கொடைக்கானல் பாதை சீரமைக்கும் பணி மந்தம்

  கொடைக்கானல் பாதை சீரமைக்கும் பணி மந்தம்   தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே உள்ள டம்டம்பாறை பகுதியில் கடந்த இரண்டு நாளுக்கு முன்னர்ப் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் பாறைச் சரிவுகள் ஏற்பட்டன.   காட்டாற்று வெள்ளம், இயற்கையான மழைநீர் ஊற்றுகள், அருவிகளில் இருந்து வந்த தண்ணீர் கொடைக்கானல் செல்லும் சாலையை அரித்தும், சாலைகளில் கற்கள் குவியலாகவும் காட்சியளித்தது. சில இடங்களில் சாலைகள் அடியோடு துண்டிக்கப்பட்டது. இதனால் பூலத்தூர், கொடைக்கானல், கவுஞ்சி,பூம்பாறை போன்ற இடங்களுக்குச் சென்றவர்கள் கடும் அவதிப்பட்டனர். இதற்காக மாற்று வழி ஏற்படுத்தப்பட்டது….

கொடைக்கானலில் மீண்டும் நிலச்சரிவு!

  கொடைக்கானல் மலைப்பகுதியில் தொடர்மழையால் இரண்டாவது முறையாக பத்து இடங்களில் நிலச்சரிவு போக்குவரத்து சீராகப் பல நாட்கள் ஆகும்   பேரிடர்!     தேவதானப்பட்டிப் பகுதியில் உள்ள டம்டம்பாறை பகுதியில் தொடர்ந்து இரவு பகலாக மழை பொழிந்து வருவதால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மலையிலிருந்து வரும் காட்டாற்று வெள்ளம், இயற்கையாக உருவான ஆறுகள் ஆகியவற்றின் மூலம் மலைப்பகுதியில் உள்ள சாலைகள் தொடர்ந்து அரிக்கப்பட்டு வருகின்றன. மேலும் கடந்த சில ஆண்டுகளாக இப்பகுதியில் மழை பொழியாததால் ஆழ்துளைக்கிணறுகளுக்காகத் துளைபோட்டும் பாறைகள்   எடுப்பதற்கும் வீடுகள் கட்டுவதற்கும்…

குடிநீரைக் காய்ச்சிக் குடிக்க வலியுறுத்தல்

 மக்கள் குடிநீரைக் காய்ச்சிக் குடிக்க, தேவதானப்பட்டி பேரூராட்சி வலியுறுத்தல்   தேவதானப்பட்டிப்பகுதியில் குடிநீரைக் காய்ச்சி குடிக்கவேண்டும் எனப் பேரூராட்சி நிருவாகம் வலியுறுத்தி உள்ளது.   கடந்த 3 ஆண்டுகளாகப் போதிய மழை பெய்யவில்லை. இதனால் இப்பகுதியில் குளம், கண்மாய், ஏரிகள், ஆறுகள் என அனைத்தும் வறண்டு கிடந்தன. இதனால் குடிநீர்ப்பஞ்சம் தலைவிரித்தாடியது. இருப்பினும் தேவதானப்பட்டிப் பேரூராட்சி மஞ்சளாறு அணையில் ஆழ்துளைக்கிணறுகள் அமைத்துச் சீராகக் குடிநீரை வழங்கி வந்தது.   இந்நிலையில் கடந்த பத்து நாட்களுக்கு மேலாகத் தொடர்ந்து மழை பொழிந்து வருகிறது. இதனால் மஞ்சளாறு…

மேற்குமலைத்தொடர்ச்சிப் பகுதியில் இயற்கையாக உருவான ஊற்றுகள்

மேற்குமலைத்தொடர்ச்சிப் பகுதியில் ஆறாக மாறும் ஊற்றுகள் தேனி அருகே உள்ள மலைப்பகுதியில் இயற்கையாக ஏராளமான ஊற்றுகள் உருவாகி ஆறுகளாகப் பாய்கின்றன. தேவதானப்பட்டி அருகே உள்ள மேற்குமலைத்தொடர்ச்சியல் கடந்த சில வாரங்களாக மழை பொழிந்து வருகிறது. இதனால் தலையாறு அருவி, வறட்டாறு, மூலையாறு அருவிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் மேற்குமலைத்தொடர்ச்சியில் அமைந்துள்ள டம்டம்பாறை செல்லுகின்ற வழியில் ஏராளமான ஊற்றுகள் உருவாகி ஆறுகளாக ஓடுகின்றன. மலையில் வெள்ளிகளை உருக்கி வார்த்தாற்போல் இக்காட்சி அமைந்துள்ளது. அப்பகுதியில் செல்லுபவர்கள் இதனைக்கண்டும் களித்தும் ஒளிப்படம் எடுத்தும் மகிழ்கின்றனர். இந்த இயற்கையான…

பணியிடங்களில் பாலியல் தொந்தரவு-கடுமையான சட்டம் வேண்டும்

பணியிடங்களில் பாலியல் தொந்தரவு-கடுமையான சட்டம் வேண்டும் எனப் பெண்கள் எதிர்பார்ப்பு . முதலாளிகள் ஆதிக்க வன்முறையில் சிக்குண்டு தவிக்கும் பெண் தொழிலாளர்கள் நிலையும் அவர்கள் மீது செலுத்தும் சமூக வன்முறையும் கொடியவையாக இருக்கின்றன.  இதில் இரண்டு வகை உண்டு. அலுவலகச்சூழலில் ஏற்படும் சிக்கல்கள், வேலைக்குப் போகும் பெண்களின் பாலியல் துன்பம் என ஆகும். கல்வி கற்று அலுவலகங்களில் பணிபுரியும் பெண்கள், பொருளாதாரச் சார்பின்றித் தனித்தியங்கும் நிலை இக்காலத்தில் ஏற்பட்டுள்ளது. ஆனால் அலுவல் பொருட்டு வெளியே வந்துவிட்ட பெண்கள் பொதுவாக ஆண்கள் இன்ப நுகர்ச்சிக்குரிய பொருட்களாக…

தமிழ் மீனவர்கள் ஐவருக்குத் தூக்கு! காரணமானவர்களை அரசியலிலிருந்து தூக்கு!

தமிழ் மீனவர்கள் ஐவருக்குத் தூக்கு! காரணமானவர்களை அரசியலிலிருந்து தூக்கு!     இலங்கையில் பண்டாரநாயக்கா தலைமையாளராக(தலைமைஅமைச்சராக) இருந்தபொழுது 1956 ஆம்ஆண்டில் தூக்குத் தண்டனை ஒழிக்கப்பட்டது. இருப்பினும் அவர் படுகொலைசெய்யப்பட்ட பின்பு,1959இல் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால்,1978 இல் ஐக்கியத் தேசியக்கட்சி அரசாங்கத்தில் இதற்குப் பல வரையறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதனால் தூக்குத்தண்டனை அல்லது மரணத்தண்டனை என்பது ஏட்டளவில்தான் உள்ளது. இதனால் 1976 ஆம் ஆண்டிற்குப் பிறகு இலங்கையில் மரணத்தண்டனை நிறைவேற்றப்படவில்லை. நீதிமன்றத்தால் மரணத்தண்டனை விதிக்கப்பட்டவர்களும் ஆயுள்தண்டனைபோல் சிறைவாசியில் தங்கள்வாழ்வைக் கழிக்கின்றனர்.   சிங்களக் கொடுங்கோல் அரசு சிங்களர்க்கான…

பதினெண்கீழ்க்கணக்குத் தேசியக்கருத்தரங்கம்

தாகூர்கலைக்கல்லூரியில் பதினெண்கீழ்க்கணக்கு தேசியக்கருத்தரங்கம் ஐப்பசி 13, 2045, அக்.30,2014 அன்றுநடைபெற்றது. முனைவர் செல்வம் தலைமையில் முனைவர் வச்சிரவேலு வரவேற்றுப் பேசினார். கல்லுாரி முதல்வர் முனைவர் பிச்சை மணி முன்னிலை வகித்தார். தனித்தமிழ் இயக்கத்தலைவர் முனைவர் க.தமிழமல்லன் கருத்தரங்க மலரை வெளியிட்டுச் சிறப்புரை நிகழ்த்தினார். திரளான மாணவர்களும் பேராசிரியர்களும் அதில் கலந்து கொண்டனர்.

கொடைக்கானலுக்குச் செல்லும் பேருந்துகளில் கூடுதல் கட்டணம்

    தேவதானப்பட்டி அருகே உள்ள டம்டம்பாறை பகுதியில் 16க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் கடந்த சில நாட்களாகப் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.    இந்நிலையில் சித்தரரேவு, தாண்டிக்குடி வழியாக ஒரு வழியும், பழனியிலிருந்து கொடைக்கானல் செல்லும் பாதை மற்றொரு பாதையாகவும் செயல்பட்டு வருகிறது. இதனைப்பயன்படுத்தித் தனியார் பேருந்துகள், தாண்டிக்குடி வழியாகச் செல்கின்ற பேருந்துகள், கொடைக்கானலுக்கு 100 உரூபாயும் பழனி வழியாகச் சுற்றி வருகின்ற வாகனங்கள் 150உரூபாயும் கட்டணம் பெறுகின்றனர். ஏற்கெனவே சரக்குச்சிற்றுந்துகள், சிற்றுந்துகள் கொடைக்கானலுக்கு 50உரூபாய் கட்டணம் பெற்றன. தற்பொழுது…

சோகத்தில் மூழ்கிய மீனவஊர்கள்: ‘500 உயிர்களைக் கொடுப்போம்’ எனச் சூளுரை

மீனவர் ஐவர் தூக்கு – மக்கள் கிளர்ச்சி     தங்கச்சிமடம் : இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம், பாம்பன் மீனவர் ஐவருக்கு இலங்கை அரசு விதித்த தூக்குத் தண்டனையால் மீனவஊர்கள் சோகமயமாகி உள்ளன. பொய் வழக்கில் சிக்கியுள்ள ஐவரின் உயிரைப் பறிக்க இலங்கை அரசு துடிப்பதாகக் கூறி, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கதறி அழுதனர். ‘500 உயிர்களை கொடுத்தாவது 5 பேரை மீட்போம்’ எனச் சூளுரைத்தனர்.   கடந்த 2011 இல் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த தங்கச்சிமடம் மீனவர்கள் எமர்சன், அகஃச்டசு, வில்சன், பிரசாத்து,…

ஏ…இறையே- துரை. ந. உ

    ஏ….இறையே…! – இருவரியில் சொல்வேன் நல்லவற்றைக் கிள்ளித் தருகிறாய்!; அல்லவற்றைஅள்ளித் தருகிறாய்! ஏன்? ​வாழும் வழிகேட்டு நிற்பவரை வீழ்த்தி வலிகூட்டிச் செல்கிறாய் ஏன்​ ? துதித்தவரைத் துன்பத்துள் தள்ளும் தவறு; மதிதெளிந்த செய்கையா கூறு சோதனைமேல் சோதனைதந்து உம்குடியை வேதனைக்குள்தள்ளுவதா சாதனை?​ சொல்மெய்தானோ! “இல்லையென்று சொல்லவில்லை; நல்லது தான்இருந்தால்” என்போரின் கூற்று ​ஏன் இப்படி ? ​ பிடியும்…என் சாபம் படியும் : துதிப்பவரை எற்றி மிதிப்பவரை, போற்றிஇறை என்பவரைத் தூற்றும் உலகு இரைஞ்சும் அடியவரைக் கைவிடு வோரை இறையல்ல என்று விடு…

தேனிப் பகுதியில் கிணறுகள் தூர்வாரும் பணி தீவிரம்

  தேனிப் பகுதியில் கிணறுகள் தூர்வாரும் பணி தீவிரம் அடைந்து வருகிறது.   தேவதானப்பட்டி பகுதியில் கடந்த 3 ஆண்டுகளாகப் போதிய மழை பொழியவில்லை. இதனால் நீர்நிலைகள் கிணறுகள், குளங்கள், ஏரிகள், வாய்க்கால்கள் என அனைத்தும் காய்ந்து கிடந்தன. மேலும் நிலத்தடி நீர்மட்டம் மளமளவென சரியத்துவங்கியது. இதனால் பல கிணறுகள் நீரின்றி காய்ந்து போயின. சில கிணறுகள் மூடப்பட்டுவிட்டன.   தேவதானப்பட்டி பகுதியில் 10 அடி முதல் 20 அடிவரை தண்ணீர் தாராளமாக கிடைக்கும். நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்ததால் ஆழ்துளைக்கிணறுகள் 200 அடிவரை…