கருத்துக் கதிர்கள் 06-08 – இலக்குவனார் திருவள்ளுவன் [06. திருமாவளவன் அவை நடத்துநர் பட்டிப்பில் இடம் பெற வேண்டும். 07. அ.ம.மு.க., ம.தி.மு.க. போல் சிறுத்துப் போக வேண்டுமா? 08. மத்திய அமைச்சரவையில் தமிழ்நாட்டவர் இடம்பெற வேண்டும்!]

கருத்துக் கதிர்கள் 06-08 : [06. திருமாவளவன் அவைநடத்துநர் பட்டிப்பில் இடம் பெற வேண்டும். 07. அ.ம.மு.க., ம.தி.மு.க. போல் சிறுத்துப் போக வேண்டுமா? 08. மத்திய அமைச்சரவையில் தமிழ்நாட்டவர் இடம்பெற வேண்டும்!]  06. திருமாவளவன் அவைநடத்துநர் பட்டிப்பில் இடம் பெற வேண்டும்.  நாடாளுமன்றத்தில் அவைத் தலைவரும் துணைத் தலைவரும் இல்லாத நேரங்களில் அவையை நடத்துவதற்காக அவை நடத்துநர் பட்டிப்பு (Panel of Chairpersons) உருவாக்குவர். பதின்மருக்குக் குறையாத நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம் பெறுவர். அவைத்தலைவர் அல்லது துணைத்தலைவர் பதவி ஒழிவிடமானால், இவர்கள் அந்த இடத்திற்கு…

மூத்தோருக்கான தமிழ் வகுப்பு, கிங்குசுடன்

வைகாசி 18, 2050 சனி  01.06.2019 முதல் சனிக்கிழமை தோறும் பிற்பகல் 2.00 முதல் 4.00 மணி வரை துளசி, கிங்குசுடன் மூத்தோருக்கான தமிழ் வகுப்பு ஆர்வலர்களே! தமிழ் அறிய வருக!  

அளவளாவல் : திரு ம.நித்தியானந்தம்

வைகாசி 19, 2050 / ஞாயிறு / 02.06.2019 மாலை 5.00 குவிகம் இல்லம் ஏ6, மூன்றாம் தளம், வெண்பூங்கா அடுக்ககம், 24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை 600 017 அளவளாவல்: திரு ம.நித்தியானந்தம் எழுத்தாளர், நூலக / திருத்தல ஆர்வலர் 

அ.ம.மு.க.வினர் தளர வேண்டா! – இலக்குவனார் திருவள்ளுவன்

அ.ம.மு.க.வினர் தளர வேண்டா!   பதவி பறிக்கப்பட்டவர்களில் சிலராவது வெற்றி காண்பர். கணிசமான வாக்குகளைப் பெற்று  கருதத்தக்க இடத்தைப் பெறலாம் என எண்ணிய தினகரனின் அ.ம.மு.க. பாதாளத்தில் விழுந்துள்ளது. ஒரு தொகுதியில்கூடப் பிணைத்தொகையைத் திரும்பப் பெறும் வகையில் வாக்குகளைப் பெறவில்லை. சில இடங்களில் நான்காவது இடமும் ஐந்தாவது இடமும் பெற்றுள்ளது. இந்தத் தோல்வி அடுத்தடுத்த சூழ்ச்சி வலைகளால் உருவானது. என்றாலும் சூழ்ச்சியையும் வெல்வதுதானே திறமை. இனி, சூழ்ச்சிகளை வெல்லும் வகையில் திறமாகச் செயல்பட்டால் கட்சி வளரும். “வீழ்வது இயற்கை. எழுவதே வாழ்க்கை” என்று தன்னம்பிக்கை…

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 131-140 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 121-130 தொடர்ச்சி) வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம்  131-140 (குறள்நெறி)  (செல்வர்க்கே செல்வமான) பணிவைக் கடைப்பிடி! (ஆமைபோல்) ஐம்பொறி அடக்கு! நாவைக் காக்காது துன்பத்தைச் சேர்த்துக் கொள்ளாதே! (நன்றெல்லாம் நீக்கும்) தீச்சொல் ஒன்றும் சொல்லாதே! நாவினால் பிறரைச் சுடாதே! (அறவாழ்வு தேடி வர,) அடக்கமுடன் வாழ்! நல்லொழுக்கத்தை உயிரினும் மேலாய் மதி! ஒழுக்கத்தை எல்லா இடத்திலும் துணை வரச் செய்! ஒழுக்கமுடைமையை உயர் குடிமையாகக் கருது! ஒழுக்கம் தவறாதே! (தொடரும்) இலக்குவனார் திருவள்ளுவன் [காண்க : வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 141-150]

கருத்துக் கதிர்கள் – இலக்குவனார் திருவள்ளுவன்[1. தமிழிசைக்கு அமைச்சர் பதவி. 2. நாங்குநேரி ம.தி.மு.க.விற்கு. 3. மாநிலங்களவைக்குச் சுப.வீ.யும் வேல்முருகனும். 4. கட்சி வேறுபாடு பார்த்தால் பா.ச.க.விற்கு இழிவு. 5. காங்கிரசிற்குக் கூட்டுத் தலைமை.]

கருத்துக் கதிர்கள் : 1. தமிழிசைக்கு அமைச்சர் பதவி.  2. நாங்குநேரி ம.தி.மு.க.விற்கு. 3.  மாநிலங்களவைக்குச் சுப.வீ.யும் வேல்முருகனும்.  4. கட்சி வேறுபாடு பார்த்தால் பா.ச.க.விற்கு இழிவு. 5. காங்கிரசிற்குக் கூட்டுத் தலைமை.   தமிழிசைக்கு அமைச்சர் பதவி : தேர்தலில் தோற்றால் அமைச்சர் அல்லது ஆளுநர் ஆக்குவது ஆளும் கட்சிகளின் மரபுதான். அந்த வகையில் பா.ச.க.வின் தமிழ்நாட்டுத் தலைவி மரு. தமிழிசை செளந்தரராசனை அமைச்சராக்குவது பா.ச.க.விற்கு நல்லது. பத்து ஆண்டுகளுக்கு முன்னர் பா.ச.க.வின் தலைவராகத் தமிழிசை அமர்த்தப்படவேண்டும் என எழுதியிருந்தோம். அப்பொழுது எச்சு.இராசா…

ஏனையா?     –    அருள்மணி

ஏனையா? குண்டும் கொலையும் என்றுலகம் கொடூர வழியிற் செல்வதனைக் கண்டு காணா திருப்பதுஏன்? காரணம் சொல்வாய் ஐ. நா. வே!                1   உலக ஒழுங்கை நிலைநாட்டும் ஓரிட மாகத் உனைக்காட்டும் உலக அமைப்பாம் ஐ. நா. வே! ஊமை யானது ஏனையா?                        2   திட்ட மிட்டோர் இனஅழிப்பைச் செய்த அரசிற் குதவியன்று கட்டம் கட்டமாய் அழிக்கக் காரண மானீர் ஏனையா?                            3   மனித நேயம் பேசிடுவோர் மானிட உரிமைக் குரல்தருவோர் தனிமைப் படுத்தி ஓரினத்தை சாகடித் திடஏன் விட்டீர்கள்?                     4…

மறப்போமா? – மாதகலான்

மறப்போமா? பத்து ஆண்டுகள் போனாலும் பழைய நினைவுகள் மாறுமோ மொத்த ஈழத் தமிழினமும் முடிவைத் தேடி ஏங்குகிறோம்!            1   மொத்த உலகும் பார்த்திருக்க முள்ளி வாய்க்கால் நிலப்பரப்பில் கொத்துக் குண்டால் அடிபட்ட கொடூரம் தன்னை மறப்போமா?          2   வாழும் உரிமை வேண்டியன்று வன்னி மண்ணில் தமிழர்கள் ஆளும் வருக்கச் சூழ்ச்சிக்கு ஆட்பட் டழிந்ததை மறப்போமா?               3   முள்ளி வாய்க்கால் அவலத்தை மொத்த ஈழத் தமிழர்க்கும் கொள்ளி வைக்கும் நினைவோடு கொண்டு சென்றதை மறப்போமா?             4   சோகம் நிறைந்த…

தேர்தல்: கருதியனவும் நிகழ்ந்தனவும் – இலக்குவனார் திருவள்ளுவன்

தேர்தல்: கருதியனவும் நிகழ்ந்தனவும் தேர்தல் முடிவுகள் வந்துகொண்டிருந்த பொழுது நான் புறநகர் ஒன்றில் இருந்தேன். என் அலைபேசியில் இணைய இணைப்பு சரியாகக் கிடைக்கவில்லை. எனவே, முடிவுகளைப் பார்க்க இயலவில்லை. ஆனால், அன்பர்கள் சிலர் அடுத்தடுத்து ஒரே மாதிரி பேசினர். நான் அவர்களுக்கு ஒரே மாதிரிதான் மறுமொழி உரைத்தேன். அவர்கள், “நீங்கள் தேர்தல்பற்றியும் “பாசகவின் தேர்தல் கணிப்புச் சாயம் வெளுத்து விட்டது!” என்றும் எழுதியவை மிகச் சரி. ஆனால், பா.ச.க. அல்லவா பெரும்பான்மை பெற்று வருகிறது” என்றனர். நான் அதற்குப் “பா.ச.க. கட்சி அளவில் பெரும்பான்மை…

மு.க.தாலினுக்குப் பாராட்டுகள்! மாநிலக்கட்சிகள் கூட்டமைப்பு அமைத்திடுக! – இலக்குவனார் திருவள்ளுவன்

மு.க.தாலினுக்குப் பாராட்டுகள்!   மாநிலக்கட்சிகள் கூட்டமைப்பு அமைத்திடுக! தமிழ்நாடு-புதுவையில் ஓரு தொகுதி நீங்கலாக அனைத்திலும் தி.மு.க. கூட்டணியை வாகை சூட வைத்துள்ளார் மு.க.தாலின்.  அவரது தனித்தன்மையை ஏற்க வேண்டுமே தவிர, அவரின் தந்தை கலைஞர் கருணாநிதியுடன் ஒப்பிட்டுப் பேசக்கூடாது என்று முன்பே குறிப்பிட்டிருந்தோம். எனினும் அவ்வாறு ஒப்பிட்டுப் பேசுநருக்கும் விடையிறுக்கும் முகமாக வெற்றிக் கனிகளைப் பறித்துள்ளார். சிறப்பான வெற்றிக்கு அடிததளமாகவும் அரணாகவும் இருந்த மு.க.தாலினுக்குப் பாராட்டுகள்.  தலைமைய(மைச்ச)ர் பதவி ஆசையில் கூட்டணிக்கு உடன்படாத மே.வங்க, உ.பி.  முதலான வட மாநிலத் தலைவர்கள் மு.க.தாலின் வழியைப்…

திருக்குறளுக்கு உரை திருக்குறளே! 3/9 – பி.என்.(இ)டயசு

[திருக்குறளுக்கு உரை திருக்குறளே! 2/9 தொடர்ச்சி] திருக்குறளுக்கு உரை திருக்குறளே! – 3/9     இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை         தானேயுஞ் சாலுங் கரி                                                     (குறள்.1060) நாமக்கல்லார், பாவாணர், பேராசிரியர்  மோகனராசு மூவர் உரைகளை அலசுவோம்      ‘யாரும் தம்மிடம் வந்து பிச்சை கேட்பவனைக் கோபித்து வெருட்டி விடக்கூடாது அப்படிச் செய்தால் என்ன துன்பம் தமக்கு வந்துவிடும் என்பதை உணர்த்த அந்தப் பிச்சைக்காரன் படுகிற துன்பங்களே போதுமான சாட்சியம்.’ ( நாமக்கல் கவிஞர்)           ‘இரக்கப்பட்டவன் இரந்த பொருளை ஈயாதவிடத்து, இரந்தவன்…

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 121-130 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 111-120 தொடர்ச்சி) வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 121-130 (குறள்நெறி)  நடுவுநிலை தவறிக் கேடு அடையாதே! நடுவுநிலையாளர் தாழ்வை இழிவாக எண்ணாதே! (சமன்கோல் போல்) ஒரு பக்கம் சாயாமையை அணியாகக் கொள்! சொல்தவறாமையை மனம் கோணாமையுடன் இணை!  நடுவுநிலைமை வாணிகமே மேற்கொள்! அடக்கத்தால் உயர்வு கொள்! அடங்காது சிறுமை கொள்ளாதே! அடக்கத்தைக் காத்திடுக. நல்வழியிலான அடக்கம்  கொள்! மலையிலும் உயர்வான அடக்கம்  கொண்டு வாழ்! (தொடரும்) இலக்குவனார் திருவள்ளுவன் [காண்க : வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 131-140]

1 2 6