(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 56 : மலையுறையடிகள் வாழ்த்திய காதை-தொடர்ச்சி) பூங்கொடிமலையுறையடிகள் வாழ்த்திய காதைதமிழினமும் குரங்கினமும் தமிழினம் என்றே சாற்றுதல் கண்டோம்;தாய்க்குரங் கொருகிளை தாவுங் காலைத்தாய்மடி பற்றுதல் தவறுமேல் குட்டியைக் 75குரக்கினம் தம்மொடு கொள்ளா தொழிக்கும்;மரக்கிளை வாழும் மந்தியின் மானம்நமக்கிலை அந்தோ! நாமோ மாந்தர்!மானம் பரவுதற் கானவை இயற்றுக; தாய்மையும் பொதுப் பணியும் பிணியற மருந்துகள் பெட்புடன் ஈய,அறியாக் குழவி அலறுதல் போல,அறியா மைப்பிணி அகற்றுதல் வேண்டிப்பெரியோர் நல்லுரை பேசுதல் கேட்டுச் 85சிறியோர் மருளுவர் சீறுவர்; அவர்தமைப்பொதுப்பணி புரிவோர் ஒதுக்குதல் இன்றித்தாய்மைப் பண்பே…