எல்லாம் தமிழ்நிலமே! – இலக்குவனார் திருவள்ளுவன்

எல்லாம் தமிழ்நிலமே! குறுஞ்செய்திகள் சில.   புறநானூற்று 6ஆம் 17ஆம் பாடல்களில் தமிழகத்தின் எல்லை வடக்கே பனிமலையாம் இமயமலை என்றும் தெற்கே குமரி என்றும் குறிப்பிடுகின்றன. இந்தியத் துணைக்கண்டம் முழுமையும் தமிழ்நிலமே என்னும் பொழுது இதன் ஒரு பகுதியாகிய கருநாடக மாநிலமும் தமிழ் நிலமே.   ஊர் என்ற பின்னொட்டும் தமிழுக்குரியதே. எனவே, மைசூர், பெங்களூர், மங்களூர், பிசப்பூர், சிக்மகளூர் எனக் கருநாடகத்தில் அமைந்துள்ள பல ஊர்களும் அவை தமிழ்ப்பகுதியாக விளங்கியமைக்குச் சான்றாகும்.   எருமையூர் எனத் தமிழ் மன்னர்களால் ஆளப்பட்ட தமிழர் வாழ்ந்த…

இலக்குவனார் கருத்தரங்க நூல் அறிமுகம் – ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றம்

‘பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள்’ நூலறிமுக விழா   பரபரப்பு நிறைந்த சென்னை பாரிமுனைப்பகுதியில் உயர்நீதி மன்றத்தின் எதிரே உள்ள 125 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒய்.எம்.சி.ஏ. கட்டடித்தினுள்     அமைந்துள்ள “ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்ற அரங்கம் தமிழறிஞர்கள், தமிழ்ப் போராசிரியர்கள், தமிழ் ஆர்வலர்கள் என நிறைந்து காணப்பட்டது.   காரணம், தமிழ்ப் பேரறிஞர், திருக்குறள், தொல்காப்பியங்களின்   உரைநடை நூல்கள் படைத்தவர், மொழி பெயர்ப்பாளர், மொழிப் போராட்ட ஈகையாளர், கவிஞர், இதழியலாளர், இத்தனை சிறப்புகளுக்கும் உரியவரும், தமிழ்மொழி வளர்ச்சிக்கு அரும்பெரும் தொண்டாற்றியவருமான பெருமகனார் மறைந்த பேராசிரியர் சி. இலக்குவனார்…

வரிவடிவப் பொருண்மையை நீக்கக் கணித்தமிழ்ச்சங்கத்திற்கு வேண்டுகோள்.

வரிவடிவப் பொருண்மையை நீக்கக் கணித்தமிழ்ச்சங்கத்திற்கு வேண்டுகோள்.   தமிழ் எழுத்துருவியல் கருத்தரங்கம் நடத்தும் கணித்தமிழ்ச்சங்கத்தின் முயற்சி பெரிதும் பாராட்டிற்குரியது. இப்பொருண்மையிலான கருத்தரங்கம், இந்தியத் துணைக்கண்ட மொழிகளுள் முதலில்  தமிழில் நடத்துவது மகிழ்ச்சிக்குரியது. ஆனால், நெடுங்கணக்கில் இடம் பெறும் எழுத்துகளை வடிவமைப்புத் தோற்றத்திற்காக வெவ்வேறு வகையில் தரப்படும் எழுத்துருக்களைப் பற்றித்தான் இதன் ஆய்வு இருக்க வேண்டும். முன்னரே உத்தமம், கணித்தமிழ்ச்சங்கம் போன்ற கணிணி சார் அமைப்புகள் தமிழ் மொழி சார் ஆய்வில் ஈடுபட்டுத் தவறான கருத்துகளை ஊன்ற முயல்வது தவறெனச் சுட்டிக்காட்டியுள்ளோம். ஆனால், கருத்தரங்கத்தின் முதல்…

திருக்குறளி்ல் கலைச்சொற்கள் 1 – இலக்குவனார் திருவள்ளுவன்

1   இன்றைய கலைச்சொற்கள் பெரும்பான்மையன சங்க இலக்கியச் சொற்கள் அல்லது சங்க இலக்கியச் சொற்களின் மறுவடிவங்களாகத்தான் உள்ளன. அந்த வகையில் சங்க இலக்கியக் காலத்தைச் சேர்ந்தது எனக் கருதப்பட வேண்டிய திருக்குறளில் உள்ள கலைச்சொற்கள் பலவும் இன்றும் நடைமுறையில் உள்ளன. திருக்குறளில் உள்ள சொற்கள் பிற சங்க இலக்கியங்களில் இடம் பெற்ற சொற்களாக அமைவன; பிற சங்க இலக்கியங்களில் இடம் பெறாவிட்டாலும் அக்காலமாக இருக்கக்கூடிய சொற்கள் (இவற்றிற்கு ஆதாரம் கிடையாது.); புதிய சொற்கள் என மூவகைப்படும். இங்கு நாம் திருக்குறளில் இடம் பெற்றுள்ள…

முத்தமிழ் கற்றால் போதுமே! – குதம்பைச்சித்தர்

முத்தமிழ் கற்றால் போதுமே முத்தமிழ்கற்று முயங்குமெய்ஞ்ஞானிக்குச் சத்தங்களேதுக்கடி– குதம்பாய் சத்தங்களேதுக்கடி அல்லவைநீக்கி யறிவோடிருப்பார்க்குப் பத்தியமேதுக்கடி– குதம்பாய் பத்தியமேதுக்கடி தாவாரமில்லை தனக்கொரு வீடில்லை தேவாரமேதுக்கடி குதம்பாய் தேவாரமேதுக்கடி. – குதம்பைச்சித்தர்

பல்லாயிரம் அண்டமும் நின்படைப்பே! – பத்திரகிரியார்

பத்திரகிரியாரின் மெய்ஞ்ஞானப் புலம்பல் இன்றுளோர்நாளை யிருப்பதுவும் பொய்யெனவே மன்றுளோர் சொல்லும் வகையறிவ தெல்லாம் (35) நீரிற்குமிழிபோல் நிலையற்ற வாழ்வை விட்டுன் பேரிற்கருணை வெள்ளம் பெருக்கெடுப்ப தெக்காலம் (63) அன்பையுருக்கி யறிவையதன் மேற்புகட்டித் துன்பவலைபாசத் தொடக்கறுப்ப தெக்காலம் (64) பல்லாயிரங் கோடிப் பகிரண்டமுன் படைப்பே அல்லாது வேறில்லையென் றறிவதுஇனி யெக்காலம் (154) சாத்திரத்தைச் சுட்டுச் சதுர்மறையைப் பொய்யாக்கிச் சூத்திரத்தைக் கண்டு துயரறுப்ப தெக்காலம் (156) –  பத்திரகிரியார்

சாதிகுலம் எங்கட் கில்லை! – காகபுசுண்டர்

  சாதி பேதஞ் சொல்லுவான்  சுருண்டு போவான்! காணப்பா சாதிகுலம் எங்கட் கில்லை; கருத்துடனே என்குலஞ்சுக் குலந்தான் மைந்தா! தோணப்பா தோணாமற் சாதி பேதஞ் சொல்லுவான் சுருக்கமாய், சுருண்டு போவான்; வீணப்பா பிரமத்தில் ஆதி காலம் வீரமுடன் பிறந்ததடா உயிர்க ளெல்லாம்; நானப்பா அப்படியே உதித்தேன் முன்னே; நன்றாக வுதித்தவிடம் நாடி னேனே. -காகபுசுண்டர்

தமிழ் எழுத்துருவியல் கருத்தரங்கம் 2015 : அறிவிப்பு 3

பதிவு விவரம்   கணித்தமிழ்ச் சங்கம் சார்பில் வருகிற புரட்டாசி 30 – ஐப்பசி 01, 2046 / அக்டோபர் 17 18 நாள்களில் தமிழ் இணையக் கல்விக் கழகத்தில் நடைபெற உள்ள ‘தமிழ் எழுத்துருவியல் கருத்தரங்கத்திற்கான பதிவு’ கணித்தமிழ்ச் சங்கத்தின் இணையத்தளத்தில் (www.kanithamizh.in)   தொடங்கப்பட்டுள்ளது. பதிவுப்படிவம் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அனுப்பலாம் தமிழ் வரிவடிவ வரலாற்றில் நடைபெறும் முதல் கருத்தரங்கு இது. இதில் தமிழ் எழுத்துருக்களை வடிவமைத்துள்ள தொழில்நுட்ப வல்லுநர்களும், இந்தியத் தொழில்நுட்பக் கழகங்களின் (IIT) வடிவமைப்புப் பிரிவுகளில் பணிபுரியும் பேராசிரியர்கள்,…

திருக்குறள் அறுசொல் உரை – 067. வினைத் திட்பம் : வெ. அரங்கராசன்

(அதிகாரம் 066. வினைத் தூய்மை  தொடர்ச்சி) 02. பொருள் பால்    06. அமைச்சு இயல் அதிகாரம் 067. வினைத் திட்பம்     செயல்வெற்றிக்கு மிகவும் தேவையான            செயல்உறுதி மேலாண்மைத் திறன்இயல்   வினைத்திட்பம் என்ப(து), ஒருவன் மனத்திட்பம்;      மற்றய எல்லாம் பிற.           செயல்உறுதி என்பது மனஉறுதி;         மற்றவை, எல்லாம் வேறு.             ஊ(று)ஒரால், உற்றபின் ஒல்காமை, இவ்இரண்டின்     ஆ(று)என்பர் ஆய்ந்தவர் கோள்.           வரும்முன் காத்தலும், வந்தபின்         தளராமையும் ஆய்வாளர் கொள்கை.   கடைக்கொட்கச், செய்தக்க(து) ஆண்மை; இடைக்கொட்கின்,…

திருக்குறள் அறுசொல் உரை – 068. வினை செயல் வகை : வெ. அரங்கராசன்

(அதிகாரம் 067. வினைத் திட்பம் தொடர்ச்சி) 02. பொருள் பால் 06. அமைச்சு இயல் அதிகாரம்  068. வினை செயல் வகை  தூய செயலை, மனஉறுதியுடன் செய்தற்கு உரிய வழிமுறைகள்   சூழ்ச்சி முடிவு துணி(வு)எய்தல்; அத்துணிவு,      தாழ்ச்சியுள் தங்குதல் தீது.                    ஆழ்ந்தாய்ந்து எடுத்த நல்முடிவைக்,         காலம் தாழ்த்தாது, துணிந்துசெய்.   தூங்குக, தூங்கிச் செயல்பால; தூங்கற்க,      தூங்காது செய்யும் வினை.           செயல்களைப் பொறுத்துக் காலம்         தாழ்த்தியும், தாழ்த்தாதும் செய்க.    ஒல்லும்வாய் எல்லாம் வினைநன்றே; ஒல்லாக்கால்,…

திருக்குறள் அறுசொல் உரை – 066. வினைத்தூய்மை : வெ. அரங்கராசன்

(அதிகாரம் 065. சொல்வன்மை தொடர்ச்சி) 02. பொருள் பால் 06. அமைச்சு இயல் அதிகாரம் 066. வினைத் தூய்மை செயற்பாடுகளில் குற்றம்  குறைகள்  இல்லாமை; தூய்மை உள்ளமை. துணைநலம், ஆக்கம் தரூஉம்; வினைநலம்,      வேண்டிய எல்லாம் தரும்.           நலத்துணை முன்னேற்றத்திற்கு உதவும்;         நலச்செயல் எல்லாமும் தரும்.   என்றும் ஒருவுதல் வேண்டும், புகழொடு      நன்றி பயவா வினை.     புகழோடு, நன்மை தராச்செயலை,         எப்போதும் விலக்கல் வேண்டும்.         ஓஒதல் வேண்டும், ஒளிமாழ்கும் செய்வினை,      ஆஅதும் என்னும் அவர்.   …

திருக்குறள் அறுசொல் உரை – 065. சொல்வன்மை: வெ. அரங்கராசன்

(அதிகாரம் 064. அமைச்சு தொடர்ச்சி) 02. பொருள் பால்        06. அமைச்சு இயல் அதிகாரம் 065. சொல்வன்மை     கேட்பார் உள்ளம் கொள்ளும்படி, சொற்களைச் சொல்லும் வல்லமை.   நாநலம் என்னும் நலன்உடைமை, அந்நலம்,     யாநலத்(து) உள்ளதூஉம் அன்று.           எல்லாத் திறன்களுள்ளும் மிகச்சிறந்த         வெல்திறன் பேச்சுத் திறனே.   ஆக்கமும், கேடும், அதனால் வருதலால்,      காத்(து)ஓம்பல் சொல்லின்கண் சோர்வு.           வளர்ச்சியும், வீழ்ச்சியும், தரும்பேச்சைத்,         தவறு இல்லாது பேசுக.   கேட்டார்ப் பிணிக்கும்…