வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.30. முயற்சி யுடைமை

(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.29. தொடர்ச்சி)    மெய்யறம் மாணவரியல் 30. முயற்சி யுடைமை   உயர்வுற வுழைக்கு முடற்றொழில் முயற்சி. உயர்ந்ததை அடைவதற்காக உழைக்கும் உடல் உழைப்பே முயற்சி ஆகும். முயற்சி பலவகை யுயற்சி நல்கும். முயற்சி பலவகைப் பெருமைகளைக் கொடுக்கும் இயல்பு உடையது. முயற்சி யூழையு முதுகிடச் செய்யும். முயற்சி, வெற்றிக்குத் தடையாக இருக்கும் விதியையும் தோல்வியடையச் செய்யும். முயற்சி யுடையார் மூவுல காள்வார். விடாமுயற்சி உடையவர்கள் மூவுலகத்தையும் வென்றுவிடுவார்கள். முயற்சி யிலாதா ரிகழ்ச்சி யடைவர். முயற்சியின்றி சோம்பலுடன் இருப்பவர்கள் பிறர்…

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.29. ஊக்க முடைமை

(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.28. தொடர்ச்சி) மெய்யறம் மாணவரியல் 29.ஊக்க முடைமை ஊக்க முயர்வுற வுனுமன வெழுச்சி. உயர்ந்ததை அடைய வேண்டும் என்ற (எண்ணமே) மன உறுதியே ஊக்க முடைமை ஆகும். ஊக்க முடைமை யுலகெலாங் கொணரும். ஊக்கமுடைமை உலகம் முழுவதையும் ஒருவனிடத்தில் கொண்டுவந்து சேர்க்கும் இயல்பு உடையது. ஊக்க மிலாமை யுடையவும் போக்கும். ஊக்கமிலாமை ஒருவனிடத்தில் உள்ளதையும் அவனைவிட்டு போகச்செய்யும் இயல்பு உடையது. ஊக்க முடையா ருயர்ந்தோ ராவர். ஊக்கம் உடையவர்கள் உயர்ந்தவர்கள் ஆவர். ஊக்க மிலாதா ருயிர்க்கும் பிணங்கள். ஊக்கமற்றவர்கள் சுவாசிக்கின்ற…

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.28.அறிவுடைமை

(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.27. தொடர்ச்சி)   மெய்யறம் மாணவரியல் 28.அறிவுடைமை 271. அறிவு மறமொரீஇ யறத்தின்பா லுய்ப்பது. அறிவுடைமை தீயொழுக்கத்தை விலக்கி நல்லொழுக்கத்தை நோக்கி நம்மைச் செலுத்தும் இயல்பு உடையது. அறிவெஞ் ஞான்று மற்றங் காப்பது. அறிவுடைமை எப்பொழுதும் அழிவில் இருந்து பாதுகாக்கும் இயல்பு உடையது. அறிவு பகைவரா லழிக்கப் படாதது. அறிவு பகைவர்களால் அழிக்க முடியாதது. அறிவினை யுடையா ரனைத்து முடையர். அறிவினை உடையவர்கள் அனைத்தையும் உடையவர்கள் ஆவர். அறிவில் லாதார் யாதுமில் லாதார். அறிவில்லாதவர்கள் எதுவுமே இல்லாதவர்கள் ஆவர். அறிவிற்…

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.27. ஒழுக்க முடைமை

(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.26.தொடர்ச்சி)   மெய்யறம் மாணவரியல் 27. ஒழுக்க முடைமை ஒழுக்க மென்ப துயர்ந்தோர் நடையே. ஒழுக்கம் என்பது உயர்ந்த மனிதர்களின் குணநலன் ஆகும். அருளறி வமைந்தவை யாள்பவ ருயர்ந்தோர். அன்பும் அறிவும் அமைந்து அவற்றைச் செயலிலும் காட்டுபவர்கள் உயர்ந்த மனிதர்கள் ஆவர். அவர்நடை பெரியோர்க் கடங்கி யொழுகல். பெரியவர்களுக்குக் கட்டுப்பட்டு நடப்பது அவர்களது நல்லியல்பு ஆகும். இருக்கை யெழுத லெதிர்பின் செல்லல். பெரியவர்களைக் கண்டதும் இருக்கை விட்டெழுதலும் அவர்கள்பின் சென்று வழியனுப்புதலும் நல்லொழுக்கம் ஆகும். நினைவுஞ் சொல்லும் வினையுமொன் றாக்கல்….

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.26. அடக்க முடைமை

(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.25. தொடர்ச்சி) மெய்யறம் மாணவரியல்  26.   அடக்க முடைமை 251.அடக்க மனம்புலத் தணுகா தடக்கல். அடக்கம் என்பது மனத்தை ஐம்புலன்களில் இருந்தும் காத்தல் ஆகும் .252.அறிவினர்க் கென்று மடங்கி யொழுகல். அடக்கம் என்பது அறிஞர்களுக்கு எப்பொழுதும் அடங்கி நடத்தல் ஆகும். அடக்கநன் னெறியி னடக்கச் செய்யும். அடக்கம் நல்லொழுக்க நெறியில் நடக்கச் செய்யும். அடக்கமில் லாமை யதைக்கடக் கச்செய்யும். அடங்காமை நல்லொழுக்க நெறியை மீறச் செய்யும். அடக்கம் பல்வகை யாக்கமுந் தருமே. அடக்கம் பல வகையான செல்வங்களையும் தரும். அடக்க…

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.25. நடுவு நிலைமை

(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.24. தொடர்ச்சி) மெய்யறம் மாணவரியல்  25. நடுவு நிலைமை நடுவு நிலைமைதன் னடுவு ணிற்றல். நடுவு நிலைமை என்பது பாரபட்சம் பார்க்காத தன்மை ஆகும். பிறவுயிர் நடுவள விறனடு வின்மை. பிற உயிர்கள் நடுங்குமாறு செய்வது நடுவின்மை ஆகும். நடுவறப் பொருளி னடுனிற் கும்பொருள். அறமாகிய பொருளின் மையமாக விளங்குவது நடுவு நிலைமை ஆகும். அறனெலா நிற்பதற் கஃதா தாரம். எல்லா அறங்களுக்கும் அடிப்படை நடுவு நிலைமையி நிற்றலே ஆகும். அதுசிறி தசையி னறனெலா மழியும். நடுவு நிலைமையில் இருந்து…

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.24. நன்றி யறிதல்

(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.23. தொடர்ச்சி) மெய்யறம் மாணவரியல் 24. நன்றி யறிதல் நன்றியென் பதுபிறர் நல்கிடு முதவி. மற்றவர்கள் நமக்குச் செய்தவையை நினைவு கூர்தலே நன்றி ஆகும். உறவினர் முதலியோ ருதவுதல் கடனே. உறவினர் முதலியவர்களுக்கு உதவுதல் நம் கடமை ஆகும். பிறர்செயு முதவியிற் பெரிதொன் றின்றே. பிறர் நமக்குச் செய்யும் உதவியைவிட பெரியது ஒன்றுமில்லை. உதவியிற் சிறந்த துற்றுழி யுதவல். துன்பம் ஏற்பட்ட சமயத்தில் செய்யப்படும் உதவியே சிறந்த உதவி ஆகும். உயர்ந்தது கைம்மா றுகருதா துதவல். உதவியில் உயர்ந்தது பதிலுக்கு…

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.23. திருந்தச் செய்தல்

(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.22.தொடர்ச்சி) மெய்யறம் மாணவரியல் 23. திருந்தச் செய்தல் 221.திருந்தச் செயலியல் பொருந்தச் செய்தல். திருந்தச் செய்தல் என்பது சிறப்பான முறையில் ஒரு செயலைச் செய்வது ஆகும். அழகு நிறைவு மமைவுறச் செய்தல். திருந்தச் செய்தல் என்பது பொருத்தமான முறையில் முழுமையாகச் செய்வது ஆகும். 223.திருந்தச் செய்தலே செய்தற் கிலக்கணம். ஒரு செயலைச் செய்யும் முறையானது திருந்தமாகச் செய்வதே ஆகும். 224.திருந்தச் செயல்பல சீர்களைக் கொணரும். திருந்தமாகச் செய்வது பல பெருமைகளை ஏற்படுத்தும். திருத்தமில் செயலாற் சீர்பல நீங்கும். திருத்தமில்லாத செயல்களால்…

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.22. தொழில் அறிதல்

(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.21 தொடர்ச்சி) மெய்யறம் மாணவரியல் 22. தொழில் அறிதல் மெய்யுறுப் புக்கொடு செய்வது தொழிலே. தொழில் என்பது உடலால் உழைப்பது ஆகும். தொழிலா லுலகந் தோன்றிநிற் கின்றது. உழைப்பினால் உலகம் அழியாமல் இருக்கின்றது. தொழிலிலை யெனிலுல கழிவது திண்ணம். தொழில் இல்லை எனில் உலகம் அழிந்து போவது உறுதி ஆகும். தொழிலிலார் வறுமையுற் றிழிவெலா மடைவர். தொழில் செய்யாதவர்கள் வறுமை நிலை அடைந்து அவமானப்படுவர். அரியநற் றொழில்சில வறிதல்யார்க் குங்கடன். உயர்ந்த, சிறந்த தொழில் சிலவற்றைக் கற்றுக்கொள்ளுதல் அனைவரின் கடமை…

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.20 அழுக்கா றொழித்தல்

(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.19. தொடர்ச்சி) மெய்யறம் மாணவரியல் 20. அழுக்கா றொழித்தல் (அழுக்காறு- பொறாமை) அழுக்கா றயலா ராக்கத்திற் புழுங்கல். அழுக்காறு என்பது அடுத்தவர் பெற்றுள்ள செல்வத்தை நினைத்து உள்ளூர வருந்துதல் ஆகும். அழுக்கா றுறலினோ ரிழுக்கா றிலதே. அழுக்காறு கொள்வதைவிடப் பெரிய குற்றம் இல்லை. அழுக்கா றதுபோ லழிப்பதொன் றின்றே. பொறாமையைப் போல் அழிவை ஏற்படுத்தக் கூடியது வேறு ஏதும் இல்லை. அழுக்கா றுளவரை யொழுக்கா றிலையே. பொறாமை உள்ளவனிடத்தில் நல்லொழுக்கம் இருக்க இயலாது. அழுக்கா றுடையார்க் காக்கமின் றாகும். அழுக்காறு…

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.19. பயனில் சொல் விலக்கல்

(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.18 தொடர்ச்சி) மெய்யறம் மாணவரியல்   19. பயனில் சொல் விலக்கல் பயனில்சொல் யார்க்கும் பயன்றராச் சொல்லே. பயனில் சொல் என்பது யாருக்கும் பயன் தராத பேச்சு ஆகும். அறியா மையினின் றச்சொல் பிறக்கும். பயனற்ற பேச்சு அறியாமையினாலேயே ஏற்படுகிறது. அறியா மையினை யச்சொல் வளர்க்கும். பயனற்ற பேச்சு அறியாமையை வளர்க்கும் இயல்பு உடையது. அறிவினர் நட்பெலா மச்சொல் குறைக்கும். அறிவுடையவர்களின் நட்பை பயனற்ற பேச்சு குறைக்கும் இயல்பு உடையது. அறிவிலார் நட்பினை யச்சொல் பெருக்கும். பயனற்ற பேச்சு அறிவற்றவர்களின்…

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.18 : புறஞ்சொல்லல் விலக்கல் :

(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.17. தொடர்ச்சி) மெய்யறம் மாணவரியல் 18. புறஞ்சொல்லல் விலக்கல் புறஞ்சொலல் பிறரைப் புறத்திழித் துரைத்தல். புறஞ்சொல்லல் என்பது ஒருவரை அவர் இல்லாதபோது இழிவாகப் பேசுதல் ஆகும். அறங்கொலு மறத்திற் புறஞ்சொலல் கொடிது. புறஞ்சொல்லல் அறத்தைக் கொல்லும் தீய செயல்களில் மிகக் கொடியது ஆகும். புறஞ்சொலல் பொய்முதற் புரையெலாம் வளர்க்கும். புறஞ்சொல்லல் பொய் முதலான குற்றங்களை வளர்க்கும் தன்மை உடையது. புறஞ்சொலல் புறனெலாம் பொருபகை யாக்கும். புறஞ்சொல்லல் ஒருவனுக்கு விரோதிகள் ஏற்படக் காரணமாக அமையும். புன்மகார் செயல்களுட் புறஞ்சொல லொன்று. புறஞ்சொல்லல்…