இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 23: ம. இராமச்சந்திரன்

(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 22 தொடர்ச்சி) 23 இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 23   அண்ணாவின் சிறப்பு   அறிவுடைய ஒருவரை அயல்நாட்டவரும் மதித்துப் போற்றுவர் என் பதற்கு இந்நிகழ்ச்சி ஒரு சான்றாகும். கற்போர்க்குச் சென்ற இடமொல்லாம் சிறப்பு என்னும் முதுமொழி உண்மையான்றோ? ஞாயிற்றின் ஒளியை மறைப்பவர் இஞ்ஞாலத்தில் எவரும் உண்டோ? இலர் என்று கூறலாம். ‘           அறிவுடை ஒருவரை அயலரும் போற்றுவர்             ஞாயிறு தன்னை நற்குடை மறைக்குமோ’ 58 ஐந்து நாட்கள் அன்புமிக்க தோழராய் விளங்கினார்…

சிங்கள வதைமுகாம் கொடுமைகள் 04 – மரு.து.வரதராசா:செவ்வி இர.சிரீகந்தராசா

(சிங்கள வதைமுகாம் கொடுமைகள் 03 இன் தொடர்ச்சி) [இனிவரும் பகுதிகளில் கொழும்பு நான்காம் மாடியில் தான் எதிர்கொண்ட  இன்னல்களையும், தற்பொழுது புலம்பெயர் நாடுகளில் தான் மேற்கொண்டு வரும் பணிகளையும் விவரிக்கின்றார். தமிழீழ மக்களுக்கு இழைக்கப்பட்ட பெருங்கொடுமையான இன அழிப்பிற்குப் பன்னாட்டு நீதி உசாவலின் (விசாரணையின்) மூலமே தீர்வு கிட்ட வேண்டும் என்பதை அவர் வலியுறுத்துவதோடு, உள்நாட்டு உசாவல் (விசாரணை) எந்தப் பயனையும் தராது என்பதையும் ஆணித்தரமாக எடுத்துக் கூறுகின்றார். ‘ஈழமுரசு’ இதழுக்காக அவரைச் செவ்வி கண்டவர் கலாநிதி இர.சிறீகந்தராசா.] இர.சிறீகந்தராசா: நீங்கள் கிளிநொச்சி தடுப்பு…

காலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 151-175: இலக்குவனார் திருவள்ளுவன்

(காலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 126-150 தொடர்ச்சி) காலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 151-175   செய்யா நின்றே எல்லாச் செந்தமிழ் மாலையும் பாடி – பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 325.2 ஆர்வம் உறப் பணிந்து ஏத்தி ஆய்ந்த தமிழ்ச் சொல் மலரால் – பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 326.3 மன்னு திரு மாற் பேறு வந்து அணைந்து தமிழ் பாடிச் – பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22….

தேர்தல் சீர்திருத்தம் எனக் கருதுவன நமக்கு ஏற்றன அல்ல! 2/2 – இலக்குவனார் திருவள்ளுவன்

(தேர்தல் சீர்திருத்தம் எனக் கருதுவன நமக்கு ஏற்றன அல்ல!  1/2 தொடர்ச்சி)   2/2   தேர்தல் சீர்திருத்தம் எனக் கருதுவன நமக்கு ஏற்றன அல்ல!  2/2    3.தொகுதிச் சார்பாளரைத் திரும்ப அனுப்பும் முறை    ஒரு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் அல்லது பிற வகை மக்கள் சார்பாளர் சரியாகச் செயல்படாதபொழுது அவரைத் திருப்பியனுப்பும் உரிமை மக்களுக்கு வேண்டும் என்கின்றனர்.   ஒருவரை நாம் தேர்ந்தெடுக்கும் பொழுதே பதவிக்காலமாகிய ஐந்தாண்டு முழுமையும் அவர் சிறப்பாகச் செயல்படுவாரா என்று ஆராய்ந்துதான்…

தேர்தல் சீர்திருத்தம் எனக் கருதுவன நமக்கு ஏற்றன அல்ல! 1/2 – இலக்குவனார் திருவள்ளுவன்

1/2 தேர்தல் சீர்திருத்தம் எனக் கருதுவன நமக்கு ஏற்றன அல்ல!  1/2      உலக நாடுகளில் பெரிய மக்களாட்சி அமைப்பு கொண்ட நாடு இந்திய  ஒன்றியம். இங்குள்ள தேர்தல் முறைகளில் மாற்றம் வேண்டும் எனப் பலரும் கூறி வருகின்றனர். ஆனால், உண்மையில் இங்குள்ள தேர்தல் முறை சிறந்த ஒன்றேயாகும்.நாம் கையாளும் முறையால் சில தவறுகள்  நேர்கின்றன. இதற்கு நாம் சரியான முறையில் கையாள வேண்டுமே தவிர, இந்த முறையையே மாற்ற  வேண்டும் என்று எண்ணுவது தவறாகும்.     சீர்திருத்தம் என எண்ணிக் கொள்வோர்…

செம்மறி ஆடாய்ச் செத்தது போதும்! – சச்சிதானந்தம் தெய்வசிகாமணி

செம்மறி ஆடாய்ச் செத்தது போதும்! செம்மொழி பேசும் பெருமை பெற்ற, நம்மினம் அறிவில் வறுமை உற்று, ஐம்புலன் கருகி ஆற்றல் இழந்து, பொம்மையைப் போலப் பேசாமல் இருந்து, செம்மறி ஆடாய்ச் செத்தது போதும்! இம்முறை யாவது சிந்தனை செய்து, சிம்மம் போலச் சீறி எழுந்து, செம்மை மிகுந்த தலைவன் கையில், நம்தமிழ் நாட்டின் ஆட்சியைக் கொடுப்போம்! சச்சிதானந்தம் தெய்வசிகாமணி

கருமலைத் தமிழாழனின் ‘மண்ணும் மரபும்’ – கவிதைத் தொகுப்புக்கு மா.செங்குட்டுவன் அணிந்துரை

மண்ணும் மரபும் – இளைய  தலைமுறையினருக்கு  இனிய  அறவுரைகள் நிறைந்த கவிதைநூல் – கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன்   ‘மண்ணின் மணம்’  என்னும் முதற்பகுதியில்  தமிழ் ஒரு பூக்காடு என்னும் தலைப்பில்  தாய்த்தமிழை வணங்கி, தமிழ்மணம் வீசச் செய்யும் பாடலில் தொடங்கி  தமிழ்கொலை  புரிந்து வரும் தொ(ல்)லைக்காட்சி வரை இக்காலத்திற்கு  மிகவும் தேவையான பல்வேறு தலைப்புகளில் பத்தொன்பது கவிதைகளைத் தந்துள்ளார்.   ‘மரபின் வேர்கள்’ என்று இரண்டாம் பகுதியில்  மாதரி வீட்டில் கண்ணகி, தமிழ்மன்னன் இராவணன் என்னும் தலைப்புகளில் அருமையான இலக்கிய விருந்து படைத்துள்ளார். தந்தை…

கொடுமைகள் கொளுத்த முன்வர வேண்டும்! – சச்சிதானந்தம் தெய்வசிகாமணி

மங்கையரே வாருங்கள்! கண்ணகிபோல் சீறுங்கள்! கார்குழல் சுருட்டி அள்ளி முடித்து, குடும்பச் சுமைகளைக் கொஞ்சம் விடுத்து, கூர்மதி படைத்த பெண்கள் கூட்டம், கொடுமைகள் கொளுத்த முன்வர வேண்டும்! அறுவை சிகிச்சையில் பிள்ளையைப் பெற்று, ஆயுள் முழுவதும் அல்லல் உற்றிட, அரக்கத் தனியார் மருத்துவத் தொழிலே, அடிப்படைக் காரணம் என்பதை உணர்ந்து, அனைவர்க்கும் மருத்துவச் சேவையை முழுதாய், அகிலத் தரத்தில் வழங்கும் அரசை, அச்சம் இன்றித் தேர்ந்து எடுங்கள்! அரசுப் பள்ளியின் தரத்தைத் தாழ்த்தி, கல்வியை வணிகம் ஆக்கும் அரசை, “பரத்தை” என்று பழித்தலும் தகுமே!…

தேர்தல் சீர்திருத்தம் – தஞ்சை இறையரசன்

தேர்தல்  சீர்திருத்தம் தேர்தல் நெருங்கிவிட்டது; சாலைகள் போடுகிறார்கள்; ஊர் ஊராக தெருத்  தெருவாக மக்களைச் சந்திக்கிறார்கள்; குடிசைக்குள் நுழைந்து கிழவிகளோடு படம்  எடுத்துக் கொள்கிறார்கள். தேநீர்க்கடைக்காரர் “இனி வருசம் ஒரு தேர்தல் வந்தாலும் நல்லதுதான்; தேர்தல் வரும் என்றதும் உடனே சாலை போடுகிறார்களே!” என்றார். பால் ஊற்ற வந்த உள்ளூர் ஆசிரியர் சொன்னார்: “இந்தத் தெருச் சாலை முன்று முறை போட்டதாச் சொல்லிப் பங்குபோட்டுக்கொண்டார்கள். அதிலே ஆளுக்குக் கொஞ்சம்பணம் போட்டு இப்ப இந்தச் சாலை!” “எவ்வளவு பெரிய பணக்காரர்களும் சேற்றிலே காலை வைத்துக் குடிசையிலே…

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 6. நல்லினஞ் சேர்தல்

(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 5 இன் தொடர்ச்சி) 6. நல்லினஞ் சேர்தல் நன்றெலாந் தருவது நல்லினத் தொடர்பே. நல்லவர்களின் நட்பு நன்மைகளை எல்லாம் தரும். நல்லவர் மெய்ந்நிலை நண்ணி நிற்போர். நல்லவர் என்பவர் உண்மையைச் சார்ந்து நிற்பவர்கள். அகத்துற வுற்றுமெய் யறிந்து நிற்போர். உண்மையைப் புரிந்து பற்றற்ற உள்ளத்துடன் இருப்பவர்கள். தவமு மொழுக்கமுந் தாங்கி நிற்போர். தவத்தையும் நல்லொழுக்கத்தையும் காத்து நிற்பவர்கள் . நன்னினைப் புரைசெயன் மன்னி நிற்போர். நல்ல நினைப்பு, சொல், செயல் மூன்றிலும் நிலைத்து நிற்பவரே நல்லினத்தார். உலகிய லெல்லா முணர்ந்து…

எங்கள் சமஉ – முனைவர் க.தமிழமல்லன்

எங்கள் சமஉ எங்கள் சமஉ இணையே  யற்றவர்! தங்கக் கடத்தல் தலைவர்! மாற்றான் மனைவியைக் கைப்பிடித்து மகளையும் மணந்தவர்! மனைவணி கத்தில் மாபெரும் கொள்ளையர்! ஒருமனை காட்டி இருவர்க்குப் பேசி! உருப்படி யாக உயர்த்தி விற்பவர்! காலில் விழுவதைக் கைகழுவி விட்டவர்! காலைக் காட்டிக் கவிழ்ந்திடச் சொல்லுவார்! மற்றவர் பணத்திலே பதாகை நட்டவர்! கற்றவர் நல்லவர் கறையிலா அறிஞரைப் பார்த்தால் பதறுவார்! வேர்த்துத் தம்மின் அறைக்குள் பதுங்குவார்! அண்ணன் தம்பி, கறைமது விற்பவன், காலைச் சொறிபவன், தேடித் தேடித் திறத்தைப் போற்றி விருதுகள் வழங்குவார்!…

முன்னேற்றப்பாதையில் மக்கள்நலக்கூட்டணி – இலக்குவனார் திருவள்ளுவன்

முன்னேற்றப்பாதையில் மக்கள்நலக்கூட்டணி     வழக்கமாக இரு கட்சிகளுக்கு வாக்களிப்போரில் பலரிடம் மாற்று எண்ணம் தோன்றியுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. இதற்கு முன்பும் இத்தகைய எண்ணம் தோன்றி, ஆனால், நம்பிக்கையின்றி முதன்மைக்கட்சிகளில் ஒன்றிற்கே வாக்களித்தனர். இந்த முறை, வெற்றி பெறுவார்களா  என எண்ணாமல் மக்கள் மன மாற்றத்தை முதலிரு கட்சிகளும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவாவது மாற்றி வாக்களிக்க எண்ணியுள்ளார்கள். இந்த மாற்று எண்ணத்தை அறுவடை செய்வதில் முதலிடம் மக்கள் நலக்கூட்டணிக்கு உள்ளது.   எல்லாக் கட்சிகளும் மாறிமாறி, முதலிரு கட்சிகளுடன் கூட்டணி வைத்துவிட்டு இப்பொழுது…