ஏழு தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்க!

“தமிழ்நாடு அரசு ஏழு தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்”  சென்னையில் எழுச்சியுடன் நடைபெற்ற கருத்தரங்கில் கோரிக்கை!   தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் எழுதிய “ஏழு தமிழர் விடுதலை – உச்ச நீதிமன்ற மறுப்பு – தமிழ்நாடு அரசு அதிகாரம்” – நூலின் வெளியீட்டு விழா –  கருத்தரங்கம்,  மாசி 16, 2047 / 28.02.2016 மாலை, சென்னையில் எழுச்சியுடன் நடைபெற்றது.   சென்னை எம்ஞ்சியார் நகர் மகா மகால் அரங்கத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது. தமிழ்த் தேசியப் பேரியக்கத்…

உலகாள்வோம் உயிர்த் தமிழால்! – குறள்நதி

  உலகாள்வோம் உயிர்த்    தமிழால்!            பாரெங்கும் நிலைத்திட்ட பொங்குதமிழ் -அன்று சங்கம்பல கண்டிட்ட மதுரத்தமிழ் அகத்துடன் புறம்தந்த தீந்தமிழ் -என்றும் அணியாக நிலைத்திட்ட பைந்தமிழ் இன்பமுடன் நாம் தமிழைப் படித்திட்டால் -இனி உலகாள்வோம் உயிர்த்தமிழால் எந்நாளுமே !            காவியம்பல தந்திட்ட முத்தமிழ் -நமக்குள் கவிகள்பல புகுத்திட்ட பூந்தமிழ் கவிபாட  இனித்திட்ட தேன்தமிழ் -நம்மையெல்லாம் கவிஞனாய் இங்குப் பாடவைத்த அருந்தமிழ் இன்பமுடன் நாம் தமிழைப் படித்திட்டால் -இனி உலகாள்வோம் உயிர்த்தமிழால் எந்நாளுமே !    தமிழ்த்தாயைத் தாலாட்டும்  பத்துப்பாட்டு-எங்கும் தமிழ்மொழியை வளர்க்கின்ற  எட்டுத்தொகை…

மக்கள் நலக்கூட்டணியை வெற்றிபெறச்செய்க! – ம.தி.மு.க. பொதுக்குழு தீர்மானம்

  மக்கள் நலக்கூட்டணியை வெற்றிபெறச்செய்க! மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்   அரசியல் பொதுவாழ்வில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 24 ஆவது பொதுக்குழு, கழக அவைத்தலைவர் திருப்பூர் சு.துரைசாமி அவர்கள் தலைமையில் திருச்சி – 620 020, காசா நகர், சமால் முகமது கல்லூரி அருகில் உள்ள வி.எசு.எம். மகாலில் நடைபெற்றது.  பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு : . புடம்போடப்பட்ட புகழ்மிக்க தலைவர்கள் பிறந்த தமிழ்நாடு, இந்திய நாட்டுக்கே வழிகாட்டக்கூடிய பெருமையை ஒரு காலத்தில் பெற்று இருந்தது…

சாரணர் பயிற்சி பெற்றவர்களுக்குத் தொடர்வண்டித்துறையில் வேலைவாய்ப்பு

சாரணர் பயிற்சி பெற்றவர்களுக்குத் தொடர்வண்டித்துறையில் வேலைவாய்ப்பு செகந்திராபாத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தென்-நடுவண் தொடர்வண்டித்துறையில் காலியாக உள்ள குழு – இ, குழு – ஈ (Group – C & Group – D) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. [விளம்பர எண்: SCR/R-HQ/128/S&G/2015-16] மொத்தக் காலியிடங்கள்: 14 பணி: குழு – இ (Group-C) பணியிடங்கள் (சாரணர்கள் மற்றும் வழிகாட்டிகள்) (Scouts & Guides). காலியிடங்கள்:  02. அகவை வரம்பு: 18 – 29க்குள் இருக்க வேண்டும். தகுதி: மேனிலைப்பள்ளி இறுதி…

தமிழில்லா அறமன்றம் யாருக்காக? – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழில்லா அறமன்றம் யாருக்காக?   நீதிக்காகக் குரல் கொடுப்பவர்கள் தண்டிக்கப்படலாமா?   தமிழ்நாட்டில் தமிழ் மக்களுக்கான நீதிமன்றங்களின் செயல்பாடுகள் தமிழில் அமைவதுதானே உண்மையான அறமாகும். குற்றஞ்சாட்டப்பட்டவர், எதிர்த்தரப்பார், இரு தரப்பினரின் சான்றுரைஞர்கள் எனனத் தொடர்புடையவர்கள் தங்கள்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு, பிற செய்திகளைப்பற்றிச் சரியாகத் தெரிந்து கொள்ள  அவர்களுக்குப் புரியும்படித் தமிழில் அமைவதுதானே மு‌றையாகும். ஆனால், இதற்கு மாறான நிலை நம்நாட்டில் நிலவுகின்றதே!  தமிழக உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடுமொழியாக இருக்க வேண்டும் என இந்திய அரசியல்யாப்பின்படிதான் நாம் வேண்டுகிறோம். இந்திய அரசியலமைப்புச்சட்டம் பிரிவு  348(2) இன்படி, …

சென்னைக்கம்பன்கழகத்தின் தமிழ்க்கூடல் தனிப்பாடல்

மாசி 18, 2047 / மார்ச்சு 01, 2016,  மாலை 6.30 சென்னை தமிழ்நிதி விருது பெறுநர் : பெ.கி.பிரபாகரன் ‘ஔவையார்’ சிறப்புரை: முனைவர் சாரதா நம்பிஆருரன்  தலைமை : இராம.வீரப்பன் பாரதிய வித்யா பவன்

அரிசுடாடில் விளக்காதவற்றைத் திருவள்ளுவர் விளக்கியுள்ளார் – அறிஞர் சி.யூ.போப்பு

அரிசுடாடில் விளக்காதவற்றைத் திருவள்ளுவர் விளக்கியுள்ளார் பணிவு, அறம், தீங்கினைப் பொறுத்தல் ஆகிய கிருத்துவப் பண்புகள் அரிசுடாடிலால் விளக்கப்படவில்லை….  தமிழ்நெறியாளரால் இம்மூன்றும் பதியும்படி வலியுறுத்தப்படுகின்றன. இம்மூன்றுமே சிறந்த பாக்களான திருக்குறளின் மையக் கருத்துகளாகும். எனவே, நாம் இத்தமிழ்ப் புலவரைக் கிருத்துவராக அழைக்கலாம். -அறிஞர் சி.யூ.போப்பு

திருக்குறளின் பொதுமையுணர்வு – இராதாகிருட்டிணன்

திருக்குறளின் பொதுமையுணர்வு தமிழ்ச் செவ்வியல் நூலான திருக்குறள் வேறுபட்ட சமயத்தவராலும் பிரிவினராலும் உரிமை கொண்டாடப்படும் உண்மையே இதன் பொதுமையுணர்வைப் புலப்படுத்துகின்றது…… திருக்குறள் புத்தசமயத்தவர், சமணத்தவர், சைவர்கள், வைணவர் எனப் பலராலும் பயன்படுத்தப்படுகின்றது. இது “பொதுமறை” என அழைக்கப்படுகிறது.   ஒழுக்கக் கேடரான ஆரிய இனத்தவர் எப்பொழுதும் குடிப்பதும் சூதாடுவதுமாக இருந்துள்ளனர். இவ்விரண்டிற்கும் இரிக்கு வேதத்தில் ஏராளமான சான்றுகள் உள்ளன. – மேதகு இராதாகிருட்டிணன்: சமயமும் பண்பாடும் (Religion and Culture)

நூலை ஆராய்ந்து ஏற்க! – உமாபதி சிவனார்

நூலை ஆராய்ந்து ஏற்க!   தொன்மையாம் எனும் எவையும் நன்றாகா; இன்று தோன்றிய நூல் எனும் எவையும் தீதாகா; துணிந்த நன்மையினார் நலங்கொள்மணி பொதியும் அதன் களங்கம் நவையாகாது என உண்மை நயந்திடுவர்; நடுவாம் தன்மையினார் பழமை அழகு ஆராய்ந்து தரிப்பார்; தவறு நலம் பொருளின்கண் சார்வு ஆராய்ந்து அறிதல் இன்மையினார் பலர் புகழில் ஏத்துவர் ஏதிலர் உற்று இகழ்ந்தனரேல் இகழ்ந்திடுவர் தமக்கு என ஒன்று இலரே   -உமாபதி சிவனார், சிவப்பிரகாசம், அவையடக்கப்பாடல்

தேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி

தேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி   ஐதராபாத்தில் செயல்பட்டு வரும் விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் அளிக்கப்படவுள்ள தொழில்பயிலுநர் (apprentice) பயிற்சிக்குப் பொறியியல் துறையில் பட்டயம், பட்டம் பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: தேசிய விண்வெளித் தொலையுணர்வு மையம் (National Remote Sensing Centre) இடம்: ஐதராபாத்து பணி: ஓர் ஆண்டு பயிலுநர் பயிற்சி காலியிடங்கள்: 42 தகுதி: பொறியியல் துறையில், தொடர்புடைய பிரிவில் 65 விழுக்காட்டு (percentage) மதிப்பெண்களுடன் பட்டயம் (Diploma) அல்லது இளநிலைப் பொறியியல் (B.E), இளநிலைத் தொழில்நுட்பப் (B.Tech)…

இந்தியக் கால்நடை அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு

  இந்தியக் கால்நடை அறிவியல் ஆராய்ச்சி நிலையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பர எண்.1/2016/MRDPC பணி: தொழில்நுட்பர் (Technician T-1) – 102 பணி: தொழில்நுட்பர் (Technician T-1) ஓட்டுநர் (KVK) – 01 பணி: முதன்மைத் தொழில்நுட்ப உதவியாளர் (Senior Technical Assistant T-4) – 01 பணி: தொழில்நுட்ப உதவியாளர் (Technical Assistant T-3) – 03 பணி: தொழில்நுட்ப உதவியாளர் (T-3) – 01 பணி: முதன்மைத் தொழில்நுட்ப உதவியாளர் (T-4)…

நடுவண் புகையிலை ஆராய்ச்சி நிலையத்தில் தொழில்நுட்பர், தொழில்நுட்ப உதவியாளர் பணிகள்!

நடுவண் புகையிலை ஆராய்ச்சி நிலையத்தில் தொழில்நுட்பர், தொழில்நுட்ப உதவியாளர் பணிகள்  ஆந்திரப்பிரதேசம் இராசமுந்திரியில் செயல்பட்டு வரும் நடுவண் புகையிலை ஆராய்ச்சி நிலையத்தில் நிரப்பப்பட உள்ள தொழில்நுட்பர், தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இவற்றுக்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தக் காலியிடங்கள்: 34 பணி: தொழில்நுட்பர் (Technician: T-1) – 16   தகுதி: பள்ளி இறுதி வகுப்புத் (+2) தேர்ச்சி. பணி: தொழில்நுட்ப உதவியாளர் (களவயல் / ஆய்வகம்) (Technical Assistant: T-3) (Field Farm/Lab) – 18 தகுதி:…