சுந்தரமூர்த்தி கவிதைகள் சிலேடை  அணி 12 வில்லம்பும் புருவக்கண்ணும் வளைந்திருக்கும் ,கூர்முனியோ வஞ்சிக்கத் தாவும், களைப்புற்றோர் மீளவழி  காட்டும் – திளைப்புதரும், விண்ணோரும், மண்ணோரும் வீதிதனில் சண்டையிடக் கண்புருவம் வில்லம்பாம் காண் . பொருள் வில்லம்பு 1 ) அம்பு பூட்டிய வில் வளைந்திருக்கும். 2) அம்பானது தன் கூர்மையால் பகைவரை வஞ்சிக்க எந்நேரமும் ஆயத்தமாக இருக்கும் . 3) போரில் களைப்புற்றோர் கூட வெற்றி பெற உதவிகரமாக இருக்கும். 4) கலைநயமிக்க வில்லம்பு பார்க்க இனிமை    தரும். 5) உலகில் தேவர்களாக இருந்தாலும்…