பேரா.சி.இலக்குவனார் வழியில் செந்தமிழ் நடை பேணுவோம்! : 2 – இலக்குவனார் திருவள்ளுவன்
பேரா.சி.இலக்குவனார் வழியில் செந்தமிழ் நடை பேணுவோம்! – 2 / 2 தமிழியக்கப்பணிகளாலும் திராவிட இயக்கப்பணிகளாலும் தமிழ் மறுமலர்ச்சி ஏற்பட்டது குறித்து மகிழ்ந்தவர் பேராசிரியர் சி.இலக்குவனார். அவர், ‘இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்’ என்று புதுமைப் பாவலர்கள் முழக்கம் செய்தனர். எங்கு நோக்கினும் இன்பத்தமிழ்; செந்தமிழ்; இதழ்களில் செந்தமிழ்; மேடைப்பேச்சுகளில் நற்றமிழ்; மாநாடுகளில்வண்டமிழ்; நற்றமிழில் பேசுதலே நற்புலமைக்கு அடையாளம் என்ற எண்ணம் உருப்பெற்று விட்டது. நமஃச்காரம் போய் வணக்கம் வந்தது. சந்தோசம் மறைந்து மகிழ்ச்சி தோன்றியது. விவாகம் விலகித் திருமணம் இடம் பெற்றது….
மேதினியே நட்பிற்குள் அடங்கிற் றின்று ! 2/5 : பாவலர் கருமலைத்தமிழாழன்
(மேதினியே நட்பிற்குள் அடங்கிற் றின்று 1/5 தொடர்ச்சி) மேதினியே நட்பிற்குள் அடங்கிற் றின்று ! 2/5 கற்பனைக்கும் எட்டாத அற்பு தங்கள் கரத்திருக்கும் பேசியிலே செய்யும் நாமோ நற்காலம் காட்டுகின்ற கடிகா ரத்தை நாள்காட்டி கணக்கியினை துறந்து விட்டோம் பற்றியெங்கும் எடுத்துசென்று செய்தி யோடு பாடல்கேட்ட வானொலியைத் தொலைத்து விட்டோம் நற்றமிழில் நலம்கேட்டு எழுதி வந்த நற்கடிதப் பழக்கத்தை விட்டு விட்டோம் ! பக்கத்தில் பெற்றோர்கள் அமர்ந்தி ருக்கப் பக்கத்தில் உடன்பிறந்தோர் அமர்ந்தி ருக்கப் பக்கத்தில் சுற்றத்தார் அமர்ந்தி ருக்கப் பக்கத்தில் …
நீதி தோற்றுவிடக்கூடாது! பேரறிவாளன் குறிப்பேடு – தொடரும் வலி! – இறுதி
(பேரறிவாளன் குறிப்பேடு! தொடரும் வலி!- பாகம் – 10 தொடர்ச்சி) நீதி தோற்றுவிடக்கூடாது! பேரறிவாளன் குறிப்பேடு – தொடரும் வலி! – இறுதி வேலூர் சிறையில் 25 ஆண்டுகளைக் கடந்து முடக்கப்பட்டு இருக்கும் பேரறிவாளன், அவரது வழக்கறிஞர் மூலமாகச் சொல்லி அனுப்பிய தகவல்களின் தொகுப்பு இது! நிறைய உங்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றுதான் இந்தத் தொடரின் தொடக்கத்தில் நினைத்தேன். நடைமுறைச் சிக்கல்கள் அதற்கு பெரும் இடையூறாக இருக்கும் என்பது தெரிந்தேதான் அவ்வாறு ஆசைப்பட்டேன். இருப்பினும், அந்த இடையூறுகளை என்னால் கடக்க முடியவில்லை. அந்தத் தடைகளை…
திருக்குறள் அறுசொல் உரை – 100. பண்பு உடைமை : வெ. அரங்கராசன்
(திருக்குறள் அறுசொல் உரை – 99. சான்றாண்மை தொடர்ச்சி) திருக்குறள் அறுசொல் உரை 2. பொருள் பால் 13.குடி இயல் அதிகாரம் 100. பண்பு உடைமை உலகத்தார் இயல்புகளை நன்குஅறிந்து நலஉணர்வுடன் பழகுதலைப் பெறுதல் எண்பதத்தால் எய்தல், எளி(து)என்ப, யார்மாட்டும், பண்(பு)உடைமை என்னும் வழக்கு. பண்புஉடைமை என்னும் வழக்கம், எளிமையாய்ப் பழகுவதால் வரும். அன்(பு)உடைமை, ஆன்ற குடிப்பிறத்தல், இவ்இரண்டும், பண்(பு)உடைமை என்னும் வழக்கு. பண்பாளரின் இரண்டு சிறப்புகள்: அன்பும்,…
இனிய தமிழ்மொழி – அழ.வள்ளியப்பா
இனிய தமிழ்மொழி தாய்சொல்லித் தந்த மொழி தாலாட்டில் கேட்ட மொழி சந்திரனை அழைத்த மொழி சாய்ந்தாடிக் கற்ற மொழி பாட்டிகதை சொன்ன மொழி பாடிஇன்பம் பெற்ற மொழி கூடிஆட உதவும் மொழி கூட்டுறவை வளர்க்கும் மொழி மனந்திறந்து பேசும் மொழி வாழ்க்கையிலே உதவும் மொழி எங்கள் தாய்மொழி-மிக இனிய தமிழ்மொழி. இனிய தமிழ்மொழி-அது எங்கள் தாய்மொழி. குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா : சிரிக்கும் பூக்கள்
பொய்தீர் ஒழுக்கநெறி தந்தாய் வாழி! 6 -10 : தி.வே.விசயலட்சுமி
(பொய்தீர் ஒழுக்கநெறி தந்தாய் வாழி! 1 – 5 தொடர்ச்சி) பொய்தீர் ஒழுக்கநெறி தந்தாய் வாழி! 6-10 நயங்கண்ட வள்ளுவர் நன்மணிபோல் நாமும் வயங்கண்டு கற்போம் விழைந்து. குறளே கொடுமை களைந்திடும் கூர்வாள், திறனை அறிவோம் தெளிந்து. போரற்று வையம் புதுவையம் ஆவதற்கே சீர்பெற்ற தீங்குறளே சிறப்பு. குறள்நெறி பேணின் குறையா வளங்கள் திறம்படப் பெறுவோம் தேர்ந்து. ஒன்றேமுக் காலடிநூல் காட்டும் அறநெறியால் வெல்வோம் விதிப்பயனை நாம். -புலவர் தி.வே.விசயலட்சுமி (பொய்தீர் ஒழுக்கநெறி தந்தாய் வாழி! 11…
இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 41: ம. இராமச்சந்திரன்
(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 40: தொடர்ச்சி) இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 41 தமிழ்நாட்டின் முதலமைச்சர் காமராசர் தமிழர். தமிழ் வளர்ச்சிக்கும் பாடுபடுதல் அவர் கடமையாகும். தமிழ் வளர்ச்சிக்கு உதவும் அவரைப் பாராட்டுவதும் எம் கடமைகளுள் ஒன்றாகும் என்று கவிஞர் குறிப்பிட்டுள்ளார். ‘கருமவீரர் காமராசர் நூலினைப் படித்த நுண்ணறிவுடையீர்’ என்ற தொடங்கும் கவிதை பொருண்மொழீக் காஞ்சி என்னும் துறையில் பாடப் பெற்ற கவிதையாகும். முனிவர் முதலியோர் தெளிந்த பொருளைச் சொல்லுதல் பொண்மொழிக் காஞ்சித் துறையாம். இக்கவிதை…
இனமானமும், மொழிமானமும் இலக்குவனாரின் குருதியோட்டம் – மயிலாடன்
இனமானமும், மொழிமானமும் இலக்குவனாரின் குருதியோட்டம் தந்தை பெரியார் மறைவிற்கு 21 நாள்களுக்கு முன்பாகவே கண் மூடினார் நமது பேராசிரியர் சி.இலக்குவனார் (மறைவு 3.9.1973) அவரைப்பற்றி எவ்வளவோ சொல்லலாம், எழுதலாம். திராவிடர் கழகத்திலிருந்து தி.மு.க. பிரிந்த அந்தக் காலகட்டத்தில் தந்தை பெரியார் அவர் களுக்குத் துணையாக இருந்து, தந்தை பெரியார் சுற்றுப் பயணம் முழுவதும் அவருடன் அகலாது தொடர்ந்து பயணித்து, தந்தை பெரியார் உரையாற்றுவதற்கு முன்னதாகப் பேராசிரியர் இலக்குவனாரின் உரை அமைந்துவிடும். இது எத்தகைய பெரும் பேறு அந்தப் பெருமகனாருக்கு. தமிழ்ப் புலமை, ஆங்கிலப்…
சேரனின் கூற்றும் தவறு! மழுப்பலும் தவறு! இருப்பினும் மன்னிப்போம்! – இலக்குவனார் திருவள்ளுவன்
சேரனின் கூற்றும் தவறு! மழுப்பலும் தவறு! இருப்பினும் மன்னிப்போம்! இயக்குநர், நடிகர், படஆக்குநர் என்ற முறையில் சேரன் மக்களால் நேசிக்கப்பெறும் கலைஞர்; தம் படங்களுக்கு மூன்று தேசிய விருதுகள் பெற்றவர் என்ற முறையில் அரசாலும் போற்றப்படுபவர்; ஈழத்தமிழர் நலன் சார்ந்த உரை யாற்றி உலகெங்கும் பரவியுள்ள ஈழத்தமிழர்களின் பரிவிற்கும் பாத்திரமானவர். தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரி வார். (திருவள்ளுவர், திருக்குறள் 104) நமக்குப் பிறர் செய்யும் உதவி மிகச்சிறிய தினை அளவாக இருப்பினும் அதனை நாம் மிகப்பெரிய பனை அளவாகக்…
பேரா.சி.இலக்குவனார் வழியில் செந்தமிழ் நடை பேணுவோம்! : 1 – இலக்குவனார் திருவள்ளுவன்
[1] பேரா.சி.இலக்குவனார் வழியில் செந்தமிழ் நடை பேணுவோம்! தமிழ்க்கென மலர்ந்து தமிழ்க்கென வாழ்ந்து தமிழ்த்தாய் உருவமாகப் பார்க்கப்படும் தமிழ்ப்போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் நினைவு நாள், ஆவணி 18 / செட்டம்பர் 03. இந்நாளில் அவரை நினைவுகூர்ந்து தமிழ்க்கடமை ஆற்றுவது நம் கடனாகும். பேரா.சி.இலக்குவனார் தம் தாத்தா முத்து வழியில் பள்ளியில் படிக்கும்பொழுதே கவித்திறனுடையவராக இருந்து ஆசிரியர்களாலும் உடன் பயிலும் தோழர்களாலும் பாராட்டப்பெற்றவர். அவரது தமிழ்ப்பற்றைத் தனித்தமிழ்ப்பற்றாக ஆற்றுப்படுத்தியவர் அவரது ஆசிரியர் அறிஞர் சாமி.சிதம்பரனார். இலக்குவனார்க்குப் பெற்றோர் இட்ட பெயர்…
தனித்தமிழ்க்காவலர் இலக்குவனார் வழியில் நற்றமிழ் பேணுவோம்! – இலக்குவனார் திருவள்ளுவன்
தனித்தமிழ்க்காவலர் இலக்குவனார் வழியில் நற்றமிழ் பேணுவோம்! படிக்கும் பருவத்திலிருந்தே தனித்தமிழ்நடை பேணியவர்; தனித்தமிழில் எழுதியும் பேசியும் வந்ததுடன் – தனித்தமிழ் வித்தைப்பிறரிடம் விதைத்தவர்; தனித்தமிழ் அன்பர்களைத் தம் உறவாகவும் தனித்தமிழுக்கு எதிரானவர்களைத் தமக்குப் பகையாகவும் கருதி வாழ்ந்தவர்; தனித்தமிழ் வளர்ச்சிக்கெனவே இதழ்கள் நடத்தியவர்; அவர்தாம் தனித்தமிழ்க்காவலர் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார். அவர் புகழுடல் எய்திய நாளில்(ஆவணி 18 / செட்டம்பர் 03) அவரது நினைவைப் போற்றும் நாம் அவரது கனவுகளை நனவாக்க அவர் வாழ்நாள் முழுவதும் வலியுறுத்தி வந்த பின்வரும் முழக்கங்களைக் கடமைகளாகக்…
தமிழியக்கத் தலைமைப் போராளி இலக்குவனார் 3/3 – மறைமலை இலக்குவனார்
(தமிழியக்கத் தலைமைப் போராளி இலக்குவனார் 2/3 தொடர்ச்சி) தமிழியக்கத் தலைமைப் போராளி இலக்குவனார் 3/3 தி.மு.க.ஆட்சிப் பொறுப்பேற்றது, அரசு இலச்சினையில் விளங்கும் ‘சத்ய மேவ சயதே’ என்னும் இந்தித்தொடரை உடனே அகற்றி “வாய்மையே வெல்லும்” என்னும் தொடரை அறிமுகப்படுத்துமாறு அறிவுறுத்தியவர் இலக்குவனாரே. சத்தியம் என்பதனை உண்மை என்றே மொழியாக்கம் செய்திருக்கவேண்டும் எனச் சிலர் குறிப்பிட்டனர். ஆனால் மூதறிஞர் இராசாசி ‘வாய்மை’என்பதே பொருந்தும் எனக் கூறினார். தி.மு.க.ஆட்சிப் பொறுப்பேற்று விட்டதால் உடனே அனைத்துக் கல்விநிறுவனங்களிலும் தமிழையே பயிற்சிமொழியாக ஆக்கவேண்டும் என இலக்குவனார் வலியுறுத்திய…