின்றி பேராரவாரமின்றி அமைதி காக்கிற அதன் மூச்சுபேச்செல்லாம் விடுதலைப் பெருமூச்சு. அந்தக் கரையில்தான் உயிரெழுத்தின் நீட்சியென அவதரித்தான் அவன்! அந்த ஆயுத எழுத்தின் உக்கிரத்தால்தான் அடங்கிக் கிடந்தது வக்கிர இலங்கை! பிரபாகரன் – என்பது ஒரு மனிதனின் பெயரில்லை… அது விடுதலையின் விலாசம்! எமது இனத்தின் அறுபதாண்டுக் கால அவல வரலாற்றில் பிரபாகரனும் பிரபாகரனின் தோழர்களும் எழுதியது மட்டும்தான் பவள வரலாறு. கையில் ஏந்திய ஆயுதங்களுடன் அவர்கள் மெய்யில் தாங்கிய…

தமிழரின் அடையாளத்தை உணர்த்திய பிரபாகரன் வாழ்க! – உலோக நாதன்

நீ பிறந்தாய் – தமிழரின் தனி அடையாளத்தை உலகம் தெரிந்து கொண்டது! நீ பிறந்தாய் – தமிழரின் தீரம் இதுவென்று கண்டு உலகமே அதிர்ந்து நின்றது! நீ பிறந்தாய் – சிங்களனின் திமிரெங்கோ தலைகவிழ்ந்து வீழ்ந்தது! நீ பிறந்தாய் – ஈழத் தேசம் ஒட்டுமொத்தத் தமிழரின் கனவுத் தேசம் ஆனது! இதோ.. கனவுத் தேசம் கைகூடும் நாளின்னும் வெகு தொலைவிலில்லை.. எங்களின் ஒற்றைத் தலைவனே.. கனவுத் தேசம் இனி எங்களின் – இலட்சியத் தேசமென முழங்குவோம்; இந்த இலட்சியத் தேசம் வெல்லும் நாளில் உன்…