செம்மை வனத்தில் தமிழர் திருநாள் பொங்கல் கொண்டாட்டம்!

செம்மை வனத்தில் தமிழர் திருநாள் பொங்கல் கொண்டாட்டம்! நண்பர்களே,   ஊருக்குச் செல்ல வாய்ப்பற்றவர்கள், ஊருக்குச் சென்றாலும் செம்மைக் குடும்பங்களுடன் இணைந்து பொங்கலைக் கொண்டாட விரும்புவோர் அனைவரும் செம்மை வனத்திற்கு வரலாம்.   மரபுவழிப்பட்ட வகைகளில் பொங்கலைக் கொண்டாடுவோம். செம்மண் காட்டு ஓடையில் குளிக்கலாம், புதர்க் காடுகளில் திரியலாம், செம்மை வனத்தில் அமைதி நிலை உணரலாம், எந்த பேதமும் பாராமல் ஆடலாம் பாடலாம்.   தை 1, 2 (சனவரி 15, 16) இரு நாட்களும் கொண்டாட்டம் நிகழும்.   கட்டணம் ஏதுமில்லை. இணைப்பில்…

புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் மாக்கவி பாரதியார் பிறந்தநாள் விழா

  புதுவைத் தமிழ்ச் சங்கம் சார்பாக மாக்கவி பாரதியார் பிறந்தநாள் விழா  புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் மார்கழி 10, 2046 /  26-12-2015  நடைபெற்றது. புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் முனைவர் வி.முத்து விழாவுக்குத் தலைமை வகித்தார். புதுவைத் தமிழ்ச் சங்கச் செயலர் பொறிஞர் மு,பாலசுப்பிரமணியன் வரவேற்புரை வழங்கினார். புதுவைத் தமிழ்ச் சங்கத் துணைத்தலைவர்கள் கலைமாமணி கோ.பாரதி,செந்தமிழ்ச் செம்மல் சீனு, வேணுகோபால், பொருளர் தி.கோவிந்தராசு,  துணைச் செயலர் பாவலர் கோ.கலியபெருமாள்  ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில்  ‘பாரத சமுதாயம் வாழ்கவே’ எனும் தலைப்பில்  கவியரங்கம்…

நல்ல தமிழ் பரப்பும் நற்றமிழறிஞர் நன்னன் நூல் வெளியீட்டு விழா

‘‘நல்ல உரைநடை எழுத வேண்டுமா?’’ நூல் வெளியீட்டு விழா   முனைவர் மா.நன்னன் எழுதிய ‘‘நல்ல உரைநடை எழுத வேண்டுமா?’’ நான்காம் வியல்பதிப்பு நூல் வெளியீட்டு விழா சென்னை, இராசரத்தினம் கலையரங்கில் மார்கழி 10, 2046 / திசம்பர் 26, 2015 அன்று நடைபெற்றது.   முதல் நூலை நூலாசிரியர் நன்னன் வெளியிட, தி.மு.க. பொருளாளர் மு.க.தாலின் பெற்றுக்கொண்டார்.   மு.க.தாலின், தன்னுடைய வெளியீட்டுரையில், “தமிழை – தமிழாக எழுத வேண்டும் என்று 13 நூல்களை நன்னன் எழுதியிருக்கிறார். ‘தமிழ்படும்பாடு’ என்று 9 நூல்களை…

இலாத்துவிய மொழியில் திருக்குறள்!

இலாத்துவிய மொழியில் திருக்குறள்   காதில் கம்மல், கழுத்தில் ‘ஓம்’ பதக்கத்துடன்மறையாடை(sudithar) உடன், ‘‘ நான் தமிழ் நாட்டை நேசிக்கிறேன்’’ என்றபடியே வரவேற்கிறார் ஆசுட்டிரா! (https://www.facebook.com/astra.santhirasegaram).   இலாத்துவிய நாட்டிலிருந்து சென்னைக்குக் குடிபெயர்ந்திருக்கும் தமிழ்நாட்டு மருமகள். தமிழ் மொழியின் மீதும், தமிழர் பண்பாட்டின் மீதும் கொண்ட காதலால், இப்போது திருக்குறளை இலாட்விய மொழியில் மொழிபெயர்த்து வருகிறார் இவர். உலக மொழிகள் பலவற்றிலும் மொழிபெயர்க்கப்பட்டுவிட்ட திருக்குறள், இலாட்விய மொழிக்குப் போவது இதுதான் முதல்முறை!   ‘‘நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாமே இலாத்துவியாவில்! இரசியாவுக்குப் பக்கத்தில் இருக்கிற…

ஓம்தமிழ் கலைச்சொல் செயலி

  புதிய தொழில்நுட்பத்தின் வளர்ச்சியில் ஆங்கிலத்தின் ஆதிக்கமே அதிகமுள்ளதால் தமிழின் பயன்பாடு அருகி வருகின்றது. இந்நிலையை மாற்ற கலைச் சொல்லாக்கம் இன்றியமையாததாகின்றது. இச்செயலியின் நோக்கம் கலைச்சொற்களை தொகுத்துத் தமிழின் பயன்பாடை அதிகரிப்பதுதான். புதிய கலைச்சொற்களை ஒன்றிணைத்து அடுத்த பிறங்கடையினரின் தமிழ் வழிக் கல்விக்கு உதவும் வகையில் இச்செயலியை உருவாக்கியுள்ளோம்.   முதற்கட்டமாக இணையத்தில் காணப்படும் கலைச் சொற்களை தொகுத்து இச்சேவைக்கு வித்திட்டுள்ளோம். ஆண்டிராய்டு திறன்பேசியில் நிறுவ https://play.google.com/store/apps/details… ஓம்தமிழ் தரவு:  முகிலன் முருகன்

பாடலியற்றுவோர் பலநூல்புலமை பெற்றிருக்க வேண்டும்! – சி.இலக்குவனார்

   பாடல்கள் இயற்றுவோர் யாப்பிலக்கணம் மட்டும் அறிந்தால் போதாது. நிலநூல், வான்நூல், உயிர்நூல், அற நூல், மெய்யறிவு நூல், உழவு நூல், கடவுள் நூல், மக்களின் நூல் முதலியன யாவும் கற்றறிந்து இருத்தல் வேண்டும். அவர்களே வழுவின்றி யாவரும் விரும்ப எக்காலத்தும் நிலைத்து நிற்குமாறு இலக்கியம் இயற்றுதல் இயலும். கற்பித்துக் கூறும் நாடக வழக்காயினும், கண்ணாற் காணும் உலகியல் வழக்காயினும் முற்றும் கற்றுத் துறை போய புலவர்களே செம்மையுற இயற்றுதல் இயலும். தொல்காப்பியர்க்கு முன்னும் பின்னும் வாழ்ந்த புலவர்களில் பலர் அன்ன மாட்சியினை உடையராய்…

தெய்வம் தமிழ்ச்சொல்லே! –

  சிலர் தெய்வம் வேறு; கடவுள் வேறு என்பர். சிலர் தெய்வம் வட சொல், கடவுள் தென் சொல் என்பர். தெய்வம் என்பது தூய தமிழ்ச் சொல்லே. தெய்வமும், கடவுளும் ஒன்றே. ‘தெய்வம்’ என்ற சொல் ‘தேய்’ என்பதினின்றும் தோன்றியிருக்கக் கூடும். உயிர்களின் துன்பத்தைத் தேய்ப்பது தெய்வம். மக்கள் கடவுளை நினைக்கத் தொடங்கியது தம் துன்ப நீக்கத்திற்காகவே. இன்றும் பலர் கடவுளை நினைப்பது தமக்குத் துன்பம் வரும் காலத்தினால் தான். ஆதலின் ‘தெய்வம்’ எனும் தமிழ்ச் சொல் ‘தேய்’ என்ற அடியினின்று தோன்றியதாகக் கொள்ளலாம்….

தீப்பந்தம் – குறுங்கவிதைகள் – கா.பாலபாரதி

  தீப்பந்தம் – குறுங்கவிதைகள் – கா.பாலபாரதி தீப்பந்தம் – குறுங்கவிதைகள் கா.பாலபாரதி   உரிமை – படைப்புப்பொது(கிரியேட்டிவ் காமன்சு / Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0. எல்லாரும் படிக்கலாம், பகிரலாம். மின்னூலாக்கம் – மேலட்டை உருவாக்கம் – லெனின் குருசாமி – guruleninn@gmail.com   உங்களுடன் ஒரு நிமிடம்…  மின்னூல் வாசகர்கள் அனைவருக்கும், உள்ளம் நெகிழ்ந்த வணக்கங்கள்! இந்த மின்னூல் முழுவதும், ஓரிரு வரிகளில் அமைந்த நுண்பதிவுகள், கவி நயத்தோடு நிரப்பப்பட்டுள்ளன. குறும் செய்திகளாகவும், வண்ணப் படங்களின் மேல் எழுதப்பட்ட வாசகங்களாகவும், பயணம் செய்த…

பாரதி கும்மி – கவிக்கோ ஞானச்செல்வன்

பாடுங்கள் மக்கள் பாடுங்கள்-நறும் பைந்தமிழ்ப் பாமாலை பாடுங்கள் (பாடு) நாடுங்கள் நற்கவி பாரதியை-நாளும் நாடி நறுந்தமிழ் பாடுங்கள்-புகழ் பாடி அவன்பதம் போற்றுங்கள். (பாடு) வீரம் செறிந்த கவிஞனவன்-தமிழ் வீரம் விளைத்திட்ட வேந்தனவன் ஈரம் படைத்திட்ட நெஞ்சனவன்-அருள் ஈகைக் குணம் சான்ற தூயனவன். (பாடு) சக்தி அருள் பெற்ற சித்தனவன்-கனிச் சாறு பிழிந்தூட்டும் பக்தனவன் தத்துவம் சொன்னநல் முக்தனவன்-துயர் தாங்கும் மனவலி உற்றவனே. (பாடு) விடுதலைப் போர்தனில் சிங்கமவன்-மக்கள் வீறு கொளக்கவி பாடியவன் கொடுமை யழிப்பதில் தீயனையான்-உயர் குன்றென வேபுகழ் கொண்டவனே. (பாடு) சாதி மதங்களைச்…

தமிழர்க்கே உரிய கடவுட் கொள்கை -சி.இலக்குவனார்

  ஒரு பெயர் ஓருருவம் ஓன்றுமில்லாக் கடவுளுக்குப் பல பெயர்களிட்டுப் பல வழியாக வழிபடுதல் தமிழர் இயல்பு. பெயர் பலவாயினும் கடவுள் ஒருவரே என்ற உணர்வு தமிழர்க்கு என்றும் உண்டு. இந்நூற்பாவில் கூறப்பட்டுள்ள மாயோன், சேயோன், வேந்தன், வருணன் முதலியனவும் ஒரு கடவுளைச் சுட்டுவனவே. மாயோன் என்றால் அழியாதவன்; சேயோன் என்றால் சேய்மையிலுள்ளவன்; அறிவுக்கு எட்டாதவன்; வேந்தன் என்றால் தலைவன், விரும்புதற்குரியவன். வருணன் என்றால் நிறங்களுக்குரியவன் என்று பொருள் கொள்ளுதல் வேண்டும். இவ்வாறு பொருள் கொண்டால் நான்கு பெயர்களும் ஒருவரையே குறிக்கின்றன என்று தெளியலாம்….

1 2 12