தமிழர் தம்முடைய பண்புகளிலும் பலவற்றை ஆரியருக்கு வழங்கினர் – பேராசிரியர் சு. வித்யானந்தன்

  தமிழர் நாகரிகத்தைப் பற்றிப் பல அறிஞர் கொண்ட புதுமையான கருத்துகள் வியப்பைத் தருவனவாகும். மிகப் பழைய காலத்திலும் திராவிடர்(தமிழர்) நாகரிகம் ஆரியர் நாகரிகத்துடன் கலந்திருந்தது எனக் கொண்டு அதற்குச் சான்று காட்ட முயன்றனர் இவர். பார்ப்பனரின் ஆதிக்கத்தனால் திராவிடருக்கு(தமிழர்) உரிய பண்பாடு ஆரியருக்குரிய பண்பாட்டோடு தொடர்பு படுத்தப்பட்டது. இக்காரணத்தால் மிகவும் பழைய தென்னாட்டு நாகரிகத்தை விளங்கிக் கொள்வது மிகவும் கடினமாகிவிட்டது. எனினும் பழங்காலத்தில் தென்னாட்டவரின் பண்பாடு ஆரியக் கலப்பு அற்றிருந்ததென ஓரளவுக்கு நிறுவலாம். இப்பொழுது கூடத் தமிழ் நாட்டிலும் ஈழத்தின் வடக்குப் பகுதியிலும் கிழக்குப்…

வெல்க பிறர் நெஞ்சு! – சேலம்பாலன்

இன்தமிழின் நற்கவிஞர் இலக்குவன் திருவள்ளுவன்(ர்)  அன்புடைத் தமிழ்ப்பணிக்கே அடியேனின் வாழ்த்துகள்! தங்கள் பணியெல்லாம் தாய்த்தமிழ் நற்பணியாய் எங்கெங்கும் உள்ளோர் இதயத்தால்-பொங்கிமகிழ் வெய்திடவே எந்நாளும் ஏற்றமுறப் பொங்கட்டும்! நெய்திடுக! வெல்கபிறர் நெஞ்சு! என்றும்தமிழ் அன்புடன் கவிமாமணி சேலம்பாலன், ஈரோடு

தமிழியம் காக்கும் ஆய்தம் இலக்குவனார் திருவள்ளுவன் – புதுவைத் தமிழ்நெஞ்சன்

தமிழ்மொழி தமிழினம் தமிழ்நிலம் உயர்வே தம்முயிர் மூச்செனும் திருவள்ளுவன் – செந் தமிழைப் போல தொன்மை மிகுந்த தொண்டறம் செய்யும் திருவள்ளுவன் வள்ளுவம் வழியில் வாழ்வினை ஏற்று வாழு கின்ற திருவள்ளுவன் – திரு வள்ளுவன் குறளை வாழ்வியல் நெறியால் வாழ்ந்து சிறக்கும் திருவள்ளுவன் ஆக்கப் பணிகளை ஆய்ந்தே செய்யும் அன்பர் அறிஞர் திருவள்ளுவன் – தமிழ் நோக்கம் ஒன்றே தம்பணி என்று தளரா துழைக்கும் திருவள்ளுவன் எளியர் தூயர் எப்பணி யாகிலும் எழிலாய் செய்யும் திருவள்ளுவன் – தமிழ்ப் புலியர் வலியர் புடவி…

தமிழர் வழிபாட்டு முறைகள் ஆரியத்தால் மறைக்கப்பட்டன.

    சில அறிஞர் சங்க நூல்களிற் சில ஆரியத் தெய்வங்கள் கூறப்பட்டுள்ளமையை அடிப்படையாகக் கொண்டு, சங்க காலப் பகுதியில் தமிழ் நாட்டில் ஆரியர் சமய வாழ்க்கைப் பண்பே சிறப்புற்றிருந்தது என்று கொண்டனர். இக்கூற்று ஏற்கத்தக்கதொன்றன்று. சங்கநூல்களில் விட்டுணு இந்திரன் முதலிய ஆரியத் தெய்வங்கள் இடையிடையே கூறப்பட்டுள்ளமை உண்மையே. ஆனால் நில இயற்கைக்கு ஏற்ப அமைந்த முருகன், கொற்றவை போன்ற திராவிடத் தெய்வங்களே மிகவும் சிறப்புடன் வணங்கப்பட்டு வந்தனர் என்பதையும் அதே நூல்களிலிருந்து அறியலாம். தமிழருக்கே தனியாக அமைந்த வழிபாட்டு முறைகளையும் அந் நூல்களிற் காண்கின்றோம்….

பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 26 – ஆ.வெ.முல்லை நிலவழகன்

(வைகாசி 10, 2046, மே 24, 2015 தொடர்ச்சி) காட்சி – 26   அங்கம்    :     கவிஞர், அன்பரசன் இடம்      :     குடிலின் முன்வாசல் நிலைமை  :     (நகையைக் கண்டு நகைத்த கவிஞர் நகைக்கோர் வழியை உரைக்கின்றார்) கவி  :     தாலிக்குத் தவியாய் தவித்தே ஒருவன் பாவியாய் இங்கே வாழ்ந்திடும் போது! பல வேலிக்கு சொந்தக்காரனின் வீட்டில் குவிந்தே கிடக்கும் கொடுமையைப் பாரேன் அன் :     இந்நிலை எதனால் புலவீர்? விந்தையுமன்றோ? கேட்க! கவி  :     போர்முனை அறியா ஒருவர்! இங்கே! இராணுவ…

தமிழா படி! தமிழில் படி! – புதுவைத் தமிழ்நெஞ்சன்

தமிழா படி! தமிழில் படி! படி… படி முயன்று படி முன்றேனப் படி! முப்பால் படி! படி… படி ஆழ்ந்து படி! ஆய்ந்து படி! அறம் படி! படி… படி பொதுமை படி! புரட்சி படி! பொருள் படி! படி… படி இனிது படி! இயற்கை படி! அகம் படி! படி… படி புரிந்து படி! புரியப் படி! புறம் படி! படி… படி நன்றாய்ப் படி! நயமாய்ப் படி! நாலடி படி!. படி… படி நிறையப் படி! நிறைவாய்ப் படி! நீளப் படி!…

தமிழ் வாழ்த்து – கவிஞர் முத்தரசன்

 நறுந்தமிழே வாழ்த்திடுவாய்! ஆர்ப்பரிக்கும் ஆட்சியிலும் ஆளுமைசெயும் தமிழே! போர்ப்பாட்டுப் பாடுதற்குப் புறப்பட்ட பூந்தமிழே! பொறுமையுடன் நடனமிடும் புதிரான தமிழே! பெருமையுடன் வாழ்த்துகிறேன்! பெருமிதமும் கொள்கின்றேன்! வந்தாரை வாழவைக்கும் வளமான செந்தமிழே! சொந்தமெனும் உணர்வோடு சொக்குகிற தமிழே! சிந்திக்கத் தெரிந்தவர்க்குச் சிரிக்கின்ற தமிழே! நிந்திக்கத் தெரியாத .நிலைத்தபுகழ்த்தமிழே! சொல்லில் அடங்காத சொல்லடுக்குத் தமிழே! பல்சுவையில் குன்றாத பழம்புகழே! பார்முதலே! வெல்கின்ற வழியெமக்கு விழிப்புடனே தந்திடுவாய்! நல்லோனாய் இருந்திடவே நறுந்தமிழே வாழ்த்திடுவாய்! – கவிஞர் முத்தரசன்

இனியொருநாள் வந்திடாதா? – சாப்டூர் சதுரகிரியான்

இனியொருநாள் வந்திடாதா? தமிழர் எல்லாம் எழுச்சியுற்றே செந்தமிழில் பேசி டாரா? கனியிருக்கக் காய்தின்னும் போக்கை மாற்றிக் கனிமொழியாம் நற்றமிழில் கற்றி டாரா? தனித்தமிழால் கல்விகற்றே உயர்ந்தி டாரா? சங்கக்காலம் மீண்டெழுந்தே வந்தி டாதா? இனித்திடும்நல் இலக்கியங்கள் தோன்றி டாதா? இனியேனும் தமிழினமே விழிப்பு கொள்வாய்! தமிழ்மொழியை மறக்கடிக்கும் மழலைப் பள்ளி தமிழர்க்குத் தேவைதானா? தமிழில் கற்றால் வாய்ப்பின்றி வாழவழி யற்றுப் போமோ? மறத்தமிழன் யாமென்று சொல்லல் பொய்யோ? வாய்கிழிய தமிழ்மொழியை வாழ்த்தி விட்டு மாற்றானின் மொழிவழியில் கற்பித் தல்ஏன்? தாய்தன்னைப் பேணுதல்நம் கடமை யன்றோ?…

தனித்தியங்கும் தன்மை தமிழினுக் குண்டு! – பாவேந்தர் பாரதிதாசன்

தமிழனே இது கேளாய் — உன்பால் சாற்ற நினைத்தேன் பல நாளாய்! கமழும் உன் தமிழினை உயிரென ஓம்பு காணும் பிற மொழிக ளோவெறும் வேம்பு! நமையெலாம் வடமொழி தூக்கிடும் தாம்பு நம்உரி மைதனைக் கடித்ததப் பாம்பு! தமிழனே இது கேளாய்! தனித்தியங் கும்தன்மை தமிழினுக் குண்டு; தமிழே ஞாலத்தில் தாய்மொழி பண்டு! கனிச்சாறு போற்பல நூலெலாம் கண்டு காத்ததும் அளித்ததும் தமிழ்செய்த தொண்டு. தமிழனே இது கேளாய்! வஞ்சகர் வந்தவர் தமிழாற் செழித்தார் வாழ்வினில் உயர்ந்தபின் தமிழையே பழித்தார் நம்செயல் ஒழுக்கங்கள் பற்பல…

திருக்குறளும் தொடர்பாடலும் – சிவா(பிள்ளை)

திருக்குறளும் தொடர்பாடலும்   தமிழர்கள் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே இந்தப் பூமியில் வாழ்ந்தாகப் பல செய்திகள் சொல்லப்படுகின்றன. அவ்வாறான ஒரு மொழி பேசிய இனம் சமூக மாற்றங்களைச் எதிர்கொள்ள என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று பார்ப்பது தமிழ் மொழியை மட்டுமே நம்பி அதற்காகத் தங்கள் உயிர் உடைமை உறவுகளைத் கூடத்தொலைக்கும் மக்களுக்கு முதன்மையானது. அந்தத் தேடலின் ஒரு பகுதி திருக்குறளில் தொடர்பாடல் பற்றி என்ன சொல்கின்றது என அறிந்துகொள்வதாகும்.   மனித இன முயற்சியின் இன்றைய மிகப்பெரும் வளர்ச்சி எது என்று கேட்டால்…

முள்ளிநிலத்தில் கள்ளக் கொலையாளிகள்! – – கவிஞர் தணிகைச் செல்வன்

முள்ளிப்போர் முனைமுகத்தில் முணைந்து சரணடைய  வெள்ளைக் கொடிவீசி வந்தாரை; விதிமீறி கள்ளக் கொலைசெய்த காட்டுவெறி காண்கிலையோ…!  பிள்ளைக் கறிகேட்கும் பேயர்களின் பலிகளமாம்  முள்வேலிக்குள் கதறும் மரணஒலி கேட்கலையோ…!  கொள்ளையர்கள் கொடுங்கரத்தில் குமரியர்கள் குமுறுகின்ற  வல்லுறவின் வதைகண்டும் மனசாட்சி வியர்க்கலையோ…!  ஒரு குவளை நீருக்கும், ஒரு கவளம் சோற்றுக்கும்  இரவலரைப் போல் ஏங்கும் ஈழவரைக் காண்கிலையோ…!  ஐயோ உலகே! ஐயகோ பேருலகே!  பொய்யோ உலகசபை ? புனைவுகளோ சபைவிதிகள் ?  கையேந்தி வந்தாரைக் கரமேந்தி காத்த இனம்  கையேந்துதல் காண்கிலையோ கஞ்சிக்கும் கருணைக்கும்.  எல்லாம் இழந்தோம்…

தமிழ் மொழியைத் தமிழால் வளப்படுத்துவோம்! – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழ் மொழியைத் தமிழால் வளப்படுத்துவோம்!     தமிழ் உயர்தனிச் செம்மொழி மட்டுமன்று!  மூவா முத்தமிழாய் விளங்குவது!மொழிகளுக்கெல்லாம் தாயாய்த் திகழ்ந்து முன்னைப் பழமைக்கும் பழமையாய் இருப்பினும் காலந்தோறும் வளர்ந்து பின்னைப் புதுமைக்கும்  புதுமையாய்த் திகழ்வது!   பாரதி கூறியவாறு“வானம் அறிந்த தனைத்தும் அறிந்த வளர்மொழி”  யல்லவா நம் தமிழ்! எனவே,  அறிவியல் வளர்ச்சிக்கேற்ப நாமும் காலந்தோறும் தமிழை வளப்படுத்த வேண்டும். ஆனால்,தமிழ்ச்சொற்களால் தமிழை வளப்படுத்துவதுதான் முறையாகும். இல்லையேல் தமிழ் நாளும் நலிந்து போகும்.   சிலர், ஆங்கிலம் உலக மொழியானதன் காரணம், பிற மொழிச்சொற்களைப் பயன்படுத்துவதுதான் எனத் தவறாக நம்பியும் எழுதியும் பேசியும்…