அவியினும் வாழினும் என்? – தமிழ்சிவா

அவியினும் வாழினும் என்? – தமிழ்சிவா   வா சாதித் தேரிழித்து நடுத்தெருவில் நிறுத்து இல்லாதோர் இயலாதோர் வீடு வாசல் கொளுத்து ! எடு கசடுகளே தலைவனெனப் புகழ்ந்து விழா எடு ! விடு மானம் பழம் அறிவு புகழ் பீடோடு பிறவும் விடு! செய் பாழும் சிலைக்குப் பாலூற்றிப் பரவல் செய்! வாழும் தொண்டர்க்கு வரிசையுடன் பாடைசெய்! பெருமக்கள் காட்டிய நல்வழியைப் பெருவிருப்புடனே  நிரவல் செய்! தடு தமிழினத்தில் யாரேனும் தகுதியால் உயர்ந்தாலும் உள்ளுக்குள் நல்லறிவு தன்மானம் புகுந்தாலும் ஓடோடித்தடு! நடு பொதுத்தெருவில்…

செம்மொழி நிறுவன இயக்குநர் அ.பழனிவேலிற்குப் பாராட்டும் வேண்டுகோளும்! – இலக்குவனார் திருவள்ளுவன்

செம்மொழி நிறுவன இயக்குநர் அ.பழனிவேலிற்குப் பாராட்டும்  வேண்டுகோளும்!     செம்மொழித்தமிழாய்வு மத்தியநிறுவனம் முழுப்பொறுப்பிலான இயக்குநர் இன்றியே செயல்படுகிறது. தமிழாய்ந்த தமிழறிஞரை இயக்குநராக  அமர்த்தாமையால் மத்திய அரசு அதிகாரிகளின் கூடுதல் பொறுப்பில் இயங்கிக் கொண்டுள்ளது. (செயல்படும் தலைவர் இல்லாதபொழுது நிறுவனத்தின் நிலை இவ்வாறுதான் இருக்கும்.) அவ்வாறு கூடுதல் பொறுப்பில் வருபவர்கள் தமிழார்வலர்களாக இருக்க வேண்டும் என்றில்லை. எனினும் இப்போது திருச்சிராப்பள்ளித் தேசியத்தொழில் நுட்பக்கழகத்தின் பதிவாளர் திரு.அ.பழனிவேல், இயக்குநர் (கூடுதல் பொறுப்பாக) அமர்த்தப்பட்டுச் செயல்பட்டுவருகிறார்.   பணிப்பொறுப்பேற்றதும் இயக்குநர் (கூ.பொ.), நிறுவனத்திற்குச் செய்யவேண்டுவன,  தமிழுக்குச் செய்ய…

உலகத்தமிழிணைய மாநாடு 2017, மலேசியா: பேராளர் கட்டணமும் புரவலர் நன்கொடையும்

இணையத்தமிழார்வலர்களுக்கு, வணக்கம்.      மலேசியாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் உலகத்தமிழ்க் காப்பிய ஆராய்ச்சி நிறுவனம் (கல்வியியல், தொழில் நுட்பப்பிரிவு) உலகத் தமிழ் இணைய மாநாட்டை ஆவணி 09-11, 2048 / ஆகத்து 25-27, 2017 ஆகிய மூன்றுநாள் கோலாலம்பூரில் நடத்த வுள்ளது. தமிழ்க்கணிமைஆய்வு தொடர்பாகக் கருத்தரங்கம், பயிலரங்கங்கள் நடைபெறவுள்ளன.    தமிழறிஞர்கள், தமிழ்க் கணிமை வல்லுநர்கள், பேராசிரியர்கள்,ஆசிரியர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் அனைவரும் உலகளவில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று விரும்புகிறோம்.   கட்டுரை வர  வேண்டிய நாள் : ஆனி 31, 2048…

திருவள்ளுவர் மழலையர் – தொடக்கப்பள்ளியின் 27 ஆம் ஆண்டு விழா

  பேரன்புடையீர்! வணக்கம், வருக! (திருவள்ளுவர் தமிழ்வழிப்பள்ளி) திருவள்ளுவர் மழலையர் – தொடக்கப்பள்ளி இராசாராம் தெரு, அரங்கநாதபுரம், மேடவாக்கம், சென்னை-100. 27 ஆம் ஆண்டு விழா திருவள்ளுவர் சிலை திறப்பு : உ.சகாயம், இ.ஆ.ப.   பள்ளியின் நூலகத் திறப்பு: திருவாட்டி இந்துமதி வசந்தகுமார்   மேல்கட்டடத் திறப்பு:  எழுத்தாளர் அசயன் பாலா கணிணிமையத் திறப்பு:  திரு.ச.அரங்கநாதன் சான்றோர்களின் வாழ்த்துரைகளும், மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. சிறப்புமிகு விழாவிற்குத் தாங்கள் வருகை தந்து சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். இங்ஙனம்: ஆசிரியர்கள் – மாணவர்கள்….

தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு நிறைவு விழா, திருச்சிராப்பள்ளி.

  தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு நிறைவு விழா, திருச்சிராப்பள்ளி.   ஆனி/ஆடவை 31, 2048 / சூலை 15, 2017 காலை 9.45 முதல் இரவு 7.30 வரை தூய வளனார் கல்லூரிக்குமுகாய மன்றம், திருச்சிராப்பள்ளி

செம்மொழி நிறுவனத் தலைவராகச் செயல்பட முதல்வருக்கு வேண்டுகோள்! – இலக்குவனார் திருவள்ளுவன்

செம்மொழி நிறுவனத் தலைவராகச் செயல்பட முதல்வருக்கு வேண்டுகோள்!     முதல்வர் எடப்பாடி க.பழனிச்சாமி, மேனாள் முதல்வர்,  தங்கள் தலைவி செயலலிதா வழியில் செயல்படுவதாகக் கூறுகிறார். ஆனால், மாறுபட வேண்டிய நேர்வுகளில் மாறுபட்டுச் செயல்படுகிறார். காட்சிக்கு எளிமை, பிற கட்சிகளுடனான அணுகுமுறைகளில் மாற்றம், எனப் பலவற்றைக் கூறலாம். தனக்குச் சரியெனப்பட்டதைச் செய்து தன் தனித்தன்மையை நிலைநாட்டிவருவது பாராட்டிற்குரியது.   தமிழக முதல்வர் பதவி  வழி, செம்மொழித்தமிழாய்வு  மத்திய நிறுவனத் தலைவராவார். மேனாள் முதல்வர்கள் தங்களுக்கு முந்தைய எதிர்க்கட்சியைச் சேர்ந்த முதல்வர் வழியில் செல்வதைத் தன்மான…

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (9) – வல்லிக்கண்ணன்

(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (8) –தொடர்ச்சி) ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (9) 2.தமிழ் முழக்கம் (தொடர்ச்சி)  ‘தமிழ் நடைப் பாவை’யின் எளிமைக்கும் இனிமைக்கும், கருத்து நயத்துக்கும் சொல்லோட்டத்துக்கும் இவை நல்ல எடுத்துக்காட்டுக்கள் ஆகும். பாவை முழுவதுமே படித்துச் சுவைத்து இன்புறத்தக்க இலக்கிய விருந்தாக அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் தமிழ் நடைப் பயணம் மேற்கொண்ட பெருங்கவிக்கோ தேமதுரத் தமிழின் பெருமையை உலகமெலாம் பரப்புவதற்காக உலகநாடுகளில் சுற்றித் திரிகின்றார். உலகக் கவிஞர் மன்றங்களிலும் மாநாடுகளிலும் தமிழ் முழக்கம் செய்கின்றார். இது குறித்து அவர் பாடியிருப்பது நினைவுகூரத்…

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீங) – இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙௌ)  – தொடர்ச்சி) தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீங)     பேராசிரியர் திருப்பரங்குன்றம் தொகுதியில் நிற்பதாக அறிவித்ததால், வாக்குகள் பிரிந்து ஓரிடத்தை இழக்க வேண்டி வரும் எனத் தி.மு.க.தலைவர்கள் அஞ்சினர். பிற இடங்களிலும் பேராசிரியர் ஆதரவின்றி வெற்றி வாய்ப்பை இழக்க நேரிடும் என்று கவலைப்பட்டனர். எனவே, போட்டியிடும் அறிவிப்பைத் திரும்பப் பெறுமாறும் தம் பரப்புரையால் நாடு தழுவிய வெற்றியைத் தி.மு.க.விற்கு ஈட்டித் தருமாறும் வேண்டினர். பேராசிரியர் இலக்குவனார் தி.மு.க. தன்னை ஆதரிக்கட்டும் என்றார். தேர்தல் இல்லாமலேயே பேராசிரியரை நாடாளுமன்ற…

கருணாகரன் நினைவுத் திருக்குறள் நூலகத்தின் வெள்ளி விழா, சென்னை

ஆனி 27, 2048 / சூலை 11, 2017 காலை 7.00- காலை 9.00 கருணாகரன் நினைவுத் திருக்குறள் நூலகத்தின் வெள்ளி விழா, சென்னை   நினைவில் வாழும் பொறிஞர் கருணாகரன் பாற்கரன் 53 ஆவது பிறந்தநாள் குறளகம் தொகுதி 100, மனை 4374 5ஆம்  தெரு, 3ஆம் முதன்மைச்சாலை, அறிஞர் அண்ணா நகர், சென்னை 600 040

திலகவதியார் திருவருள் ஆதீனம் : 4ஆம் ஆண்டு திருமுறை மாநாடு

ஆனி 31 & 32, 2048 / சூலை 15 & 16, 2017 திலகவதியார் திருவருள் ஆதீனம் திருமுறை மாநாட்டுக் குழு 4ஆம் ஆண்டு திருமுறை மாநாடு நகர் மன்றம், புதுக்கோட்டை 622001

‘செம்மொழியின் செழுமைக்குத் திரைத்துறையின் பங்கு’ -இலக்கியவீதி நிகழ்வு

அன்புடையீர்! வணக்கம் . இவ்வாண்டு  இலக்கியவீதியின் 41 ஆம் ஆண்டுத் தொடக்க விழா என்பதைப் பெரு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.   இலக்கியவீதியும்  சிரீ கிருட்டிணா  இனிப்புகள் நிறுவனமும் இணைந்து நடத்தும்  ‘கலைகளால் செழிக்கும் செம்மொழி’ என்கிற தொடரின்,  இந்த ஆண்டுக்கான ஆறாம்   நிகழ்விற்கு உங்களை அன்புடன் அழைக்கின்றோம்.   ஆனி 27, 2048 / 11.07.2017. செவ்வாயன்று மாலை 06.30 மணிக்கு மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் ‘செம்மொழியின்  செழுமைக்குத் திரைத்துறையின் பங்கு’ என்கிற நிகழ்ச்சி நடைபெறுகிறது. –   வாழ்த்துரை :…

4 நாள் கல்வெட்டுப் படிப்புப் பயிற்சி – தஞ்சாவூர்

தமிழகத் தொல்லியல் கழகம், தஞ்சை 4 நாள் கல்வெட்டுப் படிப்புப்  பயிற்சி ஆடி 5-8, 2048 / சூலை 18 – 21 கங்கை கொண்ட சோழபுரம்                                                                          இவ்வாண்டு கங்கை கொண்ட சோழபுரத்தில் 2017 ஆம்…