தமிழ்அறம்பாடி வந்தஅறிஞன் ! – மா.கந்தையா
யார் இவர் ? ! ” தமிழைப் பழித்தவனை என்தாய் தடுத்தாலும் விடேன் எதிரிகள் கோடி இட்டு அழைத்தாலும் தொடேன் “ வஞ்சினம் கூறிய வாதில்புலவன் பாவேந்தர் வழிவந்த மறவன் தமிழ்அறம்பாடி வந்தஅறிஞன் ! சங்கத்துமது ரையில்தமிழைப் பங்கப்படுத்திப் பேசிய ஓங்குபுகழ் அறிஞரெனினும் ஒவ்வாதசொல் லைத்தாங்காது தமிழைப் பழித்தவர்க்கு தக்கறிவூட்டி கருத்தினை உமிழ்ந்து தள்ளியதற்கு ஓர்சான்று உண்டன்றோ ! விடுதலையான நம்நாட்டில் கெடுதலையேதரும் பொருள்நிலையை சடுதில்மாற்றி இந்தியநாடு சமநிலைகாண நிதிஅமைச்சராகவும் சர்ச்சிலொடு வாதிட்டுவென்று ‘சர்பட்டம் ‘ பெற்ற ஆர்….
திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 036. மெய் உணர்தல்
(அதிகாரம் 035. துறவு தொடர்ச்சி) 01.அறத்துப் பால் 03.துறவற இயல் அதிகாரம் 036. மெய் உணர்தல் எப்பொருள் ஆயினும், அப்பொருளின் உண்மையை ஆராய்ந்தும் அறிதல். பொருள்அல்ல வற்றைப், பொருள்என்(று) உணரும், மருளான்ஆம், மாணாப் பிறப்பு. பொய்ப்பொருள்களை, மெய்ப்பொருள்கள் என்று உணர்தல், சிறப்[பு]இல்லாப் பிறப்பு. இருள்நீங்கி, இன்பம் பயக்கும், மருள்நீங்கி, மா(சு)அறு காட்சி யவர்க்கு. மயக்கத்தை நீக்கிய ஞானியார்க்கே, தூயநல் பேர்இன்பம் தோன்றும். ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு, வையத்தின் வானம், நணிய(து) உடைத்து….
திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 035. துறவு
(அதிகாரம் 034. நிலையாமை தொடர்ச்சி) 01.அறத்துப் பால் 03.துறவற இயல் அதிகாரம் 035. துறவு ஆசைகளை எல்லாம் அகற்றிவிட்டு வாழும், தூயநல் அறவாழ்வு. யாதனின், யாதனின், நீங்கியான் நோதல், அதனின், அதனின், இலன். எவ்எவற்றின் பற்றுகளை விடுகிறாரோ, அவ்அவற்றால் துன்பங்கள் இல்லை. வேண்டின்உண் டாகத் துறக்க; துறந்தபின், ஈண்(டு)இயற் பால பல. உயர்மதிப்பு வேண்டித் துறப்பார்க்குச், சமுதாயக் கடைமைகள் பற்பல. அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை; விடல்வேண்டும், வேண்டிய எல்லாம் ஒருங்கு….
திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 034. நிலையாமை
(அதிகாரம் 033. கொல்லாமை தொடர்ச்சி) 01.அறத்துப் பால் 02.துறவற இயல் அதிகாரம் 034. நிலையாமை ‘வாழ்வும், செல்வமும், நிரந்தரம் அல்ல’என ஆராய்ந்தும் உணர்தல். நில்லாத வற்றை, “நிலையின” என்(று),உணரும் புல்அறி(வு) ஆண்மை கடை. நிலைக்காத அவற்றை, ”நிலைக்கும்”என உணரும் அறிவு, கீழ்அறிவு. கூத்தாட்(டு) அவைக்குழாத்(து) அற்றே, பெரும்செல்வம் போக்கும், அதுவிளிந்(து) அற்று. நாடகத்தைப் பார்க்க வருவார், போவார்போல், செல்வமும் வரும்;போம். அற்கா இயல்பிற்றுச் செல்வம்; அதுபெற்றால்,…
திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 033. கொல்லாமை
(அதிகாரம் 032. இன்னா செய்யாமை தொடர்ச்சி) 01. அறத்துப் பால் 03.துறவற இயல் அதிகாரம் 033. கொல்லாமை எவ்உயிரையும் கொல்லாது, எல்லா உயிர்களையும் காப்பாற்றும் கொள்கை அறவினை யா(து)?எனின், கொல்லாமை; கோறல், பிறவினை எல்லாம் தரும். கொல்லாமையே அறச்செயல்; கொல்லுதல், எல்லாத் தீமைகளையும் நல்கும். பகுத்(து)உண்டு, பல்உயிர் ஓம்புதல், நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. பகுத்[து]உண்டு, பல்உயிர்களைக் காத்தல், அறங்களுள் தலைமை அறம். ஒன்(று)ஆக நல்லது, கொல்லாமை; மற்(று),அதன்…
தமிழ் இணையக்கல்விக்கழகம் : நோக்கும் போக்கும் 3 – இலக்குவனார் திருவள்ளுவன்
(ஆவணி 06, 2046 / ஆக.23, 2015 தொடர்ச்சி) 3 ஙா.) குழுக்கள்: குழுக்களில் தமிழறிஞர்களுக்கு இடமில்லை அல்லது மிகச் சிறுபான்மையராக உள்ளனர். பன்னிருவர் உறுப்பினராக உள்ள பொதுக்குழுவிலும் ஒன்பதின்மர் உறுப்பினராக உள்ள இயக்குநர் குழுமக்குழுவிலும் பதவி வழி உறுப்பினர்கள்தாம் உள்ளனர். தமிழறிஞர்கள் இல்லை. பதினொருவர் உறுப்பினராக உள்ள கல்விப் பேரவைக் குழுவில் இருவர் மட்டுமே தமிழறிஞர்கள். ஒன்பதின்மர் உறுப்பினராக உள்ள கைப்பேசி வல்லுநர் குழுவில் ஒருவர்கூடத் தமிழறிஞர் இல்லை. பத்தொன்பதின்மர் உறுப்பினராக உள்ள அறிவுரை(ஆலோசனை) நிலைக் குழுவிலும் தொடக்கத்தில் தமிழறிஞர் இல்லை….
திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 032. இன்னா செய்யாமை
(அதிகாரம் 031. வெகுளாமை தொடர்ச்சி) 01.அறத்துப் பால் 03.துறவற இயல் அதிகாரம் 032. இன்னா செய்யாமை என்றும் எதற்காகவும் எங்கும் எவர்க்கும் எத்துயரும் செய்யாமை. சிறப்(பு)ஈனும், செல்வம் பெறினும், பிறர்க்(கு)இன்னா செய்யாமை, மா(சு)அற்றார் கோள். சிறப்பு தருசெல்வம் பெறுவதற்காக, எவர்க்கும் எத்தீமையும் செய்யாதே. கறுத்(து),இன்னா செய்தவக் கண்ணும், மறுத்(து),இன்னா செய்யாமை, மா(சு)அற்றார் கோள். துன்பத்தைத் தந்தார்க்கும் துன்பத்தைத் தராமையே தூயார்தம் கொள்கை. செய்யாமல், செற்றார்க்கும், இன்னாத…
இளம்பெண்களைச் சிதைக்கும் ‘சுமங்கலித் திட்டம்’
பேராசைப் பசிக்கு இரையாகும் இளம்பெண்கள் தமிழக அரசு தொழிலாளர் நலத்துறையின் அறிக்கைப்படி 38,000 இளம் பெண்கள், தொழிற்சங்கச் சார்பாளர்கள், தொண்டு நிறுவனங்களின் கணக்குப்படி 4 நூறாயிரம் இளம் பெண்கள், ‘சுமங்கலித் திட்டம்’ என்கின்ற பெயரில் அதிக வேலைக்குக் குறைவான சம்பளம், கூடுதல் நேர வேலைக்குக் கூடுதல் சம்பளமின்மை, கட்டயாப்படுத்தி வேலை, தொழிற்சங்க உரிமை மறுப்பு, குறைவான தூக்கம், உடல் சோர்வு, பாலியல் தொந்தரவு போன்ற வன்கொடுமைகளில் வதைக்கப்படுகின்றனர். இன்றைய சூழலில் வேளாண் கூலிகளை விடவும் பஞ்சாலைக் கூலிகள்தான் அதிகளவில் உள்ளனர் என்பது…
இணையக்கல்விக்கழகத்தின் சீர்மையற்ற தேடுபொறிகள் – 5 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஆவணி 06, 2046 / ஆக.23, 2015 தொடர்ச்சி) 5 & 8.] யாப்பருங்கலம் & யாப்பருங்கலக்காரிகை இவற்றுள், பொருளடக்கம் பகுதி மேற்பகுதியில் தேடுதல் தலைப்பின் கீழ்ப், பக்கம் தேடல் பாடல் தேடல் சொல் தேடல் உள்ளன(பட உரு 29). இருப்பினும் உள் பக்கங்களில் ‘சொல் தேடல்’ தலைப்பு இல்லை. பக்க எண் தேடல் மட்டுமே உள்ளது(பட உரு 30). யாப்பருங்கலத்தில். பொருட்குறிப்பகராதி அரும்பதம் முதலியவற்றின் அகராதி சூத்திர முதற்குறிப்பு அகராதி இலக்கண மேற்கோள் முதற்குறிப்பு அகராதி இலக்கிய மேற்கோள் முதற்குறிப்பு அகராதி…
உலக மொழிகளிலும் இந்திய மொழிகளிலும் தமிழ்ச் சொற்கள் ஏராளமாகக் கலந்திருக்கின்றன
ஒரு காலத்தில் தமிழ்ப் பெயர்களை வடமொழிப் பெயராக ஆக்கும் இயக்கம் மும்முரமாக நடைபெற்றிருக்கிறது என்பது தெரியவருகிறது. சைவ வைணவ ஆசிரியர்கள் காலத்தில் நமது திருக்கோயில்கள் தமிழ்ப் பெயராலேயே அழைக்கப்பட்டன. அவை வடமொழிப் பெயர்களாக மாற்றப்பட்டன. திருமரைக்காடு – வேதாரண்யம் என்றும் திருவெண்காடு, ‘சுவேதாரண்யம்’ எனவும் திருவையாறு ‘பஞ்சநதித் தலமாகவும்’ மாறியது. சில மொழி பெயர்ப்புகள் மூலம் வடமொழியினரின் அறியாமையையும் நாம் தெரிந்து கொள்ளலாம். ‘அஞ்சல் நாயகி’ என்னும் அம்பாளுக்கு ‘அபயாம்பிகை’ என்ற பெயர் வடமொழியில் ஏற்பட்டுள்ளது. அஞ்சல் நாயகி…
தொல்காப்பியர் சிலை உருவாக்க ஆய்வு
(சொடுக்கிப் பார்த்தால் பெரிதாகத் தெரியும்.) முதல் நான்கு படங்கள் முனைவர் முகிலை இராசபாண்டியன், இலக்குவனார் திருவள்ளுவன், செந்தமிழ்ச்சித்தன், அரிமா கந்தசாமி, ஆதித்தன் ஆகியோர் ஆவணி 5, 2046 / ஆக.22, 2015 அன்று பார்வையிட்ட பொழுது எடுக்கப்பெற்றவை. அதற்கு முந்தைய பார்வையில் தெரிவித்தவற்றுள் ஆறு நிறைவேற்றப்படாமல் இருந்தன. அவற்றைச் சரி செய்யுமாறு அப்பொழுது தெரிவிக்கப்பட்டது. மேலும் தலைமுடி வழித்துச் சீவப்பட்டதுபோல் அல்லாமல் சற்று எழுந்து வளைந்து செல்வதுபோல் இருக்க வேண்டும் என்று பேரா.முகிலை இராசபாண்டியன் தெரிவித்தார். அவ்வாறே இப்பொழுது அமைந்துள்ளது. முடிவுறும் நிலையில் தொல்காப்பியர்…
திங்கள் பாவரங்கம் 87
ஆவணி14, 2046 /ஆக.31, 2015 மாலை 6.30 மாணவர் பொதுநலத் தொண்டியக்கம் புதுச்சேரி