வேதம் ஓதாதே! – அகப்பேய்ச் சித்தர்

தாந்தித்திமி தந்தக்கோனாரே தீந்திமித்திமி திந்தக்கோனாரே ஆனந்தக்கோனாரேஅருள் ஆனந்தக்கோனாரே ஆயிரத்தெட்டு அண்டமுங்கண்டேன் அந்தவட்டத்துள்ளே நின்றதுங்கண்டேன் மாயிருஞாலத்து நூற்றெட்டும் பார்த்தேன் மந்தமனத்துறுஞ் சந்தேகந்தீர்த்தேன். (தாந்) பொய்யென்று சொல்லாதே அகப்பேய் போக்குவருத்துதானே மெய்யென்று சொன்னாக்கால் அகப்பேய் வீடுபெறலாமே. வேதமோதாதே அகப்பேய் மெய்கண்டோ மென்னாதே பாதநம்பாதே அகப்பேய் பாவித்துப் பாராதே.” – அகப்பேய்ச் சித்தர்

திருக்குறள் பன்னாட்டுக் கருத்தரங்கம், காரைக்குடி

மார்கழி 22 – 24,  2046 / சனவரி 07 – 09, 2016 அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி சிரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி, தேவகோட்டை உலகத் திருக்குறள்பேரவை, குன்றக்குடி புதுநூற்றாண்டு புத்தகநிலையம் (என்.சி.பி.எச்சு.), சென்னை உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கம், புதுக்கோட்டை மலேசியத் தமிழ் இலக்கியக்கழகம், மலேசியா சாமியா அறநிறுவனம், சிங்கப்பூர்

தமிழுக்குப் பெயர் வைத்தவர் தமிழரே! – கி.வா.சகந்நாதன்

“தமிழின் பெயரை அப்படியே சொல்லாமல் ஏன் மற்றவர்கள் மாற்றிச் சொன்னார்கள்?” என்று கேட்கலாம். மாற்றவேண்டிய அவசியம் வந்துவிட்டது. தமிழிலன்றி மற்ற மொழிகளில் ழகரம் இல்லை. அதனால் மாற்றிக்கொண்டார்கள். பழங்காலத்தில் தமிழுக்குத் திராவிடமென்ற பெயர் இயற்கையாக வழங்கியிருந்தால், அந்தச் சொல்லைப் பழைய தமிழர்கள் எங்கேனும் சொல்லியிருக்கவேண்டும். தொல்காப்பியத்திலோ அதன்பின் வந்த சங்க நூல்களிலோ திராவிடம் என்ற சொல் இல்லை. தமிழ் என்ற சொல்லே வழங்குகிறது. தமிழ் நாட்டார் தாங்கள் வழங்கும் மொழிக்குரிய பெயரைப் பிறரிடமிருந்து கடன்வாங்கினார் என்பது கேலிக் கூத்து. தமிழ் என்ற பெயர் முதல்…

தமிழர் திருநாள் 2016 பொங்கல் பெருவிழா,பிரித்தன்

தமிழர் திருநாள் 2016 – பொங்கல் பெருவிழா பிரித்தானியாவில்   தமிழர் திருநாள் 2016 / பொங்கல் பெருவிழா நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புலம்பெயர்வு வாழ்வின் நீட்சியில் எதிர்வரும் சந்ததியினர் தமக்கான அடையாளத் நினைவில் நிறுத்தும் வகையில் பிரித்தானியாவில் பொங்கல் பெருவிழா 23.01.2016 அன்று பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஏற்பாட்டில் [ Shree Kutch leva patel community, West end Road, Northolt Ub5 6re என்ற முகவரியில்]  நடை பெற உள்ளது. இவ் நிகழ்வில் தமிழ் வணிகர்களாகிய நீங்கள் உங்களுடைய…

நம் தமிழ்மொழிக்குப் பெயர் வைத்தவர் யார்? – கி.வா.சகந்நாதன்

ஒரு வீட்டில் ஒரு குழந்தை பிறக்கிறது. அதைப் பாராட்டிப் போற்றி வளர்க்கும் உரிமையும் ஆவலும் உடைய தாய்தகப்பன்மார் குழந்தைக்குப் பெயர் வைக்கிறார்கள். அந்தப் பெயர் சம்பிரதாயத்துக்காக வைத்த நீண்ட பெயராக இருந்தால், குறுகலான பெயர் ஒன்றை வைத்துத் தாயோ, பாட்டியோ அழைக்கிறாள். அந்தப் பெயரே ஊரெல்லாம் பரவிப் போகிறது. சுப்பிரமணியன் என்று பெயர் வைத்தாலும், வழக்கத்தில் மணி யென்றும் சுப்பு என்றும் அது குறுகிப் போவதைப் பார்க்கிறோம். எனவே, குழந்தைக்கு வீட்டில் என்ன பெயர் வழங்குகிறதோ அதுவே நாட்டிலும் வழங்கும். இது தான் இயற்கை….

தமிழ்க்கொடி யேற்றம் – இரா.பி.சேதுப்பிள்ளை

தமிழன் சீர்மை தமிழன் என்றோர் இனம் உண்டு; தனியே அதற்கொரு திறம் உண்டு. அத்திறம் முன்னாளில் தலை சிறந்து விளங்கிற்று. “மண்ணும் இமையமலை எங்கள் மலையே” என்று மார் தட்டிக் கூறினான் தமிழன். “கங்கையும் காவிரியும் எங்கள் நதியே” என்று இறுமாந்து பாடினான் தமிழன். “பஞ்சநதி பாயும் பழனத் திருநாடு எங்கள் நாடே” என்று நெஞ்சம் நிமிர்ந்து பேசினான் தமிழன். தமிழன் ஆண்மை ஆண்மை நிறைந்தவன் தமிழன். அந்நாளில் அவன் வாளாண்மையால் பகைவரை வென்றான்; தாளாண்மையால் வன்னிலத்தை நன்னிலமாக்கினான்; வேளாண்மை யால் வளம் பெருக்கினான்….

மழை வேண்டாம்! – கி.வா.சகந்நாதன்

  “மழை வேண்டாம்!” என்று அவர்கள் சொன்னார்கள். ‘இப்படியும் சொல்வார் உண்டோ?’ என்று நமக்குத்தோன்றுகிறது. எத்தனையோ காலமாக மழையைக் காணாமல் பஞ்சத்தில் அடிபட்ட நமக்கு, “வருமா, வருமா” என்ற ஏக்கம் இருப்பதுதான் இயற்கை. ஆனால், நமக்கு வேண்டிய மழை பெய்து, அதற்கு மேலும் மழை கொட்டு கொட்டென்று கொட்டி ஆற்றில் வெள்ளம், ஏரியில் உடைப்பு, குளங்களில் கரைகள் உடைந்து எங்கும் வெள்ளம் என்ற நிலை ஏற்பட்டால், “மழையே! மழையே! வா,வா!” என்றா பாடுவோம்? “கடவுளே! இப்போதைக்கு மழை வேண்டாம்” என்றுதான் சொல்வோம். மழை பெய்யாமலும்…

மின்னூல் : நான் பெண்தான் (மலேசியச்சிறுகதைகள்) – நிருமலா இராகவன்

நான் பெண்தான் மின்னூல் வெளியீடு :http://FreeTamilEbooks.com கதை உருவாக்கம்: நிருமலா இராகவன், மலேசியா மின்னஞ்சல்: nirurag@gmail.com மேலட்டை உருவாக்கம்: மனோசு குமார் மின்னஞ்சல்: socrates1857@gmail.com மின்னூலாக்கம் : சிவமுருகன் பெருமாள் மின்னஞ்சல் : sivamurugan.perumal@gmail.com உரிமை – பொதுமைப்படைப்பு(Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.)  எல்லாரும் படிக்கலாம், பகிரலாம். முன்னுரை வணக்கம். எத்தனையோ எதிர்பார்ப்புகளுடன் இத்தொகுப்பைப் படிக்க உட்கார்ந்திருப்பீர்கள். முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வகையினரைப் பாருங்கள். 1              ஆண்கள் தவறே செய்யாதவர்கள்; அப்படியே தவறு செய்தாலும், ஒரு எழுத்தாளருக்கு அதைச் சுட்டிக்காட்ட எந்த அதிகாரமும் கிடையாது என்று ஆணித்தரமாக நம்புகிறவர்….

மின்னூல் : செல்வக் களஞ்சியமே -இரஞ்சனி நாராயணன்

செல்வக் களஞ்சியமே! இரஞ்சனி நாராயணன் மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com குழந்தை வளர்ப்பு பட்டறிவுத் தொடரின் தொகுப்பு ஆசிரியர்: இரஞ்சனி நாராயணன் மின்னஞ்சல்: ranjanidoraiswamy@gmail.com மேலட்டை உருவாக்கம்: மனோசு குமார் மின்னஞ்சல்: socrates1857@gmail.com மின்னூலாக்கம் : சிவமுருகன் மின்னஞ்சல் : Sivamurugan.perumal@gmail.com உரிமை – பொதுமைப்படைப்பு(Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.)  எல்லாரும் படிக்கலாம், பகிரலாம். முன்னுரை   எனது வலைப்பதிவில் மட்டுமே எழுதி வந்த நான், பிற வலைத்தளங்களுக்குச் சென்று கருத்துரை கொடுத்துவிட்டு வருவேன். அப்படி தொடர்ந்து நான் சென்ற தளம் நான்குபெண்கள்.காம். மாறுபாடாக ஏதாவது செய்யவேண்டும் என்ற…

பெருவெள்ளமும் நீர் மேலாண்மையும் – கருத்தரங்கம்

மார்கழி 23, 2046 / 08.01.2016, வெள்ளிக்கிழமை  நேரம்: மாலை 4.30 மணி  இடம்: மூட்டா அரங்கம், காக்காதோப்பு தெரு, பெரியார் நிலையம் அருகில், மதுரை  தொடர்புக்கு: 8122184841 பெருவெள்ளமும் நீர் மேலாண்மையும்  – கருத்தரங்கம் மதுரை நகரில் அநேக நீர்நிலைகள் நிரம்பி வழிகிறது. கூடுதலாக மூன்று நாட்கள் கடும் மழை பெய்திருந்தால் மதுரை நகருக்குள் வெள்ளம் வந்திருக்கும். அதே சமயம் ஓரளவுக்கு நல்ல மழை பெய்தும் நகரில் சில கண்மாய்கள் வறண்டு கிடப்பதற்கு என்ன காரணம்? இந்த மழைக்காலங்களிலும் ‘தண்ணீருக்காகச் சாலை மறியல்…