திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 049. காலம் அறிதல்
(அதிகாரம் 048. வலி அறிதல் தொடர்ச்சி) 02. பொருள் பால் 05. அரசு இயல் அதிகாரம் 049. காலம் அறிதல் செய்யத் துணிந்த செயலுக்குப் பொருந்தும் காலத்தை ஆராய்தல் பகல்வெல்லும், கூகையைக் காக்கை; இகல்வெல்லும் வேந்தர்க்கு, வேண்டும் பொழுது. காக்கை, கோட்டானைப் பகல்வெல்லும்; ஆட்சியார்க்கும் காலம் மிகத்தேவை. பருவத்தோ(டு) ஒட்ட ஒழுகல், திருவினைத், தீராமை ஆர்க்கும் கயிறு. காலத்தோடு பொருந்திய செயற்பாடு, செல்வத்தைப் கட்டிக்காக்கும் கயிறு.. அருவினை என்ப உளவோ….? கருவியான்,…
திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 048. வலி அறிதல்
(அதிகாரம் 047. தெரிந்து செயல் வகை தொடர்ச்சி) 02. பொருள் பால் 05. அரசு இயல் அதிகாரம் 048. வலி அறிதல் செயற்படும் முன்னம், எல்லாவகை வலிமைகளின், திறன்களின் ஆய்வு. வினைவலியும், தன்வலியும், மற்றான் வலியும், துணைவலியும், தூக்கிச் செயல் செயல்வலி, தன்வலி, பகைவலி, துணைவலி ஆராய்ந்து செய்க. ஒல்வ(து), அறிவ(து), அறிந்(து),அதன் கண்,தங்கிச் செல்வார்க்குச், செல்லாத(து) இல். முடிவதை, செயல்அறிவை ஆய்ந்து செய்தால், முடியாததும் இல்லை. உடைத்தம் வலிஅறியார், ஊக்கத்தின்…
திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 047. தெரிந்து செயல் வகை
(அதிகாரம் 046. சிற்றினம் சேராமை தொடர்ச்சி) 02. பொருள் பால் 05. அரசு இயல் அதிகாரம் 047. தெரிந்து செயல் வகை நன்மை, தீமை போன்றவற்றை நன்குஆய்ந்து செய்யும் செய்முறைகள். அழிவதூஉம், ஆவதூஉம் ஆகி, வழிபயக்கும் ஊதியமும், சூழ்ந்து செயல். ஆவது, அழிவது, பின்விளைவது போன்றவற்றை ஆய்ந்து செய்க. தெரிந்த இனத்தோடு, தேர்ந்(து)எண்ணிச் செய்வார்க்(கு), அரும்பொருள் யா(து)ஒன்றும், இல். செயல்முறைகளைத் தேர்ந்தாரோடு கலந்து செய்வார்க்கு முடியாச்செயல் இல்லை. ஆக்கம்…
திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 046. சிற்றினம் சேராமை
(அதிகாரம் 045. பெரியாரைத் துணைக்கோடல் தொடர்ச்சி) 02. பொருள் பால் 05. அரசு இயல் அதிகாரம் 046. சிற்றினம் சேராமை இழிகுணங்கள் நிறைந்த கூட்டத்தாரது வழிகளில் சேராத விழிப்புணர்வு. சிற்றினம் அஞ்சும், பெருமை; சிறுமைதான், சுற்றம்ஆச் சூழ்ந்து விடும் பெரியார், சிறியார்க்கு அஞ்சுவார்; சிறியார், சிறியார்க்கு உறவுஆவர். நிலத்(து)இயல்பால், நீர்திரிந்(து)அற்(று) ஆகும்; மாந்தர்க்(கு), இனத்(து)இயல்(பு)அ(து) ஆகும் அறிவு. நிலஇயல்பால், நீரும் திரியும்; இனஇயல்பால், அறிவும் திரியும். மனத்தான்ஆம், மாந்தர்க்(கு)…
திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 045. பெரியாரைத் துணைக்கோடல்
(அதிகாரம் 044. குற்றம் கடிதல் தொடர்ச்சி) 02. அறத்துப் பால் 05. அரசு இயல் அதிகாரம் 045. பெரியாரைத் துணைக்கோடல் அனைத்து நிலைகளிலும், தகுதிமிகு பெரியாரைத் துணையாகக் கொள்ளல். அறன்அறிந்து, மூத்த அறி(வு)உடையார் கேண்மை, திறன்அறிந்து, தேர்ந்து கொளல். அறம்அறிந்த, மூத்த அறிவாளர் பெருநட்பைத் தேர்ந்து கொள்க. உற்றநோய் நீக்கி, உறாஅமை முன்காக்கும், பெற்றியார்ப் பேணிக் கொளல். வந்த துயர்நீக்கி, வரும்முன்னர்க் காக்கும் பெரியாரைத் துணைக்கொள். அரியவற்றுள் எல்லாம் அரிதே, பெரியாரைப் …
திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 036. மெய் உணர்தல்
(அதிகாரம் 035. துறவு தொடர்ச்சி) 01.அறத்துப் பால் 03.துறவற இயல் அதிகாரம் 036. மெய் உணர்தல் எப்பொருள் ஆயினும், அப்பொருளின் உண்மையை ஆராய்ந்தும் அறிதல். பொருள்அல்ல வற்றைப், பொருள்என்(று) உணரும், மருளான்ஆம், மாணாப் பிறப்பு. பொய்ப்பொருள்களை, மெய்ப்பொருள்கள் என்று உணர்தல், சிறப்[பு]இல்லாப் பிறப்பு. இருள்நீங்கி, இன்பம் பயக்கும், மருள்நீங்கி, மா(சு)அறு காட்சி யவர்க்கு. மயக்கத்தை நீக்கிய ஞானியார்க்கே, தூயநல் பேர்இன்பம் தோன்றும். ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு, வையத்தின் வானம், நணிய(து) உடைத்து….
திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 035. துறவு
(அதிகாரம் 034. நிலையாமை தொடர்ச்சி) 01.அறத்துப் பால் 03.துறவற இயல் அதிகாரம் 035. துறவு ஆசைகளை எல்லாம் அகற்றிவிட்டு வாழும், தூயநல் அறவாழ்வு. யாதனின், யாதனின், நீங்கியான் நோதல், அதனின், அதனின், இலன். எவ்எவற்றின் பற்றுகளை விடுகிறாரோ, அவ்அவற்றால் துன்பங்கள் இல்லை. வேண்டின்உண் டாகத் துறக்க; துறந்தபின், ஈண்(டு)இயற் பால பல. உயர்மதிப்பு வேண்டித் துறப்பார்க்குச், சமுதாயக் கடைமைகள் பற்பல. அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை; விடல்வேண்டும், வேண்டிய எல்லாம் ஒருங்கு….
திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 034. நிலையாமை
(அதிகாரம் 033. கொல்லாமை தொடர்ச்சி) 01.அறத்துப் பால் 02.துறவற இயல் அதிகாரம் 034. நிலையாமை ‘வாழ்வும், செல்வமும், நிரந்தரம் அல்ல’என ஆராய்ந்தும் உணர்தல். நில்லாத வற்றை, “நிலையின” என்(று),உணரும் புல்அறி(வு) ஆண்மை கடை. நிலைக்காத அவற்றை, ”நிலைக்கும்”என உணரும் அறிவு, கீழ்அறிவு. கூத்தாட்(டு) அவைக்குழாத்(து) அற்றே, பெரும்செல்வம் போக்கும், அதுவிளிந்(து) அற்று. நாடகத்தைப் பார்க்க வருவார், போவார்போல், செல்வமும் வரும்;போம். அற்கா இயல்பிற்றுச் செல்வம்; அதுபெற்றால்,…
திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 033. கொல்லாமை
(அதிகாரம் 032. இன்னா செய்யாமை தொடர்ச்சி) 01. அறத்துப் பால் 03.துறவற இயல் அதிகாரம் 033. கொல்லாமை எவ்உயிரையும் கொல்லாது, எல்லா உயிர்களையும் காப்பாற்றும் கொள்கை அறவினை யா(து)?எனின், கொல்லாமை; கோறல், பிறவினை எல்லாம் தரும். கொல்லாமையே அறச்செயல்; கொல்லுதல், எல்லாத் தீமைகளையும் நல்கும். பகுத்(து)உண்டு, பல்உயிர் ஓம்புதல், நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. பகுத்[து]உண்டு, பல்உயிர்களைக் காத்தல், அறங்களுள் தலைமை அறம். ஒன்(று)ஆக நல்லது, கொல்லாமை; மற்(று),அதன்…
திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 032. இன்னா செய்யாமை
(அதிகாரம் 031. வெகுளாமை தொடர்ச்சி) 01.அறத்துப் பால் 03.துறவற இயல் அதிகாரம் 032. இன்னா செய்யாமை என்றும் எதற்காகவும் எங்கும் எவர்க்கும் எத்துயரும் செய்யாமை. சிறப்(பு)ஈனும், செல்வம் பெறினும், பிறர்க்(கு)இன்னா செய்யாமை, மா(சு)அற்றார் கோள். சிறப்பு தருசெல்வம் பெறுவதற்காக, எவர்க்கும் எத்தீமையும் செய்யாதே. கறுத்(து),இன்னா செய்தவக் கண்ணும், மறுத்(து),இன்னா செய்யாமை, மா(சு)அற்றார் கோள். துன்பத்தைத் தந்தார்க்கும் துன்பத்தைத் தராமையே தூயார்தம் கொள்கை. செய்யாமல், செற்றார்க்கும், இன்னாத…
திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 031. வெகுளாமை
(அதிகாரம் 030. வாய்மை தொடர்ச்சி) 01. அறத்துப் பால் 03. துறவற இயல் அதிகாரம் 031. வெகுளாமை எப்போதும், எவரிடத்தும், எதற்காகவும், சினமோ, சீற்றமோ கொள்ளாமை. செல்இடத்துக் காப்பான், சினம்காப்பான்; அல்இடத்துக் காக்கின்என்? காவாக்கால் என்? செல்இடத்தில் சினம்அடக்கு; செல்லா இடத்தில் அடக்கு; அடக்காமல்போ. செல்லா இடத்தும் சினம்தீ(து); செல்இடத்தும் இல்,அதனின் தீய பிற. செல்இடத்தும், செல்லா இடத்தும், சினத்தலைவிடத், தீயது வே[று]இல்லை. மறத்தல் வெகுளியை, யார்மாட்டும்;…
திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 027. தவம்
(அதிகாரம் 026. புலால் மறுத்தல் தொடர்ச்சி) 01. அறத்துப் பால் 03.துறவற இயல் அதிகாரம் 027. தவம் தம்துயர் பொறுத்தல், துயர்செய்யாமை, தூயநல் அறச்செயல்கள் செய்தல். உற்றநோய் நோன்றல், உயிர்க்(கு)உறுகண் செய்யாமை, அற்றே, தவத்திற்(கு) உரு. துயர்பொறுத்தல், உயிர்கட்கும் செய்யாமை தூய தவத்தின் இலக்கணம். . தவமும், தவம்உடையார்க்(கு) ஆகும்; அவம்,அதனை அஃ(து)இலார், மேற்கொள் வது. மெய்த்தவத்தார் தவக்கோலம் சிறப்பு; பொய்த்தவத்தார் தவக்கோலம் பழிப்பு. துறந்தார்க்குத்…