பேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை திருக்குறள் ஆராய்ச்சி 2/6
பேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை திருக்குறள் ஆராய்ச்சி 2/6 உரைநயம் உணர்த்தும் உரை வளம் இலக்குவனார், இருபாலருக்கும் பொதுவாகவும் பெண்மையை உயர்த்தியும் சிறப்பான விளக்கவுரை அளித்துள்ளார். சில சொற்களுக்கு அவர் தரும் விரிவான விளக்கம் அவரின் நுண்மாண்நுழைபுலத்தை நன்கு புலப்படுத்துகின்றது. திருவள்ளுவர் தமிழ்மொழி, தமிழ்இனம் என்றெல்லாம் சாராமல் திருக்குறளைப் படைத்திருந்தாலும் விளக்கம் அளிக்கையில் தமிழ் உணர்வை ஊட்டும் வகையில் இன்றைய தேவைக்கேற்ப குறள் நெறி அறிஞர் இலக்குவனார் படைத்துள்ளார்; ஆனால், உலகப் புலவர் திருவள்ளுவரைப் புரிந்து கொண்டு இணக்கமான உரை தந்துள்ளார். பேராசிரியரின்…
வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 35 (2.05) – இன்பந் துய்த்தல்
(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 34 (2.04) – தொடர்ச்சி) மெய்யறம் இல்வாழ்வியல் 35. இன்பந் துய்த்தல் 341. துணையோ டின்பந் துய்த்தலே சுவர்க்கம். வாழ்க்கைத் துணையோடு சேர்ந்து இன்பம் அனுபவிப்பதே உண்மையான நிரந்தரமான இன்பமாகும். துய்க்கு முறையெலாந் தொல்லகப் பொருள்சொலும். இன்பம் அனுபவிக்கும் முறைகளை பழமையான அகப் பொருள் நூல்களில் இருந்து அறிந்து கொள்ளலாம். முறையறி யாதுறல் குறையறி வுயிர்செயல். இன்பம் அனுபவிக்கும் முறைகளை அறியாது செயல்படுவது அறிவற்ற செயலாகும். தன்றுணைக் கின்பந் தரத்தரத் தனக்கதாம். தனது துணைக்கு இன்பம் கொடுக்கக் கொடுக்கத்தான் தனக்கு…
ஆரியச் சூழ்ச்சியும் தந்தை பெரியார் காட்டும் வழியும் 9/9 – பெங்களூரு முத்துச்செல்வன்
(ஆரியச் சூழ்ச்சியும் தந்தை பெரியார் காட்டும் வழியும் 8/9 தொடர்ச்சி) ஆரியச் சூழ்ச்சியும் தந்தை பெரியார் காட்டும் வழியும் 9/9 அத்துடன் பெரியார் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை நடத்தியபோது. “இந்தியால் தமிழ் கெட்டுவிடும் என்பதற்காக நான் வருத்தப்படவில்லை. இந்தியால் மட்டுமல்ல வேறெந்த மொழியாலும் நமது மொழியைப் பொறுத்தவரையில் கெட்டுவிடாது. ஆனால், இந்தியால் நமது பண்பாடு அடியோடு அழிந்துவிடும். இப்போதே வடமொழி நம் நாட்டில் புகுந்து, நமது பண்பாடு எவ்வளவு கெட்டுவிட்டது?” என்று கருத்தறிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. (விடுதலை 15.8.1948). தமிழை எம்மொழியாலும் அழிக்க முடியாது…
பேராசிரியர் சி.இலக்குவனாரின் திருக்குறள் உரைச் சிறப்பு 2/2 : செ. இரவிசங்கர்
(பேராசிரியர் சி.இலக்குவனாரின் திருக்குறள் உரைச் சிறப்பு 1/2 தொடர்ச்சி) திருக்குறள் உரைச் சிறப்பு 2/2 சுருக்கம்: ‘சுருங்கச் சொல்லி விளங்கவைத்தல் ’ என்பது போல திருக்குறளுக்கான உரையை மிகச் சுருக்கமாகச் சொல்லி புரிய வைத்துள்ளபணியை இலக்குவனார் மிகத் தெளிவாகச் செய்துள்ளார். இலக்குவனார் சுருக்கமாக உரை யெழுதக் காரணம் யாது? “ஓரளவு படிப்பறி வுடையோரும் புரிந்துகொள்ளும் வகையில் திருக்குறள் எளிய பொழிப்புரை எழுதினார்” என்று மறைமலை கூறுகிறார். எனவேதான் சுருக்கமான கருத்தை எழுதியுள்ளார் எனலாம். திருக்குறளில் அதிகாரத்திற்கு அமைந்துள்ள தலைப்பை உரையாசிரியர்கள் விளக்க…
தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் : [ஙை] 2. போர்முகம் நோக்கிய இளமைப்பாதை -தொடர்ச்சி – இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙே] 2. போர்முகம் நோக்கிய இளமைப்பாதை-தொடர்ச்சி) தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙை] 2. போர்முகம் நோக்கிய இளமைப்பாதை -தொடர்ச்சி இவ்வரிகள் இலக்குவனாரின் தொலைநோக்கைக் காட்டுவதாக இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் சி.இலக்குவனார் குறித்து எழுதியுள்ள நூலில்(பக்கம் 50) பேராசிரியர் முனைவர் இ.மறைமலை பின்வருமாறு கூறுகிறார்: “வறியோர்க்கு உணவு, முதியோர்க்கு உணவு, கோயிலில் உணவு என்று பல்வேறு இலவச உணவுத் திட்டங்கள் இன்று நடைமுறைப்படுத்தப் படுகின்றன. இவை யனைத்தும் பெரும் நிதியையும் கரைக்கும் செலவினங்களாகவே அமைந்துள்ளன. ஆனால், இலக்குவனார் கனவு காணும்…
வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 34 (2.04) – உயிர்த்துணை யாளுதல்
(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 33 (2.03) – தொடர்ச்சி) மெய்யறம் இல்வாழ்வியல் 34.உயிர்த்துணை யாளுதல் 331. இருவரு ளறிவிற் பெரியவ ராள்க. கணவன், மனைவி இவர்களில் அறிவில் சிறந்தவர் குடும்பப் பொறுப்பை ஏற்று நடத்தல் வேண்டும். ஆண்பா லுயர்வெனல் வீண்பேச் சென்க. ஆண்கள்தான் சிறந்தவர் என்று கூறுவது பயனற்ற பேச்சு ஆகும். துணைநன் காள்பவர் தொல்லுல காள்வர். வாழ்க்கைத்துணையுடன் ஒற்றுமையாக வாழ்பவர் உலகம் முழுவதும் வெற்றி கொள்வர்.(எல்லா இன்பங்களும் அடைந்து வாழ்வர்.) தன்னுயி ருடல்பொரு டன்றுணைக் குரியன. ஒருவருடைய உயிர், உடல், பொருள் எல்லாம்…
இலக்குவனார் பிறந்த நாளில் அயல்மொழித் திணிப்புகளை அகற்ற உறுதி் கொள்வோம்! – இலக்குவனார் திருவள்ளுவன்
இலக்குவனார் பிறந்த நாளில் அயல்மொழித் திணிப்புகளை அகற்ற உறுதி் கொள்வோம்! கார்த்திகை 1 அல்லது நவம்பர் 17 தமிழ்ப்போராளி பேரா.சி.இலக்குவனார் பிறந்த நாள். இவ்வாண்டு அவரின் நூற்றுஏழாம் பிறந்த நாள். தமிழ்நலப் போராளியாக எண்ணத்தாலும் சொல்லாலும் செயலாலும் வாழ்ந்தவர் பேரா.சி.இலக்குவனார். அவர் அறிவுரைகளில் குறிப்பிடத்தக்க ஒன்று ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே எழுத்து என்பதற்கு எதிரான போர்க்குரலாகும். ஏதோ, இராசுட்டிரிய சேவா சங்கத்தின் அச்சுப்பதிப்பான பா.ச.க. அரசுதான் இவ்வாறு மொழித்திணிப்பில் ஈடுபடுவதாக இன்றைய தலைமுறையினர் எண்ணக்கூடாது. காங்கிரசு எனப்படும் பேராயக்கட்சியின் தலையாய…
பேராசிரியர் சி.இலக்குவனாரின் திருக்குறள் உரைச் சிறப்பு 1/2 : செ. இரவிசங்கர்
பேராசிரியர் சி.இலக்குவனாரின் திருக்குறள் உரைச் சிறப்பு 1/2 முன்னுரை: திருக்குறளுக்கு உரையெழுதிய பலருள் சி.இலக்குவனாரும் ஒருவர். தமிழுக்காகப் பணி செய்த மாபெரும் அறிஞர் இலக்குவனார் என்பதை இரா.நெடுஞ்செழியனாரின் கூற்றின் முலம் அறியலாம். “இலக்குவனாரின் தமிழறிவும்ஆற்றலும், துணிவும், திறமையும், அஞ்சாநெஞ்சமும், அன்புள்ளமும், விடா முயற்சியும், தொண்டு புரியும் சிறப்பும், தமிழுக்காகவும், தமிழர்க்காகவும் பாடுபடும் தன்மையும் பாராட்டிப் போற்றத்தக்கனவாகும்” என்கிறார். இது முற்றிலும் உண்மையாகவே அவரது தமிழ்ப்பணியைப் பார்க்கும்போது தெரிகிறது. இவ்வளவு திறமையும் உழைப்பும் கொண்ட இலக்குவனாரின் பணிகளுள் திருக்குறளுக்கு இயற்றியுள்ள உரைப் பணி போற்றத்தக்கதாகும். …
ஆரியச் சூழ்ச்சியும் தந்தை பெரியார் காட்டும் வழியும் 8/9 – பெங்களூரு முத்துச்செல்வன்
(ஆரியச் சூழ்ச்சியும் தந்தை பெரியார் காட்டும் வழியும் 7/9 தொடர்ச்சி) ஆரியச் சூழ்ச்சியும் தந்தை பெரியார் காட்டும் வழியும் 8/9 தாம் தமிழை விரும்புவதற்கான காரணங்களைத் தந்தை பெரியார் அடுக்கும்போதே, மொழி குறித்துக் கருத்தறிவிப்பது மொழியின் தத்துவத்திலுள்ள தன்னுடைய ஆசை மிகுதியின் பொருட்டே ஆகுமே தவிர, “நான் கூறப்போகும் தத்துவங்களை இலக்கண, இலக்கிய ஆதாரங்களுடன் விளக்குவது என்பது எனது தகுதிக்கு மேற்பட்ட காரியம். அதற்கு வேண்டிய இலக்கண இலக்கியங்களில் பாண்டித்தியமோ, ஆராய்ச்சியோ எனக்கில்லை. எனக்குத் தோன்றிய, என் பட்டறிவுக்கு எட்டிய செய்திகளைத்தான் நான் உங்களுக்கு…
புரட்சி எண்ணமும் செயலும் கொண்ட இலக்குவனார் – இரவி இந்திரன்
புரட்சி எண்ணமும் செயலும் கொண்ட இலக்குவனார் அஞ்சா நெஞ்சும் அதிஉயர் கல்விச் செறிவும் வரலாற்றுத் தெளிவும் ஒருங்கே உருவான அறிஞரின் கதை. (17.11.1909 – 03.09.1973) 1965, இந்தி எதிர்ப்புப் போராட்ட காலம். உளவுத்துறைக்கு ஒரு செய்தி வருகிறது. தமிழகமெங்கும் போராட்டத் தீ பரவிக்கொண்டிருக்கிறது. மதுரை தியாகராசர் கல்லூரி மாணவர்கள் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தைக் எரிக்கப் போகிறார்கள் என்பதுதான் அந்தச் செய்தி. உடனே விழிப்படைந்த உளவுத்துறையினர் அறிஞர் அண்ணாவிடம் வருகிறார்கள். மாணவர்கள் போராட்டத்தை நிறுத்திக்கொள்ளும்படி அறிக்கை விடும்படி கேட்கிறார்கள். மாணவர்களின்…
பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – தொகுப்புரை 1/7 : இலக்குவனார்திருவள்ளுவன்
வெ.ப.சு.தமிழியல் ஆய்வு மையம், தமிழ்த்துறை, ம.தி.தா.இந்துக்கல்லூரி திருநெல்வேலி பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – பன்னாட்டுக் கருத்தரங்கம் கட்டுரைத் தொகுப்பு நூல் தொகுப்புரை 1/7 செந்தமிழ்மாமணி, செம்மொழிச்சுடர் தமிழ்ப்போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் அவர்களின் பிறந்தநாள் பெருமங்கல நூறாம் ஆண்டுத் தொடக்கத்திலிருந்து (2009) விழாக்கள் நடத்தப் பெறுகின்றன. பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், தமிழ் அமைப்புகள், அ.இ.வானொலி நிலையம், சாகித்திய அகாதமி எனப் பல்வகைத் தரப்பினராலும் தமிழ்நாட்டில் நூற்றாண்டு விழா, கவியரங்கம், கருத்தரங்கம், உரையரங்கம் முதலானவற்றில் தமிழறிஞர்கள் பங்கேற்றுச் சிறப்பித்துள்ளனர். தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், மலேசியா, சிங்கப்பூர்,…
அறிவோம் இசுலாம் : மணவிலக்கு(தலாக்கு) – பாத்திமா மைந்தன்
அறிவோம் இசுலாம் : மணவிலக்கு(தலாக்கு) மணமுறிவு / மணவிலக்கு என்பதைக் குறிக்க ‘தலாக்கு’ என்னும் அரபுச்சொல் பயன்படுத்தப்படுகிறது. ‘தலாக்கு’ எனும் சொல்லுக்கு, விடுவித்தல், அவிழ்த்தல், கைவிடுதல் என்பது பொருளாகும். இதை ‘விவாகரத்து’ என்ற வடமொழி சொல்லாலும் சுட்டுகிறோம். இச்சொல், திருமண ஒப்பந்தத்தை முறித்தல், இல்லற வாழ்வை முடிவுக்குக் கொண்டு வருதல் ஆகியவற்றைக் குறிக்கும். இசுலாத்தின் பார்வையில் இல்லறம் ஒரு நல்லறமாகவும், ஓர் ஒப்பந்தமாகவும் உள்ளது. இல்லற வாழ்வு நீடித்து நிலை பெற வேண்டும் என்பதால்தான் திருமணம் செய்வதை இசுலாம் ஊக்குவிக்கிறது. வாணாள்…