உன்பிள்ளை குட்டிகளைக் காப்பதுன் பொறுப்பு! – சச்சிதானந்தம் தெய்வசிகாமணி

உன்பிள்ளை குட்டிகளைக் காப்பதுன் பொறுப்பு! சண்டாளக் காசுவந்து செந்தமிழர் ஒற்றுமையைத், துண்டாடிக் கூசாமல் வெந்தழித்து நாசமாக்க, வண்டாடுஞ் சோலைகளும் வாவிகளும் செத்துவீழ, அன்றாடச் சோற்றுக்கு அல்லாடித் திரிந்தாலும், பங்காளிச் சண்டையிலே பகுத்தறிவை இழந்து, இரண்டாக நிற்கின்ற என்னன்புத் தமிழா! குண்டூசி அளவேனும் சிந்தித்துப் பாரடா! முண்டாசுக் கவிஞன் சொன்ன சொற்களை மறந்தாய், மண்டூகப் பேய்களுக்கு வாக்களித்து ஒழிந்தாய்! திண்டாடிச் சீரழியும் தமிழினத்தின் நிலைமைக்கு, என்றேனும் காரணம்யார் என்றெண்ணிப் பார்த்தாயா? வெண்டாக உடல்வெடித்து ஓடாகத் தேய்ந்தாலும், என்போடு சதையொட்டி கூடாக ஆனாலும், “என்பாடு” இதுவல்ல என்று…

இக்கரைக்கு அக்கரை பச்சை! – சச்சிதானந்தம் தெய்வசிகாமணி

இக்கரைக்கு அக்கரை பச்சை! இக்கரைக்கு அக்கறை பச்சையென்று எண்ணியே, இக்கறை படிந்து நிற்கும் கட்சிகளை நம்பியே, திக்கினை இழந்து தமிழர் நட்டாற்றில் தவிக்கிறோம்! சக்கரைக்குள் நஞ்சினை மறைத்து வைத்து ஊட்டியே, சிக்கலின்றித் தமிழனின் சிரம் அறுக்கும் துணிவுடன், மெத்தனத் தனத்துடன் வலம்வரும் பகைவரை, உக்கிரக் கொளுந்துவிட் டுதித்திடுஞ் செந்தீயிலே, இட்டழிக்குஞ் சக்திவாய்ந்த தமிழனுக்குத் தேர்தலில், மொத்தமாக வாக்களித்துத் தலைவனாக ஆக்குவோம்! சச்சிதானந்தம் தெய்வசிகாமணி

மதிமலர் வாடாமல் மைவிரல் வாள்வீசு! – சச்சிதானந்தம் தெய்வசிகாமணி

மதிமலர் வாடாமல் மைவிரல் வாள்வீசு! மழலையர் பாலுக்கு அழுது ஏங்க, மறுசிலர் மதுவினால் வயிறு வீங்க, முதியவர் நோய்நீக்கும் மருந்து வாங்க, முடியாமல் முதுமையில் சுருண்டு தூங்க, முடைநாற்ற அரசியல் செழித்து ஓங்க, மங்கையர் மனத்துயர் மேலும் ஓங்கும்! மண்குடிசை வீட்டுக்குள் பாம்புகள் ஓட, மாளிகை முற்றத்தில் தோகைமயில் ஆடும்! மழைவளம் இல்லாமல் மண்வயல் வாட, மந்திரிகள் வீட்டிலோ பொன்னூஞ்சல் ஆடும்! மனநலம் திரிந்துலவி மேன்மக்கள் வாட, மணிமுடி தரித்தவர் மீத்தேனை நாட, மட்கலம் போலுடைந்து நொறுங்கும் தமிழா! மதிமலர் வாடாமல் எழுந்து வா!…

கட்டாயம் காலி – தமிழ்சிவா

கட்டாயம் காலி   “காதலில் தோற்றுப் போன உழவோர் சாதலைத் தேர்ந்து சட்டென மாய்ந்தார்” திருவாய் மலர்ந்தருளி தித்திக்கும் தனது கண்டு பிடிப்பை எத்திக்கும் புகழ்மணக்க எடுத்துக் கூறிய எழில்மிகு ஆட்சியில் கல்வி கடைச்சரக்கு உண்மை உண்மை காவிக்கு முதலிடம் முற்றும் உண்மை சிறுமையே பெருமையும் சிறப்பு மாகும் நிலத்தைக் கையகப் படுத்தி நாட்டின் வளத்தைக் கயவர் கையில் கொடுத்து நெஞ்சம் நிறைவு கொள்ளவே நாளும் வித்தைகள் காட்டும் வித்தகர் வாழ்க! உள்ளே குப்பையும் வெளியே தூய்மையும் கொண்ட “கோ”மகன் வாழி! வாழி! கண்டெடுத்த…

அரசியல் மந்திரம் கற்போம்! – சச்சிதானந்தம் தெய்வசிகாமணி

அரசியல் மந்திரம் கற்போம்! தகதிமிதோம்! தகதிமிதோம்! அரசியல் மந்திரம் கற்போம்! தமிழகங் காக்கத் துடித்தெழுந்து, தரங்கெட்ட அரசியல் மாய்ப்போம்! தகதிமிதோம்! தகதிமிதோம்! விரைவினில் மாற்றம் காண்போம், மிகமிகும் மனதின் சீற்றங்களால், சுகம்மிகும் மாற்றம் காண்போம்! தவறென்று தெரிந்தும் திருந்தாத, துரியோ தனகுணத் தலைவர்களும், துச்சா தனகுணத் தடியர்களும், தமிழன்னை மடியில் கைவைத்து, துகிலினை உரித்துத் தெருவில் நிறுத்தி, தொடைதட்டிப் பங்கம் செய்யும் பொழுதும், தலைகுத்தி நின்றால் தாரணி பழிக்கும்! தமிழன்னை சாபம் நம்மை அழிக்கும்! தகதிமிதோம்! தகதிமிதோம்! தீந்தமிழ் நாட்டைக் காப்போம், நெருப்புடன் மோதும்…

இப்படியும் உண்டோ? -தமிழ்சிவா

இப்படியும் உண்டோ?   எங்கள் ஊரில் கடற்கரைக் குதிரைக்கு இலையாய் இறக்கை முளைக்கும், நட்பே! உங்கள் ஊரில் அப்படி உண்டா? எங்கள் நாட்டில் பேய்மழை பெய்தால் ஏரியைத் திறந்து விட்டுக் கொள்(ல்)வோம் உங்கள் நாட்டில் இப்படி உதவலுண்டா? வண்டி வண்டியாய்த் த(வ)ந்த பொருளின்மேல் வருத்தமே படாமல் படத்தை ஒட்டுவோம் பச்சைக் குழந்தைக்கும் பச்சை குத்துவோம் தேரின் சக்கரத்தில் விழுந்த கன்றாய் ‘காரின்’ சக்கரத்திலும் விழுவோம் நன்றாய் இருக்கும் திசைநோக்கி இங்கிருந்தே வணங்குவோம் சிரிக்கும் குழந்தையாய் எரிக்கும் வெயிலை ஏற்று செத்துப் போவதையும் சிரமேற் கொள்வோம்!…

நெளவிய ஆட்சி நலமுடன் மலரும்! – சச்சிதானந்தம் தெய்வசிகாமணி

நெளவிய ஆட்சி நலமுடன் மலரும்!   ஒவ்வொரு முறையும் இம்முறை யாவது, செவ்விய நல்லாட்சி அமையும் என்றெண்ணி, இங்கொரு முறையும் அங்கொரு முறையும், அவ்விய வாக்கினை அளித்து ஏமாந்து, கவ்விய இருளில் கலங்கும் தமிழா! செந்தமி ழுணர்வுடன் தமிழர் ஒன்றாகி, ஒன்றுக்குப் பலமுறை சிந்தித்து வாக்கினை, இம்முறை சரியாய் அளித்தால் உடனே, நெளவிய ஆட்சி நலமுடன் மலரும்! [நௌவிய = நவ்விய  = அழகிய] சச்சிதானந்தம் தெய்வசிகாமணி

துளிப்பாக்கள் – தமிழ் சிவா

துளிப்பாக்கள்   வற்றாது ஓடும் இளைஞர்கள் சங்கமிக்கும் கூவம் மதுக்கடை!   துருத்தி நின்றன எலும்புகள் இறந்து கிடந்தது ஆறு!   நச்சு நாசியைப் பிளக்க கலங்கிக் கையற்று நின்றது காற்று!   குடிசைக்குள் புகுந்த அமைச்சர் கண்கலங்கினார் அடுப்புப்புகை!   அடுத்த அறிவிப்பு மதுக் கடையிலேயே இறப்பவர்க்குப் பிதைக்கப் பணம் இலவசம்!   எந்தக் கடவுளிடமும் சிறைமீட்க வேண்டுமென்று யாகம் நடத்துவதில்லை ஐந்தறிவுகள்!   வழக்கில் தோல்வி பயந்து வாழ்ந்தன பேருந்துகள்!   காக்கும் கடவுள் உடைந்து போனார் தீர்ப்பு நாளன்று!  …

பயனில்லாரைத் தெரிவது தொல்லை! – கெர்சோம் செல்லையா

பயனில்லாரைத் தெரிவது தொல்லை! ஏழ்மை ஒழிப்பே நோக்கு என்பார்; ஏழையை ஒழிக்கவே நோக்குகின்றார்! ஊழல் இல்லா ஆட்சி என்பார்; ஊதிப் பெருக்கவே ஆளுகின்றார்! வாழ வைக்கும் தலைவரும் இல்லை; வறுமையை ஒழிக்கும் தலையும் இல்லை! பாழாய்ப் போனது தேர்தல் இல்லை; பயனில்லாரைத் தெரிவதே தொல்லை! -கெர்சோம் செல்லையா

மத்திய அரசின் சான்றிதழ் வழங்கும் விழா

மத்திய அரசின்  சான்றிதழ் வழங்கும் விழா தேவகோட்டை தேவகோட்டைபெருந்தலைவர் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு மத்திய அரசின் சான்றிதழ்கள் வழங்கும் விழா நடைபெற்றது. தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக அனைருக்கும் மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. விழாவில் 8 ஆம் வகுப்பு மாணவர் சௌமியா  வரவேற்புரை வழங்கினார். தலைமை ஆசிரியர் இலெ .சொக்கலிங்கம் விழாவிற்குத் தலைமை தங்கினார்.   மாநில அளவில் தேசிய ஆற்றல் துறை சார்பாகத் “தேசிய எரிசக்தி சேமிப்பு விழிப்புணர்வு” என்ற தலைப்பில் நடைபெற்ற ஓவியப் போட்டியில்…