கொரண்டிப் பூ!
இளையவன் – செயா மதுரை பெரியார் ஆண்டு 135 தொ.ஆ.2878 தி.ஆ. 2045 சுறவம் ( தை ) 16 29–01–2014 ஆழி நீர்ப்பரப்பில் ஆடுகின்ற நிழலாய் ஊழிப் பெருவாழ் விலுழன்று உதட்டாலே வாழி வாழியெனும் வாழ்த்துக்கு வயமாகித் தாழியள வாய்த்தாங்கும் துன்பச் சுமைதனை மறப்பதற் கோர்நாள் மல்லைநகர் சென்றிந்தேன் பிறப்பதன் பெரும்பயனை பிற்றைநாள் மக்களுக்கு உரைப்பது போன்றுருவச் சிலைகள் என்னுளத்துச் சிறுகு மறக்கப் பெருந்துணை ஆயிற்றே! மல்லை நகரின் மாண்புறு துறைஅன்று சொல்ல ரியபொருட் களைச்சேர்த் தனுப்பி இல்லை எமக்கீடென எழிலுட …
நெருப்பாய் நிமிர்ந்தான் முத்துக்குமரன்
– புதுவைத் தமிழ்நெஞ்சன் சூடற்ற தமிழனுக்குச் சூடேற்ற முத்துக்குமரா….! தீப்பந்தம் ஆனாய் – நாடற்ற ஆரிய நாடோடிக் கூட்டமிங்கே நம்மினத்தை அழிக்கிறதே வீணாய்! இந்தீய அரசுன்னைப் படுகொலையும் இம்மண்ணில் செய்தது தான் உண்மை – குமரா..! செந்தீயாய் தமிழினமும் தலைநிமிர தீக்குளியல் செய்ததெல்லாம் வன்மை! யாரென்று நேற்றுவரை நானறியேன் தமிழ்க்குமரா இம்மண்ணில் உன்னை – உன்னை யாரென்று அறியாதார் இன்றில்லை என்பதுதான் நாமறிந்த உண்மை! ஈழத்தில் எரிகிறதே இந்தீயா மூட்டிவிட்ட இனவெறியாம் நெருப்பு – தமிழ் ஈழத்தை அழிக்கின்ற பகையினத்தை அழித்தொழிக்க தமிழ்மறவா விரும்பு!…
செந்தழலில் மூழ்கிய செம்மல் : அவன் பெரியசாமி
– கே இராமையா 1. பொங்கியெழுந் தென்கடலி னடுவே தோன்றிப் பொதிகைமலைச் சாரலெல்லாம் புனலோ யோடிப் பொங்கரிடைத் தென்றலெனப் பூவோ டாடிப் புகழ்மறவர் தென்பாண்டிக் கூடல் சேர்ந்து சங்கமமர்ந் தகமகிழப் புறமு மார்ப்பச் சதிராடி வந்தவளே! தமிழே! தாயே! மங்கரவுன் புகழ்வாழ வாழ்வா யுன்றன் மக்களுளோம் மண்டமர்க்கு மயங்கா மள்ளர் 2. சீராருந் தாயேநின் சேயே னோர்நாள் செத்தபிணம் படையெடுத்து வருதல் கண்டேன் போராட லேன்? பிணங்கள் தானே விழும் பூசலெதற் கென்றிருந்தே னானா லன்னாய்! நேராத செயல்நேரக் கண்டேல் வேலி நெற்பயிரை…
“மொழிகாக்க உயிர் நீத்த தமிழ் மறவர்கள்”
ஆதிக்க இந்தி, தமிழ்வேரில் கொதிநீர் ஊற்றிய கொடுமையைக் கண்டு சிறையில் மாண்ட வீரச்செம்மல் “நடராசன்!” இந்தி எனும் தேள் தமிழன் தோள் மீது ஏறுவதைக்கண்டு அதை நசுக்கிட எழுந்தான் “தாளமுத்து!” அவன் சிறையில் மடிந்த தமிழ்ச்சொத்து. இந்தியை எரிக்க தன்னுடல் எரித்த முதல் நெருப்பு “கீழப்பழுவூர் சின்னச்சாமி!” இவன்தான் நெருப்புக்குத் தமிழை அறிமுகம் செய்தவன்! தமிழுக்காக தீயைத் தீண்டியது “சிவலிங்கத்தின்” சந்தன உடல்! அது இந்தியை எரிக்க, செந்தீயைத் தின்றது. தமிழைக் காக்க தன்னுடலைத் தீயாக்கி, “இந்தி”யப் பேயைப் பொசுக்க, உயிரைச் சிந்திய தீரன்……
எங்கும் இன்பம் இனிதே பொலிகவே!
குறள்நெறி ஓங்கி குடியர சுயர்ந்து பசியும் பிணியும் பகையும் நீங்கி வசியும் வளனும் சுரந்து வாழியர் வையகம் வாழ்க; வான்தமிழ் வெல்க உழைப்பே உயிரென உலகுக் குணர்த்தும் பொங்கற் புதுநாள் பொலிவுடன் சிறக்க எங்கும் இன்பம் இனிதே பொலிகவே. – செம்மொழிச்சுடர் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் (குறள் நெறி பொங்கல் ஆண்டு மலர் 15-01-1965)
தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து !
உலகின் வடிவம் உருண்டை என்பதை உருபெரும் அறிவியலாளர் கலிலியோ கூறினார் கலிலியோ கூற்றை கண்கண்ட நாடுகளுக்கு கருத்துரையாகப் பரப்புரை செய்தார் ஆனால் ஈராயிரத்து ஐநூறுக்குமுன்னே சீராயிரம் படைத்த இருவரிமறை ஆசான் திருவள்ளுவப் பெருமகன் உருவான உலகம் உருண்டை என்றே இருவரியிலே உலகிற்கு இயம்பினார் அன்றே ! ” சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் ; அதனால் உழந்தும் உழவே தலை ” என்றாரே படித்தனர் ஆயினும் பரப்புரை செய்தனரா ? பிறநாட்டார் சொல்லையே போற்றிப் புகழ்ந்தனரே ! சுழலும் உலகம்கூட உழவரின் பின்செல்லும் நிழலாக இருக்கிறதென …
இயற்கை எழில் !
வான்மிதந்து சென்றடையும் கதிரவனைத் தான்தழுவி ஒளிஉமிழும் தண்நிலவில் கண்நிறைந்த காட்சிகாண கடல்வெளியில் மண்மீது படுத்தேன்என் கண்முன்னே தொங்கிச் சுழலும்இப் பூமிப்பந்தில் தங்கிவாழும் மக்கள்குலம் தழைக்க பொங்கிவழியும் அழகுடன்நம் பூமித்தாய் இங்கிருக்கும் மக்களுக்கே படைத்தாள் குறிஞ்சிமுல்லை குறையாத மருதத்துடன்நாம் அறிந்த நெய்தல்பாலை எனப் படைத்தாளே ! ஐவகைநிலத்தை அழகுடன் பார்த்தேன் மூவகைத் தமிழுடன் முத்திரைபதித்து பாவகையுடன் பைந்தமிழ்ப் புலவர்கள் பாடக்கேட்டேன் இயற்கை எழில்பற்றி ! எங்கு பார்க்கினும் மக்களெல்லாம் பொங்கும் மகிழ்ச்சியால் பூரித்ததையும் வறுமையைப் புறந்தள்ளி வாழும் வளமையும் கண்டேன் நாட்டில் ! இயற்கை அன்னை …
தமிழைப் போற்ற வாருங்கள்!
– இளவல் அண்ணா! அக்கா! வாருங்கள்! பள்ளி செல்வோம் வாருங்கள்! பாடம் படிப்போம் வாருங்கள்! பாரில் உயர்வோம் வாருங்கள்! அண்ணா! அக்கா! வாருங்கள்! பள்ளி செல்வோம் வாருங்கள்! கலைகள் பயில்வோம் வாருங்கள்! களிப்பாய் வாழ்வோம் வாருங்கள்! அண்ணா! அக்கா! வாருங்கள்! பள்ளி செல்வோம் வாருங்கள்! ஒன்றாய் ஆட வாருங்கள்! நன்றாய்ச் சிறக்க வாருங்கள்! அண்ணா! அக்கா! வாருங்கள்! பள்ளி செல்வோம் வாருங்கள்! நாளும் அறிவோம் வாருங்கள்! நலமாய்த் திகழ்வோம் வாருங்கள்! அண்ணா! அக்கா! வாருங்கள்! பள்ளி செல்வோம்…
சாகித்திய அக்காதெமி போக்கை மாற்றிக்கொள்ள பேரா. மறைமலை வேண்டுகோள்!
சாகித்ய அகாதெமி 2013- ஆம் ஆண்டுக்கான படைப்பிலக்கிய விருதுகளை அறிவித்துள்ளது. இவற்றுள், தமிழ்க்கவிதைப் படைப்பிற்கான விருது எதுவும் அறிவிக்கப்படவில்லை. இது குறித்துக் கண்டித்துப் பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனார், சாகித்ய அகாதெமி, இனியேனும் தன் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். அவரது வேண்டுகை வருமாறு :- தமிழ் ஒரு கவிதைமொழி எனப் போற்றுகிறோம். மென்மையும் நுண்மையும் பண்பாட்டு மேன்மையும் கொண்ட தமிழ்க்கவிதை உலகெங்கும் போற்றப்பட்டுவருகிற சூழல் மகிழ்வளிக்கிறது. ஏனைய மொழிப்பிரிவுகளில் அடிக்கடி கவிதைநூல்கள் சாகித்திய அக்காதெமி விருது பெறுவதைக்…