அகதியம்மா இந்த மண்ணில்!   இத்தரையில் வாழ்ந்தாலும் தமிழை இன்றும் இன்னுயிராய்ப் போற்றுகின்றோம் அதுவே போதும்! நித்தமெமை வாட்டுகின்ற துயரும் பொய்க்கும்! நின்கருணை யாலெம்மின் கடமை ஓங்கும்! அத்தனவன் அருள்பெற்றும் இயற்றும் பாக்கள் அம்புவியில் எம்புகழை ஏந்திச் செல்லும்! பெற்றவளை யாமிழந்தோம் கண்ணீர் விட்டோம்! பேறுபெற்றோம் இன்றமிழைப் போற்றிப் பாட!   சித்தத்துள் பேராசை தானும் இல்லை! சிங்காரத் தமிழ்மீதே காதல் கொள்ளை! அத்தனையும் தேனாறாய் ஓட வேண்டும்! அகத்தூய்மை பெற்றுலகில் வாழ வேண்டும்! மொத்தத்தில் அகதியம்மா இந்த மண்ணில்! மொழிகாக்கத் துடிக்கின்றோம் தமிழே!…