நடுகற்கள் – பாதுகாப்பும் பேணுகையும் 5 : ச.பாலமுருகன்

  (ஆடி 11, 2045 / சூலை 27, 2014 இதழின் தொடர்ச்சி) அரசு உதவியுடன் மாவட்ட மரபுச்சின்னங்கள் வரைபடம் (District Heritage Map) உருவாக்குதல். கணினி மற்றும் தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியினை பயன்படுத்தி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த என்னென்ன நடவடிக்கை மேற்கொள்ளலாம் எனத் திட்டமிட வேண்டும். அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நடுகற்களையும் கணக்கெடுப்பு பணி செய்து முடித்த பின்பு மாவட்ட வாரியாகப் பிரித்து மாவட்ட வரைபடத்தில் அந்நடுகற்கள் எந்த ஊரில் எந்த இடத்தில் அமைந்துள்ளது என்பதை அனைவரும் தெரிந்து…

நடுகற்கள் – பாதுகாப்பும் பேணுகையும் 4 : ச.பாலமுருகன்

  (ஆடி 4, 2045 / சூலை 20, 2014 இதழின் தொடர்ச்சி)   அரசை வலியுறுத்தவேண்டியவை:   மாவட்ட வாரியான நடுகற்கள்/மரபுச்சின்னங்கள் பாதுகாப்பு- பேணுகை ஆகிய பணிகள் பற்றிய அறிக்கை அனுப்புதல்.   மாவட்ட அளவில் உள்ள அனைத்து வரலாற்று நினைவுச்சின்னங்கள் அரசாங்கம் ஏன் பாதுகாக்க வேண்டும் என்பதன் அவசியத்தை உணர்த்த வேண்டும். அதற்கான தமிழ்நாட்டில் மாவட்ட தோறும் அமைந்துள்ள நினைவுச்சின்னங்கள் பற்றிய பட்டியலையும் அதில் பாழடைந்து சீரழிந்து வரும் நினைவுச்சின்னங்கள் பற்றிய பட்டியலையும் தனித்தனியே தொகுத்து அதில் மேற்கொள்ளவேண்டிய பேணுகை, பாதுகாப்பு…

நடுகற்கள் – பாதுகாப்பும் பேணுகையும் 3 : ச.பாலமுருகன்

  (ஆனி 29, 2045 / சூலை 13, 2014 இதழின் தொடர்ச்சி)     3.     நடுகற்கள்/மரபுச்சின்னங்கள் தொடர்பான பயிற்சி அளித்தல். தமிழ்நாட்டில் அமைந்துள்ள அனைத்து நினைவுச்சின்னங்களும் பேணப்பட, முதலில் அவை பற்றிய தகவல் தொகுப்பு உருவாக்கவேண்டும். பிறகு அந்நினைவுச்சின்னங்கள் பாதுகாக்கப்படவேண்டியதன் கட்டாயத்தை உள்ளூர் மக்களிடம் தெரிவிக்கவேண்டும். உள்ளூர் மக்களுக்கு முதலில் அவர்கள் ஊரைப்பற்றிய ஓர் ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும். வருடத்திற்கு ஒன்று/இரண்டு முறை மாவட்ட அளவில் ஒரு கருத்தரங்கம், பயிலரங்கம் நடத்தப்படவேண்டும். அதில் பள்ளி/கல்லூரி மாணவர்கள், வரலாற்று ஆர்வலர்கள், உள்ளாட்சிச் சார்பாளர்கள்…

நடுகற்கள் – பாதுகாப்பும் பேணுகையும் 2 : ச.பாலமுருகன்

  (ஆனி 22, 2045 / சூலை 06, 2014 இதழின் தொடர்ச்சி)       நடுகற்கள் முதலான மரபுச்சின்னங்களைப் பாதுகாப்பதும் அவற்றை முறையே பேணுவதும் அரசாங்கத்தின் கடமை என்றாலும் அரசாங்கமே அனைத்தையும் பேண முடியாது என்பதே உண்மை. எனவே, வரலாற்று ஆர்வலர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே இதுபோன்ற நினைவுச்சின்னங்களைப் பாதுகாக்க முடியும்.     வரலாற்று ஆர்வலர்கள் செய்யவேண்டியன:   மாவட்ட வரலாற்று ஆய்வு மையம் ஏற்படுத்துதல்.          ஒவ்வொரு மாவட்டத்திலும் அம்மாவட்டத்தில் உள்ள…

நடுகற்கள் – பாதுகாப்பும் பேணுகையும் : ச.பாலமுருகன்

 அறிமுகம்    உலகில் உள்ள தொன்மைச் சமூகங்களில் ஒன்றாகவும், மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகவும் இயங்கிவரும் தமிழ் மன்பதையினர் தலைசிறந்த இலக்கியம், கலை, பண்பாட்டு, கோயில் கட்டடக்கலை, வானவியல் துறைகளில் அறிவு பெற்றவர்களாக வாழ்ந்து வந்துள்ளனர். தமிழர்களின் சிறப்பு உலகத்திற்கு தெரிவித்து நிற்பன செல்வியல் தன்மை வாய்ந்த இலக்கியங்களும் வரலாற்று நினைவுச்சின்னங்களும் ஆகும். ஆயிரக்கணக்கான வரலாற்று நினைவுச்சின்னங்கள் நம் தமிழ்நாட்டில் விரவிக்கிடக்கின்றன. அவை ஒரு சில மட்டுமே அரசாலும் ஆர்வலர்களாலும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. நடுகற்களும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பரவிக்கிடக்கின்றன. வரலாற்று ஆர்வலர்கள் தற்போது நடுகற்கள்…

நடுகற்கள் – இரண்டு நாள் தேசியக் கருத்தரங்கம்

தென்னிந்தியவின் சமூக வரலாற்றை அறிய உதவுபவை நடுகற்கள். 1974ஆம் ஆண்டு தமிழக அரசின் தொல்லியல் துறை முதலாவது நடுகற்கள் பற்றிய கருத்தரங்கை, சென்னையில் நடத்தியது. நாற்பதாண்டுகளில் சங்கக்கால நடுகற்கள்  முதலான மிக முதன்மையான நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதோடு விரிவான ஆழமான ஆய்வுகளும் பலநிலைகளில் ஆய்வாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவற்றை அறிய வேண்டி வருகின்ற சூன் மாதம் 21, 22 ஆகிய  நாள்களில், இக்கருத்தரங்கை, கிருட்டிணகிரி வரலாற்று ஆய்வு மையம், தருமபுரி அதியமான் சமூக வரலாற்று ஆய்வு மையம், காவேரிப்பட்டினம் பெண்ணையாறு தொல்லியல் சங்கம் ஆகிய வரலாற்று…

இலக்குவனார் குறிப்பிடும் மாமூலனார் புலப்படுத்தும் வரலாற்றுச் செய்திகள் – இலக்குவனார் திருவள்ளுவன்

இலக்குவனார் குறிப்பிடும் மாமூலனார் புலப்படுத்தும் வரலாற்றுச் செய்திகள் பழந்தமிழர்களுக்கு வரலாற்றை எழுதி வைக்கும் உணர்வும் அறிவும் இல்லை என்று பரப்பி வருகின்றனர். சங்க இலக்கியப் பாடல்களிலேயே வரலாற்றுக் குறிப்புகள் பலவற்றைக் காணலாம். அகப்பாடல்களிலேயே உவமையாகவும் அடை மொழியாகவும் பல வரலாற்றுச் செய்திகளைப் புலவர்கள் தெரிவிக்கின்றனர். நடுகல், கல்வெட்டு, பட்டயம் முதலியனவும் வரலற்றுச் செய்திகள்தாமே! (தன்வரலாறு எழுதுவதைத் தற்புகழ்ச்சியாகக் கருதி எழுதவில்லை. அதுபோல் வாழ்க்கை வராற்றுச் செய்திகளையும் எழுதி வைக்க விரும்பவில்லை.) இவையெல்லாம் வரலாற்றுஅறிவு மிக்கவர்கள்தாம் பழந்தமிழர்கள் என்பதை மெய்ப்பிக்கின்றன. பெரும்பாலான பழந்தமிழ் நூல்கள் அழிக்கப்பட்டனவும்…

கல்வெட்டுகள் வரலாறு உணர்த்துகின்றன – தி.வை.சதாசிவம்

கல்வெட்டுகள் வரலாறு உணர்த்துகின்றன   கல்வெட்டுகள் என்பன கோயில் சுவர்கள், கற்பாறைகள் மலைக்குகைகள், வெற்றித் தூண்கள், மண்டபங்கள், படிமங்கள், நடுகற்கள் முதலானவற்றில் வரையப் பெற்றிருக்கும் கல்லெழுத்துகளேயாகும். செப்பேடுகளையும் கல்வெட்டுகள் என்ற தலைப்பின்கீழ் அடக்கிக்கொள்வது பொருந்தும். … கல்வெட்டுகளில் காணப்படும் செய்திகள் எல்லாம் கற்பனைச் செய்திகள் அல்ல. அவையனைத்தும் நம் முன்னோர்களுடைய உண்மை வரலாறுகளை யுணர்த்தும் பழைய வெளியீடுகளே. கல்வெட்டறிஞர் தி.வை.சதாசிவ பண்டாரத்தார்

காட்டைப் பார்த்து வெகு நாளாயிற்று … குமுறும் ஆடுகள் 3

(ஆடி 31, 2046 / ஆக.16, 2016 தொடர்ச்சி) 3  கடந்த காலங்களில் ஊருக்கு ஊர் மேய்க்கால், புறம்போக்கு என்று தனியாக நிலமிருக்கும். அது ஊருக்குப் பொதுவானது. அதில் ஆடு, மாடுகளை மேய்த்திருப்பார்கள். அது மாதிரியான நிலங்களை இப்பொழுது பலரும் கவர்ந்து வைத்திருக்கிறார்கள். அதனால் ஊர் நாட்டில் மேய்க்க முடியாது. காட்டிலும் மேய்க்கத் தடை. இப்படியே இருந்தால் கடலிலும் சந்திரமண்டத்திலத்திலேயும்தான் ஆடுகளை மேய்க்க முடியும். இதன் தொடர்பாகப் பலமுறை மத்திய, மாநில மந்திரிகளிடம் நேரிடையாக மனுக்கொடுத்துள்ளோம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்றார்.  இதன் தொடர்பாகத்…

மதநல்லிணக்கக் கட்டடங்கள் – வைகை அனீசு

மதநல்லிணக்கக் கட்டடங்கள்   இந்திய வரலாற்றை அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்வதற்கும் உண்மையான வரலாற்றைக் காலவாரியாக எடுத்துக்கூறுவதற்கும் தொல்லியல் சான்றுகளே மிகுந்த துணைபுரிகின்றன. மனித குல வரலாற்றில் எளிய மக்களின் வாழ்வையும், நடுத்தர, உயர்குடி மக்களின் வாழ்வையும் தொல்லியல் சான்றுகள் படம் பிடித்துக் காட்டுகின்றன. தமிழகத்தில் உள்ள பழமையான பள்ளிவாசல்கள், தர்ஃகாக்கள், அகழாய்வுகள் மூலம் கண்டறிந்தவை, ஒவ்வொரு காலக் கட்டத்திலும் வாழ்ந்த மக்களின் பண்பாட்டையும் நாகரிகத்தையும் எடுத்துக்காட்டுகின்றன. இதே போன்று மன்னர்கள் வெளியிட்ட நாணயங்கள், அவர்கள் காலத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் வரலாற்று உருவாக்கத்திற்கு அடிப்படைச்சான்றுகளாய்…

இரண்டாம் ஆண்டில் ‘அகரமுதல’

  ‘அகரமுதல’ மின்னிதழ் இரண்டாம் ஆண்டில் மகிழ்ச்சியுடன் அடிஎடுத்து வைக்கின்றது. இதன் வளர்ச்சியில் நாட்டம் கொண்ட படிப்பாளர்கள் படைப்பாளர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான நன்றியைத் தெரிவிக்கிறோம்.   ‘அகரமுதல’ மின்னிதழ் அடைய வேண்டிய இலக்கு இன்னும் தொலைவில் உள்ளது. இருப்பினும் தளராமல் தன்னம்பிக்கையுடன் முன்னேறிச் செல்கின்றது.   நற்றமிழில் நடுவுநிலையுடனும் துணிவுடனும் செய்திகளையும் படைப்புகளையும் தரும் மின்னிதழ் எனப் படிப்போர் பாராட்டுவது மகிழ்ச்சியைத் தருகின்றது. தமிழ் மொழி, தமிழினம், ஈழத்தமிழர் நலன், கலை, அறிவியல், தொல்லியல் முதலான பல்துறைச் செய்திகள், கதை, கவிதை, கட்டுரை, நாடகம்…

தன்னையே பலியிடும் நவகண்டச் சிற்பங்கள் – வைகை அனீசு

தன்னையே பலியிடும் நவகண்டச் சிற்பங்கள் தனக்கென வாழாப் பிறர்க்குரிய சமூகம் பண்டைய காலத்தில் போற்றுதலுக்குரிய நிலையில் இருந்துள்ளது. தெய்வத்திற்கோ தலைவனுக்கோ ஊருக்கோ தன்னை ஒப்படைத்துக்கொள்ளும் வீரனை மக்கள் வழிபடுகின்றனர். இப்பொழுதுகூட உயிரைக் கொடுத்த இறைவனுக்கு மயிரைக் கொடுக்கும் வழக்கம் அனைத்துச் சமயங்களிலும் காணப்படுகிறது. இந்துக்களாக இருந்தால் கோயில்களிலும், முசுலிம்களாக இருந்தால் நாகூர், ஏர்வாடி முதலான அடக்கத்தலங்களிலும் கிறித்தவர்களாக இருந்தால் வேளாங்கண்ணி முதலான கோயில்களிலும் முடி காணிக்கை செலுத்துவதைக் காணமுடிகிறது. வழக்கமாகப் பூசை செய்யும் இறைவனுக்கு எச்சில்உணவு வழங்கிய திண்ணப்பன் என்ற கண்ணப்பனைச் சிவனும் விழைந்துள்ளார்….