குழந்தைகளின் மனவுலகத்திற்குள் சென்று எழுதுக! – கவிஞர் முருகேசு

குழந்தைகளின் மனவுலகத்திற்குள் சென்று கதை எழுதுவதே          ஒரு படைப்பாளிக்கு அறைகூவலான பணியாகும்  குழந்தைகள் கதை நூல் வெளியீட்டு விழாவில்  கவிஞர் முருகேசு   வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு ஊரில் அகநி வெளியீட்டகத்தின் சார்பில் நடைபெற்ற குழந்தைகள் கதை நூல் வெளியீட்டு விழாவில், குழந்தைகளின் மனவுலகத்திற்குள் சென்று கதை எழுதுவதே ஒரு படைப்பாளிக்கு அறைகூவலான பணியாகும் என்று நூலாசிரியர் கவிஞர் மு.முருகேசு பேசினார்.    இவ்விழாவிற்கு இராமலிங்கம்& குழும உரிமையாளர் இரா.சிவக்குமார் தலைமையேற்றார். தேசூர் மு.சீவா அனைவரையும் வரவேற்றார். வந்தவாசி கிளை நூலகர் கு.இரா.பழனி,…

சென்னைக் கம்பன் கழகத்தின் தமிழ்க் கூடல்

அன்புடையீர் வணக்கம். சென்னைக் கம்பன் கழகத்தின் தமிழ்க் கூடல் தனிப்பாடல் வரிசையில்  தை 26, 2047 / 09-02-2016 அன்று   ‘குமரகுருபரர்’ பற்றி சிறப்புரையாற்ற இருப்பவர் முனைவர் தெ. ஞானசுந்தரம். ‘சிவதனுசு’ பற்றி சிற்றுரை ஆற்ற இருப்பவர் செல்வி  அனுகிரகா ஆதிபகவன். ‘தமிழ்நிதி’ விருது பெறுபவர் முனைவர் இரா. நாராயணன். உறவும் நட்புமாய் வருகை தந்து நிகழ்ச்சியைச் சிறப்பிக்க வேண்டுகிறோம். என்றென்றும் அன்புடன் இலக்கியவீதி இனியவன்.

திருவள்ளுவப் பெயர்க்காரணம்: மு.இராகவையங்கார்

திருவள்ளுவப் பெயர்க்காரணம்: திருவள்ளுவர் என்று இவர் பெயர். பிறந்த குலம்பற்றி இவர்க்கு வழங்குவதென்று கூறுவர். வள்ளுவர் என்ற குடியினர் தாழ்குலத்த¬வ¬ருள் ஒருவராய், விசேட காலங்களிலே அரசாணையை முரசறைந்து சாற்றுவோர் என்பது முன்னூல்களால் அறியப்படுகின்றது. சோதிட நூல்வல்ல நிமித்தகராகவும் பண்டைக்காலத்தே இவர் விளங்கினர் (சீவக.419). சங்கக் காலத்தே தமிழ் நாட்டவருள் சாதிபற்றிய இழிவும் அதன் மூலம் அருவருப்பும் இப்போதுள்ளனபோல இருந்தனவல்ல. தமிழ் வேந்தர்களும் தலைவர்களும் பாணர் முதலிய தாழ்குலத்தவர்களை அவரது கல்வியறிவு முதலியன பற்றி எவ்வளவு சிறப்பாகக் கௌரவித்து வந்தனரென்பதற்குச் சங்கச் செய்யுட்களே தக்க சான்றாக…

வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து – செயராமர்

வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து .. வள்ளுவன் தன்னையுலகினுக்கே தந்துவான்புகழ் கொண்டநாடென தெள்ளுதமிழ் கொண்டு செப்பிநின்றான் பாரதியும் அள்ளவள்ளக் குறையாத அமுதமாம் சுரங்கமென வள்ளுவரின் குறளெமக்கு வாய்த்தெல்லோ விருக்கிறது ! பாவளவில் குறுகிடினும் பாரெல்லாம் பயனுறவே நீழ்கருத்தைச் சொல்லியதால் நிமிர்ந்துகுறள் நிற்கிறது யார்மனதும் நோகாமல் நல்லதெலாம் சொல்லுவதால் பார்முழுக்க உள்ளாரும் பார்க்கின்றார் வள்ளுவத்தை ! சமயமெலாம் கடந்துநிற்கும் சன்மார்க்க நூலெனவே இமயமென இருக்கிறது எங்களது திருக்குறளும் சமயமெலாம் கடந்தாலும் தங்களது நூலெனவே மனமாரக் கொண்டாடி மதித்திடுவார் திருக்குறளை ! அறம்பற்றிச் சொன்னாலும் அழகாகச் சொல்கிறது…

மொழியாக்க அறிஞர் அ.தட்சிணாமூர்த்தி – ஈரநிலா

   புரட்டாசி 22, 1968 / 1937 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஏழாம் நாள், மன்னார்குடி அருகில் இருக்கும், திருவாரூர் மாவட்டத்தைச்சேர்ந்த  நெடுவாக்கோட்டை எனும் ஊரில் வேளாண்பெருமக்கள் அய்யாசாமி–இராசம்மாள் இணையருக்கு, முனைவர். அ. தட்சிணாமூர்த்தி கடைசி மகனாய்ப் பிறந்தார். படிப்புவாசனையே இல்லாதவராயிருந்தும், தன் மகனின் அறிவுத்திறனை அடையாளம் கண்டுகொண்டதந்தை, கடும் இன்னல்களுக்கிடையிலும் தன் மகனைப் படிக்கவைப்பதில் உறுதியாயிருந்தார். பாதங்கள் பழுக்கப்பழுக்க நெடுந்தொலைவு பள்ளிக்கு நடந்துசென்று, மண்ணெண்ணெய் விளக்கின் ஒளியில் பயின்று, பள்ளிப்படிப்பை முடித்தவர், தமிழ்மொழியின்மேல் உண்டான அளவிலா அன்பினால் அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவனானார்….

மொழி பெயர்ப்போம்! – அருணகிரி

மொழி பெயர்ப்போம்!  உலகப் புகழ் பெற்ற எண்ணற்ற நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டுத் தமிழில் வெளிவந்து உள்ளன. அதன் வழியாகப் புதிய கருத்துகள் தமிழகத்தில் பரவி இருக்கின்றன. எடுத்துக்காட்டாக, கடந்த நூற்றாண்டின் முற்பகுதியில் மாசுகோ முன்னேற்றப்பதிப்பகம் தொடர்ந்து பதிப்பித்து வந்த நூற்றுக்கணக்கான மொழிபெயர்ப்பு நூல்கள்தாம் இந்தியாவிலும் தமிழகத்திலும் பொது உடைமை இயக்கத்தின் கருத்துப் பரவலுக்குப் பெருமளவில் உதவின. அத்துடன், அவற்றைப் படித்த வாசகர்களின் மனங்களில் இரசிய நாட்டின் நில அமைப்பு, மக்களின் வாழ்க்கை முறைகள்,  தொழிலாளர்கள் போராட்டங்களைப் பற்றிய விவரங்களைப் பசுமரத்து ஆணி போலப் பதியச் செய்து விட்டன. அப்படி உருவான பல…

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 19: ம. இராமச்சந்திரன்

(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 18 தொடர்ச்சி) 19   தெய்வப் புலவர் திருவள்ளுவர் கூறிய மருத்துவர்க்கு அமைய வேண்டிய குணங்கள் (இலக்கணங்கள்) பலவும் வாய்க்கப் பெற்றவர் மருந்துவ அறிஞர் இராமச்சந்திரன். ‘           நோய்நாடி நோய்முதல் நாடி அது தணிக்கும்             வாய்நாடி வாய்ப்பச் செயல்’ 39 ‘           உற்றான் அளவும் பிணியளவும் காலமும்             கற்றான் கருதிச் சொல்’ 40 ‘           உற்றவன் தீர்ப்பான் மருந்துஉழைச் செல்வானென்று             அப்பாலநாற் கூற்றே மருந்து’ 41 மருத்துவ முறைகளைக் கற்ற மருத்துவன், நோயாளியின்…

அரசியல் அதிர்வலை ஏற்படுத்திய மக்கள்நலக்கூட்டணி மாநாடு!

[படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.] அரசியல் அதிர்வலை ஏற்படுத்திய மக்கள்நலக்கூட்டணி மாநாடு!   மதுரை மக்களுக்கு அங்கே ஓர் அரசியல் மாநாடு நடைபெறும் என்ற அறிகுறியே காணப்படவில்லை. மதுரைத் தெருக்களை அணிசெய்தவை திருமலை நாயக்கர் விழா, தொடர்பான அம்மாவிற்கு நன்றி அறிவிப்பு. அழகிரியின் பிறந்தநாள், தாலின் வருகை முதலான சுவரொட்டிகளே! இருநாள் முன்னர் நடைபெற்ற தமிழ்த்தேசியப்பேரியக்கத்தின் மொழிப்போர் 50 மாநாடு பற்றிய 1000 சுவரொட்டிகள் இருந்த இடம் தெரியா அளவிற்கு மேற்குறித்த சுவரொட்டிகள்தாம் இருந்தன. அதுபோல், மதுரையில் மக்கள் நலக்கூட்டணி மாநாடு 26 /…

மக்கள்நலக்கூட்டணியின் மதுரை மாநாட்டுப் படங்கள் – முதல் பகுதி

12.01.2047 / 26.01.2016 (படங்களை அழுத்திப் பெரிதாகக் காண்க.) காண்க : – மக்கள்நலக்கூட்டணியின் மாநாட்டு ஒளிப்படங்கள் – பகுதி 2

பேரறிஞர் அண்ணா நினைவு நாளில் பேரா.மறைமலை வானொலி உரை

பேரறிஞர் அண்ணா நினைவு நாளில் பேரா.மறைமலை வானொலி உரை பேரறிஞர் அண்ணா  நினைவுநாளை முன்னிட்டுத் தை 20, 2047 / பிப்.03,2016 அன்று  இரவு 7.00 மணிக்கு – சென்னை, மதுரை,  திருச்சி, கோவை, திருநெல்வேலி முதலிய – அனைத்துத் தமிழக  வானொலி நிலையங்களிலும் பேரா.முனைவர் இலக்குவனார் மறைமலை நினைவுரை ஒலிபரப்பாகிறது.