உ. உயர்தனிச் செம்மொழி-புலவர் வி.பொ.பழனிவேலனார்

(தமிழ்: க. தமிழ் வளர்ப்போம்-வி.பொ.பழனிவேலனார்- தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள்        உ. உயர்தனிச் செம்மொழி ஒருவர் (எவர் பெயரையும் குறிப்பிட விரும்புகிலேம்)  தமிழில் பேச்சுமொழியை ஒழுங்குபடுத்திச் செப்பம் செய்யவேண்டும் என்கின்றார்;  வேறொருவர், பிறமொழிச் சொற்களைக் கலந்தால்தாம் தமிழ் வளர்ச்சியடையும்  என்கின்றார்;  இன்னொருவர், அறிவியல் கருத்துகளைத் தமிழில் எழுத, பேசப் பிறமொழிச் சொற்களை அவ்வாறே எடுத்தாள வேண்டும்.  அன்றுதான் அறிவியல்தமிழ் வளரும் என்று சொல்கின்றார்; ஆங்கில மொழியைப் பின்பற்றி எழுத வேண்டும் என்கின்றார் மற்றொருவர்; ‘தமிழ்க் கழகங்கள் முத்தமிழ் வளர்த்தன என்பதெல்லாம் கட்டுக்கதை;  தமிழ்ச்சங்கள் இருந்தனவென்பதற்குச்…

சுவைத் தமிழின் மூதறிஞர் – கடவூரார் கவிதையும் தமிழ்ப்பாவை  முன்னுரையும்

(திருத்துறைக் கிழார் கட்டுரைகள் – அணிந்துரை-தொடர்ச்சி) சுவைத் தமிழின் மூதறிஞர் மறைமலையார் பாவாணர் அடிச்சுவட்டில் மாண்பார்ந்த தனித்தமிழ்க்குப் பெருமை சேர்த்த நிறைபுலமை யாளர்நம் பழனிவேலர் நினைவெல்லாம் மொழிமானம் தாங்கி நிற்கும் குறையில்லாப் பெருங்கொள்கை யாளர்! அந்நாள் கோதறுசீர் ‘மாணாக்கன்’ இதழின் மூலம் முறையான தமிழ்த்தொண்டு புரிந்த நல்லார்! மூப்பினிலும் தமிழ்யாப்பின் மரபில் வல்லார்! உரமுடையார்! திறமுடையார்! தமிழைக் காக்கும் உணர்வுடையார்! போர்க்குணமும் உடையார்! நெஞ்சில் கரவறியார்! செந்தமிழைக் காப்ப தற்குக் களம்புகுவார்! தன்னலத்தைச் சிறிதும் எண்ணார்! வரவறியார்! பொருள்சேர்க்கும் வாழ்வைக் காணார்! வாழ்வுவளம் எல்லாமுமு்…

திருத்துறைக் கிழார் கட்டுரைகள் – அணிந்துரை

முனைவர் ப.தமிழ்ப்பாவை தொகுப்பில் திருத்துறைக் கிழார் கட்டுரைகள் அணிந்துரை வை.மு.கும்பலிங்கன்    திருத்துறைக்கிழார் எழுதிக் குவித்த எழுத்துகளாம் பூந்தோட்டத்தில் காய், கனித்தோப்பில் புகுந்து, சுற்றிப்பார்த்தும், உண்டு மகிழ்ந்தும் களிப்போம். இவர், தாம் உருவாக்கிய எழுத்து என்னும் கருத்துத் தோட்டத்தை 1.தமிழ், 2.தமிழர், 3.தமிழ்நாடு என மூவகைப்படுத்தி, சுற்றுவேலி கட்டி அமைத்துள்ளார். தமிழ்த் தோப்பில் 14 கட்டுரைகளும், தமிழர் தோப்பில் 19 கட்டுரைகளும், தமிழ்நாட்டுத் தோப்பில் 9 கட்டுரைகளுமாக மொத்தம் 42 கட்டுரைகளைத் தொகுத்து அவர்தம் மகளார் முனைவர் வி.பொ.ப.தமிழ்ப்பாவை இங்கு  தந்துள்ளார். தற்போது, இத்தோப்பின்…