(வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 141-150 தொடர்ச்சி) வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 151-160 (குறள்நெறி)  நம்பியவர் மனைவியை நாடாதே! பிறன்மனை புகுந்து  சிறியோன் ஆகாதே! பிறர் மனைவியை நாடாதே! பிறர் மனைவியை விரும்பாதே! அறவாழ்வு வேண்டுமெனில், பிறர்மனைவியை விரும்பாதிரு!   (அறத்தைத் தழுவப்,) பிறர் மனைவியைத் தழுவாதே!   பிறர் மனைவியை விரும்பா அறம் புரி! தோண்டுநரைத் தாங்கும் நிலம்போல் இகழ்வாரைத் தாங்கு! பிறர் தீங்கைப் பொறுத்தலினும் மற! அறிவின்றித் தீங்கிழைப்போரைப் பொறு!  (தொடரும்) இலக்குவனார் திருவள்ளுவன் [காண்க : வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 161-170]