சொல்ல முடியாத சொல் உன் பாதையும் என் பாதையும் வெவ்வேறாக இருக்கலாம் ஆனால் அவை ஒரே கையின் இரேகைகள் நீ கண்ணீரை விட ஆழமானவள் (ன்) சோகத்தை விட அழகானவள் (ன்) பாவத்திற்கு கிடைத்த மன்னிப்பை போல நீ எனக்குக் கிடைத்தாய் என்னை மறந்துவிட்டதாகச் சொல்கிறாய் பிறகு ஏன் உன் கண்ணில் நீர் ஒவ்வொரு மூச்சும் உன்னை சந்திக்கப் புறப்படுகிறது ஏமாற்றத்தோடு திரும்புகிறது நான் உன் மூச்சு என்னை நீ விட்டாலும் மீண்டும் வாங்கித்தான் ஆகவேண்டும் உன் மௌனத்தில் என் காயம் உறங்க இடம்…