கலைச்சொல் தெளிவோம் 27 : முகிலம் – nebula

27. முகிலம் – nebula குறுங்கோள் வகைகளையும் நம்மிடம் பழங்காலந்தொட்டு நிலவும் சொற்களின் அடிப்படையில் பின்வருமாறு மீட்டுருவாக்கம் செய்வதே எளிமையாக உள்ளது. கார்பன் என்றால் கரியம், கரி, (வேளா.) கரிமம்( பொறி., சுற்., மீனி., மனை.) கார்பன் (சுற்.) எனக் கூறுகின்றனர். கரி(23) என்பதன் அடிப்படையில் கரியம் மிகுதியாக உள்ளது கரிமி எனலாம். இரும்பு(29) என்பதன்அடிப்படையில்இரும்பு மிகுதியாக உள்ளது இரும்பி எனலாம். மாழை மிகுதியாக உள்ளது மாழையம் வெண் (254), செம்(359), வெள்ளிடை(1) என்னும் சொற்களின் அடிப்படையில் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம். வெண்மை நிறமானது வெண்மி…

கருவிகள் 1600 : 121 – 160 : இலக்குவனார் திருவள்ளுவன்

  121.  இடைவீழ் மழைமானி    –    interceptometer  :        மரங்களின் கீழ் அல்லது இலைதழைகளின் வழியாக விழும் மழையளவை அளக்கும் மழைமானி. இடைவெட்டு மழைநீர் அளவி (-இ.) எனச்சொல்வதைவிட இடைவீழ் மழைமானி என்பது ஏற்றதாக அமையும்.     122.   இடையீட்டு அளவி –  slip gauge / Gauge block / gage block / Johansson gauge / Jo blocks  : இடைவெளியைத் துல்லியமாக அளவிடும் கருவி. நேர் பொருளாக நழுவு அளவி / நழுவல் அளவி என்றெல்லாம் சொல்லாமல்…

கருவிகள் 1600 : 1 – 40 – இலக்குவனார் திருவள்ளுவன்

‘வளை ப’(U) வடிவ வளியழுத்தமானி – U-tube manometer ‘வளை ப’(U) வடிவக் குழாய் வளியழுத்தமானி > ‘வளை ப’(U) வடிவ வளியழுத்தமானி அகச்சிவப்பருகு படவரைவு கதிர்நிரல் மானி(அ. ப. க) – near-infrared mapping spectrometer (nims) அகச்சிவப்பு ஒளி முனைவுமானி (அ.சி.ஒ.மு.மா) – infrared photo-polarimeter (isophot) : வான்பொருள் வெளிப்படுத்தும் அகச்சிவப்புக் கதிரியத்தைக் கண்டறிய உதவும் கருவி. அகச்சிவப்பு நிறமாலைமானி – infrared spectrometer : வேதியல் கலவைகளின் செறிவை அகச்சிவப்புக் கதிரியத்தை அளப்பதன் மூலம் கண்டறியப்பயன்படும் கருவி. அகச்சிவப்பு…

கருவிகள் 1600 : 81 – 120 : இலக்குவனார் திருவள்ளுவன்

81. ஆரையளவி – fillet gauge / radius gauge 82. ஆவன்னா – இகர அளக்கைமானி – beta-gamma survey meter : அளவை மானி என்றால் அளவிடும் கருவி( guage) எனத் தவறாக எண்ணலாம். எனவே, அளக்கை மானி எனலாம். 83. ஆவன்னாக் கதிர் எதிர்ச்சிதறல் தடிம அளவி – beta-ray backscatter thickness gauge          : அகரக்கதிருக்கு அடுத்ததை ஆகாரக்கதிர் எனக் குறிக்கும் பொழுது உணவு எனத் தவறாக எண்ணலாம். எனவே, இங்கே ஆவன்னாக்கதிர் எனக் குறிக்கப்பெறுகிறது. 84. ஆவி…

கலைச்சொல் தெளிவோம் 28 : குறுமி – dwarf

 28. குறுமி- dwarf    ஞாயிற்றைவிடப் பெரியவிண்மீன்களை gaint என்றும் மிகவும் சிறிய விண்மீன்களை dwarf என்றும் தமிழிலேயே ஒலிபெயர்ப்பாகக் குறிக்கின்றனர். அல்லது அரக்கன் என்றும் குள்ளன் என்றும் மாந்தர்களைக் குறிப்பதுபோல் நேர்மொழிபெயர்ப்பாகக் குறிப்பிடுகின்றனர். dwarf – குட்டை, குள்ளமான என வேளாணியலிலும் குள்ளர் எனச் சூழறிவியலிலும் குட்டையான, குள்ளன் என மனையறிவியலிலும் குறிக்கப்பட்டுள்ளன. இவற்றின் அடிப்படையில், குள்ளமாக உள்ள மனிதர்களைக் குறிக்கும் சொல்லால் விண்பொருளையும் குள்ளன் என்று குறிப்பது பொருத்தமில்லை. குறு(56), குறுக்கை(2), குறுக(6), குறுகல்(7), குறுகல்வேண்டி(3), குறுகல்மின்(1), குறுகா(2), குறுகாது(3), குறுகார்(1),…

கலைச்சொல் தெளிவோம் 26 : உழலி – wanderer

  26 : உழலி – wanderer கோள்கள், விண்மீன்கள், உலவிகள் தவிர விண்ணில் திரிவனவற்றைத் திரிவன,  வாண்டரர்/wanderer என்றே சொல்கின்றனர். மனையியலில் இதற்கு அலைபவர் எனப் பொருள் தந்துள்ளது, அலைந்து திரியும் மக்களைத்தான் குறிக்கும்; விண்பொருளைக் குறிக்காது. ஆதிமந்திபோல் ‘உழல்வென்கொல்லோ’ எனப் புலவர் வெள்ளிவீதியார் கேட்கிறார்(அகநானூறு 45.15). உழல் அடிப்படையில் பல சங்கச்சொற்கள் உள்ளன. வானில் உழல்வனவற்றை நாம் உழலி எனச் சொல்வதே பொருத்தமாக அமையும். உழலி – wanderer – இலக்குவனார் திருவள்ளுவன்

இலக்குவனாரின் புதிய பார்வை – இலக்குவனார் திருவள்ளுவன்

இலக்குவனாரின் புதிய பார்வை  இலக்குவனார் திருவள்ளுவன்   தமிழிலக்கிய இலக்கண நூல்களைப் புரிந்து கொள்ளப் பெரும் உதவியாகஇருப்பன உரைகளே ஆகும். இலக்கிய, இலக்கணக் கடலின் கலங்கரை விளக்கங்களாக உரையாசிரியர்கள் திகழ்கின்றனர். உரையாசிரியர் களால் பல மூல நூல்களும் நமக்குக்கிட்டும் வாய்ப்பு அமைந்துள்ளன. நமக்கு வழிகாட்டும் உரையாசிரியர்களுள்இக்காலத்தில் போற்றத் தகுந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் பேராசிரியர்முனைவர் சி.இலக்குவனார்.    உரையாசிரியர்கள் இலக்கிய விளக்கம்நமக்குப் பயன்தருகின்றன என்பது ஒரு பக்கம். மறுபுறமோ,  அவர்கள், தம் காலச்சூழலுக்கேற்ற உரை விளக்கம் அளித்தும் தம் விருப்பு வெறுப்புக்கேற்பமூலநூல்களை அணுகியும் பொருந்தா உரைகளும் அளித்துள்ளனர்…

கருவிகள் 1600 : 41 – 80 : இலக்குவனார் திருவள்ளுவன்

கருவிகள் 1600 : 41 – 80 : இலக்குவனார் திருவள்ளுவன் 41. அதிர்வுக்கோல்மானி – vibrating reed meter  [ அதிர்வுக்கோல்மானி: இயற்கையான அதிர்வு நிகழ்வெண்களுடைய கோல்களைப்பயன்படுத்தும் ஒரு வகை நிகழ்வெண்அளவுமானி. ( ம.660)] 42. அதிர்வுமானி – vibrometer / vibration meter   :     அதிர்வு அலைவீச்சுகளை அளவிடும் கருவி. 43.  அதிர்வுவரைவி – vibrograph : அதிர்வுகளைப் பதிவு செய்யும் கருவி. 44.  அமிழ்த்தளவி – dip guage 45.  அமிழ்வு ஒளிவிலகல்மானி – immersion refractometer 46….

தமிழறிஞர்களில் முதல்வர் இலக்குவனார்

தமிழறிஞர்களில் முதல்வர் இலக்குவனார் *முதன்முதலாகத் தொல்காப்பியர் விழா, திருவள்ளுவர் விழா, இளங்கோ விழா, ஔவையார் விழா, தமிழ் மறுமலர்ச்சி விழா என ஐந்து விழாக்களைத் தாம் பணியாற்றிவந்த கல்விநிறுவனங்களில் நடத்தித் தமதுமாணவர்களுக்கு மட்டுமன்றி அவர்தம் பெற்றோர்களுக்கும் தமிழுணர்வெழுச்சியைஊட்டியவர் இலக்குவனார் அவர்களேயாவர். *தமிழ் வகுப்புகளில் மாணவர்கள் ஆங்கிலத்தில் வருகைப்பதிவு வழங்கிக் கொண்டிருந்த நிலையை மாற்றி “உளேன் ஐயா” என்று தமிழில் கூறும் வழக்கத்தைக் கொணர்ந்தவர் இலக்குவனாரே. *மக்கள்மன்றத்தில் திருக்குறளை அறிமுகப்படுத்தும் வண்ணம் தந்தை பெரியார் எழுச்சியுடன் 1948-ஆம் ஆண்டு நடத்திய திருக்குறள் மாநாட்டுக்குப் பின் 1949-ஆம்…

மனங்கவர் ‘மாங்கனி’ தந்த கண்ணதாசன் : பகுதி 5 – இலக்குவனார் திருவள்ளுவன்

  (மார்கழி 13, 2045 / திசம்பர் 28,2014 தொடர்ச்சி)   ஆரியக் கசப்பு உருவ வழிபாட்டிற்கு எதிராகவும் தேவர்கள் என ஆரியர்கள் தம்மைக்கூறி இடைத்தரகராய் இறை வழிபாட்டில் நடந்து கொண்டு தமிழர்களை ஏமாற்றுவதற்கு எதிராகவும் ஓர்இறைக் கொள்கையுடன் தன்மான எண்ணம் கொண்டவர் அக்காலக் கவிஞர் கண்ணதாசன். எனவே, தேரில்லை சிலையில்லை தேங்கா யில்லை தெய்வத்தைச் செவிடாக்கும் தேவரில்லை (மாங்கனி : 1.வஞ்சியில் விழா 7 :1-2)  என அருமையாக ஆரியக் குறுக்கீடற்ற வழிபாட்டை விளக்குகிறார். ‘மாங்கனி’யில் இடம் பெறும் தொடர்கள், பின்னர், கவிஞர்…

நெல் பயிரில் நோய் தாக்குதல் – உழவர்கள் கவலை

நெல் பயிரில் நோய் தாக்குதல் – உழவர்கள் கவலை   தேவதானப்பட்டிப் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள நெல் பயிரில் கடும் குளிர் காரணமாகப் புகையான் நோய் ஏற்பட்டுள்ளது.   தேவதானப்பட்டி, மஞ்சளாறுஅணை, கெங்குவார்பட்டி, சில்வார்பட்டி முதலான பகுதிகளில் ஏறத்தாழ 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காணி(ஏக்கர்) பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. தற்பொழுது பகலில் போதிய வெயில் இல்லாமலும், வானம் மேக மூட்டத்துடனும், இரவில் கடும் குளிருடனும் தட்பவெப்பம் நிலவுகிறது. மேலும் பகலில் சில நேரங்களில் அதிக வெயிலும், இரவு நேரத்தில் கடும் குளிரும் மாறிமாறி அடித்து வருகின்றன….

மருத்துவர்கள் வராததால் நோயாளிகள் அவதி

தேவதானப்பட்டி தொடக்க நல்வாழ்வு நிலையத்திற்கு மருத்துவர்கள் வராததால் நோயாளிகள் அவதி   தேவதானப்பட்டி, மேல்மங்கலம் முதலான தொடக்க நல்வாழ்வு நிலையங்களுக்கு மருத்துவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு வராததால் நோயாளிகள் கடும் அவதிப்படுகின்றனர்.   பொம்மிநாயக்கன்பட்டி, குள்ளப்புரம், செயமங்கலம், சில்வார்பட்டி, புல்லக்காபட்டி முதலான ஊர்களில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். தற்பொழுது பனிக் காலம் என்பதால், மாறிவரும் காலநிலையில் பலவிதமான தொற்று நோய்களுக்கும், சளி, இருமல், காய்ச்சல் போன்ற நோய்களுக்கும் மக்கள் ஆளாகின்றனர்.  இதனை உடனடியாகச் சரி செய்யாவிட்டால் பத்து நாட்கள் வரை நோய் நீடிக்கிறது. உடனடி மருத்துவம்…