அதிர வைத்த தினகரனின் அதிரடி வெற்றி! – இலக்குவனார் திருவள்ளுவன்

அதிர வைத்த தினகரனின் அதிரடி வெற்றி!    இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் தினகரன் வெற்றி எதிர்பார்த்த ஒன்றுதான். ஆனால், கனவுகளில்  வாழ்ந்தவர்களும் அவர் வெற்றி பெறக்கூடாது எனக் கருதியவர்களும் கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்ற எண்ணிய முகவர்களும் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். சின்னமும் கட்சியும் ‘மத்திய ஒத்துழைப்பால்’ கிடைத்தமையால் மக்கள் ஆதரவும் கிடைக்கும் எனத் தப்புக் கணக்கு போட்டமையால் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.  ‘’தினகரன் வெற்றி பெற்றால் பாசகவின் பிடி தளரும் என்ற நம்பிக்கையில் உள்ளவர்கள் அவர் வெற்றி பெறுவதை விரும்புகின்றனர்” என முன்னரே…

காந்திநகர் நூலக வாசகர் வட்டத்தில் தமிழ்க்குறும்பா நூற்றாண்டு விழா

       அடையாறு காந்திநகர் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் தமிழ்க் குறும்பா நூற்றாண்டு விழா நடைபெற்றது.       இவ்விழாவிற்கு கவிஞரும் இதழாளருமான மு.முருகேசு தலைமையேற்றார். வாசகர் வட்டத் தலைவர் எழுத்தாளர் வையவன் அனைவரையும் வரவேற்றார். நூலகர் நீ.அகிலன், ஓவியர் செந்தமிழ்ச் செல்வன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.  விழாவில், கவிஞர்கள் க.நா.கல்யாண சுந்தரம், வசீகரன், அருணாச்சல சிவா, யுவபாரதி, சு.கணேசுகுமார், துரை.நந்தகுமார், வானவன், தயானி தாயுமானவன் முதலரன 25-க்கும் மேற்பட்ட கவிஞர்கள் குறும்பாக் கவிதைகளை (ஐக்கூ)வாசித்தனர்.  தமிழின் மூத்த குறும்பாக் கவிஞர் ஓவியர் அமுதபாரதி, தனது  குறும்பாக் கவிதைப் பட்டறிவுகளைப் பகிர்ந்துகொண்டார்….

புதுச்சேரி பொலிவு நகர வடிவமைப்புச் சின்னத்தில் தமிழ் இல்லை!

புதுச்சேரி பொலிவு நகர வடிவமைப்புச் சின்னத்தில் தமிழ் இல்லை, தமிழில் மாற்றுக ! அரசுக்குத் தனித்தமிழ் இயக்கம் வேண்டுகோள்! புதுச்சேரி நகரைப் பொலிவு (smart) நகராகத் தேர்ந்தெடுத்த பின்னர் அதற்கான வடிவமைப்புச் சின்னம் ஒன்றைப் புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ளது. அதில் இரண்டு தீமைகள் பெரும்பான்மை மக்கள் மொழியான தமிழுக்கும் வரலாற்றுக்கும் விளைவிக்கப்பட்டுள்ளன. ஆட்சிமொழிச் சட்டத்தை மதிக்காமல் பிரஞ்சு மொழியில் மட்டும் அந்தச் சின்னம் உருவாக்கப் பட்டுள்ளது. இதைமாற்றித் தமிழில் மட்டும் இருக்குமாறு வடிவமைக்க வேண்டும். தேவைப்பட் டால் சிறிய அளவில் ஆங்கிலத்தில் இருக்குமாறு உருவாக்கலாம்….

தமிழியல் ஆய்வு வரலாறும் வளர்ச்சிப்  போக்குகளும் – பன்னாட்டுக் கருத்தரங்கம்

 ஆடி 31, 2049 வியாழன் 16.08.2018 சா.இரா.நி.கல்லூரி வளாகம், சாத்தூர் உலகத்தமிழாராய்ச்சி நிறுவனமும் சாத்தூர் இராமசாமி(நாயுடு) நினைவுக் கல்லூரித் தமிழ்த்துறையும் இணைந்து நடத்தும் பன்னாட்டுக் கருத்தரங்கம் “தமிழியல் ஆய்வு வரலாறும் வளர்ச்சிப்  போக்குகளும்”      

இரீயூனியன் நாட்டுத் தமிழர்களுடன் சந்திப்பும் கலந்துரையாடலும், சென்னை

  பேரன்புடையீர், வணக்கம். வரும் மார்கழி 18, 2048 செவ்வாய்க் கிழமை சனவரி மாதம் 2-ஆம் நாள், சென்னை இரீயூனியன் நாட்டைச் சார்ந்த 10 தமிழர்கள் தாய்த் தமிழகத்திற்கு வருகைதந்து இரீயூனியன்-தமிழக நல்லுறவு குறித்து ஆசியவியல் நிறுவன வளாகத்தில் தமிழன்பர்களோடு கலந்துரையாட உள்ளனர். இச்சந்திப்பும் கலந்துரையாடலும் சென்னை ஆசியவியல் நிறுவன மாநாட்டு அரங்கில் பிற்பகல் 3 மணியளவில் நடைபெறும். இதில் பங்கேற்றுத் தமிழக-இரீயூனியன் நல்லுறவு வலுப்பெறவும், தமிழர் பண்பாடு இரீயூனியன் நாட்டில் வளம்பெறவும் தங்கள் அரிய கருத்துகளை வழங்குமாறு அன்புடன் வேண்டுகிறேன் மிக்க நன்றி….

வாசிப்புப் போட்டி – 2017 தேர்வு மதிப்பீடு

வாசிப்புப் போட்டி – 2017 தேர்வு மதிப்பீடு வலைவழி வாசிப்புப் போட்டி என்பது இலகுவானதல்ல. நூல்களை வாசித்து வினாக்களுக்கான விடைகளை அந்நூல்களில் இருந்து பொறுக்கி எமக்கு அனுப்பிவைக்க வேண்டும். இந்த முயற்சியில் இறங்குவோர், வாசிப்பைச் சரியாக மேற்கொள்ள வேண்டும். உலகெங்கும் தமிழ் பேசும் மக்களிடையே வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்க, வாசிப்பு மாதமாகிய ஐப்பசி (Oct) இல் அறிவித்து நடாத்தப்பட்ட ‘வாசிப்புப் போட்டி – 2017‘ இற்கான முடிவுரையை இப்பகுதியில் தருகின்றேன். இப்போட்டியில் நிறைவடையத்தக்க வகையில் விடை கிடைக்காத போதும் (அதாவது, நூல்களை வாசித்து நூலாசிரியர்களின்…

2018-1 மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும்

2018-1 மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் வலைப்பதிவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் யாழ்பாவாணன் வெளியீட்டகம் தனது தமிழ் மின்னூல் வெளியீட்டுப் பணி ஊடாக “மதுவை விரட்டினால் கோடி நன்மை!” என்ற மின்னூல் வெளியிட முன்வந்திருக்கிறது. இதனை வலைவழியே உலகெங்கும் அன்பளிப்பாக (இலவசமாக) பகிரவுள்ளோம். இம்மின்நூலுக்கான பதிவுகளை வலைப்பதிவர்களிடம் இருந்து 31/12/2017 இற்கு முன்னதாக எதிர்பார்க்கின்றோம். ஏற்கெனவே, இம்மின்நூல் வெளியீடுபற்றிக் கீழ்வரும் இணைப்புகளில் அறிவித்துவிட்டோம். கவிதைகள் வந்த வண்ணம் உள்ளன. https://www.facebook.com/yarlpavanan/posts/1780289532013328 https://yarlpavanan.wordpress.com/2017/12/02/உங்களுக்குக்-கவிதை-எழுத/ http://www.ypvnpubs.com/2017/12/blog-post.html மதுவினால் உடல் நலம், மக்கள் நலம், நாட்டு நலம் கெடுமென்றும் மதுவினால் சீர்கெட்ட நிலைமைகளைச்…

மறக்க முடியுமா? பேராசிரியர் வ.சுப.மாணிக்கனார் – எழில்.இளங்கோவன்

பேராசிரியர் வ.சுப.மாணிக்கனார் ‘‘மாணிக்கச் சிந்தனைகள், எளிய வாழ்வு, அளவான பேச்சு, எந்நிலையிலும் எதிர்கால நம்பிக்கை, பதவிகளைத் தொண்டாக மதித்தல், தன்னைப் பற்றிய திருத்தமான சிந்தனைகள், வாழ்க்தைத் திட்டங்கள், பெரியவர்களின் வரலாறுகளைப் படித்தல், சோர்வுக்கு இடம் கொடாத ஊக்கங்கள், பகட்டின்றித் தூய எண்ணத்தால் இறைவனை வழிபடுதல்’’ ஆகிய பண்புகளுக்குச் சொந்தக்காரர், பேரறிஞர் பெருந்தகை, பேராசிரியர் வ.சுப.மாணிக்கனார் என்று நினைவு கூர்கிறார் அவரின் மாணவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன். தேர்ந்த சிந்தனையாளர், தெளிந்த உரையாசிரியர், திறன்மிகு உரைநடையாளர். ஆய்வாளர், பேராசிரியர், கவிஞர், பழைமை&- புதுமை இரண்டையும் ஒருமித்துப் போற்றியவர் வ.சுப.மாணிக்கனார் அவர்கள். இவர் தி.பி. 1948 சித்திரை 05 – 1917ஆம் ஆண்டு ஏப்பிரல் திங்கள் 17ஆம் நாள் புதுக்கோட்டை மாவட்டம் மேலைச்சிவபுரியில் பிறந்தார்….

திராவிடப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை மேம்பாடு? உதவிக்கரம் நீட்டுமா தமிழக அரசு? – எம். அருண்குமார்  

  திராவிடப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை மேம்பாடு! உதவிக்கரம் நீட்டுமா தமிழக அரசு?  திராவிடப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறையில் கல்வி பயில மாணவர்களுக்குத் தேவையான வசதிகளை செய்து தர தமிழக அரசு போதிய கவனம் செலுத்த வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தென்னிந்தியாவின்  முதன்மை மொழிகள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகும். இவை திராவிட மொழிகள் என அழைக்கப்படுகின்றன. திராவிட மொழிகளில்(தமிழ்க்குடும்பமொழிகளில்) தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலான 27 மொழிகளைப் பாதுகாத்திடவும், அந்த மொழிகளைப் பேசும் மக்களின் வரலாறு, நாகரிகம், பண்பாடு, வாழ்வியல்…

செந்தமிழ் இனமே! – தமிழநம்பி

செந்தமிழ் இனமே! – தமிழநம்பி செந்தமிழ் இனமே! செந்தமிழ் இனமே! முந்து தமிழும் முதனா கரிகமும் இலக்கியச் சிறப்பும் இலக்கணச் செழுமையும் துலக்குறு அறிவொடு இலக்குறு வாழ்வும் நெடுவரைப் பனிமலை நெற்றியில் விற்கயல் கொடும்புலி பொறித்த கடுமறத் திறத்தொடும் மிகையுங் கொளாது குறையுங் கொடாது தகைமிகு வணிகம் தரைகட லோடி நுண்கலை வானியல் நுட்ப அறிவியல் எண்ணியல் நாட்டியம் பண்ணிசை யாழொடும் செழிப்புற விளங்கிய செந்தமிழ் இனமே! அழிப்புற ஒடுக்குற இழிதாழ் வுற்றே இரண்டகக் கொடியரால் எய்தினை வீழ்ச்சி! திரண்டவுன் சீர்மைச் சிறப்பெலா மிழந்தனை!…

தமிழ்நாட்டில் தெலுங்கர் ஆட்சியா? – பெ.மணியரசன்

தமிழ்நாட்டில் தமிழில்லா தெலுங்குப் பள்ளிகள்  நடத்த தெலுங்கு மாநாட்டில் கோரிக்கை :  தமிழ்நாட்டில் மீண்டும்  விசயநகர ஆட்சி நடத்தும் திட்டமா?  தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்  தோழர் பெ. மணியரசன் அறிக்கை!  தெலங்கானா தலைநகர் ஐதராபாத்தில் நடந்து வரும் ஐந்து நாள், ‘உலகத் தெலுங்கு மாநாட்டில்’ பேசியவர்கள், தமிழ்நாட்டில் தெலுங்கைப் பாட மொழியாகவும் பயிற்றுமொழியாகவும் பள்ளிக் கல்வியில் வைக்க வேண்டுமென்று வலியுறுத்தி வருகிறார்கள் என்ற செய்தி ஆங்கில நாளேடுகளில் வந்துள்ளது. உலகத் தெலுங்கு மாநாடு, 15.12.2017இலிருந்து 19.12.2017 வரை ஐந்து நாள் நடந்தது. அம்மாநாட்டை 15.12.2017 அன்று இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா(நாயுடு) குத்துவிளக்கேற்றித் தொடங்கி…

இலங்கையின் ஆறாம் திருத்தச் சட்டத்திற்கு எதிராக 1,705 சட்டத்தரணிகள் ஐ.நாவில் முறையீடு !

இலங்கையின் ஆறாம் திருத்தச் சட்டத்திற்கு எதிராக 1,705 சட்டத்தரணிகள் ஐ.நாவில் முறையீடு ! நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்  புதிய இடைக்கால அரசமைப்புச் சட்ட அறிக்கையில் இடம்பெறும் ‘பிரிக்கப்படாத, பிரிக்கவொண்ணாத ஒரே நாடு’ என்ற சொல்லாட்சியையும், முறையீடு எடுத்துக்காட்டுகிறது. இலங்கையின் ஆறாம் திருத்தச் சட்டத்திற்கு எதிராக, ஆயிரத்து எழுநூற்று ஐந்து (1,705) சட்டத்தரணிகள் ஐ.நாவில் முறையீடு ஒன்றினைச் செய்துள்ளனர். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முன்னெடுப்பில் உலகளாவிய முறையில் ஒருங்கிணைந்த 1,705 சட்டத்தரணிகள் தமது முறைப்பாட்டை கடந்த திசம்பர் 8 ஆம் நாளன்று ஐ.நாவில் அளித்துள்ளனர். இது…