கல்வியில் ஏற்படும் முன்னேற்றமே நாட்டில் வளர்ச்சியை உண்டாக்கும் -ச.ம.உ. அம்பேத்குமார்

கல்வியில் ஏற்படும் முன்னேற்றமே நாட்டில் வளர்ச்சியை உண்டாக்கும்       – ஊர்ப்புற ஆசிரியர்களுக்கு இலவச மடிகணிணி  வழங்கும் விழாவில்                                வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் உரை –   வந்தவாசி.அக்.12.வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டுஊரில் உரேகா கல்வி இயக்கமும் இலயா அறக்கட்டளையும் இணைந்து  ஊர்ப்புற ஆசிரியர்களுக்கு இலவச மடிகணிணி  வழங்கும் விழாவை நடத்தின.   மன்பதையில் கல்வியினால் ஏற்படும் முன்னேற்றமே ஒரு நாட்டில்…

பன்னாட்டுக் கருத்தரங்கம் : காலம்தோறும் தமிழ், சென்னை

பன்னாட்டுக் கருத்தரங்கம் : காலம்தோறும் தமிழ் தை 29, 2048 –  11.02.17 பள்ளிக்கரணை , சென்னை ஈப்போ முத்தமிழ்ப் பாவலர் மன்றம், மலேசியா ஈகரைத் தமிழ்க் களஞ்சியம், மலேசியா  ஆசான் நினைவு கலை அறிவியல் கல்லூரி, சென்னை ஆதிரா பதிப்பகம், சென்னை நான்கு அமைப்புகளும் இணைந்து நடத்தும் பன்னாட்டுக் கருத்தரங்கம் வருகிற தை 29, 2048 / 11.02.17 சனிக்கிழமை அன்று. அனைவரையும் அன்போடு அழைக்கிறோம். தங்கள் ஆய்வுக்கட்டுரைகள் கருத்தரங்க நூலை அழகு செய்யட்டும். விரைந்து எழுதுவீர். நிறைந்து மகிழ்வீர்! ஆதிரா முல்லை

யானே பொய்! – தமிழ்க்காதலன்

யானே பொய் ! யானே பொய் ! என் பிறப்பும் பொய் ! என் மெய்யும் பொய் ! என் சிந்தையும் பொய் ! என் குடியும் பொய் ! என் இனமும் பொய் ! என் பெயரும் பொய் ! என் சூழும் பொய் ! என் சொந்தமும் பொய் ! என் நண்பரும் பொய் ! என் இளமையும் பொய் !என் நெஞ்சும் பொய் ! என் ஐய! என் சிந்தாமணி அன்பினால் நின் செந்தாமரைச் செல்வத் திருவடியையடைந்த என் செந்தமிழ்க்காதல்…

மேன்மையாய் வாழ்வோம்! – மாம்பலம் ஆ.சந்திரசேகர்

மேன்மையாய் வாழ்வோம்! செய்திகள் படிப்போம் சிந்தனை நிறைப்போம்! கைத்தொழில் கற்போம் கவலையை ஒழிப்போம் பொய்சூது விடுவோம் போதும்மனம் கொள்வோம் மெய்யைப் பேசுவோம் மேன்மையாய் வாழ்வோம்! வைகறை விழிப்போம் வாய்விட்டுச் சிரிப்போம்! பைகாசு வைப்போம்! பைய நடப்போம்! வாய்மை காப்போம் வாக்கு நிறைவேற்றுவோம்! தாய்மை போற்றுவோம்! தாரத்தை ஆராதிப்போம்! நாய்தனை வளர்ப்போம்! நன்றியை மறவோம்! வாய்ச்சவடால் செய்யோம்! வாலிபனாய் வாழ்வோம்! எய்அம்பாய் மெய்செய்வோம்! எங்கும்சென்றே நலமாக்குவோம் நய்நய்என நச்சரியோம்! நண்பர்களைச் சேர்த்திடுவோம்! பாய்விரித்தே படுத்திடுவோம் பஞ்சுமெத்தை தவிர்த்திடுவோம்! நோய்நொடி விரட்டிடுவோம் நூறைக்கடக்க வழிகண்டோம்! மாம்பலம் ஆ.சந்திரசேகர்…

நாடிவந்து நிற்குமன்றோ! – மெல்பேண் செயராமர்

              நாடிவந்து நிற்குமன்றோ!                நாநயம் இருந்துவிட்டால்              நாணயம் நமக்குவரும்              பேய்மனம் கொண்டுவிட்டால்              பிணம்போல ஆகிடுவர்              தூய்மையது மனமேறின்              துட்டகுணம் மறைந்துவிடும்    …

செல்வி ப.இரா.நிகாரிகாவின் இசைப்பேழை வெளியீடு, சென்னை

   மரு.இராசுகுமார்-சுவர்ணசிரீயின் திருமகளும் முனைவர் வை.பழனிச்சாமி  இ.ஆ.ப.(நி) – மணிமேகலை, திரு பழனியப்பன்-முத்துராதா ஆகியோரின் அன்புப்பெயர்த்தியுமான 7-ஆம்வகுப்பு பயிலும் செல்வி ப.இரா.நிகாரிகாவின் ‘அழகு தமிழ் முருகா‘ என்னும் இறைப்பாடல்கள் ஒலிப்பேழை, சென்னை உருசியக் கலை-பண்பாட்டு மையத்தில் ஐப்பசி 20,2047 / நவம்பர் 05,2016  மாலை வெளியிடப்பட்டது. இசையறிஞர் பாலமுரளிகிருட்டிணா ஒலிப்பேழையை வெளியிடத் தமிழ்ப்புரவலர் நல்லி குப்புசாமி பெற்றுக்கொண்டார். திரு வை. பழனிச்சாமி இ..ஆ.ப., வரவேற்புரை யாற்றினார். நல்லி குப்புசாமி, இந்தியப் பண்பாட்டு உறவுக்குழு (ICCR), மண்டல இயக்குநர் திரு ஐயனார், மரு.சீர்காழி சிவசிதம்பரம், ஒலிப்பேழையின்…

சமற்கிருதத் திணிப்பா? தாங்காது இந்தியா! – ஆ. இரா.அமைதி ஆனந்தம்

சமற்கிருதத் திணிப்பா? தாங்காது இந்தியா! முன் ஒரு காலத்தில், (1) இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் பழந்தமிழ் வழங்கி வந்தது என்பதும், (2) ஆரியர் வந்த பிறகு, சமற்கிருதத் திணிப்பால் படிப் படியாய் தமிழ் பல மொழிகளாக பிளவுபட்டது என்பதும் (3) அம்மொழிகளே இப்போதய இந்திய மொழிகளாய் உள்ளன  என்பதும் (4) இதற்கு மூல காரணமாய் இருந்த சமற்கிருதம் வழக்கில் இல்லை என்பதும் (5) மக்கள் மொழியாக சமற்கிருதம் எப்போதுமே இல்லை என்பதும் பழந்தமிழ் நாட்டின்/ திராவிட நாட்டின் / இந்திய நாட்டின் /தமிழ் நாட்டின் வரலாறு….

ஆட்சி முறைகள் செம்மை யுறுதல் வேண்டும் – சி.இலக்குவனார்

ஆட்சி முறைகள் செம்மை யுறுதல் வேண்டும்!      உலகம் நல்லின்பம் பெற ஆட்சி முறைகள் செம்மை யுறுதல் வேண்டும். ஆட்சிமுறை செம்மையுற ஆளுவோர் உளம் நற்பண்பு அடைதல் வேண்டும். ஆட்சிமுறை எவ்வளவு சிறந்ததாய் இருப்பினும் ஆளுவோர் உளநிலை பண்பட்டிலதேல் பயனற்றுவிடும். ஆதலின் ஆட்சித்துறையில் அமர்வோர் உளம் செம்மையுற வேண்டும். அவர் மனநலத்தால் அவர் நாட்டு மக்கள் மட்டுமின்றி உலக மக்களே நன்மை பெறுவர். உலகில் உள்ள பல நாடுகளும் ஒன்றோடொன்று தொடர்புற்றுச் சார்ந்து வாழும் நிலையில் உள்ளன. ஒரு நாட்டின் இன்பதுன்பம் பிறநாடுகளையும் சார்கின்றன….

உயிரே உயிரின் உயிரே! – அம்பாளடியாள்

உயிரே  உயிரின்  உயிரே! ஈன்றவளுக் கொப்பான  இன்றமிழை நான்மறவேன் தேன்சிந்தும் பாக்களைநீ தேடிவந்து! – வான்மழைபோல் இன்றென்றன் எண்ணத்தில் இட்டுச்செல்   என்னுயிரே ! என்றுமிது போதும் எனக்கு!   தூக்கத்தில் கூடத்தான் உன்றன்  எண்ணம் தூண்டிவிட்டுச் செல்கிறாய் தாயே உன்னால் பூக்கின்ற புலமையும்  பூலோ கத்தில் பூக்களின் நறுமணத்தை ஏந்திச் செல்லும்! தேக்கிவைத்த உணர்வெல்லாம் சிந்தும் போது தேன்துளியாய்த் தான்சிந்தும் இந்த மண்ணில்! ஏக்கத்தைத் தந்தென்னை இதுபோல் நாளும் எழுப்பிவிடு தீந்தமிழே அதுவே போதும்!   உன்னோடு வாழ்கின்ற நொடிகள் எல்லாம் உலகத்தில்…

அபுதாபி மௌலிது குழு நடாத்தும் மீலாது பேச்சுப் போட்டி, அமீரகம்

அபுதாபி மௌலிது குழு நடாத்தும் மீலாது பேச்சுப் போட்டி அபுதாபி : அபுதாபி மௌலிது  குழு நடாத்தும் அமீரகம் தழுவிய மீலாது பேச்சுப் போட்டி  கார்த்திகை 10, 2047 / 25.11.2016 அன்று நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டி நற்குணத்தின் தாயகம் நபிகள் நாயகம் (சல்) என்ற தலைப்பில் நடக்க இருக்கிறது. போட்டியாளர்கள் 5 நிமிடங்கள் மட்டுமே பேச  இசைவளிக்கப்படுவர். வயது வரம்பு இல்லை.  பிற சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் பங்கேற்கலாம். வெற்றி பெறுவோர்க்கு மதிப்புமிக்க பரிசுகள் வழங்கப்படும். பெயர் பதிவுக்குத் தொடர்பு எண் :…

பொதுத் தொண்டு புரிவோர், சிறியோர் கூட்டத்தினை ஒதுக்குதல் வேண்டும்-சி.இலக்குவனார்

பொதுத் தொண்டு புரிவோர், சிறியோர் கூட்டத்தினை  ஒதுக்குதல் வேண்டும்   சிற்றினம்-சிறிய இனம். ஒழுக்கத்தாலும் அறிவாலும் குறைந்திருப்போரை இனமாகக் கொள்ளுதல் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுள்ளோர்க்கு நன்மை பயவாது. பதவியுயரச் செல்வமும் செல்வாக்கும் உயரும். செல்வம் உயர உயர வீணரும், வெற்றுரைகாரரும், சூதாடுவோரும் வலியவந்து சேர்வர். அவர்களை அகற்றாது நட்பாகக் கொள்ளின் ஆளும் தலைவர் அல்லற்பட்டு அழிய வேண்டியதுதான். பொறுப்புகளும் கடமைகளும் மிகமிக, ஒவ்வொன்றையும் நேரில் ஆய்ந்து நிறைவேற்றுதல் இயலாது. சுற்றியிருப்போர் சொல்லும் கூற்றை நம்புதல் வேண்டியவரும். அவர் சொல்லும் கூற்று உண்மை வயப்பட்டதாயின், யார்க்கும்…

ஆளும் தலைவர்க்கு வலிமை மக்கள் அன்பும் ஒத்துழைப்பும் – சி.இலக்குவனார்

ஆளும் தலைவர்க்கு வலிமை மக்கள் அன்பும் ஒத்துழைப்பும்   ஆளும் தலைவர்க்கு வலிமையாவது மக்கள் அன்பும் ஒத்துழைப்பும் ஆகும். மக்கள் அன்பைப் பெற்றதலைவர் பகைவரை எளிதில் வெல்வர். மக்கள் அன்பைப் பெற விரும்பினால், கடுஞ்சொல் அற்றவராய் இருத்தலோடு நேர்மையாகவும், யாவரிடமும் ஒத்த அன்புடையவராகவும் ஒழுகுதல் வேண்டும். உறவினர்க்கு ஒரு நீதியும் உறவினர் அல்லாதார்க்கு ஒரு நீதியும் வழங்குதல் கூடாது. நெறிமுறை கடந்து யாவர் செல்லினும், அவரை விருப்பு வெறுப்பின்றி ஒறுத்து நன்னெறிப்படுத்துதல் வேண்டும். இல்லையேல் மக்கள் வெறுப்பர். மக்கள் வெறுப்பின், மாபெரும் தலைவரும் தாழ்ச்சியுற…