இலக்கியங்கள் கூறும் தமிழர்க்கான காவிரி 01- 10 : இலக்குவனார் திருவள்ளுவன்

1-10 இலக்கியங்கள் கூறும் தமிழர்க்கான காவிரி  ‘இந்தியத்தால் இழந்த காவிரி’ என்னும் கட்டுரை மூலம் முன்னரே, நமக்கே உள்ள காவிரியை நாம்  இழந்து விட்டதைக் குறித்து உள்ளோம்.     நமக்கே உரிமையான காவிரி குறித்து இற்றைநாள் தமிழ் இலக்கியங்கள் வரை ஆயிரக்கணக்கான குறிப்புகளை நாம் காணலாம். எனினும் பழந்தமிழ் இலக்கியங்களில்  உள்ள நூற்றுக்கணக்கான குறிப்புகளை நாம் இத் தொடரில் பார்க்கலாம்.   இவற்றை காவிரி தொடர்பான முறையீட்டுத்தளங்களில் நாம்அளிக்கலாம். கன்னடத்தில் மொழி பெயர்த்துக் கன்னட மக்கள் அறியச்செய்யலாம். என்ன தெரிவித்தாலும் கண்மூடித்தனமாகவும் வெறித்தனமாகவும் உள்ள…

முருங்கை மரத்து வேதாளம் ! – உருத்திரா இ பரமசிவன்

முருங்கை மரத்து வேதாளம் ! வாழ்க்கை வாழ்வதற்கே !   வாழ்க்கை என்பது முருங்கை மரத்து வேதாளம் என்று வெட்டி வெட்டி எறிந்தாலும் நம் தோள்மீது அது ஏறிக்கொண்டே தான் இருக்கும். வாழ்க்கையை வெறுப்பது என்பது தான் அந்த வேதாளம். வாழ்க்கையை நோக்கி வரவேற்பு புன்னகை ஒன்றை வீசு எல்லா வேதாளங்களும் அணுக முடியாமல் ஓடியே போய்விடும். இப்போது எல்லா வேதாளங்களும் உன் காலடியில். உருத்திரா இ பரமசிவன்

தன்னாட்சி கொடுப்பது காலத்தின் கட்டாயம் 1/3 – க.வி.விக்கினேசுவரன்

தன்னாட்சி கொடுப்பது காலத்தின் கட்டாயம் 1/3 ஆசானே தெய்வம்! எனதருமைத் தமிழ் பேசும் உடன்பிறப்புகளே! ‘எழுக தமிழ்’ப் பேரணியில் பெருந்திரளாகக் கலந்து கொண்டு தமிழ் மக்களின் ஒருமித்த குரலாக எமது உரிமைக் கோரிக்கைகளை வெளிப்படுத்தவும் தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராக எமது எதிர்ப்பைத் தெரிவிப்பதற்கும் எமது அரசியல் சார்ந்த எதிர்பார்ப்புகளை உலகறிய விளம்புவதற்கும் இங்கே கூடியிருக்கின்ற எனதருமை மக்களே! இந்தப் பேரணி வரலாறு காணாத பேரணி!  ஆட்சியில் அல்லது செல்வாக்கில் உள்ள எவரையும் எதிர்த்து நடாத்தப்படும் பேரணி இல்லை  இது. நாம் எமது…

நான்கு காசு சேர்ப்பதற்காம்! – கெர்சோம் செல்லையா

நான்கு காசு சேர்ப்பதற்காம்!   ஆட்டிப் படைப்பதை ஆட்சி என்றார்; அதைத்தான் விரும்பும் காட்சி என்றார். காட்டிக் கொடுப்பதைத் திறமை என்றார்; கயமை கொள்வதும் உரிமை என்றார். நாட்டில் நன்மை செய்வதெல்லாம், நான்கு காசு சேர்ப்பதற்காம்; ஊட்டிக் கொடுக்கும் இந்நஞ்சை, ஒழிக்கும் வழிதான் இறையரசாம்! – கெர்சோம் செல்லையா

இதழ்களின் மேல் கருவண்டு – அபிநயா, துபாய்

இதழ்களின் மேல் கருவண்டு வீட்டினுள் விழுந்தன வளர்பிறை வெண்மதிகள் வெட்டிய நகங்கள்’. பூச்சிக்கொல்லி மருந்தையும் குடிப்போம் அயல்நாட்டுப்பானம்! கோயிலுக்குக் குந்தகமென்றால் கருவறையும் அகற்றலாம் கருப்பை! இறைவனும் இறைவியும் இணக்கத்துடன் இணைந்தார்கள் அரவாணிகள்! நாத்திகனுக்குக் கோவிலிலென்ன வேலை? அன்னதானம்! இதழ்களின் மேல் கருவண்டு மச்சம்! அறைந்தாள் முத்தம் கொடுத்தான் அப்பா! இயற்கையும் உறைகூழ் கொடுத்தது நுங்கு! கூட்டமாய் வந்து உள்ளாடை திருடினார்கள் மணல் கொள்ளை! – அபிநயா, துபாய். தரவு : முதுவை இதயத்து

முதல்வர் நலம் பெறட்டும்! புரளிகளுக்கு முற்றுப்புள்ளி இடட்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்

முதல்வர் நலம் பெறட்டும்! புரளிகளுக்கு முற்றுப்புள்ளி இடட்டும்!     தமிழக முதல்வர் செயலலிதா உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனை  ஒன்றில் கடந்த புரட்டாசி 06, 2047 / 22.09.16 அன்று சேர்க்கப்பட்டார். காய்ச்சலும் நீர்ச்சத்து குறைபாடுமே நலக்கேட்டிற்குக் காரணம் எனச் சொல்லப்பட்டுள்ளது. ஆனால், மருத்துவமனையில் சேர்ந்த பின்னர், சருக்கரை மிகுதி, நுரையீரல் பாதிப்பு, அவ்வப்பொழுது மூச்சிரைப்பு போன்ற காரணங்களும் சொல்லப்படுகின்றன. தன் கட்சித்தொண்டர்களால் ‘அம்மா’ எனப் பாசத்துடன் அழைக்கப்படும் அவர், அன்பர்களின் வேண்டுதலால் விரைவில் நலம்  பெறுவார் என எதிர்பார்க்கிறோம். தமிழ் மருத்துவத்தையும் கடைப்பிடித்தார்கள்…

மனிதம் – கமலா சரசுவதி

மனிதம் தலை சுமந்து உயிர்காக்கும், தன்மையது நல் மனிதம் ! உயிர் கொடுத்து உயிர்காக்கும், உணர்வே நல் மனிதம் ! செருக் கொழிக்கும் சிந்தையது, சிகரம் கொள்ளும் மனிதம் ! முருகவிழும் மொட்டுப் போலே முகிழும் மனங்கொள் மனிதம் ! துயரம் நிறைந்தோர் துயரேதீர்க்க, துடிக்கும் மனமே மனிதம் ! தோல்வியுற்றோர் துவளா நிலையைத் தோற்றுவித்தல் நல் மனிதம் ! வீட்டுப்பெண்கள் கொண்ட கருத்தை விரும்பிக் கேட்டல் மனிதம்! கொல்லும் பகையே என்றபோதும், கொஞ்சம் மன்னித்தல் அதுமனிதம் !   – கமலா சரசுவதி…

ஆரியச் சூழ்ச்சியும் தந்தை பெரியார் காட்டும் வழியும் 2/9 : பெங்களூரு முத்துச்செல்வன்

(ஆரியச் சூழ்ச்சியும் தந்தை பெரியார் காட்டும் வழியும் 1/9 தொடர்ச்சி) ஆரியச் சூழ்ச்சியும் தந்தை பெரியார் காட்டும் வழியும் 2/9   தந்தை பெரியார் குறிப்பிட்டுள்ள ‘பிராமணீய நாயக’த்தின் பயன்கள் தேவைப்படாத பெரியாரியலார், இந்துத்துவத்தை நிலைநாட்டத் துடிக்கும்  பிராமணச் சூழ்ச்சிகளை உடனுக்குடன் தயக்கமும் மயக்கமும் இன்றித் தோலுரித்துக் காட்ட முற்படுகின்றனர். இன்றைக்கும் திராவிடர் கழகத்தின் தேவையை உணர்த்துவதாக அவ்வரிகள் அமைந்துள்ளன.   இந்துத் தேசியத்தின் ஒரு கூறாகிய சமற்கிருதத் திணிப்புக் குறித்துத் தந்தை பெரியாரின் கருத்துகளைப் பார்ப்போம்.   “இந்த நாட்டில் பலகாலமாகச் ‘சமற்கிருதம்’…

திருக்குறள் அறுசொல் உரை – 104. உழவு : வெ. அரங்கராசன்

(திருக்குறள் அறுசொல் உரை – 103. குடி செயல் வகை தொடர்ச்சி) திருக்குறள் அறுசொல் உரை 02. பொருள் பால் 13. குடி இயல் அதிகாரம் 104. உழவு  உலகையே வாழ்விக்கும், உயிர்த்தொழில் உழவின் உயர்வு, இன்றியமையாமை.     சுழன்றும் ஏர்ப்பின்ன(து) உலகம், அதனால்,       உழந்தும் உழவே தலை.      உலகமே உழவின்பின்; துயர்தரினும், தலைத்தொழில் உழவையே செய்.   உழுவார் உலகத்தார்க்(கு) ஆணி,அஃ(து) ஆற்றா(து)       எழுவாரை எல்லாம் பொறுத்து. எல்லாரையும் தாங்கும் உழவர்; உலகத்தேர்க்கு அச்சுஆணி ஆவர்.   உழு(து)உண்டு வாழ்வாரே வாழ்வார்…

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙா] – இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ்ப்போராளி  பேராசிரியர் சி.இலக்குவனார் [ங]  1.முன்னுரை  – முற்பகுதி தொடர்ச்சி) தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙா] 1.முன்னுரை – பிற்பகுதி   தேவை உறுநருக்கு உதவுவதும் கடமை தவறுநர்க்கு இடித்துரைப்பதும் போராளியின் கடமைதானே. மாணாக்கர்களிடையேயும் பொதுமக்களிடையேயும் அவர் பரப்பிய தமிழுணர்வு தமிழ் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது. பரப்புரைகளில் இலக்கியச் சிறப்புகளுடன் தமிழுக்கு ஏற்பட்டுள்ள தீங்கையும் காக்கும் கடப்பாடு ஒவ்வொருவருக்கும் உள்ளதையும் விளக்கினார் பேராசிரியர். “தமிழ், தமிழினம், தமிழிலக்கியம் இவற்றில் ஒன்றுபோம் எனில் மற்றவும் ஒழியும்.” (பாவேந்தர் பாரதிதாசன்) என்பதையே எல்லா இடங்களிலும் தொடக்கம் முதலே வலியுறுத்தினார்…

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.28.அறிவுடைமை

(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.27. தொடர்ச்சி)   மெய்யறம் மாணவரியல் 28.அறிவுடைமை 271. அறிவு மறமொரீஇ யறத்தின்பா லுய்ப்பது. அறிவுடைமை தீயொழுக்கத்தை விலக்கி நல்லொழுக்கத்தை நோக்கி நம்மைச் செலுத்தும் இயல்பு உடையது. அறிவெஞ் ஞான்று மற்றங் காப்பது. அறிவுடைமை எப்பொழுதும் அழிவில் இருந்து பாதுகாக்கும் இயல்பு உடையது. அறிவு பகைவரா லழிக்கப் படாதது. அறிவு பகைவர்களால் அழிக்க முடியாதது. அறிவினை யுடையா ரனைத்து முடையர். அறிவினை உடையவர்கள் அனைத்தையும் உடையவர்கள் ஆவர். அறிவில் லாதார் யாதுமில் லாதார். அறிவில்லாதவர்கள் எதுவுமே இல்லாதவர்கள் ஆவர். அறிவிற்…

பொய்தீர் ஒழுக்கநெறி தந்தாய் வாழி! 21-25 : தி.வே.விசயலட்சுமி

(பொய்தீர் ஒழுக்கநெறி தந்தாய் வாழி! 16.20 தொடர்ச்சி) பொய்தீர் ஒழுக்கநெறி தந்தாய் வாழி! 21-25   நல்லோர் நவிலும் நலம் பயக்கும் இன்குறளைக் கல்லார் அடையார் களிப்பு.   அன்பும் அறிவும் ஆக்கமும் ஊக்கமும் பண்பும் குறளால் பெறு.   23.  வள்ளுவனார் வாய்ச்சொல் வகையுறக் கற்பவர். உள்ளுவர் நல்வினை ஓர்ந்து.   24. இன்பக் கடல்காண்பர் என்றும் குறள் கற்பவர். துன்பம்  தவிர்த்துவாழ் வார்.   25. வையத்து வாழ்வாங்கு  வாழ்ந்திடக் கற்றிடுவோம் தெய்வத் திருக்குறளைத் தேர்ந்து. தி.வே.விசயலட்சுமி   பேசி –…