கல்வியில் ஏற்படும் முன்னேற்றமே நாட்டில் வளர்ச்சியை உண்டாக்கும் -ச.ம.உ. அம்பேத்குமார்

கல்வியில் ஏற்படும் முன்னேற்றமே நாட்டில் வளர்ச்சியை உண்டாக்கும்       – ஊர்ப்புற ஆசிரியர்களுக்கு இலவச மடிகணிணி  வழங்கும் விழாவில்                                வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் உரை –   வந்தவாசி.அக்.12.வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டுஊரில் உரேகா கல்வி இயக்கமும் இலயா அறக்கட்டளையும் இணைந்து  ஊர்ப்புற ஆசிரியர்களுக்கு இலவச மடிகணிணி  வழங்கும் விழாவை நடத்தின.   மன்பதையில் கல்வியினால் ஏற்படும் முன்னேற்றமே ஒரு நாட்டில்…

கவிஞர் மு.முருகேசு எழுதிய நூலுக்குக் குழந்தை இலக்கியப் பரிசு

கவிஞர் மு.முருகேசு எழுதிய நூலுக்குக்   குழந்தை இலக்கியப் பரிசு  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் ‘கு.சின்னப்பபாரதி குழந்தை இலக்கியப் பரிசு’ வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு ஊரைச் சேர்ந்த கவிஞர் மு.முருகேசு எழுதிய குழந்தைகளுக்கான சிறுகதை நூலுக்குக் கிடைத்துள்ளது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் ஆண்டுதோறும் தமிழில் வெளியாகும் சிறந்த படைப்பிலக்கிய நூல்களுக்குப் பரிசுகளை வழங்கி கெளரவித்து வருகிறது. 2015- ஆம் ஆண்டு வெளியான சிறந்த நூல்களுக்கான பரிசளிப்பு விழா இன்று (ஆவணி 09, 2047 /  செட்டம்பர் 25)  தேனியில் நடைபெற்றது;…

போராடத் தூண்டியவன் மாக்கவி பாரதி – மு.முருகேசு

குமுகாய அநீதிகளுக்கு எதிராகப் போராடத் தூண்டியவன் மாக்கவி பாரதி                  – பாரதியாரின் 95-ஆவது நினைவு நாள் விழா –       வந்தவாசி. வந்தை வட்டக் கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் மாக்கவி பாரதியாரின் 95-ஆவது நினைவு  நாள் சிறப்புக் கவியரங்கம் வந்தவாசி எசு.ஆர்.எம். இன்போடெக் கணிணிப் பயிற்சி மையத்தில் ஆவணி 27, 2047 / செட்டம்பர் 12, 2016  நடைபெற்றது.      இந்நிகழ்விற்கு, வந்தை வட்டக் கோட்டைத் தமிழ்ச் சங்கத் தலைவர் அ.மு.உசேன் தலைமையேற்றார். பொருளாளர் எ.தேவா அனைவரையும் வரவேற்றார். கவிஞர்கள் பா.சீனிவாசன்,…

தமிழகத்துக் கவிஞர் மு.முருகேசுக்குக் குவைத்து நாட்டில் இலக்கிய விருது.

 தமிழகத்துக் கவிஞர் மு.முருகேசுக்குக் குவைத்து நாட்டில் இலக்கிய விருது.  தமிழகத்தைச் சேர்ந்த கவிஞர் மு.முருகேசுக்குக் குவைத்து நாட்டில் செயல்படும் வளைகுடா வானம்பாடிக் கவிஞர்கள் சங்கத்தின் சார்பாக விருது வழங்கப்பட்டது.   திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியைச் சேர்ந்த கவிஞர் மு.முருகேசு, கடந்த முப்பதாண்டு காலமாகத் தொடர்ந்து இலக்கியச் செயல்பாடுகளில் ஈடுபட்டு வருபவர். இவரது எழுத்து முயற்சியில் இதுவரை 15 கவிதை நூல்கள், 6 கட்டுரை நூல்கள், 6 தொகுப்பு நூல்கள், ஒரு சிறுகதை நூல், 100-க்கும் மேற்பட்ட சிறுவர் இலக்கிய குறுநூல்கள் வெளியாகியுள்ளன. வந்தவாசி நூலக…

ஆயுதப் போராட்ட எழுச்சியால்விடுதலை பெற்றோம் – கவிஞர் மு.முருகேசு

ஆயுதப் போராட்ட எழுச்சியால் விடுதலை பெற்றோம் – 70-ஆம் ஆண்டு விடுதலைநாள் விழாவில் கவிஞர் மு.முருகேசு பேச்சு     வந்தவாசி:   ஆடி 30, 2047 / ஆக. 14 அன்று, வந்தை வட்டக் கோட்டைத் தமிழ்ச் சங்கம்,  ஆசிய மருத்துவக்கழகம் இணைந்து  வந்தவாசியில்  விடுதலைநாள்விழா-கருத்தரங்கம் நடத்தின.  இதில் வந்தை வட்டக் கோட்டைத் தமிழ்ச் சங்க அறிவுரைாயளர் கவிஞர் மு.முருகேசு பங்கேற்றுப்பேசினார்.    இவ்விழாவிற்கு வந்தை வட்டக் கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவரும் மொழிப்போர் ஈகையாளருமான அ.மு.உசேன் தலைமையேற்றார். செயலாளர் பா.சீனிவாசன் அனைவரையும் வரவேற்றார். தொழிலதிபர்…

கவிஞர் மு.முருகேசு எழுதிய சிறுகதை நூலுக்குப் பரிசு

கவிஞர் மு.முருகேசு எழுதிய சிறுகதை நூலுக்குக் கம்பம் பாரதி தமிழ் இலக்கியப் பேரவையின் பரிசு     வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு  ஊரைச் சேர்ந்த கவிஞர் மு.முருகேசு எழுதிய ‘இருளில் மறையும் நிழல்’ சிறுகதை நூலுக்குக் கம்பம் பாரதி தமிழ் இலக்கியப் பேரவை சிறந்த சிறுகதை நூலுக்கான இரண்டாம் பரிசினை வழங்கியது.   கடந்த 37 ஆண்டுகளாகக் கம்பத்தில் இயங்கிவரும் பாரதி தமிழ் இலக்கியப் பேரவை ஆண்டுதோறும் தமிழில் வெளியாகும் சிறந்த நூல்களுக்குப் பரிசுகளை வழங்கிச் சிறப்பித்து வருகிறது. ஆண்டுதோறும்  விடுதலைத் திருநாளன்று  நடைபெறும் இந்தப்…

மு.முருகேசின் கதை நூலுக்கும் பிறர் நூல்களுக்குமான திறனாய்வுக் கூட்டம், கோவை

  தமுஎகச – இலக்கியச் சந்திப்பு – நிகழ்வு – 172 07.08.2016 – ஞாயிறு காலை 10 மணி – தாமசு மன்றம், தொடரி நிலையம் அருகில், கோவை. தலைமை – பா.க.சு.மணியன் நூல்கள் அறிமுகம்: மு.முருகேசின் சிறுகதைத் தொகுப்பு ‘இருளில் மறையும் நிழல்’ உரை – சூர்யா கா.சு. வேலாயுதனின் – ‘உச்சாடனம்’ (கலைஞரைச் சந்தித்திராத அனுபவங்கள் ) உரை –  சி..டி. இராசேந்திரன் அகிலாவின் கவிதை நூல் ‘மழையிடம் மெளனங்கள் இல்லை ‘ உரை – செ.மு.நசீமா பருவீன் ஏற்புரை:…

குழந்தைகளுக்கான எளிய வாசிப்பு நூல்கள் வழங்கும் விழா, வந்தவாசி

அகநி வெளியீட்டகம் -இலயா அறக்கட்டளை சார்பாக குழந்தைகளுக்கான எளிய வாசிப்பு நூல்கள் வழங்கும் விழா    அகநி வெளியீட்டகம்-இலயா அறக்கட்டளை சார்பாகக் குழந்தைகளுக்கான எளிய வாசிப்பு நூல்கள் வழங்கும் விழா வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு  ஊரிலுள்ள பாரதி சமூக – கல்வி ஆய்வு மையத்தில்  ஆனி 12, 2047 சூன் 26, 2016 அன்று நடைபெற்றது.    இந்நிகழ்விற்கு இராமலிங்கம் குழும உரிமையாளர் இரா.சிவக்குமார்  தலைமையேற்றார். கொடுங்காளூர் மா.குமரன் அனைவரையும் வரவேற்றார்.      நிகழ்வில், வந்தவாசி முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் அன்சாரி, நூலகர் கு.இரா.பழனி, …

படிப்பதால் மட்டுமே விழிப்புணர்வுச் சிந்தனையைப் பெற முடியும்! – கவிஞர் மு.முருகேசு

புத்தகம் படிப்பதால் மட்டுமே குமுகாய விழிப்புணர்வுச் சிந்தனையைப் பெற முடியும்!     – உலகப் புத்தக நாள் விழாவில் நூலக வாசகர் வட்டத் தலைவர் பேச்சு   வந்தவாசி.ஏப்.17. வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தின்  நூலக வாசகர் வட்டம் சார்பில் நடைபெற்ற உலகப் புத்தக நாள் விழாவில், “ஒவ்வொரு மனிதனும் புத்தகம் படிப்பதனால்மட்டுமே  குமுகாய(சமூக) விழிப்புணர்வுச் சிந்தனையைப் பெற முடியும்” என்று நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேசு குறிப்பிட்டார்.      இவ்விழாவில் பங்கேற்ற அனவரையும் கிளை நூலகர் கு.இரா.பழனி வரவேற்றார்.  ஊர்…

கவிஞர் மு.முருகேசுக்குச் ‘செம்பணிச் சிகரம் விருது’

கவிஞர் மு.முருகேசுக்குச் ‘செம்பணிச் சிகரம் விருது’ வழங்கப்பட்டது   வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு ஊரைச் சேர்ந்த இதழாளர் கவிஞர் மு.முருகேசுக்குப் புதுச்சேரி குழந்தைகள் கலை இலக்கிய வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் ‘செம்பணிச் சிகரம் விருது’ வழங்கப்பட்டது.     மார்கழி 01, 2046 / திசம்பர் 17, 2015 இல் புதுச்சேரியில் நடைபெற்ற இவ்விழாவிற்குப் புதுச்சேரி கம்பன் கழகச் செயலாளர் வே.பொ.சிவக்கொழுந்து தலைமையேற்றார். குழந்தைகள் கலை இலக்கிய வளர்ச்சிக் கழகத தலைவர் கலைமாமணி அ.உசேன் அனைவரையும் வரவேற்றார்.     புதுச்சேரி மாநிலச் சட்டப்பேரவைத் தலைவர் வ.சபாபதி…

வட்டக்கோட்டைத் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் நிலவேம்பு மருத்துவநீர்

வந்தவாசியில் வட்டக்கோட்டைத் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் நிலவேம்பு மருத்துவநீர் வழங்கப்பட்டது. கார்த்திகை 13, 2046 / நவம்பர் 29, 2015:    வந்தை வட்டக் கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில்  எலும்பு முறிவுக் காய்ச்சல் (Dengue fever)பற்றிய விழிப்புணர்வைத் தூண்டும் வகையில் நில வேம்புக்கருக்கு (கசாயம்) வழங்கும் விழா வந்தவாசி தேரடியில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கத் தலைவர் அ.மு.உசேன் தலைமையேற்றார். சங்கச் செயலாளர் பா.சீனிவாசன் அனைவரையும் வரவேற்றார். சங்க  அறிவுரைஞர் கவிஞர் மு.முருகேசு, சங்கப் பொருளாளர் எ.தேவா, கிளை நூலகர்…

வந்தவாசி வாசகர் வட்ட முப்பெரு விழா

தேசிய நூலக வார விழாப் போட்டிகளில் வென்ற  பள்ளி மாணவ – மாணவிகளுக்குப் பரிசளிப்பு விழா .          வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தின் நூலக வாசகர் வட்டம், எசு.ஆர்.எம் இன்போடெக்கு கணிணி நிறுவனம், சிரீகிருட்டிணா பயிற்சி மையம், இணைந்து 48-ஆவது தேசிய நூலக வார முப்பெரும் விழாவினை நடத்தின. இதனை முன்னிட்டுப் பள்ளி மாணவ – மாணவிகளுக்கு ஓவியப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி ஆகியவை வந்தவாசி அரசு பெண்கள் மேனிலைப் பள்ளி வளாகத்தில்   கார்த்திகை 04, 2046…