கல்விமான்களை விட விடுதலை வீரர்களே தேவை 1/2 – ஈழத்து நிலவன்

கல்விமான்களை விட விடுதலை வீரர்களே தேவை 1/2   எமது மக்களைப் பாதுகாப்பதற்காக வரலாற்றுத் தன்னியல்பில் எமது கைகளில் ஒப்படைக்கப்பட்ட ஆயுதங்கள்! – அடிமைத் தேசத்தில் கல்விமான்களை விட விடுதலை வீரர்களே தேவையானவர்கள்! – ஈழத்து நிலவன்   தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை மறுத்து அவர்களை இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தி அவர்களை ஒடுக்கும் வழமையான இலங்கை ஆட்சியே இதுவும் எனத் தன்னை அம்பலப்படுத்திக் கொண்டுள்ளது மைத்திரிபால சிறிசேன – இரணில் ஆட்சி. இன அழிப்பின் நுண்மையான பின்னணிகள்   திடீர் இறப்புகள்,…

குருதிக்கொடை என்னும் அறம் – ப.கண்ணன்சேகர்

குருதிக்கொடை என்னும் அறம் நதிநீர் ஓட்டத்தால் நாடெலாம் செழித்திட நாளத்தின் குருதியால் நன்னுடல் தழைத்திடும்! அதிகாலைப் பயிற்சியால் ஆரோக்கியம் கண்டிட அழற்சியிலா உடலே அன்றாடம் உழைத்திடும்! விதியினை மாற்றியே வீழ்வதைத் தடுத்திட வெள்ளையோடு சிவப்பணு வேரெனக் காத்திடும்! நிதிபடைத்து நானிலத்தில் நிம்மதி காண்போரும் நிச்சயமாய்க் குருதியால் நலவாழ்வு வந்திடும்! உடல்முழுக்கப் பிராணத்தை உந்தும்நிலை செய்திட உதவுகிற பெரும்பணியே ஓடுகின்ற இரத்தமே! முடக்கிடும் கிருமிகளை முற்றிலும் அகற்றிட முதன்மைச் சேவகனாய் முயன்றிடும் இரத்தமே! திடமென இதயத் தெளிவான ஓட்டத்தை தினந்தோறும் தருவதும் தேகத்தில் இரத்தமே! மடமை…

கல்வியே கண் – கி. பாரதிதாசன்

“கல்வியே கண்”     செல்லும் இடமெல்லாம் சீர்களைச் சேர்த்திட வெல்லும் அடலேறாய் விஞ்சிட – தொல்லுலகில் யாண்டும் புகழ்பரவத் தீண்டும் துயரகல வேண்டுமே கல்வி விளக்கு! சாதிச் சழக்குகளை மோதி மிதிக்கின்ற நீதி நிலத்தில் நிலைத்திட! – ஆதியிலே ஆண்ட அறநெறிகள் மீண்டும் அரங்கேற வேண்டுமே கல்வி விதை! கல்வி உடையவரே கண்ணுடையர் என்றழகாய்ச் சொல்லி மகிழும் சுடர்க்குறளே! – முல்லைமலர்க் காடொளிரும் வண்ணம் கருத்தொளிர, எப்பொழுதும் ஏடொளிரும் வண்ணம் இரு! நல்லோர் திருவடியை நாடி நலமெய்த! வல்லோன் எனும்பெயர் வந்தெய்த! –…

ஆறு – அண்ணாமலை

ஆறு மலையில் பிறந்த நதி மண்ணில் குதிக்கிறது அலைகள் கொலுசுகட்டி அசைந்து நடக்கிறது நிற்க நேரமில்லை நெடுந்தொலைவு போகிறது மௌனம் உடைத்தபடி மனம்விட்டு இசைக்கிறது கல்லில் அழகாக கூழாங்கல் செய்கிறது தண்ணீர்ப் பாலாலே தாவரங்கள் வளர்க்கிறது நதிகள் கரையோரம் நந்தவனம் மலர்கிறது காயாமல் பூமியைக் காப்பாற்றி வைக்கிறது கல்லில் கிழிபட்ட காயம் மறைக்கிறது வெண்பல் நுரைகாட்டி வெளியில் சிரிக்கிறது இடையில் கோடுகளாய் எங்கெங்கோ பிரிகிறது கடல்தான் கல்லறையா கடைசியில் முடிகிறது நம்முடைய அழுக்குகளை நதிகள் சுமக்கிறது காரணம் இதுதான் கடல்நீர் கரிக்கிறது – திரைப்படப்…

இனிப்புத் தோப்பே! – ஆரூர் தமிழ்நாடன்

 இனிப்புத் தோப்பே கனவுகளின் தாயகமே… கவிதைகளின் புன்னகையே வைரத் தேரே!.. கண்வளரும் பேரழகே… கால்முளைத்த சித்திரமே இனிப்புத் தோப்பே.. . நினைவுகளை அசைக்கின்றாய்… நெஞ்சுக்குள் நடக்கின்றாய்… தேவ தேவி… நின்றாடும் பூச்செடியே… உன்பார்வை போதுமடி அருகே வாடி. பார்வைகளால் தீவைத்தாய்; பரவசத்தில் விழவைத்தாய்; தவிக்க வைத்தாய்! ஊர்வலமாய் என்னுள்ளே கனவுகளைத் தருவித்தாய் சிலிர்க்க வைத்தாய். நேர்வந்த தேவதையே நிகரில்லா என்நிகரே உயிர்க்க வைத்தாய். யார்செய்த சிற்பம்நீ? எவர்தந்த திருநாள்நீ? மலைக்க வைத்தாய். உன்பிறப்பை உணர்ந்ததனால் நீ பிறக்கும் முன்பாக நான் பிறந்தேன்; என் நோக்கம்…

தமிழுக்கு ஒளி தந்த தமிழ்ஒளி 1/4 – சி.சேதுராமன்

தமிழுக்கு ஒளி தந்த தமிழ்ஒளி 1/4     பாரதி, பாரதிதாசன் ஆகிய இருவரின் சுவடுகளைப் பற்றிக் கொண்டு ‘பாரதி கவிதா மண்டலத்தின்’ மூன்றாவது தலைமுறையில் முத்திரைப் பதித்த கவிஞர்தான் தமிழொளி. பாரதியையும், பாரதிதாசனையும் பலரும் பின்பற்றி அவர்களது சுவடுகளில் கால்பதித்து நடந்தாலும் அவர்களின் வழிநின்று பொதுவுடைமைக்குக் குரல் கொடுத்து இறுதிவரை பொதுவுடைமைவாதியாகவே வாழ்ந்து மறைந்தவர் கவிஞர் தமிழொளி.   தென்னார்க்காடு மாவட்டத்தில் உள்ள குறிஞ்சிப்பாடியை அடுத்த ‘ஆடூரில்’ சின்னையா – செங்கேணி அம்மாள் இவர்களின் தலைமகனாக 1924-ஆம் ஆண்டு செட்டம்பர் திங்கள் 21-ஆம்…

காக்கையாரே காக்கையாரே எங்கே போனீர்? – க.சச்சிதானந்தன்

காக்கையாரே காக்கையாரே எங்கே போனீர்?   பிள்ளை: காக்கையாரே காக்கையாரே எங்கே போனீர்? காக்கை: காணாத இடமெல்லாம் காணப் போனேன் கண்டு வந்த புதினங்கள் சொல்லக்கேளும் செட்டியார் வீட்டிலே கலியாணம் சிவனார் கோயில் விழாக்கோலம் மேரி வீட்டிலே கொண்டாட்டம் மீன் பிடித்துறையிலே சனக்கூட்டம் கண்டிப் பக்கம் குளிரோ கடுமை காங்கேசன்துறையில் வெயிலோ கொடுமை பிள்ளை: அக்கா, அம்மா, அப்பா அவர்கள் சுகமா? காக்கை: பொங்கலன்று வருவாராம் புத்தகம் வாங்கி வருவாராம் பந்தும் வாங்கி வருவாராம் பாவை உமக்குத் தருவாராம் மிகவும் நல்லாய்ப் படியென்று கடிதம்…

தமிழ்நாடு – கவிஞர் தமிழ்ஒளி

தமிழ்நாடு புதுமை கண்டு வாழ இன்று போர் செயுந் தமிழ்நாடு – மறப் போர் செயுந் தமிழ்நாடு – மிக முதுமை கொண்ட பழமை வீழ மோதிடும் தமிழ்நாடு – வீழ மோதிடும் தமிழ்நாடு! திசையை, விண்ணை, வென்று நின்று சிரித்திடுந் தமிழ்நாடு – எழில் சிரித்திடுந் தமிழ்நாடு – கொடி அசைய உயர மண்ணில் நிற்கும் கோபுரம் தமிழ்நாடு – கலைக் கோபுரம் தமிழ்நாடு! காவிரிநதி பாயுங் கழனிக் கண்ணொளி பெறும்நாடு – முக் கண்ணொளி பெறும்நாடு – பொழில் பூவிரிநறும் புனல்வி…

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.17. : பொய்ம்மை விலக்கல்

(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.16. தொடர்ச்சி) மெய்யறம் மாணவரியல் 17. பொய்ம்மை விலக்கல் நிகழா ததனை நிகழ்த்துதல் பொய்ம்மை. நடக்காததைச் சொல்வது பொய் ஆகும். நிகழ்வதை யங்ஙன நிகழ்த்துதல் வாய்மை. நடந்ததை அவ்வாறே சொல்வது உண்மை ஆகும். தீமையைத் தருமெனின் வாய்மையும் பொய்ம்மையாம். தீய விளைவைத் தரும் எனில் உண்மை என்பது பொய்க்குச் சமம் ஆகும். புரைதீர் நலந்தரின் பொய்ம்மையும் வாய்மையாம். குற்றமில்லாத நன்மையைத் தரும் எனில் பொய்யும் உண்மைக்குச் சமம் ஆகும். வாய்மையைத் தருவதே வாயென வறிக. வாய்மை(உண்மை)யைப் பேசுவதால் மட்டுமே “வாய்”…

திருக்குறளும் இந்தியத் தண்டனைத் தொகுப்புச் சட்டமும் -1/2 : மு. முத்துவேலு

திருக்குறளும் இந்தியத் தண்டனைத் தொகுப்புச் சட்டமும் 1/2  திருக்குறளை அறநூல், அன்புநூல், அருள்நூல், அறிவுநூல், அகநூல் என்று பல்வேறு தலைப்புகளில் அறிஞர்கள் பலரும் ஆய்ந்து வந்துள்ளனர். திருக்குறளைச் ‘சட்டநூல்’ என்ற நோக்கில் அணுகினாலும் அதில் தமிழரின் சட்டநெறிகள் புலப்படக் காணலாம். அவ்வகையில், 1860-ஆம் ஆண்டில் இயற்றப்பெற்று இன்றளவும் இந்திய நீதிமன்றங்களில் பயன்பட்டுவரும் இந்தியத் தண்டனைத் தொகுப்புச் சட்டத்தின்(The Indian Penal Code) கூறுகள், இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னர் தமிழர்களுக்குச் சட்ட நூலாக விளங்கிய திருக்குறளில் பொதிந்திருக்கின்றன என்பதைப் புலப்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம் ஆகும். திருக்குறள்…

குற்றமற்றவர்களைக் கொல்லத் துடிக்கும் மனிதர்களை வரலாறு மன்னிக்கட்டும்! பேரறிவாளன் குறிப்பேடு! பாகம் – 04

(பேரறிவாளன் குறிப்பேடு! தொடரும் வலி: பாகம்-03 தொடர்ச்சி) குற்றமற்றவர்களைக் கொல்லத் துடிக்கும் மனிதர்களை வரலாறு மன்னிக்கட்டும்! பேரறிவாளன் குறிப்பேடு! பாகம் – 04 (வேலூர் சிறையில் 25 ஆண்டுகளைக் கடந்து முடக்கப்பட்டு இருக்கும் பேரறிவாளன், அவரது வழக்கறிஞர் மூலமாகச் சொல்லி அனுப்பிய தகவல்களின் தொகுப்பு இது!)   உச்ச நீதிமன்றத் தீர்ப்பு இறுதியானது மட்டுமே, குறையற்றது எனக் கொள்ள முடியாது. இதை நான் சொல்லவில்லை. சொன்னால், இந்திய நீதி அமைப்பு முறையைக் குற்றவாளியெல்லாம் குறை சொல்லலாமா எனச் ‘சிலர்’ கூக்குரல் எழுப்பவர்.   இந்தக்…

தொல்காப்பியம் காட்டும் பண்பாட்டு நெறிகள் 1/2 – தி.வே. விசயலட்சுமி

தொல்காப்பியம் காட்டும் பண்பாட்டு நெறிகள் 1/2        பண்டைத் தமிழரின் விழுமிய வாழ்வு சிறந்த பண்பாட்டையும்  செவ்வியல் இலக்கிய, இலக்கணங்களையும் தோற்றுவித்தது. அவற்றுள் காலத்தால் முற்பட்டதும். பெருமைக்குரியதுமாய் இருக்கும் நூல்  தொல்காப்பியமாகும். தமிழுக்கும், தமிழினத்திற்கு முதனூல். இந்நூலுக்கு முன்னர்த் தோன்றியனவாகச் சில நூல்கள் இருப்பினும், அந்நூல்களைப்பற்றி நாம் ஒன்றும் அறியக் கூடவில்லை. இடைக் காலத்தில் தொல்காப்பியப் பொருளதிகாரம் மறைப்புண்டிருந்தது என்பது தெரிய வருகிறது.      தொல்காப்பியனார் குறித்த வரலாறுபற்றிப் பலசெய்திகள் வழங்குகின்றன. அவற்றுள் தொல்காப்பியனாருடன் ஒரு சாலை மாணாக்கராகிய பனம்பாரனார் பாடிய தொல்காப்பியச்…