வைரத்தமிழர் க.தமிழமல்லன் வாழியவே!

  உலகத்தமிழ்ப்பண்பாட்டு இயக்க மாநாடு புதுச்சேரியில்தி.பி.2047, தைத்திங்கள்(சுறவத்திங்கள்) 2, 3 (16,17.01.2016)ஆகிய நாள்களில் வேல்.சொக்கநாதன் திருமணநிலையத்தில் நடைபெற்றது.   அதில் முனைவர் க.தமிழமல்லனுக்கு வைரத்தமிழர்  என்னும் விருது வழங்கப்பெற்றது.    படத்தில் அவ்விருதை புதுச்சேரி முதல்வர் ந.அரங்கசாமி  முனைவர் க.தமிழமல்லனுக்கு  வழங்கும் காட்சி இடம் பெற்றுள்ளது.   படத்தில் பாரிவேந்தர், இராதாகிருட்டிணன் நா.ம.உ,சேனாதிராசா, நா.ம.உ (இலங்கை)ஆகியோரும் இருக்கின்றனர்.

தேசிய இளைஞர் நாள் விழா, தேவகோட்டை

தேசிய இளைஞர் நாள் விழா பாவை விழா ஒப்பித்தல் போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற மாணவிக்குப் பாராட்டு.   தனியார் பள்ளி மாணவர்களுடன் போட்டி போட்டு அரசு உதவி பெறும் பள்ளியின் முதல் வகுப்பு மாணவி மாவட்ட அளவில் முதலிடம்  தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தேசிய இளைஞர் நாள் விழா நடைபெற்றது. இதனில் பாவை விழா ஒப்பித்தல் போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற முதல் வகுப்பு மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.    விழாவிற்கு வந்தவர்களை மாணவி சுமித்ரா…

மக்கள்கல்வி பறைசாற்றம்

  மக்கள்கல்வி பறைசாற்றம் பிப்பிரவரி கடைசி வாரத்தில் சென்னையில் ஊடகவியலாளர் மன்றத்தில் வெளியிடப்பட உள்ளது. இதில் முன்வைக்கவேண்டிய கல்விக் கோரிக்கைகளை பிப்பிரவரி 10 ஆம் நாளுக்கு முன்பாக அனுப்பி வைக்குமாறு அனைவரையும் கோருகிறோம். தொடர்புக்கு: 9965128135, 9487995084 மின்னஞ்சல்: kalvimk@gmail.com , moorthy.teach@gmail.com கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு

ஆரியநெறிகளின் மாறுபாடுகளைக் காட்டவே திருக்குறள் உண்டாக்கப்பட்டது! – பெரியார்

ஆரியநெறிகளின் மாறுபாடுகளைக் காட்டவே திருக்குறள் உண்டாக்கப்பட்டது!   ஆரியக்கலை, பண்பு, ஒழுக்கம், நெறி முதலியவையாவும் பெரிதும் தமிழர்களுடைய கலை, பண்பு, நெறி, ஒழுக்கம் முதலியவற்றிற்குத் தலைகீழ் மாறுபட்டதென்பதும், அம்மாறுபாடுகளைக் காட்டவே சிறப்பாகக் குறள் உண்டாக்கப்பட்டது என்பதும் எனது உறுதியான கருத்தாகும். –தந்தை பெரியார் ஈ. வே. இராமசாமி

திருக்குறளின்படி ஒழுகுங்கள்! – திரு.வி.க.

திருக்குறளின்படி ஒழுகுங்கள்! தமிழ்நாட்டுச் செல்வர்களே! நீங்கள் பிறந்த நாடு, திருவள்ளுவர் பிறந்தநாடு. அப்பெரியார் நூல் உங்கள் கையில் விளங்குகிறது. அதுவே உங்களுக்கு உரிமை கொடுக்குங் கருவி. அதை ஓதுங்கள்; அதன்படி ஒழுகுங்கள்; ஒத்துழையாமையின் பொருளை ஓருங்கள். ஐம்பெரும் பாவத்துடன் ஒத்துழையாமை என்பதே அதன் பொருள். விரிந்து பரந்த நாடுகளை ஆளும் முறையில் ஐந்து பாவங்கள் புத்த பூர்வமாகவோ அபுத்தி பூர்வமாகவோ நிகழ்ந்துவிடும். ஆதலால், அப்பாவங்கள் நிகழாதவாறு காத்துக்கொள்ளும் கிராம ஆட்சியைபழைய கிராமப் பஞ்சாயத்தை தொழிலாளர் ஆட்சியை பொருளில் பிறந்து, அறத்தில் அமர்ந்து, இன்பத்தை ஈந்து,…

சிங்கப்பூரில் அண்ணா வாசகர் அறிவகம் தொடக்கம்

உலகத் தமிழருக்கு உறவாக விளங்கியவர், பேரறிஞர் அண்ணா அவர்கள். அவர்களின் நிணைவாக ‘அண்ணா வாசகர் அறிவகம்’  தை 24, 2047 / 7.2.2016 ஞாயிற்றுக்கிழமை இரவு 7:30மணியளவில் , தமிழர்பேரவை பன்னோக்குக் கூட்டுறவுக் கழக பணிமனையில் #02-19 , சிராங்கூன் தேக்கா குட்டி இந்தியா வணிக வளாகத்தில் தோற்றுவிக்கப்பட்டது.   அறிஞர் அண்ணாவின், இலக்கியப் பங்களிப்பில் ஆர்வம் கொண்டுள்ள நண்பர்களால் உருவானதுதான்  ‘அண்ணா வாசகர் அறிவகம்’.  கவிதை, கதை, கட்டுரை வழியாக, கன்னித் தமிழின் சுவையைப் பரப்புதல், பேசுதல், படைத்தல் என்பதே இதன் நோக்கமாகும்….

குறள்நெறிப்படி முதாயத்தை நிறுவிட வேண்டும் – சோமசுந்தர பாரதியார்

  குறள்நெறிப்படி சாதி சமயமற்ற சமுதாயத்தை நிறுவிட முன்வரவேண்டும்   2000 வருடங்களுக்கு முன்னர்த் தமிழகத்தில் இருந்தவற்றையும், இனி இருக்க வேண்டியவற்றையும் வள்ளுவர் குறளில் கூறியுள்ளார். குறள்நெறி தமிழகத்தில் பரவிடும் நேரத்திப், பிறர் தந்த கலைக்கும் பண்பாட்டிற்கும் இடம் கொடுத்ததின் காரணமாகத் தமிழர் மாண்புகள் நாசமாகி விட்டன. இன்று தமிழர், குறள்நெறியைப் போற்றிடும் காலம் வந்துள்ளது.   குறள் நெறியுடன் வாழ்ந்த தமிழரை, சமுதாயத்தின் நச்சுப்பூச்சிகள் என்று கூறியவர் எவர்? ஏன் தமிழர் சமுதாயம் சீர்கெட்டது? இன்று மீண்டும் குறள் நெறிப்படி சாதி, சமய…

முருகதாசனின் 7 ஆம் ஆண்டு நினைவு, பிரித்தானியா

“ஈகைப்பேரொளி” முருகதாசனின் 7 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு பிரித்தானியா   உலகத்தேயத்திடம் தமிழர்களுக்கான நீதியைக்கேட்டு ஈகத்தின் உச்சமாய் தன்னையே தீக்கு இரையாக்கி வீரமரணமடைந்த “ஈகைப்பேரொளி” முருகதாசனின் 7 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு பிரித்தானியாவில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு ஏற்பாட்டில் மாசி 17, 2047 / 28.02.2016 அன்று இலண்டனில் காலிண்டேல் நகரில் (St Matthias church, Rush-grove Avenue, Colindale, Landon Nw9 6QY என்னும் இடத்தில்) நடை பெற உள்ளது.  புலம்பெயர் தேசத்தில் புதிய புரட்சிக்கு வித்திட்டு வீரமரணத்தைத்…

திருக்குறள் தமிழ் மக்களின் வாழ்க்கைச் சட்டம் – புலவர் குழந்தை

திருக்குறள் தமிழ் மக்களின் வாழ்க்கைச் சட்டம்  திருக்குறள் ஒரு தனித்தமிழ் நூல். திருக்குறள் அயற்கொள்கை எதிர்ப்பு நூலேயன்றி எந்த ஓர் அயற்கொள்கையையும் உடன்பட்டுக் கூறும் நூலன்று. தமிழர் வாழ்வே திருக்குறள். திருக்குறளே தமிழர் வாழ்வு என்னும் அவ்வளவு இன்றியமையாச் சிறப்பினையுடைய நூல் திருக்குறள்; உள்ளதை உள்ளபடியே உயரிய முறையில் எடுத்துரைக்கும் உண்மை நூல். தமிழர் வாழ்வின் படப்பிடிப்பு! பழந்தமிழர் நாகரிக நல்வாழ்வை அப்படியே நமக்குக் காட்டும் களங்கமற்ற காலக் கண்ணாடி! தொன்மையும் எதிர்மையும் ஒருங்காய்க் காட்டும் தொலை நோக்காடி! தமிழ் மக்களின் வாழ்க்கைச் சட்டம்!…

தேசிய வாக்காளர் நாள் விழா, தேவகோட்டை

தேவகோட்டை பள்ளியில் மாணவர்களுடன் சார் ஆட்சியர் கலந்துரையாடல்   சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற தேசிய வாக்காளர் நாள் விழா கொண்டாட்டத்தில் 100 விழுக்காடு வாக்களிக்க ஆவன செய்வதே தேசிய வாக்காளர் நாளின் நோக்கம் எனத் தேவகோட்டை சார் ஆட்சியர் பேசினார்.      சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளியில் தேசிய வாக்காளர் நாள் விழா கொண்டாடப்பட்டது. பள்ளியின் தலைமையாசிரியர் இலெ. சொக்கலிங்கம் விழாவில் கலந்துகொண்டோரை வரவேற்றார். தேவகோட்டை சார் ஆட்சியர் மரு.ஆல்பி…

இயற்கையோடு அறிவியலுக்கு ஒப்ப இயைந்ததே திருக்குறள்! – பெரியார்

இயற்கையோடு அறிவியலுக்கு ஒப்ப இயைந்ததே திருக்குறள்!  திருக்குறளை மெச்சுகிறார்களே ஒழிய காரியத்தில் அதை மலந்துடைக்கும் துண்டுக் காகிதமாகவே மக்கள் கருதுகிறார்கள். அதோடு அதற்கு நேர்மாறாக விரோதமான கீதையைப் போற்றுகிறார்கள்.  அறிவால் உய்த்துணர்ந்து ஒப்புக் கொள்ளக் கூடியனவும் இயற்கையோடு விஞ்ஞானத்துக்கு ஒப்ப இயைந்திருக்கக் கூடியனவும் ஆன கருத்துக்களையே கொண்டு இயங்குகிறது வள்ளுவர் குறள். தந்தை பெரியார் ஈ வே. இராமசாமி

தமிழன்னையே! பொறுத்தருள்! – கவிக்கோ ஞானச்செல்வன்

வாழிதமிழ் அன்னை வாழி! உளத்தினில் இனிப்பவள் உயிரினுள் தழைப்பவள் உழைப்பினில் சிரித்து நிற்பாள்! உலகினர் மகிழவே உயர்தனிச் செம்மொழி உருவுடன் இலங்கு கின்றாள்! வளத்தினில் நிகரிலள் வாழ்வினைத் தருபவள் வடிவினில் கன்னி யாவாள் வற்றாத நூற்கடல் வளர்புகழ் கொண்டனள் வாழிதமிழ் அன்னை வாழி! களத்தினில் வெற்றியே கண்டனள் தமிழர்தம் கருத்தினுள் நிறைவு பெற்றாள்! கனவுகள் ஆயிரம் கற்பனைப் பாயிரம் காணவே அருளு கின்றாள்! குளத்தினில் தாமரை கோடுயர் இமாலயம் குன்றாத புகழில் வானம்! குலவுதமிழ் அன்னையே குறைகளைப் பொறுத்தருள் கூட்டுவாய் வாழி நாளும்! [1980…