சித்தர்கள் கூறும் இரகசியங்கள் -அணிந்துரை
டி.வி.வெங்கட்டராமன், இ.ஆ.ப., (ப.நி.), முன்னாள் தலைமைச்செயலாளர், தமிழ்நாடு அரசு. நூலாசிரியர், திருமூலர் அருளிய திருமந்திரம் – அனுபவ உரை. 6, (17), முதல் நிழற்சாலை, இந்திரா நகர், சென்னை – 600 020. தொலைபேசி: 044-24417705 அணிந்துரை அருமை நண்பர் இரா.கற்பூரசுந்தரபாண்டியன் அவர்களும் அவருடைய மனைவியார் திருமதி. சாந்தா அவர்களும் ‘சித்தர்கள் கூறும் இரகசியங்கள்’ என்ற தலைப்பில் வழங்கியுள்ள இந்த கட்டுரைத் தொகுப்பினை படிக்கும் வாய்ப்பினைப் பெற்றேன். சித்தர் இலக்கியத்திற்கு இந்தத் தம்பதியர் அளித்துள்ள படைப்பு ஒரு பெரும் பரிசாகும் என்று…
யாதும் ஊரே யாவரும் கேளிர் 1/8 – கருமலைத்தமிழாழன்
யாதும் ஊரே யாவரும் கேளிர் 1/8 தமிழ்த்தாய் வாழ்த்து புத்தமுதாய் இலங்குதொன்மைத் தமிழைப் போல பூமிதனில் வேறெந்த மொழிதாம் உண்டோ முத்தமிழின் பிரிவைப்போல் உலகந் தன்னில் முகிழ்ந்துள்ள மொழிகளிலே பிரிவு உண்டோ நித்திலமாய் ஐந்துவகை இலக்க ணத்தை நீள்புவியில் பெற்றவேறு மொழிதான் உண்டோ எத்தனையோ மொழிகளினைத் திணித்த போதும் எழில்மாறாத் தனித்தமிழ்போல் வேறிங் குண்டோ ! அகத்திற்கும் புறத்திற்கும் நெறிகள் சொல்லும் அருந்தமிழைப் போலெந்த மொழியிங் குண்டு தகவுடைய திருக்குறள்போல் வாழ்வைக் காட்டும் தனிநூல்கள் வெறெந்த மொழியி லுண்டு நகமகுட விரல்கள்போல் …
ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (11) – வல்லிக்கண்ணன்
(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (10) –தொடர்ச்சி) ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (11) 3.ஒருமைப்பாட்டு உணர்வு – தொடர்ச்சி மேலும் அவர் தெரிவிக்கும் விருப்பங்கள் நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மை பயக்கக்கூடிய நல்ல எண்ணங்களே. ஆகும். வேற்றுமைகள் ஒய்ந்திட வேண்டும்-ஈன வேண்டா மதச் சாதி சாய்ந்திட வேண்டும் போற்றும் சமநிலை வந்திட வேண்டும்-கல்விப் புத்தம் புதுமைகள் பூத்திட வேண்டும்! அறியாமைப் பேய்களை அகற்றிட வேண்டும் நம்மின் அன்னை பாரதத்தின் உண்மைக் கிராமங்கள் நெறிமுறைகளைப் பேணிட வேண்டும்-என்றும் …
ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (10) – வல்லிக்கண்ணன்
(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (9) –தொடர்ச்சி) ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (10) 3.ஒருமைப்பாட்டு உணர்வு தமிழ்மொழி உணர்வும், தமிழ் இனப்பற்றும், மிகுதி யாகப் பெற்றுள்ள கவிஞர் சேதுராமன் குறுகிய நோக்கு டையவர் அல்லர். பரந்த இந்திய உணர்வும் கொண்ட வராக அவர் விளங்குகிறார். “இந்தியா என்பதொரே நாடு-ஒங்கும் இமயமுதல் குமரிவரை எங்களுடை வீடு! உந்தி எழுந்தே உழைப்பைத்தேடு-என்றும் உலரெங்கில் நமது புகழ் நிலைத்திடவே கூடு!” என நாவலிக்கிறார் பெருங்கவிக்கோ. வறுமை மிகுந்த நாடாக இருக்கிறது இந்தியா. இந்நாட்டின் எண்ணற்ற ஏழை…
உதவி கேட்கும் முன்னாள் போராளி அன்பரசன் என்னும் கிருபாகரன் செல்லத்துரை
அன்புடையீர் வணக்கம். அன்பரசன் என்னும் முன்னாள் போராளி எழுதியுள்ள மடலைப் படிக்கவும். இவர் 2016 மார்ச்சு மாதம் சிறையில் இருந்து வெளியே வந்தார். மரத்தாலே விழுந்தவனை மாடேறி மிதித்தமாதிரி சென்ற கிழமை இவர் ஒரு நேர்ச்சியில்(வாகன விபத்தில்) சிக்கி யாழ்ப்பாணம் பெரிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மிதிவண்டியில் சென்றுகொண்டு இருந்த இவரை எதிரே வந்த ஊர்தி மோதியுள்ளது. சென்ற சனிக்கிழமை அவருக்கு அறுவை மருத்துவம் செய்யப்பட்டது. எனக்குக் காலும் கையும் இருக்கிறது நான் உழைத்து முன்னேறுவேன் எனச் சொல்லிவந்த அவருக்கு இந்த நேர்ச்சி/விபத்து இடியாக இறங்கியுள்ளது….
தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙா) – இலக்குவனார் திருவள்ளுவன்
[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீங) தொடர்ச்சி] தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙா) பேரறிஞர் அண்ணா பேராசிரியர் இலக்குவனாரிடம் பேசி அவருக்குத் தமிழ் வளர்ச்சி இயக்குநர் முதலான ஏதேனும் ஒரு பணியைத் தர முதலில் எண்ணினார். பெருந்தலைவர் காமராசர் இருந்த பொழுதே தடைநோக்கில் இருந்த அதிகாரக் கூட்டத்தார் கடும்போட்டி இருப்பதால் இவரை அமர்த்த இயலாது எனக் கூறினர். எத்தனைப் போட்டியாளர் இருப்பினும் தமிழுக்காகப் போர்க்களங்களைக் கண்டு சிறைவாழ்க்கையும் பதவி இழப்புகளும் உற்ற பேராசிரியர் இலக்குவனாருக்கு இணையாக அவர்கள் வருவார்களா என எண்ணவில்லை. …
செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் தனித்தன்மையைக் காக்க இணையுமாறு வேண்டுகோள்!
செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் தனித்தன்மையைக் காக்க இணையுமாறு வேண்டுகோள்! அன்புடையீர், வணக்கம். தமிழ்நாட்டில்(சென்னையில்) இயங்கும் செம்மொழித்தமிழாய்வு மத்திய நிறுவனத்தைத் திருவாரூரில் உள்ள மத்தியப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் முயற்சியில் மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத்துறை இறங்கியுள்ளதை அறிவீர்கள். தமிழ்வளர்ச்சிப்பணிகளையும் ஆய்வுப்பணிகளையும் முற்றிலும் நிறுத்துவதற்கான முயற்சி இது. இதனை முறியடிக்கும் வகையில் வரும் ஞாயிறு ஆடி 07, 2048 / 23.07.207 அன்று முற்பகல் சென்னையில் தமிழ்நாடு-புதுச்சேரி தமிழ் அமைப்புகள், அனைத்திந்தியத் தமிழ்ப்பேரவை ஆகிய உறுப்பு அமைப்புகள் சார்பாகக் கூட்டம் நடத்த உள்ளோம். இதில்…
செம்மொழித்தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தனித்தன்மையைக் காத்திடுவோம்! – இலக்குவனார் திருவள்ளுவன்
செம்மொழித்தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தனித்தன்மையைக் காத்திடுவோம்! நூறாண்டு போராட்டத்தின் வெற்றி, தமிழின் செம்மொழித்தன்மைக்கு அறிந்தேற்பு அளித்தது. அதன் தொடர்ச்சியாகச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் அமைத்ததும் அதனைத் தமிழ்நாட்டில் இயங்கச் செய்ததும். கலைஞர் கருணாநிதியும் சோனியாகாந்தியும் மேற்கொண்ட முயற்சியால் கிடைத்த நன்மை பறிபோகின்றது, (நன்மை செய்த இவர்களே செம்மொழிக் காலத்தை மாற்றியதன் விளைவே இன்றைய தீமையும்!) இந்நிறுவனத்தின் செயல்பாடுகள் எதிர்பார்த்த அளவு இல்லாமல் இருக்கிறது. அதற்காக அதன் பணிகளைக் குறைத்து மதிப்பிடக்கூடாது. தலைவர் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து அறிஞர்களுடன் கலந்துபேசி உரியதிட்டங்கள் தீட்டிச்…
ஆய்வுப் பேரறிஞர் தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் – எழில் இளங்கோவன்
ஆய்வுப் பேரறிஞர் தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் தி.வை.சதாசிவப் பண்டாரத்தார்! யார் இவர்? ‘‘வடஇந்தியாவின் வரலாறே இந்தியாவின் வரலாறு. தென்னாட்டின் சரித்திர உண்மைகளைக் கைவிட்ட காலம். அந்த நாளில் கல்வெட்டுகளின் துணைகொண்டு, (தென்னாட்டு) வரலாறுகளைத் தொடர்ந்து எழுதத் தொடங்கியவர் சதாசிவப்பண்டாரத்தார்’’ அறிஞர் மு.அண்ணாமலையின் அறிமுகம் இது. அந்தக் காலங்களில் வரலாறுகளை ஆங்கிலத்தில் எழுதுவார்கள். தமிழில் வரலாறுகள் மிகக் குறைவாகவே இருந்தன. அதனை உடைத்துத் தமிழில் வரலாறுகளைத் தொடர்ந்து எழுதியவர்களுள் முதன்மையானவர் தி.வை. சதாசிவப் பண்டாரத்தார். குறிப்பாக அவரின் கல்வெட்டுச் சான்றுகளும், செப்பேட்டுச் சான்றுகளும் மிக நுட்பமானவை. 1956ஆம்…
கதிராமங்கலம் கதறல் – ஆவணப்படம் : இணையத்தளத்தில் காணலாம்
கதிராமங்கலம் கதறல் – ஆவணப்படம் இணையத்தளத்தில் காணலாம் காவிரிப்படுகையின் கதிராமங்கலத்தில் இந்திய அரசின் எண்ணெய்-எரிவளிக் கழகத்துக்காக தமிழ்நாடு காவல்துறை பல்லாயிரக்கணக்கான மக்களைப் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்தது நாமறிந்த செய்தி! அங்கு நடந்தது என்ன என்பதையும், காவிரிப்படுகையில் எ.எ.(ஓ.என்.ஜி.சி.) நிறுவனத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் பல்வேறு நேர்காணல்கள் மற்றும் செய்திகளுடன் தொகுத்து, “கதிராமங்கலம் கதறல்” என்ற புதிய ஆவணப்படத்தை பன்மைவெளி வெளியீட்டகம் உருவாக்கியது. ஏற்கெனவே, கடந்த 2016ஆம் ஆண்டு சனவரியில் தமிழ்நாட்டின் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை ஆவணப்படுத்தும் முதல் ஆவணப்படமான “மொழிப்போர்…
துபாயில் சோபியாவின் கனலி நூல் வெளியீட்டு விழா
துபாயில் சோபியாவின் கனலி நூல் வெளியீட்டு விழா துபாய் : துபாயில் பணிபுரிந்து வரும் திருமதி. சோபியாவின் கவிதை நூல் தொகுப்பு ‘ கனலி’ ஆனி 15, 2048 / 29.06.2017 வியாழக்கிழமை மாலை துபாய் வசந்த பவன் உணவகத்தில் வெளியிடப்பட்டது. ஓசூரைச் சேர்ந்த இவர் சார்சாவில் தமிழ் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். துபாய் அல்நாதா வசந்தபவனில் நடைபெற்ற இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக காப்பியக்கோ.திரு சின்னா சர்ப்புதீன் கலந்து கொண்டார். அபுதாபியைச் சேர்ந்த எழுத்தாளர் (இ)யூசுப்பு தலைமையேற்றார். திருமதி. செசிலாபானு, ஆசிப் மீரான் ,…
பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 8/8 – கருமலைத்தமிழாழன்
(பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 7/8 – தொடர்ச்சி) பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 8/8 தொல்காப்பி யர்மொழியை வள்ளு வர்தம் தொல்குறளை கம்பர்சொல் கவிந யத்தை உள்ளத்தை உருக்குகின்ற தேவா ரத்தை உரிமைப்பா பாரதியை தாசன் தம்மை எல்லைக்குள் இல்லாமல் ஞால மெல்லாம் எம்மொழியில் படிப்பதற்கும் இணைய மென்னும் நல்வலையுள் வளங்களுடன் நுழைந்த தாலே நற்றமிழோ உலகமொழி ஆன தின்று ! பிறமொழியின் அறிவெல்லாம் இணையத் தாலே பிறக்குமினி தமிழினிலே! உலகந் தன்னில் சிறகடிக்கும் புதுமையெல்லாம் ஒருநொ …