அன்புடையீர், வணக்கம். 14.01.2018 தைத் திருநாள் முதல்நாளன்று மாலை 3.30 மணிக்குச் சென்னைப் புத்தகக் காட்சி வளாக அரங்கில் (பச்சையப்பன் கல்லூரி எதிரில்),  மொரிசியசுத் தமிழர் திரு. ப. பழனிச்சாமி அவர்கள் எழுதிய அஞ்சலைக்கு அஞ்சலி  நாடக நூலின் வெளியீட்டு விழா நடைபெறுகிறது. உங்கள் வருகை, தமிழர் நலனையும் பண்பாட்டையும் பேண உழைக்கும் மொரிசியசுத் தமிழர் திரு. பழனிச்சாமி அவர்களுக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளிக்கும். அன்புடன் காந்தளகத்துக்காக, சசிரேகா பாலசுப்பிரமணியன்