தலைவன் என்றே நினைக்காதே! – சச்சிதானந்தன் தெய்வசிகாமணி

தலைவன் என்றே நினைக்காதே! அன்னையின் கருவில் சிதைவுற்றுப் பிறந்த, பிண்டம் போலக் கிடக்காதே! உன்னையும் தெருவில் நிறுத்தும் ஒருவனை, தலைவன் என்றே நினைக்காதே! மந்தையில் நரிஎனப் புகுந்திடும் நீசர்கள், மண்டையை உடைக்கவும் தயங்காதே! சந்தையில் மறியென வாக்கிற்கு உயரிய, விலை வைப்பார்கள் வீழாதே! சந்தனம் என்றே சொல்லிச் சொல்லி, சேற்றை வாரி இறைப்பார்கள்! உன்தடம் அழித்து உரிமையைப் பறிக்க, ஊளை இடுவார் மயங்காதே! பந்தயக் குதிரையைப் போலத் தேர்தலில், பாய்ந்திடும் தலைவர்கள் எல்லாரும், உன்முதுகேறி ஓடுகிறார்! அதில், பொய்முகம் கொண்ட பேயர்களை, பின்முதுகாம் புற…

அனைத்துச் சாதியினருக்கும் அருச்சகர் உரிமைகோரித் திராவிடர் கழகம் மறியல் போராட்டம்

அனைத்துச் சாதியினருக்கும் அருச்சகர் உரிமைகோரித் திராவிடர் கழகம் மறியல் போராட்டம்   சென்னையில்  சித்திரை 05, 2047 / ஏப்பிரல் 18.4.2016  காலை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், அலுவலகம் முன்பு திராவிடர் கழகத்தின் சார்பில் அனைத்துச் சாதியினருக்கும் அருச்சகர் உரிமை கோரி நடைபெற்ற மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, பேராசிரியர் சுப.வீரபாண்டியன், இரா.அதியமான், கவிஞர் வா.மு.சேதுராமன்  முதலான பலர் கைதாயினர்.

பெருந்தோட்ட வீடமைப்பு தொடர்பான சிறப்புக்கலந்துரையாடல்

பெருந்தோட்ட வீடமைப்பு தொடர்பான சிறப்புக்கலந்துரையாடல் நுவரெலியா மாவட்டச் செயலகத்தில் பெருந்தோட்ட வீடமைப்பு  தொடர்பாக  சிறப்புக் கலந்துரையாடல் ஒன்று கல்வி இணையமைச்சர் வே. இராதாகிருட்டிணன் தலைமையில் (19/4) நடைபெற்றது.  இக் கலந்துரையாடலில்  மத்திய மாகாண  அவை உறுப்பினர் ஆர். இராசாராம், பெருந்தோட்ட  நிறுவனங்களின்ன் முகாமையாளர்கள்,  வீடமைப்பு  மேம்பாட்டு(அபிவிருத்தி) அதிகார  அவையின் அதிகாரிகள், தோட்டத் தலைவர்கள் கலந்து கொண்டனர். இக் கூட்டத்தில் இந்த வருடத்தில் பூர்த்தி செய்யப்பட உள்ள வீடுகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]

தமிழனின் தனிக்குணம்! – இடைமருதூர் கி.மஞ்சுளா

தமிழனின் தனிக்குணம்!    சென்னை, தியாகராய நகரிலிருந்து பாரிமுனை செல்லும் அரசுப் பேருந்தில் உட்கார்ந்திருந்த வெளிநாட்டு இளைஞன் ஒருவன், தன் அருகில் அமர்ந்திருந்த  முதியவரைப் பார்த்து, அவன் மொழியில் “உங்கள் தமிழ்நாடு மிகவும் நல்ல நாடு” என்றான். “ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?” என்று அவனது மொழியிலேயே அந்த முதியவர் வியப்பாக அவனைப் பார்த்துக் கேட்டார். “எங்களுக்கு உங்கள் மொழி தெரியாது. ஆனாலும், சென்னையில் உள்ள கடைகளில் எல்லாம் எங்கள் மொழியை முதன்மைப்படுத்தி, ஆங்கிலத்தில் பெயர்ப் பலகைகளை வைத்து, தமிழ்நாடு எங்களுக்கு எப்படி உதவுகிறது பார்த்தீர்களா?…

“மதச்சார்பற்ற இந்தியத்தேசியம் இருக்கிறதா?” 3/3 – கி. வெங்கட்ராமன்

[“மதச்சார்பற்ற இந்தியத்தேசியம் இருக்கிறதா?” 2/3 தொடர்ச்சி] “மதச்சார்பற்ற இந்தியத்தேசியம் இருக்கிறதா?” 3/3     நேரு, அம்பேத்கர், இந்து மகாஅவையினர்(சபையினர்), இடஞ்சாரிகள் அனைவருமே வலுவான இந்தியா,வல்லரசு இந்தியா என்ற முழக்கத்தில் ஒரே குரலில் பேசுகின்றனர். இதன்வழியாக அதிகாரக் குவிப்பதற்கு துணையாகவோ, மவுன சாட்சியாகவோ நிற்கின்றனர்.    இப்போது, மாட்டுக்கறிச் சிக்கலை முன்வைத்து தனி மனிதரின் உணவுப் பழக்கத்தையும் இந்துத்துவ வெறியர்கள் ஆக்கிரமிக்கிறார்கள் என்ற ஞாயமான எதிர்ப்பு கிளம்புகிறது. ஆனால், இதற்கான அடிப்படை “மதச்சார்பற்ற” இந்திய அரசமைப்புச் சட்டத்திலேயே உள்ளது.   அரசமைப்புச் சட்டத்தின் கூறு 48, பசுவிற்குத் தனித்தப் பாதுகாப்பு வழங்குகிறது. “மாநிலங்கள் வேளாண்மையையும் கால்நடை வளர்ப்பையும்…

சிங்கள வதைமுகாம் கொடுமைகள் 03 – மரு.து.வரதராசா:செவ்வி இர.சிரீகந்தராசா

இர.சிறீகந்தராசா: நீங்கள் குறிப்பிட்ட அந்தக் கிளிநொச்சிக் கமுக்க (இரகசிய) முகாமில் உங்களிடம் என்ன விதமான கேள்விகள் கேட்கப்பட்டன? து.வரதராசா:: அங்கு வைத்து ஒரு கேள்வியும் என்னிடம் கேட்கப்படவில்லை. முதல் நாள் முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்த என்னை அவர்களுடைய ஊர்தியில் வவுனியா மருத்துவமனைக்குப் பண்டுவத்துக்காக அனுப்புவதாகத்தான் கூறியிருந்தார்கள். அன்று இரவு கிளிநொச்சியில் இறக்கி விடப்பட்டேன். அடுத்த நாள் அவர்களுடைய பேருந்திலே கண்ணைக் கட்டி ஏற்றினார்கள். அதில் வேறு யாரும் இருந்தார்களா, எத்தனை பேர் இருந்தார்கள் என்பதை என்னால் பார்க்க முடியவில்லை. ஏற்றிய சிறிது நேரத்தில் திரும்பி…

அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலய முத்தேர்த் திருவிழா

முத்தேர்த் திருவிழா   நுவரெலியா ஆவேலியா  அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலயத்தின்  ஆண்டு சித்திரை முழுநிலவு முத்தேர்த்திருவிழா  சித்திரை 07, 2016 / 21.04.2016 காலை 10.30  மணியளவில் தொடங்கிச்சிறப்பாக நடைபெற்றது.   ஊர்வலத்தில் கலை  பண்பாடடு நிகழ்வுகளுடன் முத்தேர் பவனி நகர்வலம் வருவதையும் ஆலயத்தின்  செயற்குழுத் தலைவரும் கல்வி இணையமைச்சருமான வேலுசாமி இராதாகிருட்டிணன், ஆலய ஆயுட் காப்பாளரும் முன்னால்   சார்பு அமைச்சருமான முத்து சிவலிங்கம்,  ஆலயச் செயற்குழு உறுப்பினர்களையும் படங்களில் காணலாம். [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]  

மாணிக்கவாசகம் நடு நிலைப் பள்ளியில் அறிவொளி ஏற்றுவிழா

  தேவகோட்டை  பெருந்தலைவர் மாணிக்கவாசகம் நடு நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவர்களின் ஒளி ஏற்றுதல் விழா   தேவகோட்டை: தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்க வாசகம் நடு நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவர்களின் பிரியா விடை பெறும் விழா பெற்றோர் ஆசிரியர் முன்னிலையில் ஒளி ஏற்றும் விழாவாக  சித்திரை 08, 2047 / ஏப்பிரல் 210 2016 அன்று நடை பெற்றது. தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக ஒளியேற்று விழா அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி அளவில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.   ஒளி…

சி.பா.ஆத்தித்தனார் தமிழியல் ஆய்வுக்கழகத்தின் நாட்டுப்புற வழக்காற்றுக் கருத்தரங்கம்

சி.பா.ஆத்தித்தனார் தமிழியல் ஆய்வுக்கழகத்தின் நாட்டுப்புற வழக்காற்றுக் கருத்தரங்கம் தமிழ் ஆய்வுலகின் நண்பர்களுக்கு, வணக்கம். சி.பா.ஆதித்தனார் இதழியல் கழகம் தற்போது சி.பா.ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம் என்று மாற்றப்பட்டுள்ளது. ஆய்வுக் கழகத்தின் முதல் கருத்தரங்க நிகழ்வு “நாட்டுப்புற வழக்காறு – தற்காலத் தமிழிலக்கியங்களில் வட்டார வழக்கு” என்னும் பொருண்மையில் 2016 ஆகத்து இறுதி வாரத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. பல்வேறு கல்வி சார் அமைப்புகளுடன் இணைந்து இந்தக் கருத்தரங்கம் நடைபெறும். இடம், நாள் பின்னர் அறிவிக்கப்படும். இக் கருத்தரங்கில் கலந்துகொண்டு கட்டுரை வழங்க விரும்புவோர் 1. பெயர்…

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 5.தீயினம் விலக்கல்

(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 4  இன் தொடர்ச்சி)  வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் மெய்யறம் (மாணவரியல்) [வ. உ. சிதம்பரம்(பிள்ளை) கண்ணணூர் சிறையில் இருக்கும் பொழுது எழுதிய நூல்.] 5.தீயினம் விலக்கல் தீதெலாந் தருவது தீயினத் தொடர்பே. தீயவர்களின் நட்பு தீமையெல்லாம் தரும். தீயவர் நல்லுயிர் சிதைக்குங் கொடியர். தீயவர் என்பவர் நல்லவர்களைக் கொடுமைப்படுத்தும் கொடியவர்கள். 43.பிறர்பொருள் வவ்வும் பேதை மாக்கள். பிறரின் பொருளைக் கவரும் இழிமக்கள். துணைவரல் லாரை யணையுமா வினத்தர். தமது துணையன்றிப் பிறரோடும் உறவு கொள்ளும் விலங்கு கூட்டத்தினர். அறிவினை மயக்குவ வருந்து…

அமரர் பெரியசாமி சந்திரசேகரன் பிறந்தநாள் வழிபாடு

அமரர் பெரியசாமி சந்திரசேகரன் பிறந்தநாள் வழிபாடு   மலையகத்தின்  மூத்த தலைவர்களில் ஒருவரும் மலையக மக்கள் முன்னணியின்  நிறுவனரும் தலைவருமான அமரர் பெரியசாமி சந்திரசேகரன் அவர்களின் 59  ஆவது பிறந்த  நாளை முன்னிட்டு மலையக மக்கள் முன்னணியின் முதன்மையாளர்களால் ஏற்பாடு செய்யபட்டிருந்த வழிபாடுகள்  அட்டன் முருகன் ஆலயத்தில் (17/4 அன்று) நடைபெற்றது. இந்த வழிபாடுகளில் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் கல்விஇணையமைச்சருமான வே.இராதாகிருட்டிணன், செயலாளர் நாயகம் ஏ. இலோரன்சு. ஊட்பட மலையக மக்கள் முன்னணியின்செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]

பனங்காட்டு நரிகளும் பைந்தமிழ் மான்களும் – சச்சிதானந்தன் தெய்வசிகாமணி

பனங்காட்டு நரிகளும் பைந்தமிழ் மான்களும் ஏற்றத் தாழ்வுகளே என்நாட்டின் முகவரியா? ஏக்கப் பெருமூச்சே ஏழைகளின் தலைவிதியா? ஏட்டுச் சுரைக்காய்கள் விளைகின்ற நிலமாகி, ஏய்த்துப் பிழைப்போரின் ஏகாந்தக் களமாகி, எந்தை நாடிங்கு செம்மை இழக்கிறதே! ஏர்பிடிக்கத் தயங்குமொரு ஏமாளித் தலைமுறை, எதிலுமொரு பிடிப்பின்றி வாழுகின்ற மனநிலை, என்னஇங்கு நடக்குதென்று புரியாத பாமரர்கள், எண்ணற்றுப் பெருகிநிற்கும் பரிதாபச் சூழ்நிலை! எலும்புத் துண்டுகளை நாய்களுக்கு வீசி, எறும்புக் கூட்டத்தின் உழைப்பை விலைபேசி, எச்சில் துர்நாற்றம் வீசுகின்ற தாசி, எளிதாய்ப் பொன்பொருளைச் சேர்த்திடுதல் போலே, எள்ளளவும் மானமின்றிப் பொதுச் சொத்தைத்…