உள்ளத்தை வெளிப்படுத்து – சுமதி சுடர்

உள்ளத்தை வெளிப்படுத்து வாழ்க வளமுடன் நாள்தோறும் நினைவில் உள்ளத்தை வெளிப்படுத்து கதை சொல் கவிதை இயற்று கட்டுரை வரை பேசிப் பழகு நடித்து மகிழ் நாட்டியம் ஆடு ஓவியம் தீட்டு சிலை வடி பாட்டுப் பாடு கடிதம் எழுது  – சுமதி சுடர், பூனா http://sudarwords.blogspot.in/

பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 3 – ஆ.வெ.முல்லை நிலவழகன்

  (மார்கழி 28, 2045 / திசம்பர் 14, 2014 தொடர்ச்சி)     காட்சி –3 அங்கம்    :     கவிஞர், அன்பரசன், இடம்      :     கவிஞரது குடில் நிலைமை  : (கூரிய விழியாம்! உழைக்கும் தோளாம்!                    வீரிய நெஞ்சாம்! அன்பரசன் தனக்குத்தானே குடில் முன்னே! மனக்குறையோடு உரைக்கின்றான்!) அன்ப :   காலம் உணர்ந்த கவிஞருக்கு ஞாலப்பரிசு ஒரு குடிலோ; வணக்கம் புலவரே! வணக்கம்! மனநிறைவான வணக்கம்! கவி     :  யாரது? ஓகோ! வா! வா! தம்பி அன்ப   : …

மாய்ப்பதுவா மதவேலை?- முனைவர் க.தமிழமல்லன்

மாய்ப்பதுவா மதவேலை? முனைவர் க.தமிழமல்லன் பாக்கித்தான் பெசாஅவரில் பள்ளிக்குள் சுட்டார்கள் பயனென்ன? நுாற்றுக்கும் மேல்குழந்தை உயிர்பறிப்பால்? ஆக்கித்தான் பார்க்கின்ற அரும்பணியில் இறங்காமல் அறியாத குழந்தைகளை அழித்ததனால் என்னபயன்? போக்குவதால் பல்லுயிரைப் புதுவளர்ச்சி மதம்பெறுமா? போர்க்களத்தில் காட்டாத பெருவீரம் பேதைமையே! நீக்குங்கள் வன்முறையை நிலையான நல்லன்பை நிலவுலகில் விதையுங்கள்! நிலைக்காது மதவெறிகள்! நல்வாழ்க்கை மக்களுக்கு நல்கத்தான் பன்மதங்கள், நாட்டோரை அச்சத்தால் நடுக்குவது மதப்பணியா? கொல்லாத நற்பரிவைக் கொடுப்பதுதான் நன்மதங்கள், கொலைக்களமாய்ப் பள்ளிகளைக் குலைப்பதுவா மதவேலை? பொல்லாத மதப்பிணியால்  கொல்நெஞ்சம் ஆகாமல் புத்தன்பு நீர்கொண்டு புதுக்கிவிடல் மதமன்றோ?…

இலக்கு – காவிரிமைந்தன்

இலக்கு   இதயத்தின் மையப்புள்ளி எதைநோக்கிப் பார்க்கிறதோ அதுதான் இலக்கு! முறையான செயல்செய்யும் அறிவான பெருமக்கள் தேர்ந்தெடுப்பது இலக்கு! நடைபோடும் வாழ்க்கையிலே நாம்விரும்பும் பயணங்கள் அமைப்பதற்கு இலக்கு.. வெற்றிக்கும் தோல்விக்கும் விடைசொல்லிப் பார்த்தாலே மத்தியிலே அமர்ந்திருக்கும் இலக்கு! திட்டங்கள் இடுவோரின் திண்மையாவும் தீர்க்கமாய்த் தெரிவதிந்த இலக்கு! தட்டுத்தடுமாறிக் கால்பதித்து நடக்கத் தொடங்கிய நாள்முதலாய் குட்டிக்குட்டியாய் இலக்குகள்! நமக்குள் நாமே கூர்மைகொள்ள அமைத்திடும் இலக்குகள் ஆயுதமாகும்! சிந்தனையொன்றிச் சிறப்பாய்ச் செயல்பட வகுத்திடும் இலக்குகள் வழிவகுக்கும்! வாழ்வின் பொருளை வகையாய் அறிந்தோர் வசப்படுத்துவது இலக்கு! வாகைசூடிட நினைப்போரெல்லாம் வாரியணைப்பது…

கடைநிலை மாறுமா ? – சிலேடைச் சித்தர் சேதுசுப்பிரமணியம்

கடைநிலை மாறுமா ?   மது கொடுக்கும் மயக்கத்தால் மதியிழக்கும் மாக்களெல்லாம் நிதியிழப்பார் ,  மன நிம் – -மதியிழப்பார் , குடல் கெட்டு , உடல் கெட்டு உயிரிழப்பார் .குடும்பத்தார் கதியிழப்பார் , மங்கலப் பெண்டிரெல்லாம் மங்களம் இழப்பார் , மண் கலமாய் உடைந்திடுவார் மகன்கள் கல்வியிழப்பார் , மகள்கள் மணமிழப்பார் . சந்தடி ஏதுமின்றி சந்ததியே   மறைந்துவிடும். இரக்கமின்றி அழிக்கும் அரக்கன் என்பதனால்தான் ஆங்கிலத்தில் ‘ ARRACK ‘ என்றழைத்தாரோ . ‘குடி குடி கெடுக்கும் ‘ என்று பொடி எழுத்தில்…

பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! – காட்சி 2

[கார்த்திகை 21, 2045 / திசம்பர் 7, 2014 இதழின் தொடர்ச்சி]   காட்சி – 2 அங்கம்    :     ஆண் சிட்டு, பெண் சிட்டு இடம்      :     குருவிக் கூடு நிலைமை  :     (சிட்டுக்கள் இரண்டும் மெட்டுரையாடல்) ஆண்   :  என்ன பேடே! சிரிப்பென்ன? எனக்கும் சொல்லேன்! சிரிக்கின்றேன்! பெண் :   என்னவோ! வாழ்வை நினைத்திட்டேன்! இனிமையில் என்னையே மறந்திட்டேன்! வண்ண எண்ணங்கள் விரிந்ததனால் என்னையே மறந்து சிரித்திட்டேன்!   ஆண் :   அதுவா! உண்மை! உண்மைதான்! இதயம் குளிர்ந்த சிரிப்புத்தான்! இனிய…

தூததும் நினைவே அன்றோ ! – திருமதி சிமோன்

தூததும் நினைவே அன்றோ ! – திருமதி சிமோன்     காலமோ மாறி ஓடும்   கற்பனை, சுவையும் மாறும் ! ஞாலமோ சுமையை வாழ்வில்   நாளுமே ஏற்றி வைக்கும் ! பாலமாய் நின்று தாங்கும்   பாசமும் மறைந்து போகும் ! தூலகம் (விடம்) நிறைந்த போதில்   தூததும் நினைவே அன்றோ !  எண்ணும் பொழுதில் விளையாடும்   இளையோர் நினைவும் அதிலன்றோ ! வண்ணம் மின்னும் காதலதும்   வாழ்வில் மாந்தர் நினைவன்றோ ! திண்ணம் முதியோா் கனவெல்லாம்   தேடும் வம்ச வளமன்றோ ! சுண்ணம் (தூசு) போன்று மறைந்தேகி   தொடரும் கடிதோர்…

கண்டீரா ஓர் இறும்பூதை ! : இளையவன் – செயா

மதுரைப் பாவலர் மா.கந்தையா அவர்கள் தமது மாரடைப்பில் நலந்தேறியபின் தமது மக்களுக்க்கு எழுதிய கவிதை மடல் தமிழ் உணர்வும் ஊற்றமும் பெரியாரிய உறைப்பும் மிக்க அப் பாவலர் தமிழ்த்தாய் அருளால் நலமோங்க வாழ வாழ்த்துகிறோம். – முனைவர் மறைமலை இலக்குவனார்     கண்டீரா  ஓர்  இறும்பூதை ! திருப்பாற்   கடலில்   திருஅமுதம்  எடுக்க ஒருபுறம் தேவர்கள் மறுபுறம் அசுரர்கள் மேருமலையை மத்தாக குறும்பாம்பாம் வாசுகியை பெரும்கயிறாகக் கொண்டு  பெருங்கடலைக் கடைந்தனராம் ! கண்டான்வாலி அனைவரையும் கண்ணால் அகலச்செய்து கையால்  கடைந்தான் ;  கடைந்தவரிடம் அமுதம்தந்தானாம்…

இன்றும் இருக்கிறார் இலக்குவனார் – ஈரோடு தமிழன்பன்

இன்றும் இருக்கிறார் இலக்குவனார்   வைகை இலக்குவனார் வாழ்ந்தவரை தட்டுப்பாடில்லாமல் ஓடிக் கொண்டிருந்தது தமிழ் வெள்ளத்தால் மதுரைத் தென்றல் அவரிடம் மாணவராய் இருந்து புயலாவ தெப்படி என்று பயின்று கொண்டது கண்ணகி எரித்த நெருப்பின் மிச்சத்தில் இந்தித் திணிப்புக்கு எரியூட்டியவர் இலக்குவனார் இயற்றமிழ்மேல் இசைத்தமிழுக்கும் நாடகத் தமிழுக்கும் பொறாமை ஏற்பட்டதுண்டு! இயலுக்குக் கிடைத்ததுபோல் ஓர் இலக்குவனார் கிடைக்கவில்லையே என்று! ஏகபோகம் எங்குமே எதிர்க்கப்பட வேண்டியதுதான்! ஆனால் புலமை ஏகபோகத்தை எப்படி எதிர்ப்பது? பொழிப்புரை பதவுரைப் புலவரல்லர் அவர், விழிப்புரை உணர்வுரைப் புலவர்! சங்கப் புலவர்…

சொல் மந்திரம் – செயல் எந்திரம் : அ.ஈழம் சேகுவேரா

சொல் மந்திரம் செயல் எந்திரம்   நாம் விதைப்பதற்காக நிலத்தைக் கிளறினோம், அவர்கள் புதைப்பதற்காக நிலத்தைக் கிளறினார்கள். நாம் கதிரறுக்கக் கத்தி எடுத்தோம், அவர்கள் கருவறுக்கக் கத்தி எடுத்தார்கள். நாம் சூடு மிதித்தோம், அவர்கள் சூடு வைத்தார்கள். பாடுபட்டு விளைஞ்சதெல்லாம் வீடு கொண்டு வந்து சேர்க்க முயன்றோம் வழி மறித்தார்கள். நம் மடியில் கை வைத்தார்கள். கலங்கப்பட்டோம் கலவரப்பட்டோம் கூனிக்குறுகியது ஆத்மா. விளைபூமி வினைபூமியாயிற்று. இசைந்து போதல் சுகம் என்றார் சிலர். மசிந்து போனாலே இருப்பு என்றார் சிலர். கட்டுடைத்து குலைந்து போனது ஒரு…

அறிவியல் வாசலில் தமிழ் – கு. செ. சிவபாலன்

                      அறிவியல் வாசலில் தமிழ்  முக நூலில் முகமறியா ஒருவன் கேட்டான் என்ன உண்டு தமிழில் – சொன்னேன் தமிழ் . . . அணுவைத் துளைத்தலை அன்றே சொன்ன அவ்வை மொழி. உலகம் இயங்க உரக்க முழங்கிய வள்ளுவன்  வாய் மொழி. உடற் பிணி குறைய , மனக்குறை  மறைய சமூகம்  பற்றி , சரித்திரம் பற்றி சொல்லாத பொருள் உண்டோ தமிழில் ? வளம் உண்டு. நயம் உண்டு –  என்றாலும் அறிவியல் தேடலில் , தேவையில் தேயுமோ தமிழ் மொழி…

ஆதலினால் காதல் செய்வீர் – (உ)ருத்ரா

  புலிநகக்கொன்றை கரையெல்லாம்பூத்திருக்க‌ உறுமல் ஒன்று கேட்குதையா! உள்ளெல்லாம் கிடு கிடுக்க. எக்கர் ஞாழல் அடர்ந்த சோலை அலையொடு சேர்ந்து அழுதே அரற்ற‌ நாணல் கீற்றும் பச்சைத்தீயாய் நாடியெல்லாம் பற்றி எரிக்குதே. பொருள் வயின் செல்கிறேன் என‌ கடுஞ்சுரம் ஏகிவிட்டாய்..இங்கு குருகு கூட பறைச்சிறகை படபடத்து துடி துடித்துக்காட்டுதையா. உள்ளே நில நடுக்கம் தவிடு பொடி ஆக்கியதில் நான் எங்கே? என் உடல் எங்கே? என் உறுப்புகளும் கழன்றனவே! இதழ் குவிக்கும் ஒரு பக்கம் சொல் அங்கே இறந்துவிழ. சிறுபயல் பிய்த்திட்ட‌ பாவை நான்…