வெருளி நோய்கள் 1571-1575 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1565-1570 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1571-1575 படுக்கை யறை தொடர்பான அளவுகடந்த பேரச்சம் படுக்கை யறை வெருளி.படுக்கை அறை தூய்மையாக இல்லை, படுக்கை அறை சரியாக இல்லாததால் கெட்ட கனவுகள் வருகின்றன, யாரோ படுக்கை அறையை எட்டிப்பார்க்கும் வகையில் அறை உள்ளது என்றெல்லாம் தேவையற்ற வரம்பு கடந்த பேரச்சத்திற்கு ஆளாகின்றனர்.Ypnodomatiophobia என்றால் கிரேக்கத்தில் தூங்கும் அறை எனப் பொருள்.காண்க: படுக்கை வெருளி(Clinophobia)00 படுக்கச் செல்வது குறித்த தேவையற்ற மிகையான பேரச்சம் படுக்கை வெருளி.இரவில் மோகினிப்பிசாசு மார்பில் ஏறி அமர்ந்து அழுத்தும் என்ற…
வெருளி நோய்கள் 1566-1570: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1561-1565 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1566-1570 ஒளிப்படிப் பொறி(Photocopier) குறித்த வரம்பற்ற பேரச்சம் படிப் பொறி வெருளி.சில வெருளிகளுக்குக் காரணம் கூறினாலும் காரணமின்றி வரும் பேரச்சம்தானே வெருளி. ஆதலின் இதற்கான பொதுவான காரணத்தைக் கூற முடியாது. இருப்பினும் படிப்பொறி மீதான பேரச்சத்திற்கு ஒருவர் கூறிய காரணம், சிறு அகவையில் அதில் வரும் ஒளி கண்களைக் குருடாக்கிவிடும் என்று அஞ்சியதாகவும் வளர்நத பின் அதற்கான வாய்ப்பு இல்லை என உணர்ந்தாலும் பேரச்சம் உள்ளத்தில் படிந்து விட்டதாகவும் கூறியுள்ளார்.செராக்கசு(Xerox) என்பது தகவல் மேற்படுத்தும்…
வெருளி நோய்கள் 1561-1565 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1556-1560 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1561-1565 படப் பொறி தொடர்பான அளவுகடந்த பேரச்சம் படப் பொறி வெருளி.சிலருக்கு ஒளிப்படம் எடுத்தால் வாழ்நாள் குறையும் என்ற நம்பிக்கை உள்ளது. ஒளிப்படம் பார்ப்பதவர்கள் அழகற்று இருப்பதாகவும் முதுமை தெரிவதாகவும் உணர்வார்கள் என்றெல்லாம் எண்ணியும் ஒளிப்படம் குறித்த பேரச்சம் சிலருக்கு இருக்கும். இத்தகையோர் ஒளிப்படம் எடுக்கும் படப்பொறி மீது தேவையற்ற பேரச்சம் கொள்கின்றனர். படம் எடுக்கப் பயன்படும் ஒளிவீச்சாலும் படப்பொறி மீது அளவுகடந்த பேரச்சம் கொள்கின்றனர்.00 படர்வு ஆட்டம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் படர்வாட்ட…
வெருளி நோய்கள் 1556-1560 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1551-1555 : தொடர்ச்சி) 1556. பச்சைவெருளி – Chlorophobia / Prasinophobia பச்சை நிறம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் பச்சை வெருளி. பச்சைப்பாம்பு கண்டு அஞ்சிப் பின்னர் பச்சை நிறம் என்றாலே அஞ்சுவோரும் உள்ளனர். chloros என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் மஞ்சள் பச்சை நிறம். prasinos என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் பச்சை நிறம். சிலர் பாசிகம்(குளோரின்-chlorine) மீதான அளவுகடந்த பேரச்சம். எனவே, பாசிக வெருளி என்பதையும் Chlorophobia என்கின்றனர். 00 1557. பஞ்சுருண்டை வெருளி – Sidonglobophobia /…
வெருளி நோய்கள் 1551-1555 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1546-1550 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1551-1555 செய்திகளை நண்பர்களிடம் பகிர்வது தொடர்பான பேரச்சம் பகிர் வெருளி.நண்பர்களிடம் குறிப்பாகத் தோழிகளிடம் தம்மைப்பற்றிய செய்திகளைப் பகிர்ந்து கொள்வது குறித்துப் பெரிதும் கவலைப்படுவர்.சில செய்திகள் மூலம் தவறாக எடைபோடுவர் என்ற அச்சமும் சில செய்திகள் தொடர்பான தாழ்வு மனப்பான்மையும் வருவது இயற்கை.ami என்னும் பிரெஞ்சுச்சொல்லிற்கு நண்பர் எனப்பொருள்.00 பகு எண் குறித்த வரம்பற்ற பேரச்சம் பகு எண் வெருளி.எண் வெருளி(Arithmophobia or Numerophobia), கணக்கு வெருளி (Mathemaphobia/Mathemophobia) உள்ளவர்களுக்குப் பகு எண் வெருளி வரும்…
வெருளி நோய்கள் 1546-1550 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1541-1545 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1546-1550 பகடை(dice) குறித்த வரம்பற்ற பேரச்சம் பகடை வெருளி.சூதிற்கு எதிராகத் திருவள்ளுவர் திருக்குறளில் சூது என்று ஓர் அதிகாரமே படைத்துள்ளார்.(அதிகாரம் 94).உருட்டப்படுகின்ற பகடையால் பொருளை வைத்துச் சூதாடும் பொழுது பொருள் வருவாய் அவனை விட்டு நீங்கிப் புறத்தே செல்லும என்கிறார் திருவள்ளுவர்.உருளாயம் ஓவாது கூறின் பொருளாயம்போஒய்ப் புறமே படும்(குறள் 933).என்பது அக்குறள்.நளவெண்பா, மகாபாரதக் கதைகளில் மன்னர்களே சூதால் யாவற்றையும் இழப்பது கூறப்பட்டுள்ளது.எனவே, பகடை யாடுவது குறித்து அஞ்சி விலக்குவது தேவையான ஒன்று. ஆனால், பகடையை…
வெருளி நோய்கள் 1541-1545 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1536-1540 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1541-1545 நோயர் வண்டி(ambulance) தொடர்பான வரம்பற்ற பேரச்சம் நோயர் வண்டி வெருளி.ambulance என்றால், இடம்விட்டு இடம் செல்லுதல், இடம் விட்டு இடம் பெயர்தல், நடத்தல், நடப்பதற்குப் பயன்படுத்துகிற எனப் பொருள்கள். அவசர நேர்வில் நோயாளிகளை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு – அஃதாவது இல்லத்திலிருந்து அல்லது இருக்குமிடத்திலிருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதால் நோயர் ஊர்தி எனப்பெற்றது. நாம் நேர் பொருளாகப் பாராமல் பயன்பாட்டு அடிப்படையில் அவசர மருத்துவ ஏந்து(வசதியு)ம் உடைய நோயாளிகளுக்கான ஊர்தியான இதனை நோயர் ஊர்தி…
வெருளி நோய்கள் 1526-1530 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1521-1525 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1526-1530 நெடும்பாசி தொடர்பான அளவுகடந்த பேரச்சம் நெடும்பாசி வெருளி.நெடும்பாசிகள் அழுகும்போது, நச்சு வாயுக்களை வெளியிடுகின்றன.இந்த வாயுக்களை மூச்சு இழுத்து விடுவதால் கடுமையான தலைவலி, குமட்டல், மூச்சிரைப்பு முதலியன ஏற்படும் எனப் பேரச்சம் கொண்டு வெருளிக்கு ஆளாகின்றனர்.00 நீண்ட ஒடுங்கிய வெள்ளை கருப்பு இறகுகளை உடைய ஒரு வகை நீள்வால் பறவையைப்(magpie) பார்த்தால் தீயது நிகழும் என்ற நம்பிக்கையில் அப்பறவையைக் கண்டு அளவுகடந்த பேரச்சம் கொள்வது நெடுவாலி வெருளி.இலத்தீனில் ‘pica’ என்னும் சொல் மேகுபை(magpie) என்னும் பறவையைக்…
வெருளி நோய்கள் 1521-1525 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1516-1520 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1521-1525 ஒட்டகச்சிவிங்கி போன்ற நீளமான கழுத்துகுறித்த அளவுகடந்த பேரச்சம் நெடுங்கழுத்து வெருளி.ஒட்டகச்சிவிங்கி வெருளி(Kamilopardaliphobia)எனவும் தனியாக உள்ளது.பிறர் கேலியாக எண்ணுவார்கள் என்று அஞ்சியும் நடமாட்டத்தில் குறைபாடு நேர்வது கருதியும் நீளமான கழுத்துகுறித்த பேரச்சம் கொள்கின்றனர்.00 நெடுங்கைக் குரங்கு தொடர்பான அளவுகடந்த பேரச்சம் நெடுங்கைக் குரங்கு வெருளி.இது, கிழக்கிந்தியத் தீவுகளிலுள்ள நீண்ட கைகளுள்ள வாலில்லாக் குரங்குவகையைச் சேர்ந்தது.00 நெடுஞ்சாலைகள்(highways and expressways) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் நெடுஞ்சாலை வெருளி.நெடுஞ்சாலைகளில் ஊர்திகள் மிகு விரைவாகச் செல்வதால் நேர்ச்சி(விபத்து) ஏற்படும், உடலுக்கோ…
வெருளி நோய்கள் 1516-1520 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1511-1515 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1516-1520 நூறு கோடி / நிகற்புத எண் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் நூறு கோடி எண் வெருளிநிகற்புதம் என்பது 1,00,00,00,000 ஐக் குறிக்கும்.00 நெகிழ் நுரை குவளை(Styrofoam cup) குறித்த வரம்பற்ற பேரச்சம் நெகிழ் நுரை குவளை வெருளி.நெகிழ் நுரை குவளை என்பது எடை குறைந்த, ஒருமுறை பயன்படுத்தக்கூடிய கொள்கலன் ஆகும். இது சூடாகவும் குளிராகவும் உள்ள பானங்களுக்குப் பரவலாகப் பயன்படுத்தப்படும். சிறந்த வெப்பக் காப்புத்தன்மையை வழங்கி, பானங்களை அவற்றின் சரியான வெப்பநிலையில் வைத்திருப்பதோடு,…
வெருளி நோய்கள் 1511-1515 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1506-1510 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1511-1515 கூரிய முனை உள்ளபொருள்கள் மீதான தேவையற்ற அளவுகடந்த பேரச்சம் நுனை வெருளி.“முல்லை வைந் நுனை தோன்ற இல்லமொடு” எனப் புலவர் குறுங்குடி மருதனார் (அகநானூறு:4:1) முல்லைஅரும்பின் கூரிய முனையை நுனை என்கிறார். 2.கூற்றம் அஞ்சும் கொல்நுனை எஃகின் இளையானும் (சீவக சிந்தாமணி 1.361)எனத் திருத்தக்க தேவர், கூற்றுவனும் நடுங்கும் கொல்லும் முனையுடைய வேல் ஏந்திய இளைஞன் கந்துக் கடன் எனச் சொல்லும் பொழுது வேல் முனையை நுனை என்கிறார். .“வில் பழுத்து உமிழ்ந்த வெய்ய…
வெருளி நோய்கள் 1506-1510 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1501-1505 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1506-1510 நீளமான புதுச்சொல் குறித்து ஏற்படும் தேவையற்ற வரம்பு கடந்த பேரச்சம் நீள் புதுச்சொல் வெருளி.நீளமான சொற்களைப் பயன்படுத்த இயலாமை, அதனைச் சொல்வதற்கு வராமை போன்றவற்றால் தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு அந்தச் சொல் மீது வெறுப்பு வருவதும் உண்டு. பழக்கமில்லா நீளச் சொல்லைத் தவறாகச் சொல்லி விட்டால் பிறரின் ஏளனத்திற்கு ஆளாக நேரும் என அஞ்சுவோரும் உண்டு.இதுவும் நீள்சொல் வெருளியைப்போன்றதுதான். ஆனால் நீளமான நன்கு அறிமுகமான சொல் கண்டு பயப்படாமல் புதிய நீளமான சொற்களைக்…
