கூப்பிடு கூப்பிடு வீரர்களை! – காசி ஆனந்தன்

கூப்பிடு கூப்பிடு வீரர்களை!   பாண்டிய மன்னவன் சோழன் பனிவரை பாய்ந்து கலக்கிய சேர மகன் ஈண்டு முளைத்த குலத்தில் எழுந்தனை! ஏடா தமிழா! எடடா படை! கூண்டுக் கிளிநிலை எத்தனை நாள்வரை? கூப்பிடு கூப்பிடு வீரர்களை! ஆண்ட பரம்பரை மீண்டும் ஒருமுறை ஆள நினைப்பதில் என்ன குறை? கோட்டுப் புலிக்குலம் வாழக் குகையுண்டு! குருவிக்குக் கூடு மரத்திலுண்டு! காட்டு வயற்புற நண்டுக்குப் பொந்துண்டு! கஞ்சல் எலிக்கோர் குழியுமுண்டு! கோட்டை அமைத்துக் கொடியொடு வாழ்ந்தவர் குலத்துக்கொரு புகல் இங்கிலையோ? நாட்டை அமைப்பாய் தமிழ்மகனே! புவி…

இலக்கியங்கள் கூறும் தமிழர்க்கான காவிரி 01- 10 : இலக்குவனார் திருவள்ளுவன்

1-10 இலக்கியங்கள் கூறும் தமிழர்க்கான காவிரி  ‘இந்தியத்தால் இழந்த காவிரி’ என்னும் கட்டுரை மூலம் முன்னரே, நமக்கே உள்ள காவிரியை நாம்  இழந்து விட்டதைக் குறித்து உள்ளோம்.     நமக்கே உரிமையான காவிரி குறித்து இற்றைநாள் தமிழ் இலக்கியங்கள் வரை ஆயிரக்கணக்கான குறிப்புகளை நாம் காணலாம். எனினும் பழந்தமிழ் இலக்கியங்களில்  உள்ள நூற்றுக்கணக்கான குறிப்புகளை நாம் இத் தொடரில் பார்க்கலாம்.   இவற்றை காவிரி தொடர்பான முறையீட்டுத்தளங்களில் நாம்அளிக்கலாம். கன்னடத்தில் மொழி பெயர்த்துக் கன்னட மக்கள் அறியச்செய்யலாம். என்ன தெரிவித்தாலும் கண்மூடித்தனமாகவும் வெறித்தனமாகவும் உள்ள…

கீழடி அகழாய்வு – கருத்துக்களம், சென்னை

புரட்டாசி 23, 2047 / அட்டோபர் 09, 2016  பிற்பகல் 3.00  பனுவல் புத்தக அரங்கம், திருவான்மியூர் தஞ்சை கோ.கண்ணன்   அறிவாயுதம்  

வள்ளலாரின் 194ஆவது தோற்றநாள் விழா, உள்ளகரம்,சென்னை 91

  உலக மகா குரு திருவருளொளி வள்ளலாரின் 194ஆவது தோற்றநாள் விழா   இடம்  2, இந்து குடியிருப்பு 2ஆவது குறுக்குத்தெரு உள்ளகரம், சென்னை 91   புரட்டாசி 19, 2047 -அட்டோபர் 05, 2016 காலை 10.00  : அகவல் முற்றோதுதல்   11.30:   நன்னெறி உரை:   இலக்குவனார் திருவள்ளுவன் ஆசிரியர், அகரமுதல பன்னாட்டு மின்னிதழ்   1.00 : சிறப்பு அன்னதானம்   மாலை 6.00 : வள்ளலாரை வாசித்தேன் வாழ்க்கையை யோசித்தேன் தலைப்பிலான கட்டுரைப்போட்டியில் பங்கேற்று வெற்றி…

முருங்கை மரத்து வேதாளம் ! – உருத்திரா இ பரமசிவன்

முருங்கை மரத்து வேதாளம் ! வாழ்க்கை வாழ்வதற்கே !   வாழ்க்கை என்பது முருங்கை மரத்து வேதாளம் என்று வெட்டி வெட்டி எறிந்தாலும் நம் தோள்மீது அது ஏறிக்கொண்டே தான் இருக்கும். வாழ்க்கையை வெறுப்பது என்பது தான் அந்த வேதாளம். வாழ்க்கையை நோக்கி வரவேற்பு புன்னகை ஒன்றை வீசு எல்லா வேதாளங்களும் அணுக முடியாமல் ஓடியே போய்விடும். இப்போது எல்லா வேதாளங்களும் உன் காலடியில். உருத்திரா இ பரமசிவன்

தன்னாட்சி கொடுப்பது காலத்தின் கட்டாயம் 1/3 – க.வி.விக்கினேசுவரன்

தன்னாட்சி கொடுப்பது காலத்தின் கட்டாயம் 1/3 ஆசானே தெய்வம்! எனதருமைத் தமிழ் பேசும் உடன்பிறப்புகளே! ‘எழுக தமிழ்’ப் பேரணியில் பெருந்திரளாகக் கலந்து கொண்டு தமிழ் மக்களின் ஒருமித்த குரலாக எமது உரிமைக் கோரிக்கைகளை வெளிப்படுத்தவும் தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராக எமது எதிர்ப்பைத் தெரிவிப்பதற்கும் எமது அரசியல் சார்ந்த எதிர்பார்ப்புகளை உலகறிய விளம்புவதற்கும் இங்கே கூடியிருக்கின்ற எனதருமை மக்களே! இந்தப் பேரணி வரலாறு காணாத பேரணி!  ஆட்சியில் அல்லது செல்வாக்கில் உள்ள எவரையும் எதிர்த்து நடாத்தப்படும் பேரணி இல்லை  இது. நாம் எமது…

நான்கு காசு சேர்ப்பதற்காம்! – கெர்சோம் செல்லையா

நான்கு காசு சேர்ப்பதற்காம்!   ஆட்டிப் படைப்பதை ஆட்சி என்றார்; அதைத்தான் விரும்பும் காட்சி என்றார். காட்டிக் கொடுப்பதைத் திறமை என்றார்; கயமை கொள்வதும் உரிமை என்றார். நாட்டில் நன்மை செய்வதெல்லாம், நான்கு காசு சேர்ப்பதற்காம்; ஊட்டிக் கொடுக்கும் இந்நஞ்சை, ஒழிக்கும் வழிதான் இறையரசாம்! – கெர்சோம் செல்லையா

இதழ்களின் மேல் கருவண்டு – அபிநயா, துபாய்

இதழ்களின் மேல் கருவண்டு வீட்டினுள் விழுந்தன வளர்பிறை வெண்மதிகள் வெட்டிய நகங்கள்’. பூச்சிக்கொல்லி மருந்தையும் குடிப்போம் அயல்நாட்டுப்பானம்! கோயிலுக்குக் குந்தகமென்றால் கருவறையும் அகற்றலாம் கருப்பை! இறைவனும் இறைவியும் இணக்கத்துடன் இணைந்தார்கள் அரவாணிகள்! நாத்திகனுக்குக் கோவிலிலென்ன வேலை? அன்னதானம்! இதழ்களின் மேல் கருவண்டு மச்சம்! அறைந்தாள் முத்தம் கொடுத்தான் அப்பா! இயற்கையும் உறைகூழ் கொடுத்தது நுங்கு! கூட்டமாய் வந்து உள்ளாடை திருடினார்கள் மணல் கொள்ளை! – அபிநயா, துபாய். தரவு : முதுவை இதயத்து

இலக்கியப் பெருவிழா 2016, மியான்மர்

நந்தவனம் பீடம் தமிழ்க்கல்வி வளர்ச்சி மையம், மியான்மர் புரட்டாசி 29, 2047 / அட்டோபர் 15, 2016 சனிக்கிழமை காலை 9.30 முதல் மாலை 6.00 வரை வரவேற்புரை : நந்தவனம் சந்திரசேகரன் தொடக்கவுரை: நீதிபதி வள்ளிநாயகம் வாழ்த்துரை : மு.க.முனியாண்டி சிறப்புரை : இலக்குவனார் திருவள்ளுவன் ‘நான்கண்ட மியான்மர்‘ நூல் வெளியீடு கலைநிகழ்ச்சிகள் கவியரங்கம் தலைமை : முனைவர் கீரைத்தமிழன் விருது வழங்கல் & நிறைவுரை : மேனாள் அமைச்சர் நல்லுசாமி நன்றியுரை : ஆர்.ஏ.செல்வக்குமார்   நந்தவனம் சந்திரசேகரன் ஆர்.ஏ.செல்வக்குமார் ஆறுமுகம்…

முதல்வர் நலம் பெறட்டும்! புரளிகளுக்கு முற்றுப்புள்ளி இடட்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்

முதல்வர் நலம் பெறட்டும்! புரளிகளுக்கு முற்றுப்புள்ளி இடட்டும்!     தமிழக முதல்வர் செயலலிதா உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனை  ஒன்றில் கடந்த புரட்டாசி 06, 2047 / 22.09.16 அன்று சேர்க்கப்பட்டார். காய்ச்சலும் நீர்ச்சத்து குறைபாடுமே நலக்கேட்டிற்குக் காரணம் எனச் சொல்லப்பட்டுள்ளது. ஆனால், மருத்துவமனையில் சேர்ந்த பின்னர், சருக்கரை மிகுதி, நுரையீரல் பாதிப்பு, அவ்வப்பொழுது மூச்சிரைப்பு போன்ற காரணங்களும் சொல்லப்படுகின்றன. தன் கட்சித்தொண்டர்களால் ‘அம்மா’ எனப் பாசத்துடன் அழைக்கப்படும் அவர், அன்பர்களின் வேண்டுதலால் விரைவில் நலம்  பெறுவார் என எதிர்பார்க்கிறோம். தமிழ் மருத்துவத்தையும் கடைப்பிடித்தார்கள்…