திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 013. அடக்கம் உடைமை

(அதிகாரம் 012. நடுவு நிலைமை தொடர்ச்சி) 01.அறத்துப் பால்                   02.இல்லற இயல்                 அதிகாரம் 013. அடக்கம் உடைமை      ஐந்து புலன்களையும் அடக்கி,    முந்து நல்வழியில் நடத்தல்.   அடக்கம், அமர்அருள் உய்க்கும்; அடங்காமை,      ஆர்இருள் உய்த்து விடும்.          அடக்கம், அருளுக்குள் அமர்த்தும்;        அடங்காமை, இருளுக்குள் செலுத்தும்.   காக்க பொருளாக, அடக்கத்தை; ஆக்கம்,      அதனின்ஊங்(கு) இல்லை உயிர்க்கு.          உயிருக்கும், நலந்தரும் அடக்கத்தை,        உயரிய பொருளாய்க் காக்க….

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 012. நடுவு நிலைமை

(அதிகாரம் 011. செய்ந்நன்றி அறிதல் தொடர்ச்சி) 01. அறத்துப் பால் 02. இல்லற இயல்  அதிகாரம் 012. நடுவு நிலைமை     யாருடைய பக்கமும் சாயாமல்,    நேர்மையாக நடக்கும் சமநிலை.   தகுதி எனஒன்று நன்றே, பகுதியால்,    பால்பட்[டு] ஒழுகப் பெறின்.             அவ்அப் பகுதியார்க்கு ஏற்ப           நடக்கும் தகுதியே நடுநிலைமை.   செப்பம் உடையவன் ஆக்கம், சிதை(வு)இன்றி,     எச்சதிற்(கு) ஏமாப்(பு) உடைத்து.          நடுநிலையார் வளநலம் வழிவழி        வருவார்க்கும், பாதுகாப்பு…

விருபா குமரேசனின் மின்னகராதிப் பணிகள்

அனைவருக்கும் வணக்கங்கள், சென்ற ஆண்டின் இறுதியில், நாம் உருவாக்கிய விருபா வளர் தமிழ் : நிகண்டு என்னும் செயலியின் துணையுடன் சிந்தாமணி நிகண்டு மின்-அகராதியினை இணையத்தில் இணைத்திருந்தோம். இதனை நீங்கள்  http://www.viruba.com/Nigandu/Chintamani_Nigandu.aspx என்ற இணைய முகவரியில் பார்வையிடலாம். சிந்தாமணி நிகண்டில் கூறப்பட்டுள்ள ஒவ்வொரு சொற்களுக்கும் தனித்தனியான இணைய முகவரி கொடுக்கப்பட்டுள்ளது. சிந்தாமணி நிகண்டு மின் அகராதியில் தலைச்சொற்கள், பொருள் விளக்கச் சொற்கள் இரண்டும் ஒருங்கிணைக்கப்பட்ட நிலையில் அகரவரிசையில் தரப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக 2015.08.03 அன்று, வடசொற்களுக்குத் தமிழ்ப் பொருள் கூறும் அகராதியான வடசொல் தமிழ்…

முதல் உரைகண்ட பெருந்தகையாளர் இளம்பூரணர் – மு.இராகவையங்கார்

முதல் உரைகண்ட பெருந்தகையாளர் இளம்பூரணர்   பிறர் உட்புகுந்து காண முடியா வண்ணம், இருண்டு கிடந்த தொல்காப்பியம் என்னும் சரக்கறையுள் தம் அறிவென்னும் அவியா விளக்கைக் கொண்டு துருவி, ஆங்கே குவிந்து கிடந்த அரதனக் குவியல்களை உலகிற்கு முதலில் விளக்கிக் காட்டிய பெருந்தகையார்; அறிதற்கரிதாகிய தொல்காப்பியக் கட்டலைத் தம்மதிவலிகொண்டு கடைந்து முதன் முதலில் இலக்கண அமுதம் அளித்த பெரியார். – மு.இராகவையங்கார்: ஆராய்ச்சித் தொகுதி: பக்கம்: 398-399

இறையனார் அகப்பொருள் உரையாளர் சிறப்பு – மறைமலையடிகள்

இறைவன் கண்ட பொருள்வரம்பு அறிந்து சொல்நெறி மாட்சியும் பொருள் நெறிமாட்சியும் அளவையின் விளைவும் தெளிவுற விரித்து சுவைபெற உரைத்த நவையில் புலமையும் மறைப்பொருள் குறிப்பு நெறிப்பட ஆய்ந்து சிவனையே முதல் எனச் சிவணிய காட்சியும் சீரிதின் இயைந்த கீரன் -தமிழ்க்கடல் மறைமலையடிகள்: திருவொற்றியூர் மும்மணிக்கோவை: 55-61

தொகைநூலில் இடம்பெறா மேற்கோள் பாடல்கள் – மு.வை.அரவிந்தன்

தொகைநூலில் இடம்பெறா மேற்கோள் பாடல்கள்   இறையனார் களவியலுரை, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை ஆகிய தொகை நூல்களிலிருந்து பல செய்யுட்களை ஆங்காங்கே மேற்கோள் காட்டியுள்ளது. இடம் விளங்கா மேற்கோள் பாடல்கள் சில உள்ளன. அவை இலக்கியச் சுவை மிகுந்தவை; கற்கும்தோறும் இன்பமூட்டவல்லவை. “பையுள் மாலை” (சூத்.7), ‘ஏனல்’ (சூத்.7), ‘வெள்ளாங்குருகின்’ (சூத்.9), ‘நெருநலு முன்னாள்’ (சூத்.12) என்னும் தொடக்கத்தையுடைய அகப்பாடல்கள் எடுத்துக்­காட்டப்பட்டுள்ளன. இவை, தொகைநூலில் இடம்பெறாத பழைய அகப்பாடல்கள். தொகுத்தவை போக எஞ்சிய பாடல்கள் இவை போன்றவை பல இருந்திருக்கக் கூடும். (பிற உரையாசிரியர்களும்…

தெய்வச்சிலையார் உரைச் சிறப்புகள்:

தெய்வச்சிலையார் உரைச் சிறப்புகள்: தெய்வச்சிலையார் ஒவ்வோர் இயலின் இறுதியிலும் உரையினது அளவை (எழுத்துகளால்) குறிப்பிடுகின்றார். கிளவியாக்கத்தின் இறுதியில், ‘இவ்வோத்தினுள் சூத்திரமும் உள்பட உரையினது அளவு கிரந்த வகையான் ஐந்நூற்று நாற்பது’ என்கிறார். இவ்வாறே ஏனைய இயல்களுக்கும் அளவு கூறுகின்றார். … தெய்வச்சிலையார் உரை நடை உயிரோட்டமுடைதாய், எளிதாய் உள்ளது. -ஆராய்ச்சியாளர் மு.வை.அரவிந்தன்: உரையாசிரியர்கள்: பக்கம்.213-217

உதவிடலாம் ! – எம் .செயராம(சர்மா)

உதவிடலாம் ! பார்வையை இழந்தவர்கள் பலபேர்கள் இருக்கின்றார் பார்வையுடன் இருப்பவர்நாம் பலவழியில் உதவிடலாம் ! கல்விதனைக் காணாமல் கணக்கற்றோர் நாட்டிலுள்ளார் கற்றுநிற்கும் நாமவர்க்கு கற்பதற்கு உதவிடலாம் ! அன்னைதந்தை தெரியாது அலமந்து நிற்பார்க்கு ஆதரவுக் கரங்கொடுத்து அரவணைத்து உதவிடலாம் ! ஓலைக் குடிசைதனில் ஒழுக்குவீட்டில் வாழ்பவர்க்கு ஒழுங்கான வாழ்வுவர உள்ளத்தால் உதவிடலாம் ! நீர்கூடக் கிடைக்காமல் நிம்மதியைத் தொலைத்துநிற்கும் ஊரெல்லாம் தனையெண்ணி உணர்வோடு உதவிடலாம் ! மருத்துவ வசதியின்றி மனம்நொந்து நிற்பார்க்கு மருத்துவத்தைத் தெரிந்தவர்கள் மனதார உதவிடலாம் ! ஏமாற்றிப் பிழைப்பவரின் இடருக்குள் புகுந்தவர்கள்…

இறையனார் களவியல் உரை சீரிய உரைநடை இலக்கியம்

இறையனார் களவியல் உரை சீரிய உரைநடை இலக்கியம்  நூலின் பொருளை வினாவிடைகளால் விளக்கும் தருக்க நூல்மரபும் இயற்கைக் காட்சிகளையும் ஆடவர் மகளிராகிய இருபாலாரின் உள்ளத்துணர்வுகளையும் சொல்லோவியமாகப் புனைந்துரைக்கும் கற்பனைத் திறமும் பாடல்களின் பொருள்களை நயம்பெற விளக்கும் இலக்கியச் சுவைநலமும் உலக வாழ்க்கையின் நுட்பங்களைச் சிறந்த உவமைகளாலும் பழமொழிகளாலும் புலப்படுத்தும் நுட்பமும் தமிழ்மொழியின் இலக்கணங்களைத் தெளிய வைக்கும்திட்பமும் ஒருங்கே பெற்றுத் திகழும் சீரிய உரைநடை இலக்கியம் இறையனார் களவியலுரையாகும். -தமிழறிஞர் க.வெள்ளைவாரணனார்: இலக்கணச் சிந்தனைகள்: பக்கம்.142

திறனாய்வு நெறியில் சிறந்த பேராசிரியர்கள் – மு.வை.அரவிந்தன்

திறனாய்வு நெறியில் சிறந்த பேராசிரியர்கள் பேராசிரியர்கள் உரை விளக்கம் சிறந்த இலக்கியத் திறனாய்வு நெறிகளைக் கொண்டுள்ளது. முற்காலத்து இலக்கியக் கொள்கைகளை­யும் திறனாய்வு முறைகளையும் அறிந்து கொள்ள இவர் உரை பயன்படுகின்றது. கவிதைக் கலையைப் பற்றி வரன்முறையாகவும் நுட்பமாகவும் சிறந்த மேற்கோள்தந்து ஆராய்ச்சித் திறனோடு இவர் விளக்குகின்றார். இலக்கியக் கலைமாட்சி, இலக்கியக் கொள்கை இலக்கியத் திறனாய்வு வகை ஆகியவற்றைத் தனித்தனியே பெயர் கூறி இவர் விளக்கவில்லை என்றாலும், இவரது உரையில் அவரை பற்றிய அடிப்படையான உண்மைகளைக் காண முடிகின்றது. இலக்கிய ஒப்பியல் ஆய்வும் இவரிடம் உண்டு….

பேராசியர் பொருளதிகாரம் முழுமைக்கும் உரை இயற்றினார்

  பேராசியர் பொருளதிகாரம் முழுமைக்கும் உரை இயற்றினார் எனபதற்குப் பல சான்றுகள் உள்ளன. இன்று மெய்ப்பாட்டியல், உவம இயல், செய்யுள் இயல், மரபியல் ஆகிய நான்கிற்கு மட்டுமே அவரது உரை கிடைக்கின்றது. “அவை வெட்சியுள்ளும் ஒழிந்த திணையுள்ளும் காட்டப்பட்டன” (செய்.189) “காரணம் களவியலுள் கூறினாம்” (மெய்.18) “அகத்திணை இயலுள் கூறினாம்” (மெய்.19) “முன்னர் அகத்திணை இயலுள் கூறி வந்தோம்” (செய்.1) “முன்னர் அகத்திணை இயலுள் கூறினாம்” (செய்.30) என்று பேராசிரியரே கூறுவதால் பொருளதிகாரம் முழுமைக்கும் உரை செய்தார் என்று அறியலாம். மேலும் நச்சினார்க்கினியர் அகத்திணை…